Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபர் கிம். இவர், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர், கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் அங்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்தவர், பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார். பிச்சையிடுவோருக்கு இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.இவரிடம் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், போலீசாரும், 'உங்களுக்கு ஏன் இந்த நிலை' எனக் கேட்டு வருகின்றனர். அவர்க…

    • 0 replies
    • 488 views
  2. குறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா? என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்த…

    • 0 replies
    • 362 views
  3. அமெரிக்க அதிபர் டிரம்ப் 24-25 தேதிகளில் வரவிருப்பதையொட்டி,குண்டு துளைக்காத the beast கார் இந்தியா வருகிறது. இக்கார் அதிபருக்காக தனிச்சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலி கார்பனோட்டால் செய்யப்பட்ட 5 அடுக்குகள் கொண்டவை. இவை குண்டு துளைக்காமல் தாங்கக்கூடியவை. கார் ஓட்டுனரின் ஜன்னல் மட்டும் 3 அங்குலம் அளவுக்குத் திறக்கக்கூடியது. இந்த காரில் துப்பாக்கித் தோட்டாக்கள், கண்ணீர் புகைக்குண்டுகள், ரத்த பைகள் இணைக்கப்பட்டுள்ளன. தீ எதிர்ப்பு சாதனங்களும் ஸ்மோக் ஸ்க்ரீன் டிஸ்பென்சர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ரகசிய சேவை பிரிவின் பயிற்சி பெற…

    • 0 replies
    • 811 views
  4. எப்படி யோசிக்கிறாங்க… கடவுள் சிவனுக்காக ஒரு சீட் 'ரிசர்வ்' உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர். பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதில் வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி…

    • 5 replies
    • 748 views
  5. பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான் வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள் பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும். ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில், அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர் கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக மாறியிருக்கிறது. க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துவருகிறது. இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது. இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத…

  6. கருவிலுள்ள குழந்தைகளுக்கு கருணை காட்டும் கொரோனா- அவசர ஆய்வில் கிடைத்த அற்புத தகவல் கொரோனாவின் கொடூரப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல் தொடர்ந்து சின்னாபின்னமாகி வரும் சீனாவில், இதுவரை 1500இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா (COVID-19) வைரஸ் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்குக் குறைந்த அளவு பாதிப்புகளையே ஏற்படுத்தக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவக் கூடியதாகவுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மேலும் இருவருக்கு அதிவேகமாக கொரோனா பரவுகிறது. ஆனாலும் இதுவரை இந்த கொடிய வைரஸ்க்குக் குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கொரோனாவின் அறிகுறியான சுவாசப…

  7. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் மனித இனத்தின் சராசரி ஆயட்காலம் 90-ஐ நெருங்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றால் இந்த சராசரி ஆயுட்காலம் சாத்தியமாகி வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உயிரினங்கள் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றன என்பது டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். மரபணு ஆய்வின்படி பார்த்தால் மனிதர்களின் இயல்பான ஆயுட்காலம் 38 ஆண்டுகள் மட்டுமே எ…

    • 0 replies
    • 379 views
  8. ரியாஸ் சொஹைல் பிபிசி உருது பாகிஸ்தானில் திருமணமாக இருந்த புது மாப்பிள்ளை ஒருவர், மண விழாவில் இருந்து அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதற்கு காரணம் அவருக்கு ஏற்கனவே ஒரு முறை அல்ல இரு முறை திருமணம் நடந்திருந்தது தெரியவந்ததுதான். அடி தாங்க முடியாமல் வாகனம் ஒன்றுக்கு கீழே சென்று ஒளிந்து கொண்ட புது மாப்பிள்ளை, பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் மீட்கப்பட்டார். பாகிஸ்தானில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ள சட்ட ரீதியாக அனுமதியுண்டு. ஆனால், ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு தன்னுடன் வாழும் பெண்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அவர்கள் அடுத்த திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால், ஆசிஃப் ரஃபீக் சித்திக்கி எனும்…

  9. ஜாக்பாட் திரைப்படம் போல அட்சயபாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அள்ள அள்ள வற்றாமல் தங்க புதையல் தரும் அட்சய பாத்திரம் என ஓட்டை அட்டை பெட்டியை கொடுத்து கம்பி நீட்டிய 8 பேர் கம்பி என்னும் சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி ... ஜோதிகா - ரேவதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜாக்பாட் என்ற படத்தில் அட்சயபாத்திரம் இருந்தால் தங்கம் அள்ள அள்ள வரும் என்று கதை சொல்லி இருப்பார்கள்..! அதே கதையை நிஜத்தில் சொல்லி 2 கோடியே 10 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் நவீன்…

  10. பெண் நோயாளிகள் மீது பாலியல் துன்புறுத்தல் : மருத்துவருக்கு ஆயுள் தண்டனை பெண் நோயாளிகள் மீது 90 பாலியல் தாக்குதல்களை மேற்கொண்ட மருத்துவர் மனீஷ் ஷாவுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு மருத்துவ நிபுணராகப் பணியாற்றிய மனீஷ் ஷா (Manish Shah), லண்டனில் பணிபுரிந்தபோது 23 பெண்கள் மற்றும் 15 வயதுச் சிறுமிகள் மீது தனது தனிப்பட்ட இச்சைக்காக ஆக்கிரமிப்பு உடற்சோதனைகளை மேற்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது. ரொம்ஃபேர்டைச் சேர்ந்த மனீஷ் ஷா, மே 2009 மற்றும் ஜூன் 2013 க்கு இடையில் காலத்தில் பெண்கள் மீது தேவையற்ற உடற்சோதனைகளை மேற்கொண்டார். நோயாளிகளின் ஆரோக்கியம் குறித்துப் பயமுறுத்துவதற்கு ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie) மற்றும் ஜேட் கூடி (Jade G…

  11. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர் கொல்லியான கொரோனா வைரஸ், சீனாவில் இளம்பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளது. பெயரை கேட்டாலே நடுங்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இளம்பெண்ணை எப்படி காப்பாற்றியுள்ளது என்பதை பார்ப்போம். கொரோனாவின் மையமான வூகான் நகரில் இருந்து 3 மணி நேரம் பயண தூரத்தில் உள்ள நகரம் ஜிங்ஷான். இங்கு கடந்த வாரம் 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவன் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, வீடு ஒன்றில் நுழைந்துள்ளான். அந்த வீட்டின் படுக்கையறையில் இளம்பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இதனை கண்ட கொள்ளையன், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தோடு நெருங்கியுள்ளான். திடீரென தனது படுக்கை அறையில் மர்ம மனிதன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடை…

  12. இந்த உலகத்தில் அழியாத செல்வம் ஒன்று உண்டென்றால் அது கல்வி செல்வமே. படிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை பலர் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில் கேரளாவை சேர்ந்த 105 வயதான மூதாட்டி ஒருவர் கல்வியில் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறப்பு: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பகீரதி அம்மா என்ற மூதாட்டி நான்காம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். முதியவர்கள் தேர்வுகள் எழுதுவது அவ்வப்போது நடக்கும் விஷயம் என்றாலும், 105 வயதான பகீரதி அம்மாவின் கல்வி பயிலும் முயற்சியே இதில் சிறப்பான விஷயம். தன் 105 வயதில் பகீரதி அம்மா, நான்காம் வகுப்புக்கு இணையான கல்வியறிவு தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார். …

  13. படத்தின் காப்புரிமை Getty Images கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்காகக் குழாய் மூலமாக சாராயம் வழங்குவது போல ஒரு காட்சி வரும். இப்போது அந்தக் காட்சி கேரளாவில் நிஜமாகி உள்ளது. தேர்தல் வெற்றிக்காகவெல்லாம் மதுபானம் வழங்கப்படவில்லை, அரசு அதிகாரிகளின் அஜாக்கிரதையால் வீட்டுக் குழாய்களில் மதுபானம் வந்திருக்கிறது. என்ன நடந்தது? கடத்தப்பட்ட அல்லது பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்களை கலால்துறை கைபற்றி வைத்திருக்கும் அல்லவா? அது போல திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள மதுபான விடுதியில் கைப்பற்றப்பட்ட மதுபானங்களை அப்புறப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ 6000 லிட்டர் பியர், பிராந்தி மற்றும் ரம் ஆகியவற்றை அப்புற…

    • 0 replies
    • 565 views
  14. டேவிற் கமரனின் பாதுகாவலர் விமானக் கழிப்பறையில் துப்பாக்கியைத் தவறவிட்டார் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிற் கமரனின் பாதுகாவலர் ஒருவர் தனது துப்பாக்கியை ஜெட் விமானத்தின் கழிப்பறையில் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்ரிஷ் எயார்வேய்ஸ் விமானத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் கழிப்பறைக்குச் சென்ற பயணி ஒருவர் அங்கிருந்த துப்பாக்கியைக் கண்டெடுத்து விமான ஊழியர்களிடம் கொடுத்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் டேவிற் கமரனுக்கு மெற்றோ பொலிற்ரன் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். துப்பாக்கியைத் தவறவிட்ட அதிகாரி உடனடியாகக் …

  15. தென்னாப்பிரிக்காவில் தாயில்லாத சிங்கக்குட்டியை பபூன் இன ஆண் குரங்கு ஒன்று தனது குழந்தையாக கருதி பராமரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில் தாயில்லாமல் சுற்றித் திரிந்த சிங்கக்குட்டியை பபூன் குரங்கு ஒன்று தூக்கிச் சென்று பராமரித்து வருகிறது. மரத்தில் ஏறி உச்சிக்கு செல்லும்போதும், மரம்விட்டு மரம் தாவும்போதும் சிங்கக்குட்டியை தன்னுடனேயே தூக்கிச் சென்று பத்திரமாக வைத்து கொள்கிறது. ஹர்ட் ஸ்கல்ட்ஸ் (Kurt Schultz) என்பவரால் கடந்த 1ம் தேதி இக்காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. https://www.polimernews.com/dnews/99303/தாயில்லாத-சிங்கக்குட்டியைதனது-குழந்தையாக-பாவித…

    • 0 replies
    • 613 views
  16. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன் ரவுன் சமூக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முடி உதிர்தல், புற்றுநோய் அல்லது அலோபீசியா போன்ற நிலைமைக…

  17. நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அவருக்கு €4,500 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. Sables-d'Olonne, (Vendée) நகரில் இந்த சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் இங்குள்ள வீதி ஒன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் தவிர மேல ஒருவரும் மகிழுந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். இருவரையும் தட்டி எழுப்பிய காவல்துறையினர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்துள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த இருவரில் சாரதி மது அருந்திவிட்டு மகிழுந்தை ஓட்டியதாகவும், சமிக்ஞை விளக்கிற்…

    • 0 replies
    • 336 views
  18. கொஞ்சும் புறாவே 25,000 குற்ற்றப்பணம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்”. இந்த முடிவு நீதிமன்றத்தால்அறிவிக்கப் பட்டதில் இருந்து Inge Euler (74) நிலை குலைந்து போயிருக்கிறார். இப்படி ஒரு தண்டனை கிடைப்பதற்கு Inge Euler அப்படி பாரிய ஒரு குற்றமும் செய்துவிடவில்லை. கருணையை வெளிப்படுத்தப் போய் அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் செய்தது புறாக்களுக்கு தீனி போட்டது மட்டுந்தான். அதனால் வந்த வினையே இது. 1989 இல் Ingeயின் பக்கத்து வீட்டில் இருந்தவர் தகவல்களைப் பரிமாறும் புறாக்களை (அஞ்சல் புறாக்கள்) வளர்த்துக் கொண்டிருந்தார். அவற்றின் மேல் பரிவும் விருப்பமும் கொண்டதால் Inge அவற்றை அவரிடம் இருந்து பெற்று தனது பல்கணியில் கூடு அ…

  19. வாவ்.. 10 நாளில் 1000 படுக்கைகள்.. ஆஸ்பத்திரி.. கட்டி முடித்து சாதித்தது சீனா! சீனாவின் வுகான் நகரில் 10 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களுக்காக இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது சீனா. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரம் மொத்தமும் மோசமான பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக போராடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவைத்தாண்டி பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு ஏற்ப…

  20. திரைப்படங்களில் பார்த்த பின் தான் அமேசான் காடுகளில் மட்டுமே இருக்கும், அனகோண்டா பாம்புகளை பற்றி பலருக்கும் தெரியும். அனகோண்டா பாம்புகளின் உருவத்தை பார்த்து உலகின் மிக நீளமான பாம்பு இது தான் என நினைக்கலாம். ஆனால் நிஜத்தில் Reticulated Python எனப்படும் ராஜமலைப்பாம்பு தான் உலகிலேயே மிகவும் நீளமானது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த வகை ராஜமலைப்பாம்புகள் வசிக்கின்றன. பார்ப்பதற்கு பிரமாண்டமாக உள்ள அனகோண்டா பாம்புகளின் நீளம் 20 அடிக்கு மேல் இருப்பதில்லை. ஆனால் ராஜமலைப்பாம்புகளோ 20 அடிக்கும் மேல் நீளம் கொண்டவை. எடை அதிகபட்சம் 75 கிலோ வரை இருக்கின்றன இந்த ராஜமலைப்பாம்புகள். கருப்பு தோல் மீது மஞ்சள் கலந்த பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகளை கொண்டிருக்கின்றன இவ்…

    • 2 replies
    • 1.3k views
  21. காட்டுவதால் அப்படி என்னதான் பெருமை? யூன் 2019இல் Madrid இல் FC Liverpool க்கும் Tottenhamக்கும் நடந்த உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின் 18வது நிமிடத்தில் அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஓடிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த Kinsey Wolanski (23) இப்பொழுது நடந்த பனிச்சறுக்கும் உலகக் கிண்ண விளையாட்டுப் போட்டியிலும் (World Cup Skiing) மீண்டும் (29.01.2020) அதைச் செய்திருக்கிறார். இத்தாலிய விளையாட்டு வீரர் Alex Vinatzer, இரண்டாவது சுற்றில் எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு சிறிது முன்னர் Kinsey "RIP Kobe - Legend" என்னும் பதாதையை கையில் தூக்கிப் பிடித்த வண்ணம் அரை குறை ஆடையுடன் ஓடிவந்தார். சம்பவத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்வி பதிலின் போது, “எனது 30 வயதிற்குள்…

  22. Started by Kavi arunasalam,

    வீதிகளில் ஒரு சதத்தைக் கண்டால் “ஆஹா அதிர்ஸ்ர சதம்” என்று அதை எடுத்து தங்கள் பணப் பைக்குள் போட்டு யேர்மனியர்கள் மகிழ்வார்கள். இது காலாகாலமாக அவர்களிடம் இருக்கும் ஒரு நம்பிக்கை. நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அதிர்ஸ்ரக் காசு சில சமயங்களில் எரிச்சலைத் தருவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சுப்பர் மாக்கெற்றில் பொருட்களை வாங்கி விட்டு பணத்தைச் செலுத்த வரிசையில் நிற்கும் போது முன்னால் நிற்கும் ஒருவர் தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு தன்னிடம் இருக்கும் சில்லறைகளைக் கொட்டி ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருக்கும் போது இந்த அதிர்ஸ்ர சதத்தை தரித்திரம் என்று ஏசச்சொல்லும். இந்தச் சில்லறைச் செப்புக் காசுகளான ஒன்று இரண்டு சதங்களை இல்லாது ஒழித்தால் என்ன என்று ஐரோப்பிய யூனியன…

  23. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, மந்திரத்தை உச்சரியுங்கள் – தலாய் லாமா! கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறு தலாய் லாமா தெரிவித்துள்ளார். சீனாவிலுள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்குமாறு தலாய் லாமாவிடம் முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்கள் ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனாவில் உருவான கொரோனா வை…

  24. “வயது குறைந்த ஒரு பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்தால், அந்த ஆணே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி அந்த ஆண் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. அத்துடன் இத்திருமணம் இருவரதும் ஒப்புதல்களுடனேயே நடைபெற வேண்டும்” எங்கே இது நடைமுறையில் இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நிச்சயமாக இது ஒன்றும் எங்களுடைய நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. துருக்கி நாட்டில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தச் சட்ட வரைபுக்கான விவாதமும் வாக்கெடுப்பும் இந்த வாரம் துருக்கிப் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அது, சிறார்கள் மீதான சுரண்டல்களையும் அவர்கள் மீதான பாலி…

  25. சிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. கால்பந்து விளையாட்டுக்கும் முதுமை மறதிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னாள் கால்பந்து வீரர்கள் மூளைச்சிதைவு நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்த அறிக்கை ஒன்று கடந்த ஒக்ரோபரில் வெளியானதையடுத்து சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது இந்த மாத இறுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடவுள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.