செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடு வழங்க பேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். வழக்கறிஞரான ஜெசனின் பேஸ்புக் கணக்கு கடந்த 2022ஆம் ஆண்டு முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து எனது செல்போனில் பேஸ்புக் பக்கத்தை திறந்தேன். ஆனால், எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நான் தடை செய்யப்படுவதாக பேஸ்புக் தெரிவித்தது. எனது கணக்கு முடக்கப்பட்டதற்காக நீளமான விளக்கத்தை அது கொடுத்தது. அதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்ததாகவும், அது பேஸ்புக் விதிகளை மீறும…
-
- 1 reply
- 226 views
- 1 follower
-
-
திருமணத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டோர் பலி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவாரா பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு நேற்றைய தினம் அதிகாலை படகில் வீடு திரும்பியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். https://athavannews.com/2023/1334784
-
- 0 replies
- 287 views
-
-
அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக ‘பைலட்’ ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லொக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி ‘பைலட்’ ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://thinakkural.lk/article/258424
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 JUN, 2023 | 11:35 AM அவர் விமானத்தின் கதவுகளை திறந்தவேளை நான் வாழ்க்கையில் என்ன தவறுசெய்தேன் என நினைத்தேன் என கடந்த மாதம் ஏசியான விமானநிலையத்தின் அவசர நிலை கதவுகளை ஒருவர் திறந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது விமானத்தில் பயணிக்கும்போது உங்களிற்கு மோசமான ஆசனம் கிடைக்கின்றதே என நீங்கள் நினைத்துப்பார்ப்பவரா அப்படியானால் லீ யூன் யுன்னிற்காக ஒரு நிமிடம் அனுதாபப்படுங்கள். ஏசியானா எயர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணித்துக்கொண்டிருந்தவேளை அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி விமானம் பயணி…
-
- 7 replies
- 476 views
- 1 follower
-
-
எகிப்து நாட்டின் ஹூர்கடா நகரத்தில் உள்ள கடற்கரை கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அற்புதமான இடமாக இருக்கும். பளிங்கு போன்ற தெளிவான கடல் நீர், 37பாகை செல்சியஸ் வெப்பநிலை என்பன அந்தக் கடலில் நீராட, சுழியோடி மகிழ, கடற்கரையில் அமர்ந்து சூரியக் குளியல் செய்ய என பல உல்லாசப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும். இன்று நிலமை மாறி இருக்கிறது. கடற்கரையின் வெள்ளை மணலில் மனிதக் காலடிகளைக் காணவில்லை. அதன் 75 கிலோ மீற்றர் நீள சுற்றளவான கடற்கரை அரசாங்கத்தால் இப்பொழுது பாவனைக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. 08.06.2023 வியாழக்கிழமை Elysees Dream Beach Hotelக் கு முன்னால் உள்ள கடலில் குளித் துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் சுறாவினால் கொல்லப்பட்ட பின்னரே இந்த நிலை அங்கு வந்திருக்கிறது. …
-
- 5 replies
- 366 views
-
-
பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மோசமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கால்நடைத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய பங்களிப்பையும் லாபத்தையும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2023 நிதியாண்டில் விவசாயத் துறையிலிருந்து 62.68 சதவீதமும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.36 சதவீதமும், கால்நடைத் துறையின் பங்களிப்பு கடந்த ஆண்டு 2.25 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 3.78 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த நிதியாண்டில் 43.7 மில்லியனாக இருந்த எருமைகளின் எண்ணிக்கை 45 மில்லியனை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி முட்டைகளில் கரு உருவாகியுள்ளது. 16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என கூறப்படுகிறது. இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிப் பிறப்பு மூலம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது. இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவ…
-
- 5 replies
- 628 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, மாங்காடு பிரதேசத்தில் பேத்தை மீனை (puffer fish) உண்ட 27 வயதான பெண் உயிரிழந்துள்ளார். மூவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்த யுவதியின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், ஒவ்வாமை ஏற்பட்ட மற்றவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானில் தேர்ச்சிவாய்ந்த சமையற்கலை நி…
-
- 0 replies
- 429 views
-
-
உடலுறவு விளையாட்டுக்கு அங்கிகாரம் ஸ்டாக்ஹோம் உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன. இந்தியாவைப் போன்ற நாடுகளில் தற்போது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேறி வரும் நிலையில், இதற்கான எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். இதையெல்லா…
-
- 39 replies
- 3.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஜூன் 2023 உங்கள் துணிகளை துவைப்பதற்கு நீங்கள் சோம்பலாக உணர்கிறீர்களா? ஒரு ஜீன்ஸ் பேண்டை வாரக்கணக்கில் துவைக்காமல் பயன்படுத்துகிறீர்களா? துணிகளில் அதிகமான அழுக்கோ, துர்நாற்றமோ வந்தால் மட்டும்தான் துவைப்பது குறித்து யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ‘நோ வாஷ் இயக்கத்தில் ’ (No wash Movement) ஒருவர். இந்த கட்டுரை உங்களுக்கானது. உலகம் முழுவதும் தங்களது துணிகளை துவைக்க விரும்பாத அல்லது மிக அரிதாகவே துவைக்க விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. துணிகளை குறைவாக துவைப்பதே நல்லது என்பதை வலியுறுத்தும் விதமாக மேற்கத்திய நாடுகளில் ‘No wash Club’ என்ற ஒன்று உருவாக்கப…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
06 JUN, 2023 | 09:42 AM அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த ‘ஷோயி’ என்ற லாப்ரடோர் - ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், விசித்திரமான முறையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 12.7 சென்றி மீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கை இந்த ஷோயி கொண்டுள்ளது. அதனை கால்நடை மருத்துவர் அளந்து பார்த்ததன் பின்னரே கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைத்தார். ஷோயின் உரிமையாளர்களான சாடியும் ட்ரூவும் “ஷோயி’ 6 வாரமாக இருக்கும் போது அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஷோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அதனால் அது நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது” என்றனர். https://www.…
-
- 0 replies
- 486 views
- 1 follower
-
-
மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறை தனது 11 வயது மகளை கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது. அதோடு 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் வெளிநாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தந்தை உட்படுத்தியுள்ளதாக உரகஸ்மஹந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, தனது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூற…
-
- 0 replies
- 234 views
-
-
காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த யுவதி; காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உடதியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தி உள்ளார். அத்தோடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் தங்கிய இளம் ஜோடி கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசித்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர். இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்…
-
- 0 replies
- 291 views
-
-
Published By: VISHNU 04 JUN, 2023 | 09:19 PM திருமணத்துக்காக ஆடை தைக்க கொடுத்த துணிகளை, திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காத தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்துக்காக அப்பகுதியில் உள்ள தையலகம் ஒன்றில் ஆடைகளை தைக்கக் கொடுத்திருந்தார். தையல்காரர் ஆடைகளை சொன்ன திகதிக்கு தைத்துக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இளைஞனுக்கு திருமணம் நடந்து முடிந்துவிட,…
-
- 2 replies
- 334 views
- 1 follower
-
-
கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகைக்கு உரிமை கோரும் நூற்றுக் கணக்கானோர் கனடாவில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசுத் தொகையை பலரும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு லொத்தர் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட இந்த பரிசுத் தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை. இந்த மாதம் 28ம் திகதி லொத்தர் சீட்டு காலாவதியாக உள்ளது. இந்த லொத்தர் சீட்டு தங்களுடையதாக இருக்கக் கூடும் எனக் கூறி சுமார் 760 பேர் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளனர். கனடிய வரலாற்றில் மிகப் பெரிய தொகை பரிசுப் பணம் வென்றெடுக்கப்படாத சந்தர்ப்பம் இதுவாக பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. லொத்தர் சீட்டு தொலைந்து விட்டதாக கூறி பரிசு பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலர் தொலைபேசி அழைப்…
-
- 6 replies
- 541 views
-
-
24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு மடக்கிப் பிடிப்பு ! kugenJune 4, 2023 யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது. தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்க…
-
- 2 replies
- 300 views
-
-
இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்க அதிகாரி ஒருவர் தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டமைக்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய சத்தீஸ்கர் மாநிலமான உள்ள கெர்கட்டா அணையில் உள்ள நீரே குறித்த அதிகாரியினால் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவு ஆய்வாளரான இந்த அரச அதிகாரி செல்பி எடுக்கும் போது, அவரது கைப்பேசியை குறித்த நீர்தேக்கத்தில் வீழ்ந்தது. இதனையடுத்து உள்ளூர் சுழியோடிகளை நாடிய போதும் அவர்களால் அந்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கைப்பேசியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களை வரவழைத்து, 3 நாட்களாக 21 இலட்சம் லிற்றர் லிற்றர் நீரை அவர் …
-
- 7 replies
- 537 views
- 1 follower
-
-
பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பெப்ரவரி மாதம் நைலா என்ற குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பிறந்த மூன்று நாட்களில் குப்புறப் படுத்து தலையை தூக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத தாய் சமந்தா தனது போனில் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகியது. இதுகுறித்து சமந்தா கூறும்போது, “முதல் தடவை அவள் தனது இடத்திலிருந்து நகர்வதை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். என் வாழ்க்கையில், பிறந்த குழந்தை ஒன்று இவ்வளவு விரைவாக நகர்ந்ததை நான் பார்த்ததில்லை. என் குழந…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
கொடிய விஷம் கொண்ட நாகத்துக்கு சத்திரசிகிச்சை செய்த சம்பவம் ஒன்று நாட்டில் பதிவாகியுள்ளது. நாக பாம்பின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட கட்டியால் ஏற்பட்ட வலி காரணமாக இந்த நாகப்பாம்பு இரண்டரை மாதங்களுக்கு மேல் சாப்பிட முடியாமல் தவித்துள்ளதாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை வைத்திய பீடத்திலுள்ள வனஜீவராசிகள் பிரிவு வைத்தியர்களுடன் இணைந்து இந்த நாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/256287
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் பிரபல பாடசாலை ஒன்றில் - 08ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய 09 ஆம் தர மாணவன் Vhg மே 30, 2023 மட்டக்களப்பு பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயியிலும் 10 ஆம் தர மாணவன் ஒருவன் மேலுமொரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 09 ஆம் தர மாணவிக்கு தங்கத்தில் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் சில வருடங்களாக ஏற்பட்ட காதலில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 தரத்தில் கல்விகற்கும் போது 08 தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு யாருக்கும் தெரியாமல் தங்கத்தில் தாலி கட்டியுள்ளான். இது யாருக்கும் தெரியாமல் ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மாணவி சில தினங்ளுக்கு முன்பு பாடசாலையின் மூலம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்…
-
- 2 replies
- 479 views
-
-
உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள்; சிரிக்கும் கன்னியாஸ்திரி; அதிசயிக்கும் மக்கள் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கன்னியாஸ்திரி உடல் கெடாமல் அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரியில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர். இவர் தனது 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர். இந்நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க தோண்டி எடுத்துள்ளனர். அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால் பகுதி தெரிந்திருக்கிறத…
-
- 0 replies
- 457 views
-
-
தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆ…
-
- 0 replies
- 422 views
-
-
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன . அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை…
-
- 0 replies
- 312 views
-
-
சாவகச்சேரி பிரதேச சபை வீதியை அபகரித்த தனிநபர் – போராடி மீட்ட மக்கள் May 12, 2023 யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தினையும் சட்ட விரோதமான முறையில் தனி நபர் ஒருவர் அபகரித்து எல்லை வேலிகளை போட்டு , அவ்வீதி ஊடான போக்குவரத்தையும் தடை செய்து இருந்தார். குறித்த நபரின் ஆக்கிரமிப்பில் இருந்து வீதியை மீட்டு தர கோரி அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பிரதேச சபை செயலாளர் , கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பேச்சு நடாத்திய போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்…
-
- 8 replies
- 942 views
-
-
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்தவர் சீசர் ஒலால்டே. 18 வயதான இவர், தற்கொலைக்கு முயல்வதாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கிடைக்க, அவரது வீட்டிற்கு பொலிஸ்விரைந்துள்ளது. சீசர் ஒலால்டேவின் தற்கொலையை தடுத்து நிறுத்திய நிலையில், அங்கு நிலவிய காட்சிகளால் பொலிஸாருக்கு அதிர்ச்சியும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில், சீசர் ஒலால்டேவை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பேரில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பொலிஸ்துறையினர், “சீசர் ஒலால்டே, அவரது பெற்றோர்களான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, அவரின் மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரைச் சுட்டுக் கொலை செய்திருக்கிறார். அவர்களைக் கொலை செய்தது ஏன் என சீசரிடம் நடத்த…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-