துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
-
மாலதி படையணி போராளியின் இன்றைய அவல நிலை!! தூக்கிவிடுவார்களா புலம்பெயர் தமிழர்கள்?? 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் போராளியின் இன்றைய வாழ்க்கை, அவளுக்கு மட்டுமல்ல அவளைப் பார்ப்போருக்கும் கண்களில் கண்ணீரை வரவளைக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு ஓலைக்குடிசையில் வறுமையின் உச்சத்தில் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை சந்தித்தது ஐ.பீ.சி. தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சிக் குழு. இதய பலவீனம் உள்ளவர்கள் தயவுசெய்து இந்த ஒளியாவனத்தை பார்க்கவேண்டாம். இந்தப் பெண்ணுக்கு உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்: 0094212030600 https://www.ibctamil.com/lifestyl…
-
- 0 replies
- 1.1k views
-
-
சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா ? இச்செய்தியை படியுங்கள். எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் கற்பித்தலில் பயனடைந்து சிறப்பான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10மாணவர்களை இவ்வருட எமது உதவித்திட்டத்தின் கீழ் உள்வாங்கியுள்ளோம். இம்மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான , இயந்திரவியல் பீடங்களுக்குத் தெரியவாகியுள்ளார்கள். எமது கல்வித்திட்டத்தில் மருத்துவ , இயந்திரவியல் துறைகளுக்கான தமிழ் மாணவர்களை அதிகரிக்கும் வகையில் கடந்த வருடம் (2013)முதல் உதவி வருகிறோம். கடந்த வருடம் அதிகளவிலான மாணவர்களுக்கு உதவ வேண்டியிருந்தும் 11மாணவர்களுக்கு மட்டுமே எமது உதவித்திட்டத்தின் கீழ் உதவ முடிந்தது. காரணம் அதிகளவிலான உதவிகள் கிடைக…
-
- 8 replies
- 1.1k views
-
-
எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற வேண்டியது எமது சமூகத்தின் கடமையாகும். ஆனால் அதனை எவ்வளவு பெயர் மனதில் முன்னிறுத்தி செயற்படுகின்றார்களென்பது கேள்விக்குறியே. மல்லாவி பாண்டியன்குளம் பகுதியில் முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக இருந்திருந்த 35 வயதேயான முன்னாள் போராளியொருவர் அண்மையில் இயற்கை எய்திருந்தார். படுக்கை புண் முள்ளந்தண்டை தாக்கியதினால் மரணம் சம்பவித்துள்ளது. எனினும் இயற்கை எய்திய முன்னாள் போராளியான அவ்விளைஞரது புகழுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூட வசதியற்றதாககே அவரது குடும்ப நிலை இருந்துள்ளது.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து தொழிற்பட்ட அவ்வமைப்ப…
-
- 2 replies
- 1k views
-
-
தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம். …
-
- 5 replies
- 1k views
-
-
வணக்கம் வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அண்மைக்காலமாக இவரது நடவடிக்கைகள் மற்றும் தூரநோக்கம் கொண்ட திட்டங்கள் அவற்றை செயலாக்கும் திறன் போன்றவற்றை பார்த்து கேட்டு வருகின்றோம். ஏன் நாம் (புலம் பெயர் மக்கள் அமைப்புக்கள் கழகங்கள் சங்கங்கள்....) இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அபிவிருத்திக்கும் தாயக வளர்ச்சிக்கும் உதவ முன்வரக்கூடாது. முக்கியமாக புலிகளது போராட்டத்தை விமர்சித்துக்கொண்டு எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை பார்ப்போர் ஏன் இவருடனும் இணைந்து வேலை செய்ய பின்னிற்கின்றனர்....????????
-
- 11 replies
- 1k views
-
-
புற்றுநோய் Patients- ஐ இலவசமாக பராமரிக்கும் இடம் | Eastern Cancer Care & Hospital
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம். இந்த நிறுவனத்தின் நோக்கம் :- 1) போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். 2) சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல். 3) சிறு சிறு வியாபாரங்களை ஆரம்பித்தல். 4) கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல். எமது நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் :- இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எ…
-
- 7 replies
- 1k views
-
-
01.12.10 அன்று கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் தாய் தந்தையரை இழந்து அடிப்படை வசதிகளற்ற 15மாணவ மாணவியர்களுக்கான மாதாந்த பண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 3000ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. 15மாணவர்களுக்குமாக மொத்தம் 45000ரூபா வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் உடுப்பு வகைகள் உட்பட இலங்கைரூபா இரண்டு லட்ச ரூபா பெறுமதிக்குரிய கொடுப்பனவினை நேசக்கரம் அங்கத்தவர் ஒருவர் நேரடியாகச் சென்று வழங்கியுள்ளார். இவற்றோடு எட்டுக்குடும்பங்களிற்கான சுய தொழில் ஊக்குவிப்பு உதவிகளாக 370000 ரூபா வழங்கப்பட்டது. சுயதொழில் ஊக்குவிப்பு உதவியைப் பெற்றவர்கள் யாவரும்…
-
- 0 replies
- 1k views
-
-
கனடாவில் வசிக்கும் உறவின் உதவியால் அனலைதீவு பிராந்திய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு…. POSTED IN NEWS அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில முதல் முதலாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர்கள் பிரிவிற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா மற்றும் அனலைதீவு பிரந்திய வைத்தியசாலை புனரமைப்பு உபகுழு இவ்விரண்டு அபிவிருத்திக்குழுவினால் இரண்டு கோடி ரூபாய் செலவில் இந்த வைத்தியசாலை இரண்டு வருடங்கள் வேலைத்திட்டத்தில் நிர்மானிக்கப்பட்டு இன்று மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு சுகாதார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது இந்த நாட்டில் மாற…
-
- 5 replies
- 1k views
-
-
சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ? 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியினை பரீட்சார்த்தமாக ஆரம்பித்திருந்தோம். இதில் உணவு உற்பத்தியாக மிக்சர் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டும் மற்றும் சாம்பிராணி உற்பத்தியினை அம்பாறையிலும் ஆரம்பித்திருந்தோம். 25.05.2012அன்று அம்பாறையில் சாம்பிராணி உற்பத்திக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடாத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை வைத்து செயற்படத் தொடங்கியது நேசம் சாம்பிராணி உற்பத்தி. இதுவொரு சிறு கைத்தொழில் முயற்சியாகையால் ஆரம்ப வருமானமும் உற்பத்திக்கு ஏற்பவே எனும் அடிப்படையில் தொடங்கப்பட்டது. தொழிலில் ஈடுபட்ட 11 பெண்களுக்கும் மாதம் 4ஆயிரம் ரூபாய் வருவாயை தரக்கூடியதாக முதலில் நடைபெறத் தொடங்கியது. இத்தோடு உணவு உற்பத்திகளிலும் 11பேரை…
-
- 0 replies
- 1k views
-
-
ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் குளாய்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவையானது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை நிறைவு செய்ய புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் நிதியுதவியில்12 குளாய்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் புவியில் அமைவுக்கேற்ற வகையிலான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவிகளை வேண்டுகிறோம். முதலில் குடும்பமொன்றுக்கு 10 தென்னைமரங்களை வழங்க விரும்புகிறோம். ஒரு தென்னங்கன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
முரளி - 02.05.10 அன்று பேபால் ஊடாக 14,06 EUR கிடைத்தது. சஜீவன் - 13.05.10 அன்று பேபால் ஊடாக 32,91 EUR கிடைத்தது. நெல்லையன் - 23.05.10 அன்று பேபால் ஊடாக 195,85 EUR கிடைத்தது. இந்த உதவியானது ஒரு மாவீரரின் 3வயதுக் குழந்தையின் மருத்துவத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணையவன் - 26.05.10 அன்று பேபால் ஊடாக 48,70 EUR கிடைத்தது. முரளி - 31.05.10 அன்று பேபால் ஊடாக 14,06 EUR கிடைத்தது.(இம்மாதத்துக்கான முரளியின் பங்களிப்பு பல்கலைக்கழகமாணவர்களின் உதவிக்காக பயன்படுத்தப்படுகிறது) கயந்தி - 28.04.10 அன்று நேசக்கரம் வங்கியூடாக 50€ கிடைத்தது. (இம்மாதத்துக்கான கயந்தியின் உதவியும் பல்கலைக்கழக மாணவர் உதவிக்காக பயன்படுத்தப்படுகிறது) முக்கிய குறிப்பு - யாழ் இணைய கருத்தாளர்க…
-
- 1 reply
- 998 views
-
-
மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த வளர்ச்சியில் கொண்டு சென்று போரால் பாதிப்புற்றவர்களுக்கான ஆதரவை வழங்கும் நோக்கில் எம்முடன் இணைந்துள…
-
- 5 replies
- 997 views
-
-
இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடா…
-
- 1 reply
- 995 views
-
-
17.09.10 அன்று கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 13பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. சுதாகரன் கோபிகா , விஜயகுமார் மதுசா ,வைகுந்தவாசம் வாசுகி, தேவசிகாமணி வக்சாயினி, மகாதேவன் மோகனன், சுப்பிரமணியம் சுகந்தினி, பிரான்சிஸ் றைசன், அழகுதேவன் தமிழ்ச்செல்வி, ஜெகராசா குணாளன் ஜெகராசா கலைமகள், வில்வராசா குகேந்தினி, செல்வகுமார் சங்கீதா, மகாதேவன் துசாந்தி ஆகிய 13 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா இலங்கை ரூபா 1500ரூபா (ஆயிரத்து ஐந்நூறுரூபா) பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் மாதாந்த கல்விக்கான உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான பண உதவியை நேசக்கரம் தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வன் அவர்கள் மாணவர்கள் பெற்…
-
- 0 replies
- 991 views
-
-
ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். போராட்டத்திற்காக உயிர்கள் முதல் உடமைகள் வரை இழந்த காயங்களையும் தன்னகத்தே தாங்க…
-
- 4 replies
- 989 views
-
-
சிறுநீரகங்களை இழந்த ஜெகதீஸ்வரனுக்கான மருத்துவ உதவிக் கணக்கறிக்கை இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஜெகதீஸ்வரனின் மருத்துவ உதவியினை அவரது குடும்பத்தினர் புலம்பெயர் உறவுகளிடம் வேண்டியிருந்தனர். அவர்களது வேண்டுதலை ஏற்று உதவிய உறவுகளுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள். ஜெகதீஸ்வரனுக்கு மருத்துவ உதவி கணக்கறிக்கை ஜெகதீஸ்வரனின் அக்கா எழுதிய நன்றிக்கடிதம் வருமாறு :-
-
- 0 replies
- 989 views
-
-
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி மட்டக்களப்பு தாளங்குடா மதுராபுரம் முன்பள்ளி மாணவர்கள் 30பேருக்கான கல்வியுபகரணங்கள் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் 20.09.2013அன்று வழங்கி வைக்கப்பட்டது. முன்பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை , தண்ணீர்ப்போத்தல் ,சாப்பாட்டுப்பெட்டி , கொம்பாஸ்பெட்டி , கலர்பெட்டி ,சித்திரக்கொப்பி , பென்சில் ,அழிறப்பர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் , மண்முனைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன் தாளங்குடா 1 கிராமசேவகர் டிலக்சன் , சீப்பிரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் , மதுராபுரபொதுமக்கள் பிறைட்; பியூட்சர் – நேசக்கரம் அமைப…
-
- 3 replies
- 985 views
-
-
நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும். 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம். முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள். வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் தொடர்ந்த வெற்றி…
-
- 4 replies
- 982 views
-
-
டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா. 19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இக்கிராமத்து மாணவர்கள் 42பேருக…
-
- 4 replies
- 958 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!! தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது மாத்திரமல்லாமல், அந்த அவலங்களில் இருந்து அவர்களை மீட்கும் ஒரு நோக்கத்திற்காகவென்று ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் உறவுப் பாலம். புலம்பெயர் உறவுகளின் அமோக ஆதரவையும், அனுசரனையையும் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரித்தானிய நேரம் இரவு 8.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. எமது தாயகத்தில் அல்லல்படுகின்ற எமது உறவுகளின் வாழ்வில் ஐ.பீ.சி. தமிழுடன் இணைந்து ஒளியேற்ற விரும்புகின்றவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்தை த…
-
- 1 reply
- 954 views
-
-
துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு சுவிஸ்நாட்டில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் 11 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் தனது மகள் கீர்த்திகாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் 11 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் விக்னே ஸ்வரன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் இடம்பெ ற்றது. யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட போராசிரியர் புஸ்பரட்ணம் மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வ…
-
- 7 replies
- 952 views
-
-
தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பின் புதுத் திட்டம் அறிமுகம் திகதி: 03.02.2010 // தமிழீழம் உலகெங்கும் வாழும் எம் இனிய தேசத்து உறவுகளே! கோண்டாவில், யாழ்ப்பாணம், (பெப்ரவரி 01, 2010) - தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு, இன்றைய கால சூழலுக்கு தகுந்தவாறு மீள் உருவாக்கம் பெற்று, "உதவி" எனும் பெயரில் ஒரு புதிய திட்டத்துடன் மீண்டும் எம்மவர் மத்தியில் எமது உறவுகளுக்கான பணியினை ஆரம்பித்துள்ளது. நாலாங்கட்ட ஈழ யுத்தத்தின் கொடூரங்களும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளும் அனைவரும் அறிந்த விடயமே. சொல்லவெண்ணா துயரங்களுக்குள் ஆழ்த்தப்பட்ட எம் இனிய உறவுகளுக்கு ஏழு மாத காலங்கள் ஆன பின்பும் கூட நாளாந்த வாழ்க்கையே ஒரு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளா …
-
- 0 replies
- 947 views
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 946 views
-