Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கென்யா: "சோலை" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும், ஆதி தமிழர் உறவு... ஆய்வுகள் விரிவடையுமா? நைரோபி: கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்பதுதான் செய்தி. ஆனால் செய்தியை சற்றே ஆழமாக படிக்க.. அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் பெயர் 'Solai'. தமிழில் நாம் சோலை என்று குறிப்பிடப்படும் அப்படி ஒரு சோலைவனப்பகுதியாகத்தான் இந்த அணை உடைந்த இடமும் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் ஆதி தமிழ்: ஆப்பிரிக்க நாடுகளில் ஆதி மக்கள் பேச்சுவழக்கை சற்றே நின்று நிதானித்து கவனித்தால் அது தமிழின் ஆதி வடிவம் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். காமரூன் நாட்டு மக்களின் பேச்சுகளை முன்வைத்து சில ஆ…

  2. அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவி ஒருவர் 8வது மாடியில் இருந்த ஜன்னலை திறந்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண் மீது விழுந்து மரணம் அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள Philadelphia பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி Rebecca Kim. இவர் தனது நண்பர்களுடன் Rittenhouse Square என்ற இடத்தில் 8வது மாடியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று ஜன்னலை திறந்துவிட்டு தனது மொபைல்போன் மூலம் கீழே உள்ள காட்சிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பா…

  3. யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள் யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1341818

  4. இலங்கையில் “சிறுநீரக” விற்பனை..! பலர் அறியாத இருண்ட உலகம். July 17, 20158:36 am தமிழ் திரைப்படமொன்றில் இடம்பெற்ற நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் ‘ கிட்னி’ , அதாவது சிறுநீரகம் தொடர்பான நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அதில், சிறுவனொருவனை வடிவேலு துரத்துவதும் , அவன் லாவகமாக நோயாளர் காவி வண்டியொன்றுக்குள் புகுந்துகொள்வதும் ,அங்கிருக்கும் கும்பல் வடிவேலுவின் சிறுநீரகத்தை சத்திரசிகிச்சை மூலம் எடுப்பதுமே அந்நகைச் சுவைக் காட்சியாகும். அண்மையில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படமும் இதேபோன்ற மனித உறுப்புத் திருட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதை மேலோட்டமாக திரைப்படம் என்ற ரீதியில் பார்க்கும் போது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்ற…

    • 0 replies
    • 610 views
  5. கிரிக்கெட் போட்டியின்போது ஆபாச படம் பார்த்த நிருபர் கைது! January 7, 2016 10:30 am ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் ஆண் மற்றும் பெண் செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார். போட்டி நடந்து கொண்டிருக்கையில் அவர் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதை கண்டுபிடித்த கிரிக்கெட் மைதான அதிகாரி ஒரு…

  6. ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு நகரில் பியர் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தின் தட்டி தானாகத் திறந்து கொண்டதால் அவ்வாகனத்திலிருந்த பெருமளவிலான பியர் போத்தல்கள் தெருவில் விழுந்து உடைந்து நொருங்கி பியர் வெள்ளமாகப் பரவியது. இச்சம்பவம் வியாழக்கிழமை 05.03.2020 பகல் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் பெருந் தொகையான பியர் போத்தல்கள் உடைந்து தெருவில் பியர் ஓடியது. அப்பகுதியில் தொடர்ச்சியாக பியர் வாசம் வீசத் தொடங்கியதால் பியர் பிரியர்கள் ஸ்தலத்திற்கு ஓடி வந்து பியர் வெள்ளம் வீதியில் ஓடுவதை கவலையோடு அவதானித்துக் கொண்டு நின்றனர் http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_360.html

    • 0 replies
    • 457 views
  7. ஆகாயத்தில் இருந்து, சத்தத்துடன் விழுந்த மர்ம பொருள்! இது. என்னவாக இருக்கும்?

  8. ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்கள்:சபாநாயகர் கண்டனம் இன்று பாராளுமன்றத்தின் கடைசித் தொடரின் இறுதி நாளாகும். இன்றுடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவு பெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எம்.பி.க்களாக இருந்தவர்கள் இன்றுடன் பிரியா விடை பெறுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பல எம்.பி.க்கள் குறிப்பிடத்தக்க கேள்விகள் கேட்கவில்லை. சில எம்.பி.க்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார். அவர் மேலும், ’’ஒரு கேள்வி கூட கேட்காத எம்.பி.க்களை மக்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு கொடுக்கப்படும் அரசு பணம் வீண் எனவும், அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றும் சோம்நாத் சட்டர்ஜி கூறியுள்ளார். …

  9. வடமராட்சியில்... வீதியில் மயங்கி விழுந்த சிறுவன், உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான். அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்…

  10. 5:18 HSBC Colombo Fashion Week நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது. நாளை சனிக்கிழமை வரை இக்கண்காட்சி நடைபெறும். இலங்கை மற்றும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளர்கள் பலர் வடிவமைத்த றிஷோர்ட் வெயார் ஆடைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. முதல்நாள் நாள் கண்காட்சியில் நவீன றிஷோட் வெயார் ஆடைகiளை அணிந்து வந்த மொடல்கள் சிலரை படங்களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/event.php?event=104#sthash.9pxKyD5F.dpuf

  11. காரில் குழந்தைகளை விட்டுச்சென்றதன் மூலம் அவர்களின் மரணத்திற்கு காரணமான தாய்க்கு 9 வருட சிறை- அவுஸ்திரேலிய நீதிமன்றம் Published By: RAJEEBAN 16 FEB, 2023 | 11:41 AM அதிகளவு வெப்பநிலையுடன் காணப்பட்ட காரில் தனது குழந்தைகளை விட்டுச்சென்றதன் மூலம் அவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான தாய்க்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்பது வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. காருக்குள் வெப்பநிலை 60 செல்சியசாக காணப்பட்ட நிலையில் தனது குழந்தைகளை ஒன்பது மணிநேரம் விட்டுச்சென்ற லோகனை சேர்ந்த தாய்க்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.. இரண்டரை வயது டார்சே மற்றும் 13 மாத சோலே ஆன் இருவரையும் தாயார் காருக்குள் விட்டுச்சென்றதால் அவர்கள…

  12. 23 OCT, 2023 | 04:59 PM இலங்கையில் தவளைகளை கடிக்கும் ஒரு வகை புதிய நுளம்பு இனத்தை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் பூச்சியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவிக்கையில், இலங்கையில் மீரிகமை மற்றும் ஹந்துருமுல்லை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை எமது நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நுளம்பு இனங்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167593

  13. அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் ஒருவர் 40 நாட்கள் உயிர் வாழ்ந்த நிலையில் திடீரென இறந்துள்ளது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழு, கடந்த செப்.20ஆம் திகதி இதயம் பழுதடைந்த 58 வயதான லாரன்ஸ் பேஸட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். முன்னாள் கடற்படை வீரரான இவரின் இதயம் செயலிழந்த நிலையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 வாரங்கள் வரை நலமோடு இருந்த லாரன்ஸ், திங்கள்கிழமை (ஒக்.30) அன்று உயிரிழந்துள்ளார். “லாரன்ஸ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது, குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது என குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி…

  14. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் டேவிட் கேனல்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பறவைகளில் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கழுகு, ஒரு கூட்டுக்குள் இருந்த கடல் காகத்தை கொத்தி தூக்கிக் கொண்டு வருகிறது. இதைப் பார்த்து ஆவேசமடைந்த மற்றொரு கடற்காகம் கழுகைக் காயப்படுத்தி அதன் காலில் மாட்டியுள்ள பறவையை விடுவிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனால் கழுகின் சிறகை காயப்படுத்த முடியவில்லை. சோகத்துடன் பறந்து போய்விடுகிறது. இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தனது பேஸ்புக் பக்கத்தில் அமெரிக்க உள்துறை(U.S. Department of the Interior) பதிவேற்றியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/46320.html#sthash.xJjzcEwy.dpuf

    • 0 replies
    • 303 views
  15. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- துன்னாலையில் புலிகளின் முன்னாள் போராளியின் குழந்தையை கடத்தும் முயற்சி முறியடிப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமராட்சியின் துன்னாலைப் பகுதியியில் விடுதலைப் புலிகளது முன்னாள் பெண் போராளியொருவரது இரண்டரை வயதேயான ஆண் குழந்தையொன்றை கடத்த மேற்கொண்ட முயற்சியொன்று இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கடற்புலிகளது அமைப்பின் அரசியல் பிரிவு முக்கியஸ்தராக இருந்த குறித்த பெண் போராளி இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது காயமடைந்து அங்கவீனமுற்றுள்ளார். அவரது கணவரும் உயிரிழந்துள்ளார். இன்று காலை குறித்த கடத்தல்கார சந்தேக நபர்கள் இப்பெண் போராளியின் வீட்டிற்கு சென்று தமிழ் அரசியல் கட்சியொன்றின் பிரமுகர் பெயரினை குறிப்பிட்டு குழந்…

  16. கனடாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சஸ்காடூன் அருகே நடுவானில் பறந்த 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 விமானங்களும் நொறுங்கி புனித பெர்கிஸ் என்ற இடத்திற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் விழுந்தன. இந்த விமான விபத்தில் ஒரு விமானத்தில் பயணம் செய்த தம்பதி, மற்றொரு விமானத்தில் இருந்த 2 ஆண்கள், ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் பலியானார்கள். ஆனால் பலியானவர்கள் விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். http…

  17. உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம் 634 மீட்டர்கள், அதாவது 2080 அடி உயர கோபுரமாகும் இது. சீனாவில் உள்ள கேன்டன் கோபுரம் 600மீ, அதாவது 1968.5 அடி உயரம் கொண்டது. அதனையும் தாணி விட்டது டோக்கியோ ஸ்கை டிரீ. ஆனால் துபாஇயில் உள்ள புர்ஜ் கலிப்பா என்ற விடுதி 828 மீட்டரக்ள் உயரம் கொண்டது, அதாவது 2,717 அடி உயரம் கொண்டது. ஒரு கட்டிடம் என்ற அளவில் இது மிக உயரமானது. ஆனால் டோக்கியோ ஸ்கை டிரீ ஒரு கோ…

  18. இன்று உலக முத்த தினம் சூலை 6 உள்ளம் பட பட என்று திண்டாட கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா அவன் விரல்கள் கூந்தலில் தொலைய வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள அவர்களது இதயங்கள் உறவாட உதடுகள் மெய்மறந்து உரச காதல் . . . . உள்ளங்களை பரிமாறிக்கொண்டது /////////////////////////////////////////////////////////////////// கொடுத்த முத்தத்தை விட கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம். முத்தமிட்டது சில வினாடிகளே! முத்தம் தந்த பரவசம் தினம் தினம். சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன் அவளை முத்தமிட. ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன் முதல் முத்தம். முதலில் கை பின் கன்னம் அப்புறம் உதடுகள் இந்த வரிசையில் முத்தமிட…

  19. [size=4]எப்பொழுதும் சர்ச்சைகளை சுமந்து திரியும் நாயகன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.[/size] [size=4]இவர் ஏற்கனவே கிரிக்கெட் மைதானத்தில் புகைபிடித்தார் மற்றும் குடிபோதையில் மைதானத்துக்குள் உள்ளே நுழைய முயன்றார் என்று பல சர்ச்சைகள் கிளம்பின.[/size] [size=4]இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலாளர் ரவிபிரம்மே புனே அருகே உள்ள சதுஷ்ரிங்கி பகுதி பொலிஸ் நிலையத்தில் ஷாருக்கான் மீது புகார் மனு அளித்தார்.[/size] [size=4]அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, யூரிடியூப் இணைய தளத்தில் காணொளி ஒன்று வெளியானது. அதில் நடிகர் ஷாருக்கான் தேசிய கொடியை அவமதிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. எனவே, ஷாருக்கானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.[/size] [size=4]…

  20. கர்நாடகப் பொங்கு தமிழ் நிகழ்வு காலத்தின் தேவையை உணர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள்இ தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் குரல் கொடுப்பதற்காக இந்தியத் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்றும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்தியத் தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்தியத் தமிழ் மக்களுக்கும் புராதன காலத்திலிருந்து நிலவி வருகின்ற தொப்புள் கொடி உறவை நினைவுகூர்ந்துள்ள யாழ்.குடாநாட்டு மக்கள்இ ஈழத் தமிழர்களுக்கு அடி விழும்போது தட்டிக் கேட்;பதற்கென்றிருக்கின்ற ஒரேயொரு நாடு எமது அயல் நாடான இந்தியா என்றும் அதிலும் இந்தியத் தமிழ் மக்களே ஈழத் …

  21. அமெரிக்காவில், புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மீன் வகைகளுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில், அலபாமா மற்றும் டென்னிசி மாகாணங்களில் உள்ள நதிகளில், ஆரஞ்சு நிறத்தில், நீல நிற புள்ளிகள் மற்றும் கோடுகளுடன், 43 மி.மீ., நீளத்தில், 200 மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டன. பாறைகளுக்கு அடியிலும், சகதிகளுக்கு இடையேயும் ஒளிந்து கொண்டிருந்த இந்த மீன்கள், "டார்டர்' என்ற வேகமாக நீந்தும் மீன் வகையை சேர்ந்தவை. அமெரிக்க அதிபர் ஒபாமா, சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்துவதால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு, அதிபர் ஒபாமாவின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர். http://www.virakesari.lk/article/world.php?vid=311 http://…

    • 0 replies
    • 3k views
  22. தெற்காசியாவின் மிகப்பெரிய இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்று இன்று (12) கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் (IPZ) திறக்கப்பட்டது. இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ. 1.5 பில்லியன் முதலீட்டில் உள்ளூர் தொழிலதிபர் ஒருவரினால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி தொடர்பான தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தை தேவைகளில் 10% பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. $ads={2} இந்த தொழிற்சாலை 300 வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் உள்ளூர் பாரம்பரிய உணவு வகைகள் பிரீமியம் தரம் மற்றும் அதன் தயாரிப்புகளை மாலைதீவு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இலக…

    • 0 replies
    • 465 views
  23. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடிய கனடிய பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு மார்பகங்களையும், சர்ஜரி மூலம் அகற்றி உயிர் பிழைத்தார். ஆனால் தனக்கு மார்பகங்கள் இல்லை என்ற குறையை போக்குவதற்காக மார்பகம் இருந்த இடத்தில் டாட்டூ வரைந்து அந்த இடத்தை அழகிய வண்ணங்களால் பூர்த்தி செய்தார். அவருடைய டாப்லெஸ் புகைப்படம் பேஸ்புக்கில் வெளிவந்து கிட்டத்தட்ட 90,000 நபர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். Kelly Davidson என்ற 34 வயது ஒண்டோரியோ பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாக மருத்துவ பரிசோதனை மூலம் தெரிய வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு மார்பகங்களையும் நீக்கினால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என்று வலியுறுத்தியதால், தன்னுடைய இரண்டு மார்ப…

    • 0 replies
    • 743 views
  24. பழிவாங்கும் நோக்கில்... பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு... தீ வைத்த மாணவர்கள்..! பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை கண்டித்த அதிபரை பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த தீ விபத்தில் பாடசாலை அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன. குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில், அதே பாடசாலையில் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.