Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR படக்குறிப்பு, ராஜநாகம் குறித்த புதிய கண்டுபிடிப்பை ஊர்வன ஆய்வாளர் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர். எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ராஜநாகம்... பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும். அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது. அத்தகைய ஒரு சூழ்நிலையின் போது, ஊர்…

  2. Started by valavan,

    எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா

  3. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்களால் வழங்கப்படும் பூக்களும், மாலைகளும் குப்பைகளாக ஆறுகளிலும், குளங்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனை தடுக்க குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி ஒரு புதுமையான முயற்சியை கையாண்டு வருகிறது. மாநகராட்சியே நேரடியாக கோவில்கள் மற்றும் தர்க்காக்களுக்கு வண்டிகளை அனுப்பி குப்பைகளை சேகரிக்கிறது. அவை முறையே தரம் பிரிக்கப்படுகிறது. பிறகு மண்புழு உர ஆலைகளுக்கு அனுப்பி அங்கே அது மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 70 டன் உரத்தை தயாரித்துள்ளது சூரத் மாநகராட்சி. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை சூரத்தின் தோட்டக்கலை துறை அங்குள்ள பூங்காக்கள், சாலையோர பூங்காக்களில் பயன…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கம், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வீரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்படும் ஓர் உயிரினம். ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற ரஜினியின் வசனம்கூட அத்தகைய கம்பீரத் தொனிக்காக வர்ணிக்கப்பட்டதுதான். ஆனால், உண்மையில் சிங்கம் சிங்கிளாக வராது, பெரும்பாலும் கூட்டமாகத்தான் வரும் என்கிறார் குஜராத்தின் கிர் காட்டில் உள்ள சிங்கங்களை ஆய்வு செய்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம். அதிலும் ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களே அதிகமாக வேட்டைக்குச் செல்லும…

  5. மத்திய சுற்றாடல் சபை என்றால் என்ன? | மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிபணிப்பாளர் M.சிவகுமார்

    • 0 replies
    • 303 views
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1990 களின் நடுப்பகுதியில், இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 50 மில்லியனில் இருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் சரிந்தது கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி 26 ஜூலை 2024 ஒரு காலத்தில், பாறு கழுகு இந்தியாவில் எங்கும் காணக் கூடிய ஒரு பறவை இனமாக இருந்தது. ஏராளமான பாறு கழுகுகள் இங்கும் அங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. அழுகுண்ணி (scavengers - (இறந்த விலங்குகளின் சடலங்களின் எச்சங்களை உண்ணும் உயிரினம்) பறவை இனமான பாறு கழுகுகள், பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் சுற்றித் திரிந்து, கால்நடைகளின் சடலங்களைத் தேடின. சில சமயங்களில் வி…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கலாசாரத்தில் இலக்கியங்கள், சொல்லாடல்கள், கதைகள், ஆன்மிகம் என பல தளங்களிலும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் உயிரினங்களுள் ஒன்று பாம்பு. இந்தியாவில் ‘நாக வழிபாடு’ என்பது பல பண்பாடுகளில், வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றது. ஆனால், பாம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதேவேளையில், அதன் உருவம், அமைப்பு, ஊர்ந்து செல்லும் தன்மை என, பல காரணங்களுக்காக பாம்பு என்ற சொல்லைக் கேட்டாலே, முகம் சு…

  8. உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்ள்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மத்திய ரஷ்யா, வடக்கு சீனா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்பட்டு வரும் நிலையில் …

  9. சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார் BookdayJune 6, 2024 செய்யறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும்பாலான துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் முன்பை விட வேகமாகவும் பயனளிப்பதாகவும் பரந்த அளவில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது. செய்யறிவு தொழில்நுட்பம் உயிரியல் துறைகளையும் ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்கிறது. மனித வாழ்க்கையுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. இதனால் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. செய்யறிவு என்றால் என்ன? செய்யறிவு என்பது நுண்ணறிவுகளை உருவாக்கச் செயல்முறைகளை தானியங்குபடுத்துதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதன் வழியே மூலங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்க…

  10. பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,இந்த விலங்கு வழக்கமான சாம்பல் நிற ஓநாய்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 21 ஜூன் 2024 சித்தேஷ் பிரம்மங்கர் புனே அருகே உள்ள மக்ரானா என்னும் நகருக்கு சென்ற போது, கொஞ்சம் வித்தியாசமான ஒரு மிருகத்தைப் பார்த்தார். “நாங்கள் அப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. அது ஓநாய் போல தோற்றமளித்தது, ஆனால் அது ஓநாயா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது ஓநாய்களின் வழக்கமான சாம்பல் நிறத்தில் இல்லை. ஆனால் ஒருவித மஞ்சள் நிறத்தில் இருந்தது. இந்த சம்பவம் 2014 இல் இருந்து வந்தது." அ…

  11. 17 JUN, 2024 | 08:42 PM ஒவ்வொரு நகர ஈரநிலமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பொதுவான தன்மையைக் கருத்தில் கொண்டு ஈரநில முகாமைத்துவம் தொடர்பான பொதுவான தீர்வுகளை எட்டுவதில் கவனம் செலுத்துமாறு ஈரநில மாநாட்டில் கலந்துகொண்டவகளுக்கு பிரதமர் பரிந்துரைத்தார். சர்வதேச ஈர நிலப் பூங்கா ஒன்றியத்தின் ஆசிய மாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். மாநாட்டின் ஆரம்ப விழா இன்று திங்கட்கிழமை (17) காலை வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றது. சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் ஆசிய முதல் மாநாடு ஜூன் 14 முதல் 21 வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் நடைபெறவுள்ளது. நகர …

  12. 04 JUN, 2024 | 05:16 PM உலக சுற்றுச்சூழல் தினமானது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களையும், நிறுவனங்களையும் ஒன்று திரட்டவும், சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் ஓர் உலகளாவிய தளமாக செயற்படுகின்றது. இயற்கையும், சுற்றுச்சூழலையும் மனித இனத்தின் சுகவாழ்விற்கு பயன்படுத்தல் என்ற செயற்பாடானது தற்போது முக்கியமான ஒரு விடயமாக மாறி வருகின்றது. இது அபிவிருத்தி என அழைக்கப்படுகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச் சூழலையும் எந்த தேவைக்கும் பயன்படுத்தும் போதும் சூழலியல் மற்றும் சுற்றுச் சூழலியல் ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். தற்காலத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசப்படும் போதெ…

  13. வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது. அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், நிலத்தடி நீரைப் பெருக்க என்ன செய்ய வேண்டும், நீர் மூலங்கள் எப்படியான நடத்தைகள் மூலம் எவ்வாறெல்லாம் மாசடைகின்றன, தற்போதுவரை எத்தகைய பாதிப்புகள் மற்றும் மாசுகளை நீர் சந்தித்துள்ளது, இதை ஊ…

  14. இயற்கையை சீண்டியது போதும் ச.சேகர் காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியாகியும், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு இல்லையா அல்லது அவை தொடர்பில் அக்கறை இல்லையா என்பதைப் பற்றியே கேட்கத் தோன்றுகின்றது. ஆம், அண்மைக் காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தேறும் இயற்கை அழிவுச் சம்பவங்களை எடுத்துப் பார்த்தால், மனிதன…

    • 1 reply
    • 649 views
  15. பட மூலாதாரம்,ESA கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிரான்கி அட்கின்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 22 மே 2024, 08:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடலில் உள்ள பைட்டோ பிளாங்டன் (phytoplankton) என்னும் உயிரிகளின் பரவலில் சம நிலை குலைந்து, கடல்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் கடலை சித்தரித்து வரையும் போது, ஒளிரும் பசும் நீல நிறத்தில் கடல் நீரை கற்பனை செய்து வண்ணம் தீட்டி இருக்கிறீர்களா? நினைத்து பார்க்க அழகாக தான் இருக்கும், ஆனால் நமது பிரபஞ்சத்தின் பெருங்கடல்களில் சில பகுதிகள் உண்மையில் பசுமை நிறமாக மாறும் சாத்தியங்கள் இருப்பதாக சமீபத்திய…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, தேனீக்கள் குறித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. ஐன்ஸ்டைன் இதைக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் கூட, தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. சர்வதேச அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மற்றும் பட்டினியை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை அ…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலென் ப்ரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பழமையான மரங்களில் ஒன்றான பாபாப் மரங்களின் தோற்றம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகள் தீர்த்து வைத்துள்ளனர். மரபணு ஆய்வுகளின்படி, 2.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இருக்கும் மடகாஸ்கர் தீவில் இந்த மரங்கள் தோன்றின. பின்னர், அவற்றின் விதைகள் கடல் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கும், ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டு, தனித்தனி இனங்களாகப் பரிணமித்தன. ஆராய்ச்சியாளர்கள் இந்த மரங்களைப் பாதுக…

  18. சர்வதேச புவி தினம் இன்றாகும்! சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக பூமி தினத்தின் தொனிப்பொருள் “பூவி மற்றும் பிளாஸ்டிக்” என்பதாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஏப்ரல் 22, 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் புவி தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று, புவி தினத்தில் சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 193 நாடுகளைச் சேர்ந்த சுமா…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல்…

  20. பட மூலாதாரம்,KANYIRNINPA JUKURRPA MARTU RANGERS கட்டுரை தகவல் எழுதியவர், டிஃபனி டர்ன்புல் பதவி, பிபிசி செய்திகள், சிட்னி 11 ஏப்ரல் 2024 உலகிலேயே மிக அரிதான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய அகழெலி (mole) ஆஸ்திரேலியாவின் மக்கள் புழக்கமில்லாத பாலைவனப் பகுதியில் காணப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நார்தர்ன் மார்சுபியல் மோல் (northern marsupial mole) என்றும், ‘ககராடுல்’ என்றும் அழைக்கப்படும் இந்தச் சிறிய விலங்கு ஆஸ்திரேலியாவில் செல்வதற்கே கடினமான, தொலைதூரப் பகுதியில் வசிக்கிறது. இந்த விலங்கு மனிதர்களின் கையளவே இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. இதன் உடல் முழுதும் தங்கநிற ரோமம் …

  21. ஸ்பெயினில் காலநிலை மாற்றம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா (UK) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருகிறது. இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எ…

  22. 27 MAR, 2024 | 11:18 AM உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு (அனகொண்டா்) வேட்டையர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமேசான் காடுகளின் கடந்த பெப்ரவரி மாதம் இந்த மிகப்பெரிய பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த பெண் மலைப்பாம்புக்கு அன்னா ஜூலியா' என்று பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வகையான பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாகக் கருதப்படுகின்றன. https://www.virakesari.lk/article/179804

  23. சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆந்திராவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர். மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்காக ஹரிதா விகாஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். வரி குச்சுலு எனும் உணவுக் கூடுகளை தயாரிப்பதும் அதை செய்வது எப்படி என மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணி. சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களைக் கொண்டு பறவைகளுக்காக இந்த உணவுக்கூடுகள் உருவா…

  24. 22 MAR, 2024 | 10:46 AM இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற பல்வேறு தினங்களில் உலக நீர் தினமும் ஒன்றாக அமைகிறது. ஆண்டுதோறும் மாரச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற இந்த நீர் தினமானது ஏனைய உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற தினங்களில் இருந்து அதிமுக்கியத்துவம் பெற்று சற்று வேறுபடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை யாவரும் அறிந்ததே. அருகி வருகின்ற நீர் வளத்தின் சகல திட்டங்களையும் அதன் பராமரிப்பு நிர்வாகத்தை விருத்தி செய்து நீர் வளப் பாதுகாப்பை நன்கு வலுப்படுத்தி நாளாந்தம் பெரும் சவா…

  25. கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல் கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம். கல்லி ப்ளக் உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள், நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.