Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது" [ஒரு குழந்தை பாட்டு] "கார்த்திக் கார்த்திக் காகம் பறக்குது காலை வேளையில் வடை சுடுறாள் காத்து இருக்குது பூவரசம் வேலியில் கானா பாட்டு பாடி ஆடுறாள் !" "கார்த்திக் கார்த்திக் பூனை பாயுது காரிருளில் இரு கண்கள் மிளுருது காரை கொஞ்சம் விரைவா செலுத்து காத தூரம் போக வேண்டும் !" "கார்த்திக் கார்த்திக் பட்டம் மிதக்குது காடை கோழி எட்டி பார்க்குது காளான் பூஞ்சையை கொத்தி சாப்பிடுது காட்டுப் பக்கம் அறுந்து போகுது !" "கார்த்திக் கார்த்திக் அம்புலி தெரியுது காங்கேயம் காளை துள்ளி வருகுது கா…

  2. Started by theeya,

    எப்போதாவது உங்களை புனைப்பெயர் சொல்லி இன்னொருவர் அழைத்ததுண்டா எப்போதாவது உங்கள் பெயரை உச்சரித்த நாட்களை விட புனைபெயரை அதிகம் உச்சரித்ததுண்டா அவரவர் வாழ்வில் பட்டப் பெயராகவோ செல்லப் பெயராகவோ ஒரு புனை பெயர் இருந்திருக்கக் கூடும் பிடித்த தலைவர், பிடித்த நபர் பிடித்த நதி,பிடித்த மலை அன்றேல் பிடிக்காமல…

      • Like
    • 2 replies
    • 435 views
  3. ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே........... கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள் நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன் அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன் எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர் அழுத…

  4. காந்தியும் கனவுகளும் காந்தியை ஒரு நாள் கனவில் கண்டேன் எப்படி இருக்கிறது இந்தியா என்றார் நீங்கள் நேசித்த மூன்று குரங்குகள் போல் இல்லை என்றேன் சாதி மதம் என்று சண்டைகள் இல்லையா என்றார் நீங்கள் பொய் சொல்லி விட்டீர்கள் தாத்தா கர்ஜனங்கள் உங்கள் பிள்ளைகள் என்று கடைசி வரை ஒத்துக்க மாட்டானாம் காவிக்குள் புகுந்து இருக்கும் சாமிமார் பிறந்த இடம் போய் பார்த்தீர்களா தாத்தா பத்தி எரிந்தது தாத்தா ஒரு நாள் பாடுபட்டு நீங்கள் கட்டிய ஐக்கியம் செத்து விழுந்தது மானிடம் தாத்தா பாவர் மசூதியை போய் பாருங்கள் ராமர் பிள்ளைகள் உங்கள் சத்திய சோதனையை அந்த புனித மண்ணில் புதைத்து விட்டனர் நேரம் இருந்தால் …

  5. "எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!" "கொடூரமாக இருக்காதே திமிர் பிடிக்காதே உரிமைகளை மதி குரல்களை மதி" "இங்கு வேலையாட்கள் இல்லை இங்கு முதலாளிகள் இல்லை இங்கு குடும்பமே உண்டு இனி நட்பாகக் கவனி" "கஷ்டங்களைக் கேளு துயரங்களைக் கேளு கடவுள் சிவாவாக இரு இயேசு கிறிஸ்துவாக இரு" "ஆதாயத்தைப் பகிரு லாபத்தைப் பகிரு ஒரு தந்தையைப் போல ஒரு தாயைப் போல" "அடிமை ஆக்காதே ஏழைகளை உருவாக்காதே ரோமாக இருக்காதே நீரோவாக இருக்காதே" "எல்லோரையும் இணை தொழிலாளர்கள் பங்கேற்கட்டும் அனைவரையும் உள்ளடக்கு முடிவெடுப்பதில் கலந்தாலோசி" "ஆர்வத்தைக் கொடு நம்பகத்தன்மை வளரட்டும் …

  6. கலிபோர்னியாவில் இடைவிடாமல் மழையும், பனியும் ஆக இருக்கின்றது. போன வருடமும் இவ்வாறே. கொட்டும் பனியிலும், கடும் காற்றிலும் ஒரு சோடி கழுகளின் கூட்டையும், அவைகளின் முட்டைகளையும் இங்கு சிலர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இது இங்கு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது ************* ஒரு வழிச் சாலை --------------------------- இரண்டு வெண்தலைக் கழுகுகள் அவற்றுக்கு பெயரும் உள்ளது ஒன்று லிபர்ட்டி மற்றது கார்டியன் மூன்று முட்டைகள் போட்டு மாறி மாறி அடைகாக்கின்றன வாழும் நாள் முழுதும் இவை சோடி மாறுவதில்லை கூடும் மாறுவதில்லை ஒவ்வொரு வருடமும் தண்டும் தடியும் கொடியும் புதிதாக அ…

      • Like
    • 3 replies
    • 431 views
  7. தடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு …

  8. "தந்தை எனும் தாய்" [உண்மைக் கதை] தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அவர் கையாளும் உவமைகளும், அதிலும் குறிப்பாக தாய் சேய் உறவுநிலை அவரது பாடல்களில் பேரிடம் வகிப்பதும் ஆகும். உதாரணமாக, “அன்னை இலாச் சேய்போல் அலக்கண் உற்றேன் கண்ணார என் அகத்தில் தாய்போல இருக்கும் பராபரமே“ “எத்தன்மைக் குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் அத்தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே“ மனக்கண்ணில் தாயின் இருப்பு தெரியினும் [தந்தையில் தாய் இருப்பினும்] அன்றாடச் சிக்கல்கள் அவரைத் [பிள்ளைகளை] தாயற்ற குழந்தை போலத் துன்புற வைத்த சூழலை தவிர்க்க, குழந்தை செய்யும் குற்றம் எத்தன்மைத்தாயினும் பெற்றவள் பொறுத்துக் கொள்வாள். அவளைப் போலவே இறைவனும் [ந…

  9. "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன்" "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன் ஆர்வம் கொண்டு ஆவலாய் பார்த்தேன் கர்வம் தொலைத்த கருணை கண்டேன் மார்பில் என் மாயவனை ஏற்றினேன்!" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களின் பேச்சில் கன்னியும் கலங்கினாள் மண்ணின் வாசனையில் மலர்ந்த அவனை பண்பின் மகள் பல்லாண்டு வாழ்கவென்றாள்!" "விழிகளின் நடனத்தில் வித்தைகள் கண்டு மொழியின் அழகில் மொத்தத்தையும் கேட்டு ஆழியின் அலையாய் ஆடி ஓய்ந்து எழில் கொழிக்கும் என்னவனுடன் சேர்ந்தேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  10. "மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை" "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும் மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில் ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள் கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள் தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க பாடினாள் கவிதை இனிமை கொடுக்க ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!" …

  11. "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........" "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி தொட்டு உறவாட கேட்டு நிக்கிறேன்டி" "மொட்டு மலருதையா மெட்டு போடுதையா பொட்டு வைக்கத் தட்டு தேடுதையா" "நாட்டுப் பாடலில் நயமாகப் பாடுகிறேன்டி காட்டு வழியிலே விறகு பொறுக்கப்போறவளே" "வாட்டும் வெயில் உனக்குப் புரியாதாடா கட்டு விறகை வந்து சுமக்கமாட்டாயோ" "வெட்டிப் பேச்சில் வெகுளி காட்டுறாயடி குட்டைப் பாவாடையில் என்னை ஆட்டுபவளே" "கேட்காத இனிமை காதில் தருபவனே வாட்டாத நிலவு நானென்று தெரியாதோ" "ஒட்டி உடையில் பெண்மை சொல்லுபவளே கட்டி அணைக்க நெஞ்சம் துடிக்குதடி" "நாட்டி வளர்த்த காதல் எல்லாம் கூட்டிக் குழைத்து உனக்குத் தரவாடா" "…

  12. தம்பரும், சுப்பரும்! **************** தம்பர்.. மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின் மாபெரும் போருக்கேன் வந்தனர். சுப்பர்.. மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான் மாபெரும் சலுகைகள் செய்ததால். தம்பர்.. சிங்கள மக்களே சீறும் சிங்கமாய் சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர். சுப்பர்.. பங்களா கட்டியே வாழும் தலைவர்கள் வறுமைக்குள் மக்களை விட்டதால். தம்பர்.. போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர் போற்றிய மக்களேன் வெறுத்தனர். சுப்பர்.. போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால். தம்பர்.. விமானத்தளம், வீதிகள்,விளக்குகள்…

  13. கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அ…

      • Thanks
      • Like
    • 6 replies
    • 419 views
  14. நாளை ஒரு காலம் வரும்-பா.உதயன் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் காலை வரும் பொழுதுகளில் கவித் துளியாய் மழை தெறிக்கும் நாளை வரும் விடுதலைக்காய் குயில் கூவி எமை எழுப்பிவைக்கும் வானமெங்கும் நிலவு வரும் எங்கள் வயல் வெளியில் பூத்திருக்கும் கனவொருநாள் எழுந்து வரும் கார்திகையில் பூ மலரும் எங்கள் தேசம் எல்லாம் விளக்கெரியும் தெருக்கள் எல்லாம் பறவை பாடும் நாளை வரும் காலம் என்று நம்பிக்கையின் ஒளி தெரியும். நாளை ஒரு காலம் வரும் மாற்றம் ஒன்றே ம…

  15. "காதல் என்னும் நினைவினிலே" "காதல் என்னும் நினைவினிலே நான் சாதல் தேடி என்னை வருத்துகிறேனே முதல் அன்பு உணர்வுமட்டுமே என்றாலுமே மோதல் வேண்டாம் என்னிடம் வாராயோ!" "காத தூரம் விலகிப் போனாலும் காமம் துறந்து தனிமை தேடினாலும் காந்தை உன்னை மனதில் பதித்து காலம் கடந்தும் காத்து இருப்பேனே!" "காதலைத் தீண்டாமல் வாழ்வும் இல்லை காரிகையை எண்ணாமல் மனிதனும் இல்லையே காதணி ஆடும் அன்னநடை சிங்காரியே காலம் தாழ்த்தாமல் அருகில் அமராயோ!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  16. "எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?" "பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை, வஞ்சகி உனக்கு ஏனடி பாசாங்கு, ஏதுக்கடி போலி வாழ்வு? மனிதனின் உண்மை தேவையை, பாசாங்கு உணராது வஞ்சகி பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!" "அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி? விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா, பேரழிவை உண்டாக்கவா மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா, வஞ்சகி? கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல, பெண்ணே!" "உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல, ஒரு துளியே, வஞ்சகி ? கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவ…

  17. "மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்" "வாலிப வயதில் தவற விட்டதை வானம் பார்த்து ஏங்கி துடித்ததை வாலைக் குமாரியை தொழுது கேட்கிறேன் வாட்டம் தராமல் வாலியம் அருள்வாயா வாழா என் வாழ்வை வாழவே!" "வண்டுக் கண்கள் விரிந்து பார்த்து கண்டும் காணாத அழகை ரசித்து குண்டுக் கன்னத்தில் முத்தம் கொடுக்க மண்ணின் வாழ்வு முழுமை பெற மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [‘வாலைக் குமரி’ : இது, பொதுவாக, கடவுளைப் பெண்ணாக வணங்கிப் போற்றும் கவிஞர்கள் கையாளும் சொற்றொடர்!]

  18. "விலைவாசி" [இரட்டைக் கிளவி] "கிசுகிசு ஒன்றைக் வானொலியில் கேட்டேன் கிறுகிறு என்று தலை சுற்றுதே! மலங்கமலங்க விழித்து சம்பளத்தைப் பார்த்தேன் வெடுவெடு என நடுக்கம் வந்ததே!" "நறநற என்று பல்லைக் கடித்தேன் குளுகுளு அறைக்கு விடை கொடுத்தேன் கரகரத்த குரலில் மனைவியைக் கூப்பிட்டேன் பரபரக்க வைக்கும் செய்தியைச் சொன்னேன்!" "கிடுகிடு என்று விலைவாசி கூடிற்று தகதக மின்னும் உன் மேனியும் நொகுநொகு என்று மாவை அரைக்கணும் மாங்குமாங்கு என தினம் உழைக்கணும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  19. ஹைக்கூ கவிதைகள்: "துயிலுமில்லம்", "தமிழர் பாரம்பரியம்" & "காட்சிக்கேற்ற" "துயிலுமில்லம்" "கார்த்திகை திங்கள் தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் துயிலும் இல்லங்கள்" அல்லது "துயிலுமில்லம் ஆலயமே தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் இன்று கார்த்திகை " [எடுத்துக்காட்டு: மாவீரர்களின் நினைவுகள் கண்களைக் கலங்க வைக்கின்றன சிதைக்கப்பட்ட கல்லறைகள் - முல்லை நிரோயன்] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................... …

  20. 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு' "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நினைவில் அகலா நெல்லுச் சோறு நிறைவு கொள்ளும் நெல்லுச் சோறு நிலா ஒளியில் நெல்லுச் சோறு !" "அத்தான் அறுவடை செய்த நெல்லு அத்தை வேகவைத்த கூட்டாஞ் சோறு அழகாய் பாத்தியால் சுமந்த சோறு அன்பாய் இருவரும் உண்ணும் சோறு!" "வேப்பமர குச்சியால் பல் விளக்கி வேக தண்ணியில் வாய் கொப்பளித்து வேட்டி தலைப்பில் வாய் தொடைத்து வேங்கை நிழலில் பரிமாறிய சோறு!" "ஓடும் நீரில் கால் நனைத்து பாடும் குயிலின் இன்னிசை ரசித்து சுடும் சோறை தயிரில் பிசைத்து கடும் காற்றில் ஊட்டிய சோறு !" …

  21. வெள்ளிக்கிழமை வேலை ---------------------------------------- இன்று வெள்ளிகிழமை, ஏன் வேலை செய்ய வேண்டும் என்று மனம் கேட்கின்றது. உண்மையைச் சொன்னால் அது ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்தும் இதே கேள்வியையே கேட்கின்றது. முன்னர் ஒரு காலத்தில், வேலை செய்ய ஆரம்பித்து இருந்த நாட்களில், நாங்கள் இவ்வளவு வயது பிந்தி வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றோம், வேறு பல நாட்டவர்கள் 21 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் என்று கவலை கூட பட்டும் இருக்கின்றோம். படித்து முடிப்போம் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்து முடிக்கவே எங்களுக்கு 26 அல்லது 27 அல்லது அதற்கு மேலும் வயதாகி விடுகின்றது. ஆனால், அந்த கூடுதலான ஐந்தாறு வருடங்களாவது நினை…

  22. "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / First poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது] "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!" "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?" "ஈடணம் விரும்பா சாதாரண மகனே …

  23. "அகிம்சையின் பிறப்பிடம் அண்ணலின் இருப்பிடம்" "அகிம்சையின் பிறப்பிடம் அண்ணலின் இருப்பிடம் அன்பின் மகிமையை அன்று கண்டோம்! அமைதியான போரில் சுதந்திரம் பெற்றதும் அனைவரும் இணைந்து மகிழ்ச்சி அடைந்தோம்!" "இந்தியா பிரிந்தது பாகிஸ்தான் உடைந்தது இன்றைய ஆட்சியில் சுதந்திரம் எங்கே ? இணைந்து வாழ்வது அறவழியின் பெருமை இருப்பை மதிப்பது மனிதத்துக்கு மதிப்பு!" "காந்தி பெருந்தகையை மனதாரக் வணங்குகிறேன் காகிதமடலில் மட்டுமே வருத்தாமை இன்று! காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டு காரணம் அறிந்து முழுமையாக பின்பற்றுவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  24. சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு த…

      • Like
    • 2 replies
    • 395 views
  25. "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.