பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது. இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான். தமிழை செம்மொழியாக அறிவிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். இந்தக் கோரிக்கையை பலகாலம் வலியுற…
-
- 0 replies
- 505 views
-
-
தண்ணீர் தண்ணீர் ஆனாரூனா இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி…
-
- 0 replies
- 918 views
-
-
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் கை எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25-ந் தேதி மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. ஆதிச்சநல்லூரில் 4 குழிகள் அமைத்து அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூரில் நேற்றைய தினம் அகழாய்வு பணியில் 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகின்றன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 419 views
-
-
கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழி.. மண்ணுக்கு உள்ளே மாபெரும் வரலாற்று சுவாரசியம்..மதுரையில் ஆச்சர்யம்.! மதுரை: மதுரை வடக்குமாசி வீதியில் கால்வாய் தோண்ட குழி தோண்டிய போது கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் காலம் ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உலகின் மிகவும் பழமையான நகரங்களில் மதுரையும் ஒன்று. பல நூறு வருடங்களுக்கு முன்பே மதுரை முறையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் ஆகும். மதுரையை பிரித்து வைத்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. மதுரை குறித்து சங்ககால தமிழ் குறிப்புகளில் நிறைய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. சீனா தொடங்கி பல வெளிநாட்டின் பண்டைய கால குறிப்புகளில் கூட மதுரையை குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. க…
-
- 0 replies
- 455 views
-
-
பட மூலாதாரம்,NARAYANAMOORTHY படக்குறிப்பு, 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி அருகே கிராம மக்கள் விளக்கேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த குழிகள் மனித இனத்துக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் மனிதர்களால் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வடிவங்கள் என்பதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் நேரில் வந்து ஆய்வு செய்து உறுதி செய்து இருக்கிறார். இவற்றின் சிறப்பு என்ன? 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களின் மூதாதை இனத்தவர் பழனியில் என்ன செய்து கொண்டிருந்தனர்? இந்தக் கண…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
ஒவ்வொரு இனமும், குமுகமும் (சமூகமும்) தங்களுக்குள், தங்களுடையதாகக் கருதப்படும் சில வாழ்க்கை, பண்பாட்டு அடையாளக் கூறுகள் இருக்கும். அப்படித் தமிழர்கள் தங்களுடைய அடையளக்கூறுகளாகக் கருதப்படுவவை இங்கே தமிழர் குறியீடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இவை பொருள்களாவோ, கருத்தாகாவோ, கருத்தோவியங்களாகவோ இருக்கலாம். இவற்றுள் சிலவோ பலவோ தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று கருத இயலாது, எனினும் தமிழர்கள் அவற்றை தம் பண்பாட்டோடு ஆழமான நெருக்கம் உடையனவாகக் கருதுகிறார்கள். நிறங்கள்: பச்சை, நீலம், வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் உயிரினங்கள்: மீன், புலி, யானை, பசு, மாடு, ஆடு, மான், காகம், மயில், கோழி, பூக்கள்: செவ்வரத்தம் பூ, தாமரைப் பூ, மல்லிகை, அந்திப் பூ கருவி…
-
- 0 replies
- 902 views
-
-
விக்னேஷ்.அ பிபிசி தமிழ் 20 ஆகஸ்ட் 2020, 10:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஏழாவது கட்டுரை.) இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் 'நாடு' என்ற பெயரைக் கொண்ட மாநிலங்கள் இரண்டு. ஒன்று தமிழ் நாடு. மற்றொன்று மகாராஷ்டிரம். 'மகாராஷ்டிரா…
-
- 0 replies
- 362 views
-
-
இலங்கை மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடாகும். 1796 ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியா, இலங்கை முழுவதையும் ஆட்சி புரியத் தொடங்கியதுடன், 1815 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை 'சிலோன்' எனப் பெயரிட்டு ஆண்டது. இலங்கையில் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பலர் சிறந்த கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வியை இலங்கையில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலானவர்களே பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். மேலும் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மக்கள் அதிகளவான கல்வியறிவைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களில் காலத்தில் ஏற்பட்ட கல்வியறிவு காரணமாக 1870 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College…
-
- 0 replies
- 4.7k views
-
-
ஆதிவாசி என்பது என்ன மொழி? நேற்றைய பிபிசி ஆங்கில உலகசேவயில், இந்திய ரைசிங் என்ற புரோகிராமில் ஆதிவாசீஸ் என்ற சொல்லை பயன் படுத்தினார்கள்( tribe, tribal என்றும் பயன் படுத்தினார்கள் ஆனால் கூடுதலாக, இந்திய செய்தியாளார் ஆதிவாசீஸ் என்ற சொல்லையே பயன்படுத்தினார்) சந்தெகத்தை தயவு செய்து தீர்க்கவும்!
-
- 0 replies
- 940 views
-
-
சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப் புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக்கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தழிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்;டிற்கு சனவரி 15 என்று தெரிகிறது. பஞ்சாங்கம் சொல்கிறது என்பதைத் தவிர வேறெந்த அடிப்படையும் இல்லாத இந்த வரையறை உண்மையான தைத்திங்கள் முதல்நாளைத் தொட்டுக் காட்டுவதாகக் கொள்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தொழூஉப் புகுத்தல் - 45 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 நிச்சம் தடுமாறும் மெய் இயல் ஆய்மகன் மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு! (முல்லைக் கலி: 110: 09-15) பொருள்: இன்று கன்றுக்குட்டியை ஈன்று விடுவோம் என்று தனது உள் உணர்வினால் அறிந்து கொள்ளும் முதல் கன்று ஈனும் தாய்ப்பசு, அச்ச உணர்வினால் மேய்ச்சலுக்குச் செல்லாமல் தொழுவினுள் சுற்றிவரும் என்ற உண்மையை அழகிய எடுத்துக் காட்டின் வழியே பதிவு செய்துள்ளார் சோழன் நல்லுத்திரனார். மத்தம் பிணித்த கயிறும், கடுஞ…
-
- 0 replies
- 624 views
-
-
பிரபாகரன்- வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்! ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்! அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழனைத் கதறவைத்த வீர யுகமொன்றின் சிருஷ்டிகர்த்தா. தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போரட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று, அதன் உந்துவிசையாக இயங்கி, வெற்றியின் சிகரத்;தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன். குறுகிய ஒரு காலத்திற்கு முன்னால் சிறிய ஆயுதக் குழுவொன்றின் கெரில்லாத் தலைவனாக மட்டுமே இனங்காணப்பட்ட பிரபாகரன் இன்று தொன்மையும் ச…
-
- 0 replies
- 962 views
-
-
பறைசாற்ற வந்த தமிழர்களின் - தமிழிசை கருவிகள்.! இதில் எத்தனை தமிழ் ஈழத்தில் புழக்கத்தில் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா.? ரெல் மீ..! 👌 டிஸ்கி: கஸ்ரபட்டு பதிவெற்றம் செய்தமைக்கு சில பல புள்ளிகள் இடலாமல்லொ.. 👍
-
- 0 replies
- 774 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL DEPARTMENT OF INDIA ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களுக்கும், சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள். ஆதிச்சநல்லூர் தொல்லியல் தலத்தில் 2004 - 2005 காலகட்டத்தில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார். 600 ச…
-
- 0 replies
- 972 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 46 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர்உ ண் கண்ணும் நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்றுகிற்பார் யார்? சொல்லாதி! நின்னைத் தகைத்தெனன் அல்லல் காண்மன் மண்டாத கூறி மழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீய நின் கொண்டது எவன்? எல்லா! யான் கொண்டது (முல்லைக்கலி 108:15-25) பொருள்: என்னைத் தேர்வு செய்த உன்னைப் பேசி வெல்ல முடியாது என்று கூறுகிறான் காதலன். உன்னைத் தேர்வு செய்த பின் நான் பட்ட துன்பம் பெரிது.முதலில் பார்த்த உடனேயே கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்பது போலப் பண்டம் கேட்டாயே! அப…
-
- 0 replies
- 551 views
-
-
ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு - இரண்டுமே தமிழரின் நீர்வழிப்பாட்டு பெருவிழா என்பதைவிட, இரண்டுமே ஒரே பெருவிழா தான் என்பதே உண்மை...... சங்கத்தமிழரின் நாள்காட்டியை மறந்ததால், ஒரே பெருவிழாவை வேறு வேறு தினங்களில் இரண்டு பெருவிழாக்களாக கொண்டாடும் அவலம்.. இந்த அவலத்தைப் போக்க, விரைவில் வெளிவர இருக்கிறது சங்கத்தமிழரின் நாள்காட்டி!!! திங்கள் அடிப்படையில் புத்தாண்டை வரவேற்றுத்தான், வீடுகளில் வரிசையாக விளக்கேற்றி வைக்கிறோம் என்றுக்கூடத் தெரியாமல், ஆரியரின் பிரம்மா-விஷ்ணு கதைகளை சொல்லிக்கொண்டு, கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடும் அப்பாவி தமிழர்கள்!!!! கார்த்திகையை முதலாகக் கொண்ட சங்கத்தமிழரின் நாள்காட்டி விரைவில்....
-
- 0 replies
- 696 views
-
-
Source : http://subavee-blog.blogspot.com/ கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம், கரன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம் ஆகிய மூன்று படலங்களையும் படித்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும்,தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது தன் கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் இழந்து, கைம்பெண்ணாய்க் காட்டில் அலைந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். தன்னுடைய அரக்க உருவத்தை, மந்திரத்தால் அழகிய உருவாக மாற்றிக் கொண்டு,இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக்…
-
- 0 replies
- 965 views
-
-
தேசியத்தலைவர் அவர்கள் இன்றைய தினம் (Aug 04, 1987) வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை ஆற்றிய நாள். (சுது மலைப்பிரகடனம்) இலங்கை-இந்திய ஒப்பந்தம் தமிழரின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைத் தராது என்று கூறியிருந்தார்.
-
- 0 replies
- 380 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 47 https://app.box.com/s/ermbxprsfpna8gj8jpd0fmk42j4o9a3l அளை மாறிப் பெயர் தருவாய் அறிதியோ அஞ்ஞான்று தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றூற்று அயல் இனமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினா என் நெஞ்சம் கனமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ? நின் நெஞ்சம் கனமாக் கொண்டு யாம் ஆனல் எமக்கு எவன் எளிதாகும்? புனத்துளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ? இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ? தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பது வோ? அனைத்து ஆக! (முல்லைக் கலி 108: 26-35) பொருள்: என் நெஞ்சத்தைக் களமாகக் கொண்டு ஆண்டு கொண்டிருக்கிறாய்! நீ ஒரு கள்வி என்று கூறுகிறான் காதலன். அது எப்படி எனக்கு எளிதாகும்? உன்னைத் தேடிக் கலங்கினேன். தினைப்புனத…
-
- 0 replies
- 484 views
-
-
"இலங்கையில் தமிழர்" - முழுமையான வரலாற்று ஒலி ஆவணம் ஒருமுறை வரலாற்றாசிரியர் ஒருவரை வானொலிப் பேட்டி காணும் போது அவர் முக்கியமானதொரு கருத்தை முன்வைத்தார். காலத்துக்குக் காலம் இலங்கையில் தமிழ் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வேற்று மொழி ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பைச் செய்யும் போது, முக்கியமாக அவர்கள் கைவத்து அழித்தது தமிழர் வரலாறு கூறும் முக்கியமான வரலாற்று மூலாதாரங்களைத் தான். இதன் மூலம் இலங்கையில் தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பை அழிப்பதே முதன்மை நோக்காக இருந்தது. ஈழ வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அந்தக் கையறு நிலையை நம் இனம் சந்தித்துவருகின்றது. கண்ணுக்கு முன்னால் இருந்த பல ஆதாரச் சின்னங்கள் தொலைந்து இருந்த சுவடு இல்லாமல் போயிருக்கின்றன. இதற்கு மிக…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஒரு கொடி பல விடயங்களை பிரதிநிதிப்படுத்தும் ஒன்று. அது ஒரு எண்ணக்கருத்தை, ஒரு விற்பனை பொருளை, ஒரு விளையாட்டுக்கழகத்தை, ஒரு அமைப்பை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை பிரதிநிதிப்படுத்துவதாக உள்ளது. நாடுகள் தம்மை கொடி மூலம் பிரதிநிதி படுத்துகையில், பல நாடுகளை கடந்து வாழும் ஒரு இனம் தன்னை எவ்வாறு அடையளாப்படுத்துவது? இன்று தமிழினம் ஒரு உலக இனமாக உள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தும் தமிழின படுகொலையை ஏன் நிறுத்த முடியாமல் போனது? ஈழத்தமிழர்கள் தம்மை துணிகரமாக ஒரு கொடி மூலம் பிரதிநிதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இது உலக தமிழினத்தை பிரதிநிதிப்படுத்தவில்லை. உலக தமிழ் அரசியல் வாதிகள், இலக்கியவாதிகள், தமிழர்கள் தமக்கென ஒரு கொடி உருவாக்கல் பற்றி எண…
-
- 0 replies
- 1.1k views
-
-
பருத்தித்துறைக் கோட்டை. பருத்தித்துறைக் கோட்டை இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள பருத்தித்துறை நகருக்கு அண்மையில் இருந்த ஒரு கோட்டை. இது கடலுக்குள் நீண்டிருந்த பாறைப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. இது இதன் அமைவிடத்தின் வடிவத்துக்கும் அளவுக்கும் பொருந்துமாறு கட்டப்பட்டதால், சிறந்த முறையில் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக அமையவில்லை . இதன் அமைவிடம் ஒரு முக்கோண வடிவத்தில் இருந்ததால், கோட்டையும் அதே வடிவத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு செங்கோண முக்கோண வடிவத்தைக் கொண்டிருந்த இக் கோட்டையின் நீளமான பக்கம் வடக்குப் பக்கம் உள்ள கடலை நோக்கியதாக இருந்தது. இக் கோட்டையின் தரைப் பகுதியை நோக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று தமிழர் உலக நீதியை நம்பி கைகளை கட்டியபடி தர்ம யுத்தம் செய்தபடி பின்னோக்கி பின்னோக்கி நகர்ந்து அனைத்து நம்பிக்கைளும் பொய்த்தநிலையில் அனைத்து துரோகங்களையும் கண்டநிலையில் தன்னிடமிருந்த அனைத்தையும் பறி கொடுத்து இனிமேலும் போராடினால் மேலும் உயிரிழைப்பை தவிர வேறெதுவும் இல்லை என்றநிலையில் வேறு வழி எதுவுமற்று தன் எதிரியிடமே தன் வாழ்வை விட்டநாள். இது தான் சந்தர்ப்பமென எதிரியும் துரோகிகளும் சர்வதேசமும் தமது கொடூர உண்மை முகத்தை தமிழருக்கு காட்டியநாள். முள்ளிவாய்க்காலில் உயிரைக்கொடுத்த உறவுகளே எம்மை மன்னியுங்கள். எமது வலிமைவரை போராடினோம் எம்மைவிட பல ஆயிரம் மடங்கு வலிமையான நரிகளே தர்ம யுத்தம் செய்த எம்மை முதுகில் குத்தி அழித்தன. உங்கள் பிணங்களின் மீது நின்று அவர்களத…
-
- 0 replies
- 786 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 48 https://app.box.com/s/p3k2p4dl41fmbypxfnftva1jgcd0psth நறு நுதால் என்கொல்! ஐங்கூந்தல்உளரச் சிறுமுல்லை நாறியதற்கு குறு மறுகி ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட கொல்லேறு போலும் கதம் (முல்லைக்கலி 105: 53-56) ஒள்நுதால் இன்ன உவகை பிறிது யாய் என்னைக் கண் உடைக் கோலால்அலைத்தற்கு என்னை மலர் அணி கண்ணிப் பொதுவனொடு எண்ணி அலர் செய்து விட்டது இவ்வூர் (முல்லைக்கலி 105: 61-65) பொருள்: எனது கூந்தலில் இருந்து சிறுமுல்லையின் மணம் வந்தது பொறுக்க மாட்டாமல் எனது பெற்றோர் சினப்படுகின்றனர். அந்தச் சினம் அவன் அடக்கிய காளையின் சினத்தை விடவும் கடுமையாக இருக்கிறது என்று தன் தோழியிடம் கூறுகிறாள் ஒரு பெண். அந்த அவன் சூடியது சிறு முல்லைக் கண்…
-
- 0 replies
- 512 views
-
-
புதைக்கப்பட்ட தமிழர்கள் மறைக்கப்பட்ட உண்மை.. ஜப்பானின் கொடூரம்
-
- 0 replies
- 400 views
-