Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வறுமைப் பட்ட சிறிய நாடுகள் செல்வந்த நாடுகளிடம் இருந்து நவீன இரக இராணுவ ஆயுதங்களை கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வற்புறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் உலகத்தில் உள்ள சிறிய வறுமைப் பட்ட நாடுகள் வன்முறையை கைவிட்டு சமாதானத்தை நோக்கி பயணிக்க வேண்டும் அத்துடன் நவீன கனரக இராணுவ ஆயுதங்களை செல்வந்த நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்வதை கைவிட்டு தரமான சமாதானத்தை வலியுறுத்தும் வெள்ளைக் கொடிகளை கொள்வனவு செய்ய வேண்டும் அத்துடன் ஆயுதக் கொள்வனவிற்கு செலவாக்கப் படும் பணத்தை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன் படுத்த வேண்டும், ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் கிராமம் தோறும் வெள்ளைக் கொடிகளை பறக்க விட வேண்டும், வீட்டிற்கு ஒரு இராணுவ வீர…

  2. கஹட்டகஸ்திகிலிய, குடாபட்ட பிரதேசத்தில் வானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்த தங்கச் செம்பொன்றை 14 வயது மாணவனொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கஹட்டகஸ்திகிலிய, குருகல்ஹின்ன தொல்பொருட்கலைத்திணைக்கள வளாகத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலேயே இந்த தங்கச் செம்பு தென்பட்டுள்ளது. கிருஷாந்த சாமல் பிரேமதிலக்க என்ற மாணவனும், அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மாடுகளை அவிழ்ப்பதற்காகச் சென்ற போதே குறித்த மாணவன் இந்த தங்கச் செம்பை கண்டுள்ளான். அதனை கையில் எடுக்க அவன் முற்பட்ட போது அது சூரியன் உள்ள திசையை நோக்கி பறக்க ஆரம்பித்ததாகவும் அதன்போதே தன் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி மூலம் அதனைப் படம் பிடித்ததாகவும் அம்மாணவன் தெரிவித்துள்ளான். http://tamil.dailymirror.lk…

  3. கார்கஸஸ், நவ.22 (டிஎன்எஸ்) கூலிப்படையினரால் தன்னை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.100 மில்லியன் டாலர் அளவுக்கு பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் வெனிசுலா அதிபர் ஹூவே சவோஸ் அந்நாட்டு தொழிலதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார். லத்தீன் அமெரிக்க நடான வெனிசுலா நாட்டின் அதிபராக இருப்பவர் ஹூவே சவோஸ் (57) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது அமெரிக்காவின் எதிரியாக உள்ளார். கார்கஸஸ் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் அதிபராக உள்ளேன். எனினும் எனது அரசியல் எதிரிகள் சிலர் என்னை வீழ்த்த அமெரிக்க உதவியுடன் திட்டம் தீட்டி வருகின்றனர். அதிலும் நாட்டின் குளோபல் விஷன் எனும் டி.வி. சானல் ஒன்றில் உரிமையாளர், கூ…

    • 0 replies
    • 470 views
  4. முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ வைத்தியசாலையிலே இவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவரது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் தற்போது 15 வயதாகிறது. சாஹிர் அப்துல் கரீம், பாத்திமா நிரோஷா தம்…

  5. ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடை கொண்ட ராட்சத தேரை பட மூலாதாரம்,QUEENSLAND DEPARTMENT OF ENVIRONMENT AND SCIENCE படக்குறிப்பு, ராட்சஷ கேன் தேரை 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வடக்கு மழைக்காடு பகுதியில் ராட்சத கேன் தேரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அது தேரை என்றே நம்பவில்லை. வழக்கமாக நாம் காணும் கேன் தேரைகளின் அளவை விட இந்த ராட்சஷ தேரையின் அளவு ஆறு மடங்கு பெரியதாக இருக்கிறது. அதேப்போல் சுமார் இரண்டரை கிலோவுக்கும் அதிகமான எடையில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த தேரை இதுவரை உலகில் …

  6. நீரில் மூழ்கிய 400 எருமைகள் படத்தின் காப்புரிமை SERONDELA LODGE தென் ஆப்பிரிக்காவின் போட்ஸவானா மற்றும் நமிபியா நாடுகளுக்கு இடையில் உள்ள நதி ஒன்றில் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கின. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில், சிங்கங்களால் துரத்தப்பட்டபோது ஓடியதில் இவை ஆற்றில் மூழ்கியதாக போட்ஸ்வானா அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆற்றின் மறுபக்கத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததினால் எருமைகள் பதறிபோய் நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என அப்பகுதியில் தங்கும் விடுதி வைத்திருக்கும் உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார். …

  7. திருமலை கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி, முதல் முறையாக, இணையதளம் மூலம், உலகளாவிய அளவில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு, 133 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் உள்ள திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு, தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் விஷேச நாட்களில், இந்த எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டும். திருமலை கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா சமயங்களில் தினமும், 45 ஆயிரம் பக்தர்கள் வரை, முடி காணிக்கை செலுத்துவர். இதற்காக, திருமலையில், 650 முடிதிருத்தும் கலைஞர்கள், தேவஸ்தான நிர்…

  8. மோசமான வானிலை காரணமாக தாமதமான விமானம்: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி [ வெள்ளிக்கிழமை, 29 மே 2015, 06:00.38 பி.ப GMT ] அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக விமானம் தாமதமானதால், அதில் இருந்த பயணிகளை குளிர்விப்பதற்காக பீட்சா வரவழைத்து விமானி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) நகரில் இருந்து அட்லாண்டா(Atlanta) நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுசென்றது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் டென்னெஸீ (Tennesse)பகுதியில் இருக்கும் நாக்ஸ்வில்லே(Knoxville) விமான நிலையத்துக்கு திசைதிருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் விமானம் அங்கே நிறுத்திவைக்கப்பட்டது. இத…

    • 0 replies
    • 438 views
  9. இரத்ததானம் வழங்கிய யாழ் டோனி ரசிகர் மன்றம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் பிறந்தநாளான இன்று (07) யாழ்ப்பாண டோனி ரசிகர் மன்றத்தினர் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியுள்ளனர். அத்துடன் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கி வைத்தனர். https://newuthayan.com/இரத்ததானம்-வழங்கிய-யாழ்/

  10. காற்று மாசும் கொரோனா உயிரிழப்புக்கு ஒரு காரணம்! 29 Views கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் நேரிட்ட 15 சதவீத கொரோனா உயிரிழப்புகளுக்கு காற்று மாசும் காரணமாக இருந்திருக்கிறது. இதுபற்றிய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளால் உடல்நலத்திற்குத் தீங்கு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், அதிக புகை மற்றும் தொழிற்சாலை வெளியேற்றும் மாசுக்களால் ஒவ்வொரு மனிதரின் வாழ்நாளிலும் இரண்டு ஆண்டுகள் குறைவதாகத் தெ…

  11. இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் நீச்சல் உடை படத்தை ப்ரான்ஸ் இதழ் ஒன்று அட்டைப்படமாக வெளியிட்டது. இது தொடர்பாக அந்த இதழின் கேமராமேன், எடிட்டர் என இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் இளவரசியும், வில்லியம்சின் மனைவியுமான கேட் மிடில்டன் நீச்சல் உடையில் இன்றி இருந்த புகைப்படம் கடந்த செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் வெளி வந்தது. குளோசர் என்ற அந்த செய்தி இதழின் தலைமை செயல் அதிகாரியான எர்னஸ்டோ மவுரி மற்றும் லா பிராவின்ஸ் என்ற பத்திரிகையின் பெண் புகைப்படக்காரருமான வலேரி சுவாவ் ஆகிய இருவர் மீது தனி நபர் தலையீடு தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. வலேரி சுவாவ் என்ற அந்த பெண் புகைப்படக்காரர் இளவரசியின் நீச்சல் உடை புகைப்படத்தை தனது பத்திர…

  12. இங்கிலாந்தில்... செல்லப் பிராணிகளை திருடுவது, இனி குற்றச் செயலாகும்! இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளை திருடுவது ஒரு குற்றச் செயலாக கருதப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட் முடக்க நிலை காலத்தின் போது, பதிவான திருட்டுக்களின் அதிகரிப்புக்கு பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. செல்லப்பிராணியின் திருட்டு தற்போது ஒரு உரிமையாளரின் சொத்து இழப்பாகக் கருதப்படுகிறது. இந்த திட்டம் செல்லப்பிராணி திருட்டு பணிக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளில் ஒன்றாகும் . கடந்த ஆண்டு சுமார் 2,000 நாய்கள் திருடப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள், பொலிஸ்துறை, வழக்குரைஞர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு என்பன, விலங்கு நலக் குழுக்கள், பிரச…

  13. யாழில் நட்சத்திர ஆமை மீட்பு July 19, 2022 யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆமை அரிய இனம் என்றும் , அதனை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஊர் வாசிகள் தெரிவித்தனர் https://globaltamilnews.net/2022/178601

  14. யாழில். சுவிஸ் நாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து 12 பவுண் நகைகள் திருட்டு! யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்று இருந்த வேளை , வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். https://athavannews.com/2022/1302151

  15. பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த பெண்!!! இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின்முன் இருந்த மரத்தில் இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரையே கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இக்பால் சிங்கை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். …

  16. தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆ…

  17. யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…

  18. மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி ஸ்பெயினிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கட்டலோனியாவில் மேலாடையின்றி பொது நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்அறிவிப்பினையடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் கொண்டாடிவருகின்றனர். கட்டலோனியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் மேலாடையின்றி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும் பல நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்லும் பெண்களுக்கு உள்ளே நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக ஒவ்வொரு கோடையிலும் இதுகுறித்த ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மேலாடையின்றி செல்வதைத் தடுப்பது, “தனிமனித சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் க…

  19. 21 OCT, 2023 | 05:39 PM வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து வருகின்றது. சம்பவதினமான நேற்று இரவு யானை மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அந்த பகுதியில் நிலத்தில் வீழ்ந்து உயிருக்கு போராடிவருகின்றது. வனவிலங்கு உத்தியோகத்தர் செல்ல முற்பட்டபோது குட்டி யானை அங்கு எவரையும் செல்லவிடாது காவல் காத்துவருகின்றது. …

  20. ஒரு வருடம் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ 72 லட்சம் பரிசு; தனியார் நிறுவனம் அறிவிப்பு ..! ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளது. இன்றைய நவீன உலகில் செல்போன் இல்லாமல் ஒரு மனிதனால் 5 நிமிடம் கூட இருக்க முடியாது. பாத்ரூமிற்கு கூட பலர் செல்போனை எடுத்துக் கொண்டு தான் செல்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமை. இந்நிலையில் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையிலும் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையிலும் ஒரு வருடத்திற்கு ஸ்மார…

  21. ஈராக்கில் 14 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவுஅமெரிக்க படைவீரருக்கு 110 வருடசிறை [07 - August - 2007] ஈராக்கில் அல்-ஹைடாவுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு உள்ள அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 14 வயது ஈராக்கிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர் குடும்பத்தினரைக் கொன்ற வழக்கில் அந்த வீரருக்கு 110 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இராணுவ நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. ஈராக்கில் இராணுவப் பணிக்காக அனுப்பப்பட்டவர் ஜெஸ்சி ஸ்பீல்மன். 22 வயதான அவர் பாலியல் வல்லுறவு , கொலை வழக்குகளில் சிக்கிக் கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாக்தாத் நகரில் அபீர் குவாசிம் அல் ஜனாபியாட் என்ற 14 வயது ஈராக்கிய சிறுமியை அவர் 4 இராணுவ வீரர்களுடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படு…

  22. யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300

  23. விதவிதமான பொம்மைகளால் நிறைந்த விநோத தீவு! மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் விதவிதமான பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல வித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. பெரேரா என்ற நபர் எஸ்ஸோ சிமில்கோ-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார். அருகில் அந்த சிறுமியின் பொம்மை ஒன்று கிடந்துள்ளது. பெரேரா அந்த பகுதியில் தங்கிய போது, இரவு வேளைகளில், யாரோ நடப்பது போன்ற கால் தடம் பதிக்கும் சத்தமும் பெண் ஒருவரின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதையடுத்து, பெரேரா அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளார். 50 ஆண்டுகளில் தொடர்ந்து சைனாம்பஸ் என்ற பகுதியில் உள்ள பல மரங்களில் பலவிதமான பொம்மைகள…

  24. இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்! இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார்.இந்த நிலையில் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 10…

  25. தனக்குப் பதி­லாக ரோபோவை பாட­சா­லைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி அரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு அனுப்பி வகுப்­ப­றையில் நாளாந்த பாடங்­களை கற்கும் சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. அமெ­ரிக்க மேரி­லாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறு­மியே இவ்­வாறு மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்­த­வாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்­களைக் கற்று வரு­கிறார்.. பைதன் மருத்­து­வ­ம­னையில் இருந்­த­வாறு பேப்ஸ் என்ற மேற்­படி ரோபோ­வி­லுள்ள ஐபாட் கணி­னியை தன்­னி­ட­மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.