தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
எஸ்.மகேஷ் செல்போன்கள் சென்னையில் செல்போனைப் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிய இளைஞர்களை, சினிமா படக் காட்சியைப் போல விரட்டிச் சென்று எஸ்.ஐ பிடித்தார். சென்னை மணலி புதுநகர் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் ரவி (56). இவர் நேற்று காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், ரவியின் செல்போனை மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு தலைமறைவாகினர். செல்போனைப் பறித்துக் கொண்டு இளைஞர்கள் செல்வதை அதிர்ச்சியோடு பார்த்தபடி, `திருடன்... திருடன்’ என்று ரவி சத்தம் போட்டார். திருட்டு பைக் அதைக் கேட்ட அவ்வழியாக பைக்கில் வந்த மாதவரம் காவல் நிலைய எஸ்.ஐ…
-
- 0 replies
- 371 views
-
-
தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான் மின்னம்பலம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செல…
-
- 59 replies
- 6.5k views
-
-
நிவர் புயல்: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் - இந்திய வானிலை ஆய்வு துறை பட மூலாதாரம், GETTY IMAGES வங்காள விரிகுடாவில், தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் உருவாகி இருக்கும், குறைந்த காற்றழுத்தம் (Low Pressure), அடுத்த 12 மணி நேரத்துக்குள் அழுத்தமாகவும் (depression), அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (Cyclonic Storm) உருவாகும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை சொல்லி இருக்கிறது. இது 18 கிலோமீட்டார் வேகத்தில், கரையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் சொல்கிறது இந்திய வானிலை ஆய்வுத் துறை. திங்கட்கிழமையே, தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிடும். மெல்ல மழை தீவிரமடையும். செவ்வாய்க்கிழம…
-
- 13 replies
- 1.5k views
-
-
-
பேரறிவாளன் கருணை மனு ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது கவலையளிக்கிறது – உச்சநீதிமன்றம் 26 Views பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் இந்தப் பரிந்துரை (பேரறிவாளனின் கருணை மனு) 2 ஆண்டுகளாக ஆளுநர் முன் நிலுவையில் உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது,” என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்…
-
- 38 replies
- 3.9k views
-
-
கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு இப்படி பேசுவதா? -அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா? திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகள…
-
- 0 replies
- 496 views
-
-
நாகை: 5 கோயில் பிரசாதம்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் ஆசிப்பெற்ற உதயநிதி ஸ்டாலின்! மு.இராகவன்பா.பிரசன்ன வெங்கடேஷ் உதயநிதி ஸ்டாலின் 27 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை தரிசித்து ஆசிப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின். `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை துவக்கிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது நாளாக நேற்றும் (நவ.21) கைது செய்யப்பட்டார். தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். 'இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி …
-
- 1 reply
- 1k views
-
-
அமித் ஷா-எடப்பாடி: பேசியது என்ன? மின்னம்பலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (நவம்பர் 21) கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழா முடிந்த பிறகு அவர் தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார். சில நிமிடங்களில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அந்த ஹோட்டலுக்கு சென்று அமித் ஷாவை சந்தித்தனர். ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க சென்றனர். சில நிமிடங்களில் அமித்ஷாவின் அறையிலிருந்து ஜெயக்குமார் வெளியில் வந்துவிட்டார். பிறகு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக ஓ .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரடியாக அமித்ஷாவுடன் பேசியிருக்கிறார்கள். இருவருமே முதலில் பிகார் தேர்தலில் வெற்றி பெற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தீர்வினைக் கோரி பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். கடந்த 2016ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை மீட்க மத்திய அரசு தவறியமையை கண்டித்தும் படகுகளுக்கு தீர்வினை கோரியும் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக இரு நாட்டு அரசுகளும் பேச்…
-
- 0 replies
- 606 views
-
-
உதயநிதி கைது: தலைவர்கள் கண்டனம்! மின்னம்பலம் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை தலைமைக் கழக அறிவிப்பின்படி இன்று (நவம்பர் 20) கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளையில் தொடங்கிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருக்குவளையில் பேசி முடித்து மேடையில் இருந்து கீழே இறங்கியவரை காவல் துறையினர் கைது செய்தனர். உதயநிதிகைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் திமுகவினர் சாலைமறியலில் இறங்கினர். இந்நிலையில் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை சில மணித்துளிகளில் போலீஸார் விடுவித்தனர். இதற்கிடையில் உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஏழை மருத்துவ மாணவர்களுக்கு உதவ வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயம் குறித்து பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;- “இந்தாண்டு தமிழக அரசின் உள்ஒதுக்கீடு காரணமாக, அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்களின் பெற்றோரால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயத்தை ரத்து…
-
- 0 replies
- 416 views
-
-
சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் உறவினர் கூலிப்படையை ஏவி சுட்டுக்கொலை செய்தார்களா? சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் தலில்சந்த் (வயது 74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பாய்(70). இந்த தம்பதியருக்கு ஷீத்தல்(40)என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உண்டு. மகன் ஷீத்தல் தந்தை தலில்சந்துடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். தலில்சந்தின் மகள் பிங்கி திருமணமாகி சென்னையில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி ஜெபமாலா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலை…
-
- 3 replies
- 1.3k views
-
-
சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! - அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட் துரைராஜ் குணசேகரன்ராகேஷ் பெ சென்னையில் கனமழை ( ராகேஷ் பெ ) சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரி திறந்துவிடப்பட்டால், சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இன்றளவும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். காரணம், அந்த வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு அத்தகையது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டது தான் …
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டு பட்டியலில் பிற மாநில மாணவர்களின் பெயர்கள் எவ்வாறு வந்தது? – ஸ்டாலின் கேள்வி http://athavannews.com/wp-content/uploads/2019/09/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.jpg மருத்துவ படிப்பு தொடர்பான தமிழ்நாட்டு பட்டியலில் ஏனைய மாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றது எப்படி? என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு, அதை உடனடியாக மாற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறித்த பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ பட்டியலில் 5ஆம் இடத்தில் இருக்கிறார் எனவும் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெல…
-
- 0 replies
- 798 views
-
-
தனது அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா! சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூர், அக்ரஹாரா சிறை அதிகாரி ஆர்.லதா “சிறை ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பழனி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த முதியவர் பலி - அடுத்தடுத்து கடந்த பரபரப்பு நிமிடங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நடராஜ் பழனியில் நிலம் தகராறு தொடர்பான விவகாரத்தில் தியேட்டர் உரிமையாளர் நடராஜ் சுட்டதில் காயம் அடைந்த இருவரில் ஒருவரான சுப்பிரமணி உயிரிழந்தார். துப்பாக்கி தோட்டா காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமபட்டினம் புதூரில் வள்ளுவர் என்ற திரையரங்கு இயங்கி வருகிறது. இந்தத் திரையரங்கின் உரிமையாளர் நடராஜ். இவரு…
-
- 0 replies
- 761 views
-
-
விவசாயி முதல் ஸ்டெர்லைட் விவகாரம் வரை ; எடப்பாடி Vs ஸ்டாலின்...யாருடைய வாதம் மக்களிடம் எடுபடுகிறது? த.கதிரவன் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் போராட்டத்தில் ஆரம்பித்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர், தொடர்ந்து சூடு பிடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என இருவரது வாதங்களில் யாருடைய வாதம் மக்களிடையே எடுபடுகிறது என்று விவரிக்கிறது கட்டுரை. 'பச்சைப்பொய் சொல்கிறார், உளறுகிறார், நாவடக்கம் தேவை, எத்தர், போலி விவசாயி!' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வார்த்தைகளால் வசை பாடுகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். பதிலுக்கு பழனிசாமியும் 'வேலை வெட்டி இல்லா…
-
- 0 replies
- 828 views
-
-
இலங்கையிடமிருந்து படகுகளை மீட்காவிட்டால் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்- அழகிரி எச்சரிக்கை 4 by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/11/alagiri-1.jpg இலங்கையிடமிருந்து படகுகளை மீட்காவிட்டால் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான பல கோடி ர…
-
- 1 reply
- 448 views
-
-
பள்ளிகளில் தமிழ்மொழி மீதான ஒடுக்குமுறை தொடர்ந்தால் மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை
-
- 0 replies
- 715 views
-
-
இலங்கையில் மட்டும் அல்ல தமிழகத்திலும் நெருக்கடிகள் உள்ளது” மு.அசீப் 57 Views தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009 ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம் என அறிவித்த இலங்கை அரசாங்கம், அதன் பின் இன்று வரையிலும் அதே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இன சுத்திகரிப்பு வேலைகளிலும் சத்தங்களின்றி செயற்பட்டு வருகின்றது. அதே நேரம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய கால சலுகைகளை வழங்கி, தான் ஒரு நல்லரசாக உலகின் கவனத்தில் தன்னை நிலைநிற…
-
- 0 replies
- 759 views
-
-
சகாயம் IAS-ஐ வைத்து RSS போடும் பெரும் திட்டம்
-
- 0 replies
- 926 views
-
-
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ‘அரசாங்கத்திடம் கூறியதையே மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்’ துணைவேந்தர் சூரப்பா பேட்டி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தை பெறுவதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. அதுதொடர்பாக சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக எழுந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறி…
-
- 4 replies
- 619 views
-
-
இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறப்பு இந்தியாவிலேயே முதன் முறையாக திருச்சியில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா முன்னிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையத்தை திருச்சி, திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆனந்த், இந்தியாவில் 11 இடங்களில் குழந்தைகளுக்கான காவல் நிலையம் திறக்க உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் தமிழகம் 7வது இடத்தில் இருப்பதாக தெரிவித்த அவர், குழந்தைகள் காவல் நிலையங்கள் …
-
- 0 replies
- 400 views
-
-
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக அறிவித்தார் சந்திரசேகர்- விஜய் விசேட அறிக்கை விஜய் மக்கள் இயக்கமானது ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாக மாற்றப்படுவதாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்துள்ளார். அத்துடன், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் தந்தையின் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து நடிகர் விஜய் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், “இன்று எனது தந்தை ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். இந்நிலையில், அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் ந…
-
- 18 replies
- 2.5k views
-
-
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளை பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய குந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது 16 வயது சிறார் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், சிறுமிகள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இட…
-
- 0 replies
- 585 views
-