சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
517 topics in this forum
-
ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கிறது வெப்பம்! ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக் காலத்தில் இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலை பதிவான நகராக பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரம் உள்ளது. அங்கு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 41.2 பாகை செல்சியஸ் அதாவது 106.1 ஃபெரனைட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த 2003 ஆம் ஆண்டு நிலவிய 40.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையை முறியடித்துள்ளது. இந்த நிலையில். ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் பரவலாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவி…
-
- 0 replies
- 547 views
-
-
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு போதுமான காலமில்லை : மைக்கேல் கோவ் காலநிலை மாற்றத்தை உடனடியாகச் சமாளிக்கா விட்டால் வளமற்ற மண், பிளாஸ்டிக் நிறைந்த கடல்கள், அசுத்தமான நீர் மற்றும் கடுமையான வானிலை ஆகிய நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடுமென சுற்றுசூழல் அமைச்சர் மைக்கேல் கோவ் எச்சரித்துள்ளார். பூமிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடிவடைந்து வருவதாக எச்சரித்த கோவ் அடுத்த ஆண்டு பல்லுயிர் மற்றும் பெருங்கடல்கள் தொடர்பான சர்வதேச உச்சிமாநாடுகளில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவதாகவும் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில்; பூமிக்கு எம்மால் இழைக்கப்பட்ட சேதத்தை சரிசெய்வதற்கான காலம் முடி…
-
- 0 replies
- 246 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சாக்லெட், மீன், உருளைக்கிழங்கு என உங்களுக்கு பிடித்த உணவுகள் இல்லாமல் போகும் பருவநிலை மாற்றத்தால் நமக்கு பிடித்த சில உணவுகளுக்கோ, குளிர்பானங்களுக்கோ நாம் பிரியாவிடை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வெப்பநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்களால், பயிர்கள் வளர்வதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றும் மீன்கள், விலங்குகள் செத்துப் போகலாம். எனவே எதிர்காலத்தில் உங்கள் உணவு மேசையில் இருந்து எதுவும் காணாமல் போகலாம். ஏன் தெரியுமா? …
-
- 0 replies
- 837 views
-
-
தகிக்கும் பூமியைக் குளிர்விக்க 17 ரில்லியன் மரங்கள் நடவேண்டும் : புதிய ஆய்வில் தகவல்! தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் அவசியம் என்பது தொடர்பாக புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூமி ஒரு நிரந்தர கோடைக்காலத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், அலாஸ்காவின் வெப்பநிலை நியூயோர்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள் கூறுகின்றனர். இதனிடையே, புதுடெல்லியில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என MIT பல்கலைக்கழகம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதெற்கெல்லாம் தீர்வாக…
-
- 1 reply
- 760 views
-
-
மண்பானை தொழில்நுட்பமும் குளிரூட்டலும் புது டெல்லியில் உள்ள ஒரு ஆரம்ப நிறுவனம் எமது முன்னோர்கள் அறிமுகப்படுத்திய மண்பானை தொழில்நுட்பம் ஊடாக குளிரூட்டலை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆண்ட ஸ்டூடியோ என்பது இந்த நிறுவனத்தின் பெயர். 14 பாகை செல்ஸியஸ் அளவிற்கு இதனால் வெப்பம் குறைவடையும் என இந்த நிறுவனம் கூறுகின்றது. பல, செலவு குறைவான முறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது. ஆனால், நீரையும் இதற்கு பயன்படுத்துகின்றது. ஆனால், நீரை பாவிக்காமல் காற்று உள்வாங்கப்பப்படுவதாலும் வெப்பம் குறைக்கப்படும். இது, வழமையான மின்சாரத்தை பாவித்து உருவாக்கப்படும் குளிரூட்டலை போன்று வினைத்திறன் கொண்டதாக இருக்காது. ஆனால், சூழலை பாதிக்கும் பல மூலப்பொருட்கள் தவிர்க்கப்படு…
-
- 0 replies
- 373 views
-
-
காலநிலைக் குற்றவாளிகள்: யாரை நோக்கி பாயும் தோட்டா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 06:00Comments - 0 குற்றம் புரிபவர்கள் மீது எப்போதும் குற்றஞ் சாட்டப்படுவதில்லை. குற்றஞ் சாட்டப்படும் எல்லோரும் குற்றம் புரிந்தவர்களுமல்லர். ஆனால், உலகம் என்றுமே நியாயத்தின் படி நடந்ததில்லை. நீதியும் அப்படியே. இன்று உலகம் எதிர்நோக்கும் காலநிலை மாற்றங்களுக்கான பழியும் யார் மீதோ சுமத்தப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் செய்கிற காரியங்களுக்கான பழி வளர்ந்துவரும் நாடுகளின் மீது விழுகிறது. குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குற்றஞ்சாட்டிவிட்டு தமது கைகளைக் கழுவி புனிதர்களாகிறார்கள். காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை முன்னெப்போதையும் விட இப்போது நாம் நன…
-
- 0 replies
- 750 views
-
-
மேற்கு ஜப்பானில் இருக்கும் நாரா பூங்கா அங்கே இருக்கும் மான்களுக்காகப் பிரபலமானது. 1880-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிக்கா வகை மான்கள் சுதந்தரமாகச் சுற்றித் திரியும். இந்தப் பூங்காவில் வழிபாட்டுத் தலங்களும் இருப்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். மான்கள் இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களில் 14 மான்கள் தொடர்ச்சியாக இறந்தன. அவற்றைப் பரிசோதித்தபோது வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பூங்காவுக்கு வருபவர்கள் sugar-free இனிப்பு பண்டங்களை மான்களுக்குக் கொடுப்பது வழக்கம். அதை விற்பனை செய்வதற்காகப் பூங்காவுக்கு அருகி…
-
- 0 replies
- 865 views
-
-
2050 இல் லண்டன் வெப்பநிலை பார்சிலோனாவைப் போன்றிருக்கும் பார்சிலோனா முன்னர் கடுமையான வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் லண்டனும் அதே போன்ற காலநிலையைச் சந்திக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆராய்ச்சியின்படி, மூன்று தசாப்தங்களில் லண்டனில் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் அவ்வாறான காலநிலை பார்சிலோனாவில் இன்று நிலவும் காலநிலையையே ஒத்தது என்றும் கூறப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்டின் காலநிலை மராகெஷ்ஷின் இன்றைய காலநிலைபோலவும், ஸ்ரொக்ஹோமின் காலநிலை புடாபெஸ்ற்றின் இன்றைய காலநிலைபோலவும் இருக்கும் என்று காலநிலை நெருக்கடியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட துருவப்பக…
-
- 1 reply
- 482 views
-
-
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு பதிவானது. மனாடோவிலிருந்து தென்கிழக்கில் 185 கி.மீ தொலைவிலும் 24 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சுனாமி ஆரம்ப எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் வானிலை, புவி இயற்பியல் மற்றும் காலநிலை ஆய்வு நிறுவனம் (பி.எம்.கே.ஜி) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. http://athavannews…
-
- 0 replies
- 500 views
-
-
கடந்த 39 ஆண்டுகளில் கடற்கரைகளிலிருந்து மட்டும் 60 மில்லியன் சிகரெட் பட்ஸ்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ஓர் ஆய்வு. சிகரெட் பஞ்சுகளை உணவென்று தவறாக பறவைகள் எண்ணி தனது குஞ்சுகளுக்கு அளிக்கின்றன. படத்தின் காப்புரிமைKAREN MASON 'புகைப்பதைப் பகைப்போம்' அமெரிக்கா ப்ளோரிடா கடற்கரையில், ப்ளாக் ஸ்கிம்மர் பறவை தனது குஞ்சுக்கு சிகரெட் பட்ஸ் ஊட்டும் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. காட்டுயிர் புகைப்பட கலைஞர் கரென் மேசன் எடுத்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "நீங்கள் புகைக்கிறீர்கள் என்றால், பட்ஸை கீழேபோட்டுவிட்டு செல்லாதீர்கள்" என்றும் வலியுறுத்தி இருக்கிறார். படத்தின் காப்புரிமைKAR…
-
- 0 replies
- 407 views
-
-
ஒற்றை நரியின் 3,506 கி.மீ பயணம் – வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள்! ஒரு வயது கூட நிரம்பாத ஒற்றை ஆர்க்டிக் துருவ நரியின் மிக நீண்ட பயணம் தொடர்பாக விஞ்ஞானிகள பெரிதும் ஆச்சரிமடைந்துள்ளனர். உறைந்த கடலில் வெறும் 76 நாள்களில் 3,506 கிலோமீட்டர் (சுமார் 2176 மைல்) தூரம் பயணம்செய்து ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. குறித்த வட துருவ நரி எப்படி அவ்வளவு தூரம் சென்றது? எதற்காக இந்த நீண்ட பயணம்? கடந்த ஆண்டு மார்ச் மாதம், நோர்வேயின் போலார் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு பெண் ஆர்க்டிக் நரியின் மீது GPS பின்தொடரி சாதனம் ஒன்றைப் பொருத்தி, நோர்வேயின் ஷ்வல்பார்ட் தீவில் இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்கன் (Spitsbergen) பகுதியில் விட்டிருந்தனர். …
-
- 1 reply
- 483 views
-
-
ஐரோப்பியக் கண்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இல்லாத வெப்பநிலைகளை இம்மாதம் காணலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களைக் கையாளத் தயாராகி வருகின்றன. அதிகரிக்கும் வெப்பநிலையினால் கடுமையான புயல்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் வெயிலினால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று விவசாயிகளும் அஞ்சி வருகின்றனர். வட ஆபிரிக்காவிலிருந்து வீசும் அனல் காற்று, ஐரோப்பாவில் வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது. https://www.thinakaran.lk/2019/06/25/வெளிநாடு/36293…
-
- 12 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (43). பொறியியலாளரான இவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, சிறிய தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், பிளாஸ்டிக்கிலிருந்து தினசரி 200 லிட்டர் பெற்றோல் தயாரித்து, ஒரு லிட்டர் 40 முதல் 50 ரூபாய் என உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இது குறித்து சதீஷ்குமார் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் அதனை டீசலாகவும் பெற்றோலாகவும் மாற்ற முடியும். இது, மிக எளிமையான செயல்முறை. இந்த செயல்முறைக்கு தண்ணீர் தேவையில்லை. இதன் மூலம் தண்ணீர் எதுவும் வெளியாகாது. அதே போல், வெக்யூமில் (Vaccum) நடைபெறும் இந்த முறையால் காற்ற…
-
- 1 reply
- 848 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சிமெண்ட் உற்பத்தி துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள். எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது. சிமெண்ட் பயன்பாடு இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். முதல் இரண்டு இடத்தில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மீதேன் பிரச்சினை | எதிர்பாராத விளைவுகள் மீதேன் ஒரு எரிவாயு, இன்று வீடுகளில் சாதாரணமாகப் பாவனையிலுள்ள ஒரு பண்டம். அதனாற் பெறப்படும் நன்மைகளைப் போல அதன் தீமைகளை மக்கள் அறிந்திருப்பது குறைவு. இன்றய உலகின் இயற்கை அனர்த்தங்களுடன் இணைத்துப் பேசப்படும் வெப்பமாக்கப்படும் பூமி, வளி மண்டலம், சமுத்திரங்கள் அனைத்துக்கும் காரணமாயிருப்பதாகக் கருதப்படுவன கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (Greenhouse Gases). இதில் நீராவி, காபனீரொக்சைட் (CO2), மீதேன் (CH4), நைற்றஸ் ஒக்சைட்(nitrous oxide), ஓசோன் (ozone), குளோறோபுளோறோ கார்பன் (chlorofluorocarbons (CFCs)) ஆகியன அடங்கும். பூமி வெப்பமாகுதலுக்கும் இவ் வாயுக்களுக்கும் என்ன தொடர்பு? பகலில் சூரிய வெளிச்சத்தினால் பெறப்படும் வெப்பத…
-
- 1 reply
- 896 views
-
-
வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நீரில் தேவையில்லாமல் வீணாகும் நீரின் அளவை குறைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த பிபிசி தமிழின் காணொளித் தொடரின் முதல் பாகம் இது. https://www.bbc.com/tamil/india-48732197
-
- 1 reply
- 963 views
-
-
ஆச்சர்யமூட்டும் அமெரிக்க கிராமம்!! | No Electricity, No mobile | Kaipulla in america
-
- 0 replies
- 720 views
-
-
பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை! பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பரிஸை பசுமையாக்கும் திட்டமும், மிதிவண்டிகளுக்கு மேலும் முன்னுரிமை கொடுப்பது உள்ளிட்ட 14 வசதிகள் பரிஸில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அவற்றில் ஒன்று தான் பிளாஸ்ரிக்கை முற்றாக ஒழிக்கும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுக…
-
- 0 replies
- 571 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஒரு பெருங்கடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பார்க்க மிகப் பெரிய ஆய்வு திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆம், அட்லாண்டிக் பெருங்கடல், அதில் வாழும் உயிரினங்கள், அதிலுள்ள பவளப்பாறைகள் அனைத்தும் நலமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க ஐ-அட்லாண்டிக் திட்டம் எனும் ஒரு சர்வதேச ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல்தான் இந்த கிரகத்தின் இரண்டாவது பெரிய கடல். பருவநிலை மாற்றமும், பெருங்கடல்களும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி அளிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முப்பதுக்கும் மே…
-
- 0 replies
- 512 views
-
-
புவிவெப்பமயமாதலைத் தடுக்கவும், இயற்கையை வளர்க்கவும் கரூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 8,000 கிலோமீட்டர் வரை பயணித்து, நான்கு லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறார். தனது இயற்கை குறித்தான பல்வேறு முயற்சிகளைப் பாராட்டி தமிழக முதல்வர் கொடுத்த ஒரு லட்சம் மற்றும் மேற்கொண்டு மூன்றரை லட்சம் செலவு செய்து, இந்த அசத்தல் முயற்சியை எடுக்க இருக்கிறார். கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகள் ரக்ஷனா. கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை நாடுமுழுக்க மக்களிடம் ஏற்படுத்தவும், இந்தச் சிறுமி இத்தகைய அசத்தல்…
-
- 1 reply
- 472 views
-
-
கிரீன்லாந்தின் பனிப்பகுதி (கிரீன்லாந்து தீவு, கிரீன்லாண்டிக்: செர்மெர்ஸ்யூக்) என்பது 1,710,000 சதுர கிலோமீட்டர் (660,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது, இது கிரீன்லாந்து நிலப்பரப்பில் சுமார் 80% ஆகும்.இது, அண்டார்க்டிக்கின் பனிப்பகுதிக்குப் அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய பனி அமைப்பு ஆகும். கிரீன்லாந்தின் பனிப்பகுதி வடக்கு-தெற்கு திசையில் சுமார் 2,400 கிலோமீட்டர் நீளமுடையதாக உள்ளது, அதன் மிகப்பெரிய அகலம் 1,100 கிலோமீட்டர் (680 மைல்) ஆகும்.இப்பகுதி 77 ° N என்ற அளவில் அதன் வடக்கு எல்லைக்கு அருகே .உள்ளது. இதன் பனி உயரம் 2,135 மீட்டர் (7,005 அடி) இதன் தடிமன் பொதுவாக 2 கிமீ (1.2 மைல்) க்கும் மேற்பட்டது மற்றும் அதன் மிக அடர்த்தியான பகுதியில் 3 கிமீ…
-
- 0 replies
- 693 views
-
-
ஒவ்வோர் வருடமும் சூன் 05 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப் படுகிறது. புவியையும் அதன் இயற்கைத் தன்மையையும் காக்கும் பொருட்டு, உலகளாவிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவே கடந்த 1972 ஆம் ஆண்டு ஐ.நா சபையால் துவங்கிவைக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது. நாம் வாழ்ந்து வருகிற புவி குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிறிதேனும் நாம் சிந்தித்திடாத காரணத்தால்தான் ஐ.நா சபையால் இம்மாதிரியான முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் மனிதனுக்கு மட்டுமானதல்ல இந்த உலகம் என்பதனை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ளல் வேண்டும். மாறாக சிறு சிறு சீவராசிகளுக்கும் ,புல் பூண்டுக்கும் சொந்தமானது இந்த உலகம். இதனை மறந்து தனது நலனுக்காக தொழிற்சாலைகள், அறிவியல் தொழில்ஙட்பங்களைக்…
-
- 1 reply
- 584 views
-
-
ஒவ்வொரு வாரமும் ஒருவர் கடனட்டை அளவுள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் : புதிய ஆய்வு தகவல்! உலகிலுள்ள ஒவ்வொருவரும், வாரத்துக்கு 5 கிராம் அளவிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அது, ஒரு கடன்பற்று அட்டையை உண்பதற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நிதியமான WWF நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நியு காசல் பல்கலைக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது. குடிநீர் மூலமாகவே, மிக அதிகமான பிளாஸ்டிக், மனிதர்களின் உடலில் சேர்கின்றது. அதற்கு அடுத்தபடியாக, shellfish எனப்படும் கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாக, பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் செல்கின்றது. அந்தக் கிளிஞ்சல் உயிர்களை…
-
- 0 replies
- 237 views
-
-
மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கனடாவில் தடை June 11, 2019 மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் இவ்வாறு தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளில் கடந்த ஆண்டு இதேபோன்ற சட்டம் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பானது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சவால் எனவும் தெரிவித்துள்ளார். மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ள போதிலும், பிளாஸ்டிக் பைகள், ஸ்ரோ, பிளாஸ்டிக் தட்டுக்கள் போன…
-
- 1 reply
- 481 views
-
-
சிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி ''நாட்டில் மொத்தம், 1500 வகை பறவைகள் இருந்தன. 200 வகையான பறவைகள் தடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தற்போது, சிட்டுக்குருவியும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இவற்றை மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமை. குயவரான பெருமாள் என்பவரின் உதவியோடு சிட்டுக்குருவிகளுக்கு கூடு வடிவமைத்து, அதனை இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருகிறார் மருத்துவர் சாதனா. 2017ல் இவர் தொடங்கிய ‘சிட்டுக்குருவி மீட்பர்கள்‘ என்கிற சமூக குழு விழிப்புணர்வு அளித்தல், கூடுகள் விநியோகம், குருவிகளை மீட்டு விடுவித்தல் பணிகளை செய்கிறது. மனிதகுல நலனுக்காக சிட்டுக்குருவிகளை பாதுகாத்து, இயற்கையை பராமரிப்பது எனது கடமை என்கிறார் சாதனா. இயற…
-
- 1 reply
- 617 views
-