Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஏமாற்றிய புறோக்கரால் தாலிகட்டியவுடன் வெளியேறிய யாழ் யுவதி ; தவிக்கும் லண்டன் மாப்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான மாணவிக்கு 31 வயது லண்டன் மாப்பிளை என கலியாணப் புறோக்கர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் மாப்பிளையின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் மாப்பிளை லண்டனில் பெரிய பணக்காரனாக உள்ளதாக கூறி மாப்பிளையின் ஜாதகம் பெற்றோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு யாழில் உள்ள பிரபல வைத்தியர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்க பெண்னின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள். மாணவியின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனராம். இந்நிலையில் மகள் வெளிநாடு போனால்…

  2. இந்தியாவில் உள்ள ஒரு அரசாங்க அதிகாரி ஒருவர் தனது தொலைந்து போன தொலைபேசியை மீட்டெடுப்பதற்காக நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீரை வெளியேற்ற உத்தரவிட்டமைக்காக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய சத்தீஸ்கர் மாநிலமான உள்ள கெர்கட்டா அணையில் உள்ள நீரே குறித்த அதிகாரியினால் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவு ஆய்வாளரான இந்த அரச அதிகாரி செல்பி எடுக்கும் போது, அவரது கைப்பேசியை குறித்த நீர்தேக்கத்தில் வீழ்ந்தது. இதனையடுத்து உள்ளூர் சுழியோடிகளை நாடிய போதும் அவர்களால் அந்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கைப்பேசியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து நீர் இறைக்கும் பாரிய இயந்திரங்களை வரவழைத்து, 3 நாட்களாக 21 இலட்சம் லிற்றர் லிற்றர் நீரை அவர் …

  3. பட மூலாதாரம்,VK THAJUDHEEN படக்குறிப்பு, மகளின் திருமணம் முடிந்த சில நாட்களில் தாஜுதீன் கைது செய்யப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ரஃப் பதானா பதவி,பிபிசி, திருவனந்தபுரம் 17 நிமிடங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில், கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் 'திருடன்' என்று தவறாக கருதப்பட்டு 54 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும், குற்ற வழக்கில் இருந்து இவரது பெயர் அழிக்கப்பட்டாலும், அதற்கு பெரும் விலையை கொடுத்திருக்கிறார் அந்த நபர். தனக்கு நேர்ந்த அநீதிக்காக இன்னும் அவர் நீதி கேட்டு போராடி வருகிறார். …

  4. Published By: SETHU 24 MAY, 2023 | 10:59 AM வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது மோதிய லொறியின் சாரதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வொஷிங்டன் டிசி நகரிலுள்ள வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு ட்ரக் வண்டியொன்று மோதியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாகனத்தை பொலிஸார் ஆராய்ந்தபோது, ஹிட்லர் தலைமையிலான நாஸிகளின் சுவஸ்திகா பதாகையொன்று அதில் காணப்பட்டது, இம்மோதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வாகனத்தின…

  5. பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் நெருப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்கள் அங்குமிங்கும் ஓடியபடி சத்தமாக குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வீட்டு உரிமையாளர், வீடுகள் தீப்பிடித்து எரிவதை அறிந்து உடனடியாக தன் மனைவியுடன் வெளியேறினார். சிறிது நேரத்தில் வீட்டின் மேற்பகுதி கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகியது. சரியான சமயத்தில் நாய்கள் குரைத்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். வீட்டைவிட்டு வெளி…

  6. பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து நடிகையொருவரிடமிருந்து 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சந்தேக நபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் என நீதிமன்றில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் மஹர சிறைச்சாலையின அதிகாரிகளால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னில…

  7. யாழ்ப்பாண யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் யுவதி ஒருவரை சூனியம் நீக்குவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மந்திரவாதியால் பாதிக்கப்பட்ட யுவதி தனக்கு நடந்தவற்றை தனது தாயிடமும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுவ…

  8. யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் …

  9. சாவகச்சேரி பிரதேச சபை வீதியை அபகரித்த தனிநபர் – போராடி மீட்ட மக்கள் May 12, 2023 யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியையும் , கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தினையும் சட்ட விரோதமான முறையில் தனி நபர் ஒருவர் அபகரித்து எல்லை வேலிகளை போட்டு , அவ்வீதி ஊடான போக்குவரத்தையும் தடை செய்து இருந்தார். குறித்த நபரின் ஆக்கிரமிப்பில் இருந்து வீதியை மீட்டு தர கோரி அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பிரதேச சபை முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பிரதேச சபை செயலாளர் , கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பேச்சு நடாத்திய போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்…

  10. Published By: SETHU 12 MAY, 2023 | 06:04 PM இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மாதாந்தம் 30,000 சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவரிடம் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் இருப்பதை அதிகரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹேமா மீனா எனும் இவர், மத்திய பிரதேச பொலிஸ் வீடமைப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் ஆவார். 7 வருடங்களாகவே அவர் சேவையில் உள்ளார். அண்மையில் அவரின் வீட்டில் ஊழல் எதிர்ப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முற்றுகையின்போது ஹேமா மீனாவின் பெயரிலும் அவரின் குடும்பத்தினரின் பெயரிலும் 7 கோடி இந்திய ரூபா பெறுமியான சொத்துககள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடம்பர கார்கள் …

  11. ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விழுந்தார். இதனை ஏனையவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது. அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/253268

  12. 10 MAY, 2023 | 10:22 PM குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறின்போது காலில் கயமடைந்த நபரை பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வந்த நிலையில், அங்கு சிகிச்சையளித்த பெண் வைத்தியரை குறித்த நபர் கொலை செய்துள்ளார். இச் சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றிய 23 வயதான வந்தனா தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவ தினமான இன்று (10) அதிகாலையில் குறித்த வைத்தியர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர். …

  13. ஒரு தேப்பனுக்கு பிறந்தனியே எண்டது சந்தேகம் என்பது, ஒருவரை காயப்படுத்தி தூற்ற சொல்லப்படுவது. தாயின் நடத்தையில் சந்தேகம் தெரிவிப்பது போல தூற்றுதல். உண்மையில் குழந்தை எப்போதுமே ஒரு தந்தைக்கும், ஒரு தாய்க்கும் மட்டுமே உருவாகும் என்பது உலக நியதி. ஆனாலும் அது பொய்யாக்கப்பட்டுள்ளது. இந்த உயிரியல் முறைமை தடை செய்யப்படுவதுக்கு முன், பிறந்த 30 - 40 பிள்ளைகளுக்கு மூன்று பெற்றோர்கள். அதாவது மூன்றாவது பெண் அளித்த டிஎன்ஏ கூறுகளும் சேர்ந்து பிறந்த சிறுமி அலானா. அதற்காக மூன்றாமவரையும் பெற்றவராக கருத மாட்டேன் என்கிறார். ஆனால் மூன்றாமவர் பெரும் பணக்காரராக இருந்தால், அவரும் பெற்றோர் தான், நானும் அவர் வாரிசு தான் என்றால் சட்டம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் சட்டத்துக்கு அ…

  14. களுத்துறை 16 வயது யுவதி மரணம்-நீதிமன்றத்தின் உத்தரவு! களுத்துறையில் 16 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, உயிரிழந்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்ததாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி…

  15. Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 12:26 PM இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் வைத்தியர் ஒருவர் ஒட்டும் பசையை (பெவிக்குவிக்) தடவிய சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் லிங்கசூகூரைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா தன் 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானா மாநிலம் அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த வைத்தியர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு…

  16. Published By: DIGITAL DESK 5 08 MAY, 2023 | 12:03 PM 15 கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோ நிறை கொண்ட தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்துள்ளது. 43 வயதுடைய வர்த்தகரான இவர், கொழும்பு மருதானை பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்பவர் எனவும் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் திங்கட்கிழமை (08) காலை 09.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டு அங்கிருந்து விமான ந…

  17. Published By: NANTHINI 07 MAY, 2023 | 02:41 PM திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், சிசிடிவி கெமராவில் விபூதி பூசி மறைத்துவிட்டு, முருகன் கை வேல் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்றிரவு (6) புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் விபூதி பூசி மறைத்துள்ளனர். பின்னர், முருகன் சிலையின் கையில் இருந்த மூன்றடி வெள்ளி வேல், அங்கு வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கு மற்றும் இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த …

  18. வேற்று கிரகவாசிகளை ஏன் கண்டறியவில்லை? விஞ்ஞானிகள் விளக்கம் வேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை என்பதற்கான விளக்கங்களை விஞ்ஞானி அளித்து உள்ளார். தினத்தந்தி ஜெனீவா, பூமியை தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் தேடல் ஒருபுறம் நடந்து வந்தபோதிலும், வேற்று கிரகவாசிகளான ஏலியன்ஸ் பற்றிய சர்ச்சையும் தொடர்ந்து வருகிறது. அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் உருவத்தில் எப்படி இருப்பார்கள்? எந்த பகுதியில், என்ன செய்து கொண்டிருக்கின்றனர் மற்றும் அவர்கள் மனிதர்களை போன்ற உருவம் கொண்டவர்களா? என்பன போன்ற ஆயிரக்கணக்கான விடை தெரியாத கேள்விகள் நம்முன் இருக்கின்றன. இந்த வேற்று கிரகவாசிகள்…

  19. நீங்கள் தங்கும் ஹோட்டலில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? Play video, "ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன?", கால அளவு 1,40 01:40 காணொளிக் குறிப்பு, ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு ஜேமி கிளாட்மேனும் அவரது 12 தோழிகளும் விடுமுறையை கழிக்க சென்று இருந்தனர். அங்கு இருந்த ஒரு வீட்டை Airbnb மூலமாக வாடகைக்கு எடுத்து விடுமுறையை கொண்டாடினர். அதில் ஒரு தோழி, தான் டிக்டாக்கில் பார்த்தது போல பாத்ரூமில் கேமரா …

  20. அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் வேகாசில் இருந்து நேற்று மதியம் 2 மணி அளவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார். விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து விமான நிலையம் விரைந்த பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், பயணி கூறியதை…

  21. உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு அருகில் கண்ணீருடன் காத்திருந்த பசு! மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(4) மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய குறித்த கன்றுக்குட்டி உயிரிழந்துள்ளது. இதன்போது அங்குவந்த அதன் தாயும், சகோதர குட்டியும் கண்ணீர்சிந்திய நிலையில் கன்றுக்குட்டியின் சடலத்திற்கு அருகில் நின்றமை காண்போருக்கு வேதனையை ஏற்படுத்தியிருந்தது. https://athavannews.com/2023/1331410

    • 1 reply
    • 417 views
  22. ஜெருசலேமில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இருக்கும் ஏணி ஒன்று 2 நூற்றண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருக்கிறது. அதன் இடத்தில் இருந்து இன்று வரை யாரும் அதனை நகர்த்தவில்லை. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் புனித தலமாக கருதப்படும் ஜெருசலேம், உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமும் கூட. ஜெருசலேமிற்கு புனித யாத்திரை வரும் மக்கள் இந்த ஏணியையும் தவறாமல் பார்த்துவிட்டு செல்கின்றனர், அவ்வளவு முக்கிய காட்சிப்பொருளாகிவிட்டது! ஏன் இந்த ஏணி 266 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறது? …

  23. இலங்கை தொடர்பான ‘அமெரிக்காவின் சதி’யை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய விமல் வீரவன்ச, பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் மரணம் போன்று விபத்தின் ஊடாக தனது மரணம் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏவைச் சுட்டிக்காட்டி, மூளைச்சாவு அடைந்தவர் எந்த விலையிலும் நிரூபிக்கப்படாத வகையில் இந்த விபத்து நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு எதிரான தனது நிலைப்பாடு மற்றும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பான தனது புதிதாக வெளியிடப்பட்ட பு…

  24. Published By: RAJEEBAN 03 MAY, 2023 | 03:11 PM சேர்பிய தலைநகரில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும் பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன. ஐந்துமாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 12 அல்லது 13 வயது மாணவன் ஒருவனே இந்ததுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளான் துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியை நோக்கி பொலிஸ் ரோந்து பிரிவினர் அனுப்பப்பட்டனர் அவர்கள் உடனடியா அங்கு விரைந்து அந்த சிறுவனை கைதுசெய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழாம்வகுப்பு மாணவனே இந்த துப்பாக்கி பிரயோ…

  25. அவுஸ்திரேலிய மீனவரின் உடல் முதலைக்குள்ளிருந்து மீட்பு 03 May, 2023 | 10:12 AM Published By: Sethu அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரின் உடல் ஒரு முதலைக்குள்ளிருந்து மீட்கப்பட் டுள்ளது. 65 வயதான கெவின் டார்மோடி எனும் இம்மீனவர் இறுதியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கென்னடிஸ் பென்ட் எனும் இடத்தில் கடந்த சனிக்கிழமை காணப்பட்டார். உவர்நீர் முதலைகள் நிறைந்த பகுதி இது. இரு நாட்கள் தேடியும் அவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை (01) பொலிஸார் இரு பாரிய முதலைகளைக் கொன்று சோதனையிட்டனர். அவற்றில் ஒரு முதலைக்குள் மனித உடல் கண்டுபிடிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.