செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இந்தியா மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி, சதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் செல்போன் மூலம் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்காக விலை உயர்ந்த வகையிலான ஐபோனை வாங்க பணம் இல்லாததால் தன்னுடைய ஆண் குழந்தையை விற்றுள்ளனர். அந்தப் பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளனர். இதற்கிடையே, அவர்கள் வீட்டில் அந்தக் குழந்தையைக் காணாது அக்கம்பக்கதினர் விசாரித்து உள்ளனர். அதற்கு பெற்றோர் இருவரும், “குழந்தை உறவினர் வீட்டில் உள்ளது” எனக் கூறியுள்ளனர். குழந்தையை வேறு ஏதாவது செய்திருக்கலாம் எனச் சந்தேகமடைந…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பேராசிரியரை, ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, மர்ம கும்பல் தாக்கியது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வெளியுறவு துறை பேராசிரியராக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பிரப்ஜோத்சிங் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு ஹர்லோம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. நீ ஒசாமா பின்லேடன் போல் இருக்கிறாய்? நீ தீவிரவாதியா என கேட்டு, அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன. படுகாயமடைந்த பிரப்ஜோத்சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவரது நண்பரும், பிஎச்டி ஆய…
-
- 0 replies
- 251 views
-
-
போலீசுக்கு, 10 நாள் லீவு கொடுக்க ரூ.2000 லஞ்சம்! இன்ஸ்பெக்டர் கைது. வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ஏட்டுவிடம் விடுமுறை வழங்க ரூ.2000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் இருந்து சமீபத்தில் ஏட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். வேலூர் மத்திய சிறையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் இவர் தற்போது ஈடுபட்டு வருகிறார். திருமூர்த்தி, தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் 10 நாட்கள் லீவு வேண்டும் என இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ ஒ…
-
- 1 reply
- 251 views
-
-
இங்கிலாந்து நாட்டின் வணிக வளாகத்தில், தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியதற்கு, எதிராக குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின், நாட்டிங்காம் பகுதியில், 25 வயதான வோய்லோட்டோ கெமோர் என்ற இளம்பெண்னின் தந்தை, துணி எடுப்பதற்காக வணிக வளாகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் கெமோரும் அங்கு சென்றுள்ளார். அப்போது பிறந்து மூன்றே மாதங்களான அவரது குழந்தை பசியால் அழத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் குழந்தையின் பசியை போக்க பால் கொடுத்தபோது, அங்கு வந்த நிறுவன ஊழியர், வெளியே செல்லுமாறும், இங்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது என்றும், இது நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது என…
-
- 0 replies
- 250 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தபா பதவி, பத்திரிக்கையாளர், ஆராய்ச்சியாளர் 19 செப்டெம்பர் 2023, 04:57 GMT அப்போது, அமெரிக்க தபால் மூலம் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்ப முடியும். 1913 ஆம் ஆண்டில், உள்ளூர் பார்சல் வசதி கிடைத்த பிறகு கிராமப்புறங்களுக்கும் வசதி கிடைத்தது. நகரங்களுக்கு இடையே அதிகம் பணம் செலவழித்து பயணம் செய்வதற்கு பதிலாக வெண்ணெய், முட்டை, கோழிகள், குஞ்சுகள் மற்றும் குழந்தைகளை கூட பார்சலில் அனுப்ப தொடங்கினர். ஆம். நீங்கள் படித்தது சரிதான். இது அமெரிக்க தபால் சேவையின் மீதான நம்பிக்கையால் மட்டுமல்ல, செலவு குறைவு என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
பாடும் போது நீ தென்றல் காற்று அவள் துன்பத்தின் குவியலாகக் காணப்பட்டாள். சீரற்ற முறையில் அள்ளிப் போடப்பட்டிருந்த போர்வைகளும், சில பைகளும் நிறைந்த ஒரு நீல நிற ஷொப்பிங் டிரொலிக்குப் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது உடலை ஒரு தடிமனான ஜக்கெட் மூடியிருந்தது. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள அவெலினோ நகரத்தின் வீதியில் யாருமற்று அவள் அநாதையாக இருந்தாள். என்ஸோ கோஸ்டான்சா என்பவர், வீதியில் வீடற்றவளாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தற்செயலாகக் கண்டு கொண்டார். அவருக்கு அவளை யாரென்று தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டுமென நினைத்தார். அவள் வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த கோலத்திலேயே ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். அவள் தெருவிலேயே தூங்கி அல்லல் படாமல் இருக்…
-
-
- 3 replies
- 250 views
-
-
வவுனியாவில் உணவகமொன்றின் சிற்றுண்டிக்குள் (முட்டை ரோல்) பாவனைக்கு ஒவ்வாத வினோத முட்டை நுகர்வோரால் இனங்காணப்பட்டு வவுனியா நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகத்துடன் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இன்று (09-09) மாலை தேனீர் அருந்தச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்ட சிற்றுண்டிக்குள் இருந்த முட்டை விநோதமாக இருந்துள்ளது. குறித்த முட்டை றப்பரினாலான முட்டை போன்ற தோற்றத்தில் இருந்ததுடன் அதன் இயல்பும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தமையை உணர்ந்த வாடிக்கையாளர்கள் வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததை தொடர்ந்து குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த பரி…
-
- 0 replies
- 249 views
-
-
வாகன விபத்தில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி 13 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிர்காக்கும் இயந்திரத்தின் ஆதரவில் இருந்த பத்து வயது மாணவன் திங்கட்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா என்ற 10 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கொஸ்வத்தை தலங்கம வீதிக்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் போது குறித்த மாணவர் தனது உறவினர்கள் ஐவருடன் வீதியைக் கடக்கும்போது வேகமாக வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குழந்தையின் தந்தையும் அவரது சகோதரரும் வீதியின் மறுபக்கத்திலிரு…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை Published by Rasmila on 2016-02-11 11:03:49 இரு இளைஞர்களுக்கு, 8 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறுவர்களாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவனிடமிருந்து ஐஸ்கிறீம் ஒன்றையும் சூரியகாந்தி விதைகளையும் களவாடிய குற்றச்சாட் டில் தலா 13 வருட சிறைத் தண் டனை விதிக்கப்பட்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி களவு தொடர்பில் பாதிக் கப்பட்ட சிறுவன் முறைப்பாடு செய்யாத நிலையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. லொல்கன் குத்லு (தற்போது 22 வயது) மற்றும் ஒகன் சிப்ட்சி (தற்போது 23 வயது) ஆகிய…
-
- 0 replies
- 249 views
-
-
அவுஸ்ரேலியாவின் பொப் பாடல் சகோதரிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றம்! அவுஸ்ரேலிய சிட்னி விமான நிலையத்தில் வைத்து பொப்பிசை பாடகிகளான இரண்டு சகோதரிகள் விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பொப்பிசை பாடகிகளான லிசா மற்றும் ஜெசிகா ஓரிக்லியாசோ ஆகியோர் இரட்டை சகோதரிகளுக்கு பெரும் திரளான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லிசா-ஜெசிகா சகோதரிகள் சிட்னி விமான நிலையத்திற்கு சென்று, குவாண்டாஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ஏறி பயணத்திற்கு தயாராகினர். அந்த தருணத்தில் விமான பணி பெண் ஒருவருக…
-
- 0 replies
- 249 views
-
-
TMVP தலைமையில் மட்டக்களப்பில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள்? மட்டக்களப்பில் தமிழர்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசம் ஒன்றில் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர்களுக்கு காணி வழங்கும் நிகழ்வு நேற்று அதிரடியாக நடைபெற்றது. குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச் காணி என்ற ரீதியில் காலி, மாத்தறை, தம்புள்ள, கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன. குடியேற்றப்பட்டவர்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சிலரும், இராணுவத்தில் கடமையாற்றிய சிலரும் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த காணி வழங்கும் நிகழ்வு TMVP என்ற பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்…
-
- 0 replies
- 249 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2025 | 02:18 PM பொரளை பகுதியில் தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, கோட்டை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது. இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்…
-
-
- 5 replies
- 249 views
- 1 follower
-
-
கொரோனா: வேலை பறிபோனதால் குளத்து வேலை செய்யும் பி.ஹெச்.டி பட்டதாரிகள் மு.ஐயம்பெருமாள் குளத்தைத் தூர்வாரும் பட்டதாரிகள் கர்நாடகாவில் கொரோனாவால் வேலை இல்லாத பட்டதாரிகள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். னகொரோனா இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருக்கிறது. அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடிவருகின்றனர். பல தொழில்கள்அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கிராமங்களில் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஏற்…
-
- 0 replies
- 248 views
-
-
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தங்களது தாத்தாக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு (பொரிஸ் ஜோன்சனுக்கு) மரியாதை செலுத்தும் விதமாக ‘வில்ஃப்ரெட் லோவ்ரி நிக்கோலஸ் ஜொன்சன்’ (Wilfred Lawrie Nicholas Johnson) என்று பெயரிட்டுள்ளதாக கேரி சிமொன்ட்ஸ் தனது …
-
- 0 replies
- 248 views
-
-
கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு November 23, 2023 11:31 am கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. கடந்த 20…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் சீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சுதந்திர சதுக்கத்தில் வரும் டிசம்பர் 17ஆம் திகதி இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண இணையர்களுக்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவார். திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல -வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந…
-
- 0 replies
- 248 views
-
-
கரடிக்குன்று இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கிறது. – செல்வம்:- பேய் விரட்டுபவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்களை அணுகி எப்படி விரட்டுகின்றீர்கள் என்று கேட்டிருக்கீர்களா? பேய் பிசாசு பிடித்திருப்பவர்களை விட அதனை விரட்டுபவர்கள் பல முறைகளைக் கையாண்டு வருகின்றனர். வேப்பம் இலையால் அடித்து பேய் விரட்டுவார்கள். எந்தப் பேய் பிடித்திருக்கிறது என்று பார்த்து அந்தப் பேய்க்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களை படைத்து பேய் விரட்டுவார்கள். மந்திரங்கள் ஓதி பேய் விரட்டுவார்கள். இப்படியான முறைகளில் பேய் விரட்டுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். தியானம் மூலமும் பேய் விரட்டுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கரடிக்குன்று கிராமத்தில் இப்படியாக பேய் விரட்டுகிறார்கள…
-
- 0 replies
- 247 views
-
-
யாழில் குடும்பஸ்தரின் உயிரைப் பறித்த 800 ரூபாய்! 800 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இளைஞர் ஒருவரிடம் 800 ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள நிலையில், அதனைத் திரும்பச் செலுத்தாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து இளைஞர் அந்நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றைய தினம் …
-
- 0 replies
- 247 views
-
-
சினிமா போல் அரங்கேறிய உண்மைச்சம்பவம் (வீடியோ இணைப்பு) கல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்லக் காதல் இப்படி எத்தனை வகைப் படுத்தினாலும் காதல் காதல் தான் இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்த்து, குளம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இனைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இப்போதெல்லாம் கண்டதும் காதல் கொண்டதும் கோலம் இந்தக் காலத்தில் உண்மைக்காதல் இல்லை என்ற விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் காதல் மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் காதல் எப்போதும் காதல் தான் என நிரூபி…
-
- 0 replies
- 247 views
-
-
கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 11, 2020 14:02 PM புதுடெல்லி உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுவரை, பிறந்த குழந்தைக்கு, கொரோனா நோயாளிகள் மூலம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்ச…
-
- 0 replies
- 247 views
-
-
ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் 2016-12-26 12:05:19 சர்வதேச விமான நிலையமொன் றின் கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. கஸாந் நகரிலுள்ள கஸான் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகளை தகர்த்துக்கொண்டு இக்கார் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலைய கட்டடத்துக்குள் நுழைந்தவுடன் கார் நிறுத்தப்படவில்லை. அந்நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 247 views
-
-
பிரேசிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர், உலகின் மிக இளம் கோடீஸ்வரராக ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பெயரிடப்பட்டுள்ளார். 19 வயதான லிவியா வோய்க்ட் 2024 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இதழின் பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவரது வருமானம் $1.1 பில்லியன் ஆகும். லத்தீன் அமெரிக்காவில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக லிவியா வோய்க்ட் இந்த பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 25 பில்லியனர்களும் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்பது சிறப்பு. https://thinakkural.lk/article/298403
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
4 புலிகள்- 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! நியூயோர்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நியூயோர்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மூலம் விலங்குகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com…
-
- 0 replies
- 247 views
-
-
Published By: RAJEEBAN 18 APR, 2023 | 09:03 AM அமெரிக்காவில் வசிக்கும் சீன அதிருப்தியாளர்களை மௌனமாக்கும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு சீன முகவர்களை கைதுசெய்துள்ளதாக அமெரிக்காவின் எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சீன அரச எதிர்ப்பாளர்களை துன்புறுத்திய சீன முகவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அறிவிக்கப்படாத பொலிஸ் நிலையங்களை நடத்தி வந்தனர் என நியுயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுஜியான்வாங் மற்றும் சென்ஜின்பிங் இருவரும் நியுயோர்க் நகரின் சைனாடவுனில் பொலிஸ்நிலையமொன்றை நடத்திவந்தனர். அமெரிக்க பிரஜைகளான இருவரும் சீன அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்டனர் நீதிக்கு இட…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 15 JUL, 2025 | 05:28 PM அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனையை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) விதித்துள்ளது. 26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு நேற்று திங்கட்கிழமை (14) ப…
-
- 3 replies
- 247 views
- 1 follower
-