செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
சுமார் 3.8 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குரங்கின மனிதர் ஒருவரது மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எத்தியோப்பியாவில் இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுக்கு உட்படுத்தி, மனித இனப்பரம்பல் குறித்த புதிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குரங்குகளில் இருந்து மனிதர்கள் கூர்ப்பு அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோட்பாட்டில் இதுவரையில் நம்பப்பட்டுவந்த விடயங்களில் மாற்றி அமைக்கக்கூடிய தகவல்கள், இந்த மண்டை ஓட்டின் ஆய்வின் மூலம் வெளிப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. http://www.hirunews.lk/tamil/223198/குரங்கின-மனிதர்-ஒருவரது-மண்டை-ஓடு-கண்டுப்பிடிப்பு
-
- 0 replies
- 366 views
-
-
ஐநா சபையில் மோடி *"யாதும் ஊரே யாவரும் கேளீர்"* என பேசுவதற்கு முன்னால்... ஐநா சபையின் முகப்பு வாசலில் எழுதப்பட்ட ஒரே ஒரு வாக்கியம் *"யாதும் ஊரே யாவரும் கேளிர்"* என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும், ரஷ்யாவில் உள்ள lumbha யூனிவர்சிட்டி வாசலிலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்ற வாசகம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் சிறப்புகளில் சில உங்கள் பார்வைக்கு ... சீனாவில் தமிழ் வானொலி சேவை இந்திய நேரப்படி 7 30 லிருந்து 8 30 வரை தினமும் நடைபெறுகிறது. அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா எனும் அருங்காட்சியகத்தின் வாசலில் "கற்றது கை மண் அளவு" என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பல்கலைக்கழகத்தின் வாசலில் சங்கத் தமிழின் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
விமானத்தில் அணில் குரங்கை கடத்திவந்த பயணி கைது! மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனையில், மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அணில் குரங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இதேவேளை, இந்த அணில் குரங்கு, அரி…
-
- 0 replies
- 91 views
-
-
லண்டன்: வேற்று கிரகவாசிகள் (Aliens) இன்று பூமிக்குள் காலடி வைக்கப் போவதாக பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளனர் சில அமைப்புகள். அமெரிக்கா-ஆஸ்திரேலியாவின் முன்னணி " psychic " (நம் ஊரில் குறி சொல்லும் ஆட்கள் மாதிரி) பிளாசம் குட்சைல்ட் என்பவர் தான் இந்த 'கதையை' ஆரம்பித்து வைத்தார். அதை பல்வேறு நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகள், உள்ள " psychic "-கள் வழி மொழிந்துவிட்டனர். பிளாசம் சொல்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) ''அமெரிக்காவின் பாலைவனப் பகுதியில் மாபெரும் ஸ்பேஷ் ஷிப் வந்து இறங்கப் போகிறது. அதிலிருந்து இறங்கும் வேற்று கிரகவாசிகள் பூமியில் வசிக்கும் நமக்கு அன்பையும் ஆதரவையும் தரப் போகிறார்கள்''. இதை ஏலியன்சே தன்னிடம் தெரிவித்ததாக ஒரு போடு போட்டிருக்கிறார் பிளா…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒடிசாவில் எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக 4 நாகப்பாம்புகளுடன் சண்டையிட்டு டாபர்மேன் நாய் உயிரிழந்துள்ளது. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவர் தனது வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். அவரது வீட்டை பொறுப்புடன் பாதுகாத்து வந்துள்ளது அந்த டாபர்மேன். கடந்த திங்கட்கிழமை அருகிலிருந்த காட்டுப்பகுதியில் இருந்து 4 நாகப்பாம்புகள் திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளன. இதனைக் கண்ட அவரின் வளர்ப்பு நாய், அந்த 4 பாம்புகளுடன் கடுமையாக சண்டையிட்டிருக்கிறது. டிவில் 4 நாகப் பாம்புகளையும் அந்த நாய் கடித்துக் கொன்றது. அதே நேரத்தில், நான்கு நாகங்களும் நாயைக் கொத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்! January 23, 2021 வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், காவற்துறையினர் இணைந்து ஆலய முன்றலில் வைத்து சுகாதார நடைமுறைகளின் சமயாசாரப்படி திருமண நிகழ்வு நடத்தப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கோரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெண் ஒருவருக்கு இன்றைய தினம் …
-
- 0 replies
- 294 views
-
-
மூன்று பிள்ளைகளை அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த தாய் ! கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.meenagam.com/மூன்று-பிள்ளைகளை-அணைத்து/
-
- 0 replies
- 433 views
-
-
-
- 0 replies
- 218 views
-
-
பிறக்க போகும் தனது குழந்தையை இளம் கர்ப்பிணி ஒருவர் 68 ஸ்ரேலிங்பவுனுக்கு விற்பனை செய்வதாக முகத்தளத்தில் விளம்பரம் செய்த சமப்வமொன்று சிலி நாட்டில் இடம்பெற்றுள்ளது. வெரோனிகா கரார சபாரோ என்ற 18 வயது பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளார். இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரியையும் சிலி நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொண்ட அப்பெண் அது குறித்து தனது காதலுனுக்கு அறிவித்துள்ளதுடன் அது தொடர்பில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்று கூறியுள்ளார். ஆனால், அப்பெண்ணின் காதலன் அந்த இரகசியத்தை அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கருவை கலைத்துவிடும்படி அப்பெண்ணுக்கு தாய் அறிவுறுத்தியு…
-
- 0 replies
- 276 views
-
-
போலியோ நோயில்லாத நாடாக இந்தியா சாதனை [Tuesday, 2014-02-11 04:42:30] தொடர்ந்து மூன்றாவது வருடமாக போலியோ நோயற்ற நாடு என இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம் "போலியோ நோயற்ற நாடு" என்ற சான்றிதழை இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சரகத்தை சேர்ந்த 40000 குழுக்கள், முடக்குவாதம் குறித்த 60000 நோயாளிகளின் மாதிரிகளை போலியோ சோதனைக்கு உட்படுத்தியது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த 8 ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் 120000 மாதிரிகளில் போலியோ தாக்கியதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ள இந்தியா போலியோ அற்ற நாடு என்று பெயர் பெற்ற…
-
- 0 replies
- 463 views
-
-
10 வருடங்களில் 9 குழந்தைகள்... திருமண வாழ்வில் 87 மாதங்கள் கர்ப்பிணியாக வாழ்ந்த ‘சூப்பர் மம்மி’! லண்டன்: இங்கிலாந்து பெண்ணொருவர் பத்தாண்டுகளில் 9 குழந்தைகளைப் பெற்று சூப்பர் மம்மியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்த ஜேசன் (41) என்பவரது மனைவி தோனியா (40). பிறந்தநாள் விழாவொன்றில் தோனியாவைப் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன், கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இல்லறவாழ்க்கையை தொடங்கிய அத்தம்பதிக்கு தற்போது 9 குழந்தைகள் உள்ளனர். இந்த பத்தாண்டு காலத்தில் சுமார் 87 மாதங்கள் அதாவது 7 ஆண்டுகள் கர்ப்பிணியாகவே இருந்துள்ளார் தோனியா. தற்போது தோனியாவின் முதல் குழந்தைக்கு 12 வயதும், அவருடைய கடைசி குழந்தைக்கு 2 வயதும்…
-
- 0 replies
- 750 views
-
-
வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய மருத்துவர்கள்[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 12:28.19 பி.ப GMT ] மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் குறைந்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.சர்வதேச அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஆண்டுக்கு 12 மில்லியன் நபர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தின் இருப்பு என்பது 8 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே தேவையானதாக இருந்து வருகிறது. இந்த பற்றாக்குறையை ப…
-
- 0 replies
- 179 views
-
-
பெப்ரவரி 2, 2012 ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தமிழர் தளம் தன் கையை விட்டுப் போய்விட்டால், சிங்கள தேசத்தை மிரட்டும் ஒரே அஸ்திரமும் இல்லாமல், சிறிலங்கா ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் ஈழத் தமிழர்கள் மீது கரிசனை கொள்வதாகப் பாவனை செய்கின்றது. இந்தியாவின் முழு வடிவத்தையும் புரிந்து கொண்ட ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதற்குத் தயாராக இல்லாத நிலையில், ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகரித்து வருகின்றது. கருணாநிதி ஆட்…
-
- 0 replies
- 402 views
-
-
தந்தையை கொன்ற மகள்.தாயை காயப்படுத்தினார். நேற்று முன்தினம் இரவு மிச்சம் பகுதியில் தனது தந்தையை மரக்கட்டை விளையாட்டு கயிறு வேறு பொருட்களால் தாக்கிவிட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார் மகள். 14 வயது நிரம்பிய இவரின் இந்த செயலால் இந்த கிரமமும் அந்த நாட்டு மக்களும் அதிர்வில் உறைந்திருக்கின்றனர். இத்துடன் அவர் வெறி அடங்கவில்லை தனது தாயரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதையறிந்த காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்து இறந்த தந்தையின் உடலையும் தாயரையும் மருத்துமனையில் சேர்த்தனர் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயார் தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். மகளை காவல் துறையினர் மேலதி…
-
- 0 replies
- 883 views
-
-
Last witness remembers Hitler's suicide Guy Jackson | Berlin Rochus Misch still remembers the sight as if it were yesterday: 60 years ago on Saturday he looked through a doorway and saw Adolf Hitler had committed suicide. Misch (88) is the only person still alive today to have seen the Nazi leader and his wife Eva Braun dead in their bunker deep under the shattered city of Berlin. "Hitler was sitting at the table, slumped forward, and Eva Braun was lying next to him. I saw that with my own eyes," Misch told French news agency AFP on Thursday from his home in the German capital. "But we had been expecting it. It didn't come out of the blue. …
-
- 0 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, தீபக் மஹவார், ராகோகரில் உள்ள ஜேபி கல்லூரியில் பல ஆண்டுகளாக பாம்புகளின் நண்பராக (பாம்புகளை மீட்கும்) பணியாற்றினார் கட்டுரை தகவல் ஷுரைஹ் நியாஸி பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், 'பாம்புகளின் நண்பர்' தீபக் மஹவார் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். கழுத்தை சுற்றியிருந்த பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். முதலில், பாம்புகடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் நஞ்சு படிப்படியாக பாதிக்கவே, அவரது நிலை இரவில் மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்…
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாத…
-
- 0 replies
- 974 views
-
-
ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈ…
-
- 0 replies
- 308 views
-
-
கட்டார் மற்றும் கிரீஸ் நாட்டினிடையே நற்புறவை வலுப்படுத்தும் பொருட்டு நடைபெற்ற கண்காட்சியில் நிர்வாண சிலைகளிரண்டால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, கட்டாரின் டோஹாவில் கடந்த 27 ஆம் திகதி குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நூதனசாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் “Olympics: Past and Present " என்ற தொனிப் பொருளில் இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. இதற்கென நல்லெண்ண அடிப்படையில் கீரீஸ் நாட்டிலிருந்து 600 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்கள் கட்டார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 நிர்வாண ஆண் சிலைகளும் அடங்குகின்றன. இச் சிலைகள் இரண்டினாலேயே சர்ச்சை எழுந்துள்ளது. நிர்வாண ஆண் சிலைகளால் கண்காட்சியை பார்வையிட வரும் பெண்கள் அசௌகரி…
-
- 0 replies
- 558 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து... 610 கிலோ மீற்றர் தொலைவில், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழக…
-
- 0 replies
- 463 views
-
-
உல்லாசம் அனுபவிப்பதற்கு கடற்கரையை நோக்கி வருபவர்களுக்காக அமைத்துகொடுக்கப்பட்ட மலசலக்கூடத்தை நபரொருவர் விலைக்கு வாங்கி அதனை அழகிய வீடாக மாற்றி தனது மனைவிக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ளார். பிரிட்டனைச்சேர்ந்த நிக் வில்லான் என்ற நபரே இத்தகைய பிரமாண்டமானத்தை தனது மனைவிக்கு பரிசாக்கியுள்ளார். பிரிட்டனின் சிரெங்கம் பகுதியிலுள்ள கடற்கரையில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை அமைப்பதற்காக அவர் 85,000 ஸ்ரேலிங் பவுன்களை செலவிட்டுள்ளார். இதனை வடிவமைப்பதற்காக அவர் 3 வருடங்களை செலவிட்டுள்ளதுடன் அவ்வீட்டுக்கு 'த வீ ரீடிரிட்' என பெயரிட்டுள்ளார். இவ்வீட்டினுள் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமயலறை, தனி குளியலறை, கடற்கரை காட்சிகள் தெரியக்ககூடிய வகையிலான ஜன்னல்கள் என்பன…
-
- 0 replies
- 318 views
-
-
சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் கவர்ச்சியானவர் என்று பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இயக்குனர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி தனது டுவிட்டர் பக்கங்களில் ஏதாவது வில்லங்கமான பதிவுகளை போட்டு, சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில், "நடிகர் ரஜினிகாந்த்திடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை" என்று ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். ராம்கோபால்…
-
- 0 replies
- 1k views
-
-
அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு உதித்த சூரியன்! Aug 24, 2022 21:23PM IST அண்டார்டிகாவில் 4 மாதங்களாக நீடித்த இரவு இன்று (ஆகஸ்ட் 24) சூரிய உதயத்தின் மூலம் விடிந்துள்ளது. உலகத்தில் தென் துருவம், வட துருவம் என இரண்டு துருவ பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு மேலாக இரவு நீடித்தால் அது துருவ இரவு என்று அழைக்கப்படுகிறது. இதில் தென் துருவ பகுதியான அண்டார்டிகாவில் ஆண்டுதோறும் நீண்ட இரவு 4 மாதங்களுக்குச் சூரிய உதயமே இல்லாமல் தொடர்ந்து நீடிக்கும். நீண்ட இரவு நேரத்தில் வானம் பச்சை நிறங்களில் காட்சி அளிப்பதை பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்கிறார்கள். பல புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்கள் எட…
-
- 0 replies
- 190 views
-
-
பார்வை இல்லாவிட்டால் என்ன? செல்போன் திருடிய நபரை மடக்கிப் பிடித்த பிபிசி செய்தியாளர் கட்டுரை தகவல் எழுதியவர்,கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி,பிபிசி செய்திகள் 28 டிசம்பர் 2022, 06:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, செல்போன் திருட்டை முறியடித்த பிபிசி செய்தியாளர் ஷான் டில்லி (பார்வை மாற்றுத் திறனாளி) லண்டனில் பார்வை மாற்றுத்திறனாளியான பிபிசி செய்தியாளர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு தனது செல்போனை திருடிய நபரை மடக்கிப் பிடித்துள்ளார். லண்டனின் நியூ பிராட்காஸ்டிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமையன்று …
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
ஒரே சமயத்தில், இரு கருப்பைகளிலும் கருத்தரித்து குழந்தைகள் பிரசவித்த அதிசயத் தாய் இரு கருப்பைகளைக் கொண்ட பெண்ணொருவர் ஒரே சமயத்தில் அந்த இரு கருப்பைகளிலும் கருத்தரித்து இரு குழந்தைகளைப் பிரசவித்த அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பெண்ணொருவர் இரு கருப்பைகளிலும் ஒரே சமயத்தில் கருத்தரித்து குழந்தைகளைப் பிரசவிப்பது 500 மில்லியனுக்கு ஒரு பிரசவம் என்ற ரீதியில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும். கோர்வோல் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெனிவர் அஷ்வூட் (31 வயது) என்ற பெண்ணே இவ்வாறு கருத்தரித்து ஒரே சமயத்தில் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். அவர் கடந்த வருடம் டிசம்பர் மா…
-
- 0 replies
- 592 views
-