Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான். இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும். அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி …

    • 7 replies
    • 1.7k views
  2. மீன் கறி என்ற வஸ்து சிம்ரன் போன்றது. யாரோடு சோடி சேர்ந்தாலும் நன்றாகத்தானிருக்கும். பிட்டின் மீது குழம்பை வார்த்துவிட்டு இரண்டு மீன் துண்டை தட்டின் ஓரத்தில் தட்டிவிட்டு, ஆறுதலாக உள்ளே அனுப்பினாலென்னா, சுடுசோற்றின் மீது தலையோடு கவிழ்த்து போட்டுவிட்டு ஆய்ந்து ஆய்ந்து ஒரு சிறுபோர் நடத்தினாலென்ன, பாண் - தோசை - இட்லி - இடியப்பம் என்றெல்லாம் களமாடி, கடைசியாக Mc Donlald's பேகரோடுகூட சாப்பிட்டுப்பார்த்திருக்கிறேன். மீனின் வம்ஸமே ஒரு தனி அம்ஸம்தான். இவ்வாறு நினைவிலேயே எப்போதும் நீந்துகின்ற கலாதியான கடற்கரும்பு எது என்று நாயிடம் கேட்டால்கூட, வாலை ஆட்டிக்கொண்டு சொல்லும் "மீன்தான்" என்று. ஆனால், போன மாதம் Netflix வெளியிட்டிருக்கின்ற Seaspiracy என்ற ஆவணப்படத்தை பார்த…

  3. சிலோன் விஜயேந்திரன் திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன். ’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ ’நீங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருந்த்து. அப்போதிருந்து நல்ல நண்பரானார். …

    • 4 replies
    • 1.5k views
  4. தமிழரும் போர்க் குற்ற விசாரணையும் ! =============================== உலகில் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்கப்படும் மற்றும் உரிமை மறுக்கப்படும் இனங்கள், சமூகக் குழுக்கள் தமது உரிமைக்காவும் இருப்புக்காவும் பல்வேறு முறைகளில் போராடி வந்திருக்கின்றன. அவ்வாறு போராடியவர்கள் ஆயுதமுனையிலும் சட்டத்திற்கு முரணான வகையிலும் அடக்கி மௌனிக்கச் செய்யப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கிறார்கள். அத்தோடு சந்தேகத்தின் பேரில் எத்தனையோ அப்பாவிகள் கொல்லபட்டிருக்கிறார்கள் அல்லது விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான சகல ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்த சமூகமாகவே…

  5. தேங்காய் எண்ணெயும் இரு கோடுகளும் ! ================================ ஒரு தாளில் உள்ள ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்குவது எப்படி? இதற்கு விடை உங்களில் பலருக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். இன்றைய அரசியல் சூழலிலும் இந்த இருகோடுகள் தத்துவம் பல நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது. சரி, தேங்காய் எண்ணெய்க்கும் இந்த இரண்டு கோடுகளுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே புரியும் ! கடந்த ஒரு வாரமாக அரசியல்வாதிகள் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் முக்கிய பேசுபொருளாகி இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்க்குள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டும் அதன் பின்னரான வாதப் பிரதிவாதங்களும் ஆய்வுகூட அற…

  6. தமிழரால் தமிழருக்கு ....... ! ==================== தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசங்களில் தமது இருப்பைத் தக்க வைக்கவும், தமக்கு எதிராக பேரினவாத அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நியாயம் வேண்டியும் ஜனநாயக முறையில் போராடும் வேளையில் தமிழ் மக்களின் முக்கியமான பொதுப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்யும் கருத்துக்களை தொடர்ச்சியாக காவிச் செல்லும் சக்திகள் யார்? திட்டமிடப்பட்ட பின்புலங்களின் செயல்பாடுகளே இவர்கள் மூலம் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன என்றே ஊகிக்க முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் பல கொடுமுடிகள் அணிவகுத்து நிற்பதும் அவர்கள் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்தும் புறவயச் சூழலுக்குள் தள்ளிவிட முனைவதையும் ந…

  7. ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !! =============================== ” Rohypnol என்ற மாத்திரை காமத்தை தூண்டும் பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! - கண்டிப்பாக பகிரவும்..!” என்ற தலைப்போடு சிலவருடங்களுக்கு முன்னர் சுற்றி விடப்பட்ட ஒரு பதிவு மீண்டும் ஒரு சுற்றுக்குத் தயாராகிறது. இதன் சாராம்சம் “வடகிழக்கின் போதை வியாபார முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரையின் பின்னால் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் தமிழ் சமூகத்தில் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது. இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது” என்பதுதான். தற்போது, இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பெருக்க வீதம் குறைவடைந்து செல்…

  8. <மன்னன் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்> Mano Ganesan https://www.facebook.com/mano.ganesan.3 கண்டியின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகள், தமிழகம் வேலூரில் இருப்பதாகவும், அவர்களுக்கு தற்போது அரச மானியம் என்ற ஓய்வூதியம் வேண்டும் எனவும், அதை இலங்கை ஜனாதிபதி கோதாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரை சந்தித்து, கோர இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை, இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் மூலம் இவர்கள் முன்னெடுக்க உள்ளதாகவும், நம்ம “சிலாபம் திண்ணனூரான்” இன்றைய வீரகேசரியில் எழுதியுள்ளார். இந்திய தூதுவர் இதற்கு உடன்படுவாரா என்பது அவரது அரசு எடுக்கும் முடிவில் தங்கியுள்ளது. அதுபற்றி…

  9. ஐ நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று (Mar 24) இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. தமிழாக்கம் : ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக இங்கு ஆற்றப்படும் உரைகளை அவதானித்து வருகிறேன். அநேகமாக எல்லா அரசாங்கத் தரப்பு உறுப்பினர்களும் தமதுரைகளில், இன்று இச்சபையில் திரு. எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த சில கருத்துகள் தொடர்பில் தமது கண்டனத்தைத் தெரிவித்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளாரான சுமந்திரன் தனதுரையில், ஐ.நா. மனிதவுரிமைச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தமையை பாராட்டியிருக்கிறார் அல்லது வரவேற்றிருக்கிறார். இங்கு உரையாற்றிய அரச தரப்பு நாட…

    • 0 replies
    • 566 views
  10. பெறுனர்: முத்துசாமி, தலைவர் இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி தலைமைச் செயலகம் --------------------?? “என்ன கட்சி, நம்ம கட்சி?” *************************** அன்புள்ள முத்துசாமி அவர்களுக்கு, முதலில் உங்கள் இலங்கை பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் திடீரெண்டு கட்சி தொடங்கினது எங்களுக்கெல்லாம் சரியான அதிர்ச்சியெண்டால், அதைவிட அதிர்ச்சி நீங்கள் ஆறு மாசத்துக்கு முதலே இந்தக் கட்சி தொடங்கிட்டன் என்று சொன்னதுதான். உங்கட ஊடக மகாநாட்டில நீங்கள் கதைச்சதைக் கேட்டாப் பிறகு உங்களை நிறையக் கதைக்கோணும், கேள்விகள் கேட்கவேணும் போல கிடந்துது. அதுதான் இந்தக் கடிதம் எழுதுறன். போன மாசம்தான் திடீரெண்டு திரிபுரா முதல்வர், இலங்கையிலையும் நேபாளத்திலையும் பா.ஜ.க. …

  11. சர்வதேச பெண்கள் தினம் – March 08, 2021 ================================ உலகெங்கும் பெண்களுக்கான சர்வதேச தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் இந்தத் தினம் ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய தினமாகக் கொள்வதற்கான நாள் இன்னமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகளிலும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னரே இன்று அவர்கள் அனுபவிக்கும் சில உரிமைகளை இன்று அனுபவிக்கிறார்கள். ஆனால் பலநாடுகளில் வாழும் பெண்கள் இன்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. சம உரிமை என்பது வெறும் ஏட்டில் உள்ள விடயமாகவே இருக்கிறது. பெண்கள் தமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற…

  12. NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________ உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப…

  13. குழந்தையைத் துன்புறுத்திய தாய் !? ============================= கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் அதிகம் விமர்சனத்திற்கும் ஆளான ஒரு வீடியோ, ஒரு இளம் தாய் தனது ஏழு மாதக் குழந்தையை ஒரு தடியினால் தனது கோபம் தீரும் மட்டும் அடிக்கும் காட்சியே. அந்த வீடியோவில் அந்தப் பெண் தனது குழந்தையை அடித்து இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்து அங்கும் அடிக்கிறார். குழந்தை கதறி அழுகிறது. அந்தப் பெண்ணின் சகோதரன் என்று சொல்லப்படுபவர் இதனைக் கவனமாக வீடியோ எடுக்கிறார். நடு வீட்டில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல (கண் விழித்தபடி) படுத்திருக்கிறார். பிந்திக் கிடைத்த தரவுகளின்படி அந்தப் பெண்மணி மத்ஹ்டிய கிழக்கி…

  14. கடிதமும் கடந்து போகும் ! ===================== நீங்கள் கடைசியாக எப்போது ஒரு தாளில் நண்பருக்கோ உறவினருக்கோ கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? போன வாரம்? போன மாதம்? போன வருடம்? அல்லது சில வருடங்களுக்கு முன்னர்? ஆமாம், இன்றைய இணைய உலகில் ஏறக்குறைய வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் ஒன்றுதான் கடிதம். ஆனால் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எமது பிரதான தொடர்பாடல் ஊடகமாக கடிதமே இருந்தது. அதற்கு தந்தி, தபால் அட்டை, inland letter, aerogram, air mail என்று வேறுவேறு வடிவங்களும் இருந்தன. Inland letter இந்தியாவில் மக்களிடையே உள்ளூர் கடிதத் தொடர்பில் அதிகம் புழக்கத்தில் இருந்தது. இதற்கு தனியாக கடித உறை மற்றும் முத்திரை தேவையில்லை (Ready made ஆடை போல). …

  15. அ.தி.மு.க-வை வீழ்த்த அ.ம.மு.க-வை பயன்படுத்துகிறதா பா.ஜ.க? - வானதி ஸ்ரீநிவாசன் கூறுவது என்ன?

  16. கொங்கோ விடுதலை வீரன் பட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) 60வது ஆண்டு நினைவாக…. (1925 – 1961) கொங்கோ ஆபிரிக்காவிலுள்ள மிகவும் வளம்மிக்க நாடுகளில் ஒன்று. மத்திய ஆபிரிக்காவில் ஆரம்பித்து கொங்கோவின் ஊடாகப் பாய்ந்து அத்திலாந்திச் சமுத்திரத்தில் கலக்கும் கொங்கோ நதியினால் கொங்கோவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும் செழிப்புற்றிருந்தன. அதைவிட டைட்டானியம், தங்கம், வைரம், தாமிரம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்த நாடு. ரப்பர் வளமும் மிகுந்த நாடு. (இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் கொங்கோவில் இருந்துதான் தமக்குத் தேவையான பல தாதுப் பொருட்களைப் பெற்றன.) எனவே ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டின் மீது கண் வை…

  17. Mano Ganesan - மனோ <சரித்திரம் திரும்புகிறது> 1990 வருடத்தில் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில், அன்று கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் அடிக்கப்பட்ட சிங்கள ஜேவிபி இளைஞர்களின் சார்பாக, அந்த இளஞர்களின் தாய்மார்களின் கண்ணீரின் சார்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐநா மனித உரிமை குழுவிடம், முறையீடு செய்ய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்பி மஹிந்த ராஜபக்ச ஜெனீவா போனார். அவருடன் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே, வாசுதேவ நாணயக்கார, நிமல்கா பென்ணான்டோ ஆகியோரும் போனார்கள். ஜ…

  18. விகாரை தென்பட்டால் அது சிங்களவர்களினுடையதா ?? வரலாற்றை நோக்குகின்ற பொழுது விகாரைகள் தென்பட்டால் அது சிங்களவர்களினுடையது என்று தமிழர்களுக்கு இருக்கும் பார்வையும், சிங்களவர்களு நாம் உருவாக்கிய அந்த பார்வையும் மிக பிழையானது. சமயத்தின் கொள்கைகளுக்கான யுத்தம், குடிகளுக்கான யுத்தம், சாதிகளுக்கான யுத்தம் என்பது ஆரம்ப காலம் தொட்டே இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் இருந்து ஒரு விடையத்தை அணுகுகின்ற பொழுது இன்று இருக்கும் மனநிலை, பழக்கவழக்கம், நடைமுறை மற்றும் அரசியல் நிலை கொண்டு நாம் வரலாற்றை அணுகுகிறோம். இது உண்மையில் பிழையான ஒரு விடையத்தையே தருகின்றது. ஒரு விடையத்தை நாம் பொது மேடையில் வைக்கின்ற பொழுது அதன் உண்மை தன்மையை எந்தவொரு தரப்பும் கேள்வி கேற்கும் வண்ணம் அம…

  19. தேசிய கீதமும் சைமன் காசிச் செட்டியின் நினைவும். தேசிய கீதம் தோன்றுவதற்கு முன்னரே,இலங்கையின் நீளத்தையும் சுற்றளவையும் அளந்து அறிவித்தவர் ஒரு தமிழர் என்ற நினைவை இந்நாட்களில் பதிவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'இலங்கையின் அட்ச தேசாந்திரத்தையும் நீள அகலத்தையும், சுற்றளவையும் முதன்முதலாக ஐரோப்பிய நில அளவையாள நிபுணர்கள் வியக்கும் வகையில் அளந்து கணித்து நிதானமாக அறிவித்த பெரியார் சைமன் காசிச்செட்டி என்னும் தமிழரே. இன்றைக்கு உடனுக்குடன் வரும் சட்ட மாற்றங்களை அறிக்கைகளை வெளியிடும் அரசாங்க வர்த்தமானி (கசற்) வருவதற்கு முன்னோடி அவரே. பிரித்தானிய அரசுக்கு முதலே, இலங்கை பற்றிய செய்திகளையும், எல்லாவிதமான தகவல்களையும் திரட…

    • 0 replies
    • 1.1k views
  20. எண்ணித் துணிக கருமம் ! #P2P ======================== கடந்த மூன்றாம் திகதி போலீசார், இலங்கையின் நீதித்துறையின் தள்ளுமுள்ளுடன் ஆரம்பித்த “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P பேரணி இன்று இறுதிநாளாக யாழ்ப்பாணத்தில் நிறைவுபெறவுள்ளது. இது ஆரம்பித்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் இதற்கான ஆதரவு பெருகியதுடன், வடக்குக் கிழக்கின் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி மலையகத் தலைவர்களும் கலந்து கொண்டதையும் ஆதரவு வழங்கியதையும் காண முடிகிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் மொழிபேசும் அனைத்து சிறுபான்மை மக்களும் இணைந்து பயணிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்தப் போராட்டம் சிங்கள மக்கள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல நாடுகளின் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி ம…

  21. இலங்கையின் சுதந்திர தினமும் சிறுபான்மை இனமும் ! =========================================== இலங்கையில் மீண்டும் ஒரு சுதந்திர தினம் ஒரு தேசம், ஒரு கொடி, ஒரு மொழியெனக் கொண்டாடப்பட்டுள்ளது. வழமைபோல இம்முறையும் “இது எமது கொடியில்லை, தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை” போன்ற தமிழர் மத்தியில் கருத்துரைகளைப் பார்க்க முடிந்தது. அதேநேரம் தேசியகீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என்ற ரீதியிலான பதிவுகளை சில சிங்கள நண்பர்களின் பதிவுகளில் காண முடிந்தது. சிலர் தமிழர்கள், நாட்டின் தலைவர் சிங்களத்தில் மட்டுமே உரையாற்றியதைச் சுட்டிக் காட்டியிருந்தனர். அரசு இவை எதையும் கணக்கில் எடுக்காது, வழமைபோல தனது பாணியில் 73வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. சனாதிபதி தனது உரைய…

  22. தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க படாமையால் இலங்கையின் 73-வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை வடிவேல்_சுரேஷ் https://www.facebook.com/100006954105374/videos/2977930355782072

    • 0 replies
    • 616 views
  23. மியான்மாரும் இலங்கையும் ====================== ஒரு நாடு இராணுவக் கட்டுக்கோப்புடன் இயங்குவது நல்லதே. ஆனால் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்குவது வரவேற்கத்தக்கதல்ல. மியான்மாரின் ஆங் சான் சூ கீ மீண்டும் இராணுவப் புரட்சியின் விளைவாகச் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் பல வருடங்கள் இவர் இராணுவத்தின் வீட்டுக் காவல், அடையாளம் தெரியாத இடத்தில் சிறை என சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்தான். அன்று அவர் சிறையில் இருக்கும்போது சமாதான தேவதையாகவே உலகினால் அடையாளப்படுத்தப்பட்டார். 1991இல் சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றுக் கொண்டார். ஆனாலும் கடந்த தசாப்த காலத்தில் தொடர்ச்சியாக மியன்மாரில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப…

  24. Thank You, LARRY KING !!! , LARRY KING, அமெரிக்க ஊடகத்துறையில் 63 ஆண்டுகள் கோலோச்சிய ஜாம்பவான். அவருடைய 87வது வயதில் இன்று (January 23, 2021) காலமானார். ஆட்சியாளர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை, ஆறு தசாப்தங்களில் சுமார் 50,000 நேர்காணல்களூடாக வரலாற்றைப் பதிவுசெய்த சாதனையாளன். 9 வயதிலேயே தந்தையை இழந்த King, பாடசாலைப் படிப்போடு கல்வியை நிறுத்திவிட்டு, ஊடகவியலாளராகும் கனவுடன் பயணப்பட்…

    • 0 replies
    • 1.4k views
  25. இன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் நா.உ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ம.ஆ.சுமந்திரன் நா.உ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்ட நேரலை இணையரங்க கலந்துரையாடல் நிகழ்வு! தலைப்பு: "இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்" https://www.facebook.com/CanadianTamilCongress/videos/472379530591148

    • 0 replies
    • 788 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.