செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
தலைகீழாக கவிழ்ந்த பென்ஸ் : காரை செலுத்திய சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் பம்பலப்பிட்டி, வஜிரா வீதியில் அதி நவீன மெர்சீடிஸ் பென்ஸ் கார் ஒன்றை செலுத்திய சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதுடன் எவருக்கும் பாதிப்பேற்படவில்லையென பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய சிறுவன் ஒருவனே குறித்த காரை சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி செலுத்திச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.விபத்தில் சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், காரை செலுத்திய சிறுவன் உடனடியாக கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். எனி…
-
- 0 replies
- 229 views
-
-
7 காதலர்களை ஏமாற்றி மூன்று காதலர்களை கொலை செய்த 70 வயது காதலிக்கு மரண தண்டனை ஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார். இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். …
-
- 0 replies
- 229 views
-
-
பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மோசமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கால்நடைத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய பங்களிப்பையும் லாபத்தையும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2023 நிதியாண்டில் விவசாயத் துறையிலிருந்து 62.68 சதவீதமும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.36 சதவீதமும், கால்நடைத் துறையின் பங்களிப்பு கடந்த ஆண்டு 2.25 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 3.78 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த நிதியாண்டில் 43.7 மில்லியனாக இருந்த எருமைகளின் எண்ணிக்கை 45 மில்லியனை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு…
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சி…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்...! டெல்லி: முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் …
-
- 0 replies
- 229 views
-
-
டெல்டா எயார்லைன்ஸ் நிறுவன விமானமொன்றை முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் இணைந்து செலுத்தினர் அமெரிக்காவின் டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். ஸ்டெபானி ஜோன்சன் எனும் தலைமை விமானியும், டோன் குக் எனும் துணை விமானியுமே இப் பெண்களாவர். கடந்த ஞாயிறன்று இவர்கள் முதல் தடவையாக இணைந்து விமானமொன்றை செலுத்தினர். டெல்டா எயார்லைன்ஸ் விமானமொன்றை கறுப்பினப் பெண்கள் இருவர் செலுத்திச் சென்றமை இதுவே முதல் தடவையாகும் http://metronews.lk/?p=2900
-
- 1 reply
- 228 views
-
-
காங்கேசன்துறையில்... தனிமையில் வாழ்ந்த 78 வயது மூதாட்டி, வன்புணர்வின் பின்... கழுத்தறுத்துக் கொலை! காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்…
-
- 1 reply
- 228 views
-
-
சுரேசின் குழு மீது சித்தார்தனின் குழு தாக்குதல்…. August 11, 20154:36 pm தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஆதரவாளர் ஒருவர் மீது சித்தார்த்தனின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், நீர்வேலி, கரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த என்.நிசாந்தன் (வயது 26) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, அக்கூட்டம் முடிவடைந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர் மீ…
-
- 0 replies
- 228 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு கர்நாடகா, குஜராத்திலுள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி, தனி கடவுச்சீட்டு , ரூபா நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். மேலும் சமீபகாலமாக கைலாசா நாடு பல்வேறு வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகின. அந்த வ…
-
- 2 replies
- 228 views
- 1 follower
-
-
குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி! படத்தின் காப்புரிமைREUTERS உங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை! அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம். தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண். குறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை 'லைன்' செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். …
-
- 0 replies
- 228 views
-
-
தலவாக்கலையில்.... மரம் விழுந்து வீதியில் சென்ற ஆசிரியர் உயிரிழப்பு! தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை மல்லியப்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆசிரியரின் மரணத்திற்கு நீதியை பெற்று தருவதாக வழங்கிய உறுதி மொழிக்கமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. எனினும் ஆசிரியரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் என பொது மக்கள் எச்சரித்துள்ளனர். நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் உள்ள ஆலமரத்தை வெட்டும் பொழுது அதன் கிளைகள் அவ்வீதியினூடாக மோட்டர் சைக்கிளில் சென்ற ஆசிரியர் ஒருவர் மீது முறிந்து வீழ்ந்…
-
- 0 replies
- 228 views
-
-
மயிரிழையில் உயிர் பிழைத்த 1000 பூனைகள். சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தமக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது. ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355628
-
- 0 replies
- 228 views
-
-
34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி விமானத்தின் தலைமை விமானி மாரடைப்பினால் மரணம்! 2016-03-04 14:41:10 பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானமொன்றின் விமானி, மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் நிறுவனமென்றில் இடம்பெற்றுள்ளது. இவ்விமானம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சவூதி அரேபியாவின் பிஷா நகரிலிருந்து, தலைநகர் றியாத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தது. சுமார் 220 பயணிகள் அவ்விமானத்தில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தலைமை விமானியான வலீத் பின் மொஹம்மத் அல் மொஹம்மத்துக்கு திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்போது அவரே விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 227 views
-
-
ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த அவலம் போபால், மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவர் நேற்று முன்தினம் ஹோசங்காபாத் மாவட்டத்திற்கும், நேற்று விதிசா பகுதிக்கும் சென்றார். இன்று படகு ஒன்றில் சென்று வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மத்திய பிரதேசத்தின் சிய…
-
- 0 replies
- 227 views
-
-
ஆசியா புக் ஒப் ரெக்கொர்ட்ஸில் நித்யானந்தாவின் 8 சாதனைகள் இடம்- கைலாசா தகவல் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஒப் ரெக்கொர்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சாமியார் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஒப் ரெக்கொர்ட்ஸ் மூலம் ஏற்க…
-
- 0 replies
- 227 views
-
-
விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ராதாகிருஷ்ணன் (வயது 27) பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் 26 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், ராதாகிருஷ்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
தவிசாளர் பதவிக்காக மண்ணை விற்காதே’ – காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 24 Views மட்டக்களப்பு, மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அச் செயற்பாட்டிற்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மண்முனை பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்றைய தினம் மண்முனை பிரதேச சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இப் போராட்டத்தில் சபையின் முன்னாள் தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்ப…
-
- 0 replies
- 226 views
-
-
பட மூலாதாரம்,VARDHMAN OFFICIAL WEBSITE படக்குறிப்பு, எஸ்.பி.ஓஸ்வால் கட்டுரை தகவல் எழுதியவர், ஹர்மன்தீப் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 82 வயதான பத்மபூஷன் விருது பெற்ற ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வால் மிகப்பெரிய இணைய மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஓஸ்வாலிடம் திரைப்பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். போலியான இணையவழி உச்ச நீதிமன்ற விசாரணைகள், போலி கைது வாரண்டுகள், போலி சிபிஐ அதிகாரிகள் என மிகப்பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி ஓஸ்வாலை ஏமாற்றியிருக்கிறது ஒரு கும்பல். …
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு: செல்ல சிறுத்தைகளுடன் சிக்கியிருக்கும் இந்திய மருத்துவர் திரும்பி வர மறுப்பது ஏன்? 8 மார்ச் 2022 பட மூலாதாரம்,GIRIKUMAR PATIL படக்குறிப்பு, கிரிகுமார் பாட்டீல் ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு சிறுத்தைகளுடன் தங்கியிருக்கிறார் ஓர் இந்திய மருத்துவர். இந்த இரண்டில் ஒன்று கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார் வகை சிறுத்தை. சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் விலங்கியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் யுக்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
கார் விற்பனையாளர் வீட்டின் முன் நிர்வாணப் போராட்டம் ; பெண் எடுத்த அதிரடி முடிவு பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றமையால் கோபமடைந்த பெண்ணொருவர் கார் விற்பனையாளர் வீட்டின் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.குறித்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரை அழைத்து காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த கார் திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட…
-
- 0 replies
- 226 views
-
-
நேபாளத்தில் மத்திய உயிரியல் பூங்காவில் உள்ள 6 புலிகள் சனிக்கிழமையில் பட்டினி போடுகிறார்கள். Tigers on One Day Fasting.
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
பேஸ்புக் விருந்துபசாரம் :15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது. பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக ம…
-
- 1 reply
- 226 views
-
-
மலைப்பாம்பின் உடலுக்குள் பெண்ணின் சடலம் By NANTHINI 26 OCT, 2022 | 05:08 PM இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பொன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்த பாம்புக்குள் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா என்கிற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக் 23) இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு பாம்பு விழுங்கி உயிரிழந்துள்ளார். இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அவ…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் கைது வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது குத்திக் கொல்லப்பட்ட பி.சி. கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்னர் எசெக்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமையன்று, லண்டன் மற்றும் நாடு முழுவதும் பல அமைதியான இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த போராட்டத்தின்போது 2017 வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட கீத் பால்மரின் நினைவிடத்திற்கு அருகில் ஒருவர் சிறுநீர் கழித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்…
-
- 0 replies
- 226 views
-
-
மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்! தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் குறித்த மாணவியை தேடி வ…
-
- 0 replies
- 225 views
-