Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. திரைப்படங்களில் பார்த்த பின் தான் அமேசான் காடுகளில் மட்டுமே இருக்கும், அனகோண்டா பாம்புகளை பற்றி பலருக்கும் தெரியும். அனகோண்டா பாம்புகளின் உருவத்தை பார்த்து உலகின் மிக நீளமான பாம்பு இது தான் என நினைக்கலாம். ஆனால் நிஜத்தில் Reticulated Python எனப்படும் ராஜமலைப்பாம்பு தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த வகை ராஜமலைப்பாம்புகள் வசிக்கின்றன. பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள அனகோண்டா பாம்புகளின் நீளம் 20 அடிக்கு மேல் இருப்பதில்லை. ஆனால் ராஜமலைப்பாம்புகளோ 20 அடிக்கும் மேல் நீளம் கொண்டவை. எடை அதிகபட்சம் 75 கிலோ வரை இருக்கின்றன இந்த ராஜமலைப்பாம்புகள். கருப்பு தோல் மீது மஞ்சள் கலந்த பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகளை கொண்டிருக்கின்றன இவ்…

    • 2 replies
    • 1.2k views
  2. காட்டுவதால் அப்படி என்னதான் பெருமை? யூன் 2019இல் Madrid இல் FC Liverpool க்கும் Tottenhamக்கும் நடந்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின் 18வது நிமிடத்தில் அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஓடிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த Kinsey Wolanski (23) இப்பொழுது நடந்த பனிச்சறுக்கும் உலகக் கிண்ண விளையாட்டுப் போட்டியிலும் (World Cup Skiing) மீண்டும் (29.01.2020) அதைச் செய்திருக்கிறார். இத்தாலிய விளையாட்டு வீரர் Alex Vinatzer, இரண்டாவது சுற்றில் எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு சிறிது முன்னர் Kinsey "RIP Kobe - Legend" என்னும் பதாதையை கையில் தூக்கிப் பிடித்த வண்ணம் அரை குறை ஆடையுடன் ஓடிவந்தார். சம்பவத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்வி பதிலின் போது, “எனது 30 வயதிற்குள்…

  3. Started by Kavi arunasalam,

    வீதிகளில் ஒரு சதத்தைக் கண்டால் “ஆஹா அதிர்ஸ்ர சதம்” என்று அதை எடுத்து தங்கள் பணப் பைக்குள் போட்டு யேர்மனியர்கள் மகிழ்வார்கள். இது காலாகாலமாக அவர்களிடம் இருக்கும் ஒரு நம்பிக்கை. நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அதிர்ஸ்ரக் காசு சில சமயங்களில் எரிச்சலைத் தருவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சுப்பர் மாக்கெற்றில் பொருட்களை வாங்கி விட்டு பணத்தைச் செலுத்த வரிசையில் நிற்கும் போது முன்னால் நிற்கும் ஒருவர் தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு தன்னிடம் இருக்கும் சில்லறைகளைக் கொட்டி ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த அதிர்ஸ்ர சதத்தை தரித்திரம் என்று ஏசச்சொல்லும். இந்தச் சில்லறைச் செப்புக் காசுகளான ஒன்று இரண்டு சதங்களை இல்லாது ஒழித்தால் என்ன என்று ஐரோப்பிய யூனியன…

  4. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மந்திரத்தை உச்சரியுங்கள் – தலாய் லாமா! கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு தலாய் லாமா தெரிவித்துள்ளார். சீனாவிலுள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்குமாறு தலாய் லாமாவிடம் முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவில் உருவான கொரோனா வை…

  5. “வயது குறைந்த ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்தால், அந்த ஆணே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி அந்த ஆண் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இத்திருமணம் இருவரதும் ஒப்புதல்களுடனேயே நடைபெற வேண்டும்” எங்கே இது நடைமுறையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இது ஒன்றும் எங்களுடைய நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. துருக்கி நாட்டில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தச் சட்ட வரைபுக்கான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரம் துருக்கிப் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அது, சிறார்கள் மீதான சுரண்டல்களையும் அவர்கள் மீதான பாலி…

  6. சிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. கால்பந்து விளையாட்டுக்கும் முதுமை மறதிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னாள் கால்பந்து வீரர்கள் மூளைச்சிதைவு நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்த அறிக்கை ஒன்று கடந்த ஒக்ரோபரில் வெளியானதையடுத்து சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது இந்த மாத இறுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடவுள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. …

  7. மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..! .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 27,132 Views மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது. தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆணாக வசித்த…

    • 1 reply
    • 944 views
  8. "ஏன் வந்து மோதுனே" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி "ஏன் வண்டி மேல நீ மோதுனே.. நான் கிடையாது நீதான் வந்து மோதுனே.. நீ எடு வண்டியை" என்று 2 வாகனங்களில் வந்தவர்களும் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. 3-வதாக ஒரு வாகனம் வந்து மோதியதில்.. புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா.. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர். விடிகாலை…

  9. கடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது! சிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை செல்லும் மாணவ, மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/கடற்கரையில்-அநாகரீகமான-ம/

  10. அவுஸ்ரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி சேகரிக்க வித்தியாசமான முறையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அமெரிக்க மொடல் அழகி கெய்லன் வாட் (Keylen Ward)என்ற 20 வயது மொடல் அழகி. ஐந்தே நாட்களுக்குள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பாதிக்கபட்ட மக்களுக்ககாக திரட்டி உள்ளார். உதவி நிறுவனத்திற்கு 10 டொலர்களுக்கு மேல் வழங்கும் நபருக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி வைப்பதாக உறுதியளித்து ஐந்து நாட்களுக்குள் ஒரு மில்லியன் டொலரை அந்த நிறுவனத்திற்கு திரட்டி கொடுத்துள்ளதோடு தான் உறுதியளித்தபடி உதவி செய்த நபர்களுக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி தனது உறுதி மொழியை காப்பாற்றியும் உள்ளார். https://www.20min.ch/people/international/story/Model-Ka…

  11. பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionநூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ. அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகள…

  12. உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்! உஅலகிலேயே அதிகம் குள்ளமான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா உலகின் உயரத்தில் மிகவும் குள்ளமானவர் என ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பெற்றவரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தாபா மகர் சுகவீனம் காரணமாக இன்று மரணமாநதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ககேந்திரா 67.08 செ.மீ. (2′ 2.41″) உயரமும், 6 கி.கி. எடையுமுள்ள இவர் சளி சுரம் காரணமாக, அவர் வாழ்ந்து வந்த பொக்காரா என்னுமிடத்தில், மருத்துவமனையில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 27 வயது. இவரது மரணம் குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அனுதாபம் தெரிவித்துள்ளது. ககேந்திராவுக்குப் 18 வயது ஆகும்போது, 2010 ம் ஆண்டு,…

    • 0 replies
    • 721 views
  13. படத்தின் காப்புரிமை kovai police கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது. இதனால் அதி…

  14. கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. அதிர்ச்சி ஆன முதும்பா! கம்பாலா: சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஷாக்கில் இருக்கிறாராம் இந்த ஸ்டோரியின் நாயகன்! உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது முதும்பா.. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு இமாம் ஆவார். இவருக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் …

  15. டுபாயில் பணிபுரிய சென்ற இலங்கை இளைஞன், வீட்டு உரிமையாளரான 60 வயது பெண்மணியை காதல் வலையில் வீழ்த்தி, பெருந்தொகை நகைகளை சுருட்டிக் கொண்டு இலங்கை தப்பி வந்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்கொழும்ப பகுதியை சேர்ந்த 30 வயதான திருமணமாகாத இளைஞன் ஒருவர் டுபாய்க்கு பணிபுரிய சென்றுள்ளார். அங்கு, வீட்டு உரிமையாளரான 60 வயது மூதாட்டியுடன் காதல் வயப்பட்டுள்ளார். அந்த மூதாட்டி ஏற்கனவே திருமணமானவர். இருவரும் நெருங்கிப்பழகியுள்ளனர். மூதாட்டிக்கு தெரியாமல் அவரது மூன்றரைக் கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்களை திருடிக் கொண்டு, இளைஞன் இலங்கை திரும்பியுள்ளார். இது தொடர்பான முறைப்…

    • 0 replies
    • 586 views
  16. சீனாவில் தாழிறங்கிய வீதி: பிளவுக்குள் சிக்கிய பேருந்தில் இருந்த 6 பேர் உயிரிழப்பு! சீனாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று திடீரென வீதி தாழிறங்கியமையால் ஏற்பட்ட விபத்தில், 6 பேர் உயிரிழந்துள்ளதோடு 16பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள ஜைனிங் நகரில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த பொதுப் பேருந்து, திடீரென ஒரு இடைவெளியில் குறித்த பேருந்து கவிழ்ந்து வெடித்தது. இதன்போது பேருந்தில் இருந்தவர்கள் குறித்த பிளவுக்குள் சிக்கிக்கொண்டனர். அருகிலிருந்தவர்கள் உயிருக்கு அஞ்சி தப்பியோடினர். இதுதொடர்பான காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது. எனினும், தீடிரென இந்த பிளவு ஏற்பட்டது …

  17. நிலவுக்கு செல்ல வாழ்க்கைத் துணை வேண்டும்: ஜப்பான் தொழிலதிபரின் வினோத அறிவிப்பு.! எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை வரும் 2023ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் முதன்முதலாக நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யசுகு மசாவா. 44 வயதாகும் இவர் சமீபத்தில் தனது காதலியான அயமே கொரிக்கி என்பவரை பிரிந்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணையை தேர்ந்தெடுக்க சுயம்வரம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தனது இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். “ தனிமை மற்றும் வெறுமை என்னை மெல்ல ஆட்கொண்டு வருகிறது.“ என அந்த…

  18. தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது! உயிருடனான 200 தேள் பூச்சிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து அவர் சீனாவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயற்சித்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பயணப் பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 200 தேள் பூச்சிகளை மீட்டுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேள்களை-கடத்த-முயற்சித்த/

  19. “ஒரு மோசமான படத்தை அவர் பார்த்திருக்க வேண்டும்” யேர்மனியப் பொலீஸ் சொல்கிறது யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள சினிமா அரங்கிற்கு 30 வயது இளைஞன் ஒருவர் தென்னிந்தியத் திரைப் (படமான தர்பார்)படம் பார்க்க புதன் கிழமை சென்றிருக்கிறார். படத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போக அவர் அப்படியே இருக்கையிலேயே உறங்கிப் போனார். பின்னர் இருக்கையில இருந்து சற்று வழுக்கி இருக்கைக்குள் அப்படியே ஆழ்ந்த நித்திரையாகிப் போனார். திரைப்படம் முடிந்து பார்வையாளர்கள் வெளியேற இவர் மட்டும் பூட்டப் பட்ட திரையரங்கில் தனியாக நித்திரையில் இருந்திருக்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கு விழித்துக் கொண்ட இளைஞர் நிலமையை உணர்ந்து பொலீஸுக்குத் தகவல் தர, அவர்கள் நடவடிக்கை எடுத்து அந்த இளைஞனை மீட்டு வீட்…

  20. யேர்மனியில் போதைப் பொருள் பாவனை இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக பேர்லின் நகரத்தின் சமூக நல ஆலோசகர் Gordon Lemm சமீபத்தில் எச்சரித்திருக்கிறார். கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவிகளே அதிகமாக போதைப் பொருள் பாவனையாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் 11 முதல் 14 வரையிலான சிறுமிகள் இதற்குள் அடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. பார்த்தாலே மனதைக் கவரும் வண்ணம் வண்ணமயமாக இருக்கும் Ecstasy போதை மாத்திரைகள் 1,50யூரோக்களுக்கு இப்பொழுது யேர்மனியில் இலகுவாக கிடைக்கிறது. இதனால் தங்கள் கைச் செலவுக்கு பெற்றோர்கள் தரும் சிறிய பணத்துக்குள்ளேயே பாடசாலை மாணவ, மாணவிகளால் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ள முடிகிறது. விருந்…

  21. யேர்மனியில் Ludwigshafen என்ற இடத்தில் நான்கு வயதுச் சிறுமி ஒருத்தி புதன்கிழமை (08.01.2020) ஊடகங்களில் கதாநாயகி ஆகியிருக்கிறாள். தனது தாய் திடீரென மயங்கி விழ, உடனடியாக 112 என்ற அவசரகால அழைப்பில் தொடர்பு கொண்டு தனது தாய்ககு உடனடியாக உதவி தேவை என்று அறிவித்திருக்கிறாள். நிலமையை உணர்ந்த காவல்துறை உடனடியாக அம்புலன்ஸை அவளது வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சிறுமியின் தாய் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிய மேலதிக சிகிச்சைக்காக அவளது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். தாயை அழைத்துச் சென்ற வாகனம் “ Tatü-Tata” என்ற ஒலியுடன் வைத்தியசாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஓட்டுனருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த நான்கு வயதுச் சிறுமிக்கு அது ஒரு பு…

  22. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம்பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார். வேலை நாட்களை குறைப்பது மட்டுமின்றி, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாற்றம் கலை, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஊழியர்கள் நேரம் செலவிட வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என ஒருப்பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக செயல…

  23. 2019 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த ஒயின் என்ற பெருமையை எசென்சியா 2008 தனதாக்கியுள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கார்கஸ் என்பவரின் தனித்துவ படைப்பான இந்த ஒயின் பாட்டில் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். சிறந்த அஸ்ஸா திராட்சைகளை சேகரித்து அவற்றை பாதாள அறையில் 10 ஆண்டுகளாக நொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இந்த எசென்சியா ஒயினில் 4 சதவீதம் ஆல்கஹால் உள்ளதாக ராயல் டோகாஜி ஒயின் ஆலையின் பொது மேலாளர் சோல்டன் கோவாக்ஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த 1.5 லிட்டர் எசென்சியா ஒயின் பாட்டில்கள் 18ல் 11 விற்பனையாகிவிட்டதாகவும் மீதமுள்ள ஏழு பாட்டில்களை 2300ஆம் ஆண்டு காலாவதியாவதற்குள் விற்றுவிடுவோம் என்றும் அவ…

    • 0 replies
    • 504 views
  24. இங்கிலாந்து நாட்டில் 44 வயதான பெண் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக டால்கம் பவுடரை சாப்பிட்டு வருகிறார். இவருக்கு இந்த வினோத பழக்கம் இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். லிசா ஆண்டர்சன் என்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டின் டெவோனைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக Talcum Powder-ஐ டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். முகத்திற்கு பூசும் பவுடரை தின்பதற்கு அடிமையான லிசா ஆண்டர்சன், அதற்காக இதுவரை எவ்வளவு பணத்தை செலவழித்துள்ளார் தெரியுமா? மயங்கி விடாதீர்கள். 15 வருடங்களாக சுமார் 8,000 பவுண்டு தொகையை டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.50 லட்சம் ரூபாய். …

    • 0 replies
    • 535 views
  25. ரஷியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைபீரியா பிராந்தியத்தின் டியூமன்((Tyumen)) நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பன்றி ஒன்றும் அதன் குட்டிகளும், அங்கிருந்த அலமாரிகளை ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்றது. பின்னர் மதுபாட்டில்கள் இருந்த இடத்தை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை தாய் பன்றி தனது மூக்கால் கீழே தள்ளிவிட்டு உடைத்தது. பின்னர் தரையில் சிந்திய மதுவை 3 பன்றிகளும் சேர்ந்து குடிக்க தொடங்கின. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதையடுத்து பன்றிகளை வெளியேற்றிய ஊழியர்கள், அதன் உரிமையாள…

    • 0 replies
    • 280 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.