துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன் அம்பாறை மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் 52 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தை ஜெர்மனியைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் தத்தெடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த மகான்கோடீஸ்வரன் என்பவரே திராய்க்கேணி கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இவர் யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஜெர்மனியக் கிளையின் உறுப்பினராவார். மகான்கோடீஸ்வரன் மற்றும் ஜெர்மனியக் கிளைத்தலைவர் கிளாரன்ஸ் செல்லத்துரை ஆகியோர், அம்பாறை மாவட்ட சமூகசேவையாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த மாதம் திராய்க்கேணி கிராமத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்கள். …
-
- 25 replies
- 2.2k views
-
-
தமிழீழத்தின் அன்பார்ந்த நண்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும், இதோ, சோதனையான ஒரு காலகட்டத்தில் “போரினாற் காயமுற்றோர், விதவைகள், அனாதைகளுக்கான் புதிய சந்தர்ப்பங்கள்” அமைப்பின் சார்பில் தங்கள் உதவியை ஒரு முறை மீண்டும் ஒரு தடவை இங்கு நாடி நிற்பது சுபா சுந்தரலிங்கம். கடு மழையாலும், திடீர் வெள்ளத்தாலும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள பேரழிவு பற்றிச் சிறிதளவேனும் தாங்கள் அறிந்திருப்பீர்களென்பதில் எமக்கு ஐயமேதுமில்லை. அங்குள்ள மக்கள் படும் அவதிகளோ வார்த்தைகளுக்கப்பாற்பட்டவை. உணவுப்பொருட்களின் பற்றாக்குறையும் அவற்றை வாங்குவதற்கான பணவுதவி யேதுமற்றிருப்பதும் அம்மக்களை ஒட்டு மொத்தமாகப் பட்டினியில் வாட்டும் நிலையையே அங்கு உருவாகியுள்ளது. வெள்ளம் தணிந்த பகு…
-
- 1 reply
- 615 views
-
-
நிவாரண பணிக்கு உதவுங்கள்; உள்நாடு, புலம்பெயர் மக்களிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை 56 Views தொடரும் பயண தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியைச் செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும், வழங்கப்படும் நிதிக்கான பற்றுச…
-
- 0 replies
- 829 views
-
-
ஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்! இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளியும் தற்போது பல்கலைக்கழக மாணவனாக கல்வி பயிலும் ஒருவரின் வீடு. எங்களுக்காக போராடிய ஒரு போராளியின் வீடு இது. அண்மையில் பூநகரி கறுக்காய் தீவு பகுதிக்குச் சென்றபோது இந்த முன்னாள் போராளி மாணவனை சந்திக்க முடிந்தது. சத்தமில்லாது, சாதனை பயின்ற இந்த சாதனையாளரின் முகத்தில் அப்பியிருந்த வேதனைதான் முகத்தில் அறைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், போரின் இறுதியில் இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு, தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் தனக்குக் கிடைத்த…
-
- 0 replies
- 928 views
-
-
வணக்கம் உறவுகளே ! என் மனதில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு திட்டத்தினை உங்கள் முன் வைக்கின்றேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். எமது தாயகத்திலுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் இணையங்களிலும் சமூக வலைதளங்களிலும் உதவி வேண்டி பல உருக்கமான வேண்டுதல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ( இவற்றில் உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களையும் நாம் இனம் காண வேண்டியுள்ளது) இவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாலும் என்னால் ஒரு பெரிய தொகை வழங்குவதற்குரிய வல்லமை இல்லை. ஆனால் என்னால் மாதம் கூடியது ஒரு £50 வழங்க முடியும். என்னை போன்றே உங்களிலும் பலர் இங்குமிருக்கலாம். தாயகத்திலுமிரு…
-
- 10 replies
- 1.1k views
-
-
பத்தாயிரம் அப்பியாசக்கொப்பிகள், எழுதுகருவிகள் தேவை. நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவுள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் – 150000.00ரூபா மொத்தம் – 675000.00ரூபா (3900€) உதவ விரும்புவோர் தொடர்புகளுக்கு :- Paypal Account – nesakkaram@g…
-
- 0 replies
- 503 views
-
-
கனடாவில் உள்ள வாழவைப்போம் அமைப்பினரால் புதுக்குடியிருப்பு கைவேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கைவேலி கணேச வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீ.கனகசுந்தரம் கலந்துகொண்டு இந்த கொடுப்பனவை வழங்கிவைத்தார். இதில் குறித்த பிரதேசசத்தைச் சேர்ந்த 12 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101447&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 638 views
-
-
இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார். நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்க…
-
- 0 replies
- 700 views
-
-
ரொரன்டோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் காலை போராலோ அல்லது விபத்தாலோ இழந்த ஒருவர் பயன்படுத்தக் கூடிய செய்ற்கை காலை மிகக் குறைந்த விலைக்கு தயாரித்துள்ளார். வெறும் 50 கனடிய டொலருக்கு இதனை விற்க முடியும் என்கின்றார் போராலும், கண்ணி வெடிகளாலும் கால்களை இழந்த / இழந்து வரும் எம் மக்களுக்கு இது போய்ச் சேர்ந்தால் பேருதவியாக இருக்கும். நாம் கொஞ்சப் பேர் இணைந்து கூட்டாக முயன்றால், ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாங்கி கனடிய தூதரகம் மூலம் எம் மக்களுக்கு அனுப்ப முடியும் ---------------------- Toronto scientist develops artificial leg that costs just $50 Research scientist Jan Andrysek displays the L.C. (Low Cost) mechanical knee that was created at the …
-
- 11 replies
- 2.1k views
-
-
பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல். மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இவ்வாண்டு 5ம் தர புலமைபரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைத் தெரிவு செய்து அதிலும் மிகச் சிறப்பு மாணவர்களாக தற்போது 32 மாணவர்களை கொண்டமைந்த விஷேட சிறப்புக் கற்கை நெறித்திட்டமாக பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முழுநேர கற்கைநெறி பாசறை நடாத்தப்பட்டு வருகின்றது. இம் மாணவர்களினை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடனும் பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையை அதிகரிக்கவும் மேற்படி 32மாணவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடனும் 17.08.2013 சனிக்கிழ…
-
- 0 replies
- 467 views
-
-
சீமெந்துக்கல் உற்பத்தி 3மாத முன்னேற்ற அறிக்கையும் பயன்களும். எமது கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் சீமேந்துக்கல் உற்பத்தியானது 2013ஆவணிதாம் தொடக்கம் நடைபெற்று வந்துள்ளது. தற்போது மழைகாலம் ஆகையால் உற்பத்தியாலையை மூடியுள்ளோம். மீண்டும் மாசி மாதம் இயங்க ஆரம்பிக்கும்.இதுவரையில் எமது உற்பத்தியில் கிடைத்த இலாபம் முன்னேற்ற போன்ற விபரங்களை கீழே தருகிறோம். முதலீடு – 379000.00ரூபா ஆவணி மாதம் பங்குதாரருக்கான இலாபம் :- 37925.74ரூபா. கற்களை கொள்வனவு செய்த மக்களுக்கான இலாபம் :- 79606.05ரூபா. தொழிலார்களுக்கான சம்பளம் :- 309094.46ரூபா. 3மாதங்களில் போட்ட முதலீட்டைவிட அதிகளவு பயன் கிடைத்துள்ளது. இம்முயற்சியில் தங்களது ஆதரவுகளை வழங்கிய முதலீட்டாளர்களான :- 1) கஜீபன் (கனடா) …
-
- 2 replies
- 912 views
-
-
‘தேன்சிட்டு இசைவிருது 2014′ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள். எமது கலைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நேசக்கரம் உப அமைப்பான தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் மாவட்டம் தோறும் ‘தேன்சிட்டு இசைவிருது 2014′ தேர்வு நடைபெற்று வருகிறது. 02.08.2014அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது தேர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் நாட்டாரியல் பாடல் தேர்வு போட்டியில் நூற்றிற்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வினை பிரதேச செயலாளர் உதயசிறீதர் அவர்கள் தலைமையேற்றிர…
-
- 0 replies
- 923 views
-
-
சுவிஸ் லுசர்ன் மாநிலத்தில் போரினால் பாதிக்கப் பட்ட தாயக மக்களுக்கு உதவும் முகமாக சில நலன் விரும்பிகளால் நலன் காப்போம் என்ற அமைப்பு தொடங்கப் பட்டு உதவி வருகிறது. மனிதாபிமானம் கொண்ட மக்கள் எம் உறவுகளுக்கு தொடர்பு கொண்டு உதவுங்கள் நன்றி . நலன் காப்போம் அமைப்பு சுவிஸ்.
-
- 0 replies
- 639 views
-
-
‘தேன்சிட்டு இசைவிருது 2014′ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள். தேன்சிட்டு இசை விருதுக்கான முல்லைத்தீவு மாவட்ட பாடகர்களுக்கான குரல் தேர்வு 16.09.2014 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேசக்கரம் அமைப்பின் அனுசரணையில் தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை யோ.புரட்சி அவர்கள் நெறியாள்கை செய்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூறு வரையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பார்வையாளர்களும் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.இ.பிரதாபன் அவர்கள் ஆசியுரை கூறி சுடறேற்றினார். பிரதேச செயலக முக்கிய அதிகாரிகளும், வண பிதா ரோய் அவர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்துக் …
-
- 1 reply
- 670 views
-
-
நேசக்கரம் மே 2011 கணக்கறிக்கை மே2011 கணக்கறிக்கை கீழ் உள்ள இணைப்பில் அழுத்திப் பாருங்கள். கணக்கறிக்கை உதவிய அனைவருக்கும் நன்றிகள். (ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்கிடையில் மாதாந்த கணக்கறிக்கை இணைக்கப்படும்)
-
- 3 replies
- 1.2k views
-
-
அன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் போர் நிலைமையினால் வெளிநாடு வந்தார்கள். இன்று பார்த்தால் இளைஞர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆபத்துகளால் மண்ணுக்காக போராடியவர்கள் வருவது ஏற்கவேண்டிய விடையம். இன்னும் மண்ணில் எல்லா தமிழர் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை என்றும் தெரியும். வெளிநாட்டின் வாழ்வதர்க்கான உரிமை கிடைத்தவுடன் சொந்த நாட்டுக்கு விடுமுறை செல்கிறார்கள். பதியும்போது போராட்டத்தை காரணம் காட்டுகிறார்கள். இன்றும் இந்த ஒரு காரணத்தால் தமிழர்களை வெளிநாட்டு பத்திரிகைகள் போட்டு வாங்குகிறார்கள். பதிவு செய்தவர்களில் அதிகமானவர்களுக்கு திருப்பி அனுப்பும் நிலையே வந்திருக்கின்றது. பல இலட்சம் ரூபா செலவு செய்தது திரும்பி செல்லவா? உண்மை நிலை தான் என்ன? வேலை வாய்ப்புகளுக்கு …
-
- 1 reply
- 684 views
-
-
எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் 91 Views வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம். வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா? பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போரா…
-
- 1 reply
- 1.5k views
-
-
இளம் தமிழ் பொறியியலாளரை ஆதரியுங்கள்! மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் இரு இளம் பொறியியலாளர்களது முயற்சிக்கு உலகின் முதல் நிலை பொறியியல் கல்லூரியான அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகத்தினால் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இவர்களது நீர் நிலைகளை தன்னியக்கமாகச் சுத்திகரிக்கும் கருவி MIT பல்கலைக்கழகத்தின் Solve Challenge இல் இறுதி அறுபதில் ஒன்றாகத் தெரிவாகியிருக்கின்றது. உலகெங்கும் இருந்து கிடைக்கப் பெற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து இவர்கள் தெரிவாகியிருக்கின்றார்கள். இவர்கள் இறுதிச் சுற்றுத் தெரிவிற்கு இம் மாதம் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக் கூட்டத்தொடரிற்கு செல்லவிருக்…
-
- 3 replies
- 2.6k views
-
-
எமது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தர 92ம்ஆண்டுபுலம்பெயர் பழைய மாணவர்களின் கலந்துரையாடல்களின் பிரகாரம், எமது தாயக தமிழ் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக: இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி வீதத்தினை உயர்த்தும் நோக்கத்தில் கணிதபாடக் கையேடுகளைசுமார் 10000 கணிதபாடச் சித்தியில் இடர்ப்படும் மாணவர்களுக்காக அச்சிட்டு வழங்கும் கைங்கரியத்தில் ‘கல்விக்கான வீதியோட்டம்’ (5km marathon) ஒன்றைநடாத்த உத்தேசித்துள்ளோம். இந்ததமிழ் மாணவர்களின் கற்றலுக்குக் கைகொடுக்கும் பணியில் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதற்கு எம்முடன் கைகோர்த்து இணையத் தளம் மூலமான ஊடக ஆதரவைவழங்கி உதவுமாறு மிக அன்பாய் வேண்டுகின்றோம். மேலும் …
-
- 1 reply
- 1.7k views
-
-
ஒவ்வொரு மாத்துக்கான கணக்கறிக்கையும் ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்குள் வெளியிடப்படும். பெப்ரவரி 2011இற்கான கணக்கறிக்கை. கணக்கறிக்கை PDFவடிவில் இணைத்துள்ளோம். உதவும் உறவுகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
-
- 0 replies
- 804 views
-
-
நேசக்கரம் ஆறுமாதங்களின் மொத்த கணக்கறிக்கையின் தொகுப்பு. தைமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக நேசக்கரம் உதவும் உறவுகள் வழங்கிய உதவித் தொகை :- (1473,82€, 350,00£) ( 277825,00/=இலங்கை ரூபாவில்) இவ்வுதவி மூலம் 170 குழந்தைகளுக்கான பால்மா உணவு வகைகளும் 25குடும்பங்களுக்கான உலர் உணவு வகைகளும் வழங்கப்பட்டது. தைமாதம் மாதாந்த உதவி மற்றும் மாணவர்கள் உதவி – 617,80€ பயன்பெற்றோர் தொகை :- + மாதாந்த குடும்ப உதவி – 2 குடும்பம். மாணவர்கள் கல்வியுதவி – 69மாணவர்கள். சுயதொழில் – 1 குடும்பம். தைமாதம் கணக்கறிக்கை. மாசிமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக கிடைத்த உதவி – 1108,52€. குடும்பக் கொடுப்பனவு மாணவர்களின் உதவி –…
-
- 0 replies
- 639 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை மக்களில் ஒரு தொகுதியினருக்கு முதற் கட்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 30 குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 1ம் திகதி ஆழியவளை பொதுநோக்கு மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச அமைப்பாளர் தங்கராசா காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. சுயதொழில் முயற்சியை ஊக்குவித்து எமது தேச மக்களை சொந்தக் காலில் தங்கி நிற்கச் செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது. ஆடுவளர்ப்பில் ஈடுபட விரும்பியவர்களுக்கு நல்லின…
-
- 0 replies
- 450 views
-
-
கனடாவில் வசிக்கும் உறவின் உதவியால் அனலைதீவு பிராந்திய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு…. POSTED IN NEWS அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில முதல் முதலாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர்கள் பிரிவிற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா மற்றும் அனலைதீவு பிரந்திய வைத்தியசாலை புனரமைப்பு உபகுழு இவ்விரண்டு அபிவிருத்திக்குழுவினால் இரண்டு கோடி ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலை இரண்டு வருடங்கள் வேலைத்திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு சுகாதார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது இந்த நாட்டில் மாற…
-
- 5 replies
- 1k views
-
-
கைகளை இழந்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆகிய இந்தக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முழங்கைக்குக் கீழ் நீண்டுள்ள கைப்பகுதியில் பட்டிகளைக் கொண்டு பொருத்தப்படுகின்ற இந்தக் கைகள் ரோபோக்களின் கைகளைப் போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. முதற் தடவையாக வடமாகாணத்தைச் சேர்ந்த 150 பேர் இதன் மூலம் பயனடைந்துள்ளதாக இந்தத் திட்டத்திற்கான தலைவரும், ரோட்டரிக்கழக உறுப்பினருமான சிவமூர்த்தி கிஷோக்குமார் தெரிவித்தார். இவற்றின் உதவியுடன் கை இல்லாதவர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டவும், வாளிகளில் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் செல்லவும் வசதியாக இருப்பதாக இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் கையினால் பேனாவைக் கொண்டு எழுதவும…
-
- 2 replies
- 521 views
-
-
துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு சுவிஸ்நாட்டில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் 11 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் தனது மகள் கீர்த்திகாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் 11 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் விக்னே ஸ்வரன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் இடம்பெ ற்றது. யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட போராசிரியர் புஸ்பரட்ணம் மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வ…
-
- 7 replies
- 940 views
-