தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் தமிழ் மொழி உள்ளடக்கம் – மத்திய அரசு அறிவிப்பு! தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்திய வரலாறு மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில்…
-
- 0 replies
- 661 views
-
-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: சாமி தரிசனம் செய்ய தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி தூத்துக்குடி கலெக்டர் தகவல் தூத்துக்குடி,இதுகுறித்து அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நாட்டில் மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்படும் விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். முதல்நாள் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முக்கியமானது ஆகும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முதல்- அமைச்சர் பல்வேறு தளர்வுகள் அறிவித்து உள்ளார். அதில் கோவில்…
-
- 0 replies
- 345 views
-
-
மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு தஞ்சாவூர்:தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் இவை செயலாற்றி வருகின்றன. அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. இதில் பல குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை க…
-
- 0 replies
- 909 views
-
-
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி- 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு சென்னை, அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7 (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார். இதனால், கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் …
-
- 6 replies
- 989 views
-
-
சேலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை சமர்பித்தும், விண்ணப்பத்தில் முறைகேடுகள் செய்தும் நிதி உதவித் தொகையை பெற்றுள்ளதாகவும், இதில் பெரும்பாலானவை கொரோனா பொதுமுடக்க காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டவை எனவும் கூறுகிறார் இவர். "கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்னர், இத்திட்டத்தில் உதவி பெற விரும்பும் விவசாயிகள் உரிய நில ஆவணங்களை கிராம நிர்வாக அதிகாரியிடம் சமர்பித்து சான்று வாங்க வேண்டும். பின்னர், விவசாயியின் விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் துறைக்கு அனுப்பி ஆவணங்கள் பரிசோதிக்கப்படும். உரிய பரிசோதனைகளுக்கு பின் மாவட்ட வேளாண்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்திற்கு பரிந்துரைக்கப்படும். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இவை அனைத்தும் இணைய…
-
- 0 replies
- 652 views
-
-
நிதிநிறுவன கடனுக்கு வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை தாடிக்கொம்பு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது இல்லை. அதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனினும், கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் மக்கள் மனு கொடுக்க வருகின்றனர். இதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு, ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய கையில் மனுக்கள் அடங்கிய கவர் இருந்தது. கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்த போது, அந்த நபர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே …
-
- 0 replies
- 698 views
-
-
நாளை மறுதினம் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – பழனிசாமியுடன் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து அ.தி.மு.க.வின் சில மூத்த அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க.வில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலை…
-
- 2 replies
- 688 views
-
-
5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Tinnakorn Jorruang படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் …
-
- 6 replies
- 1.2k views
-
-
உபி பெண்ணுக்கு நீதி கேட்டு பேரணி: கனிமொழி கைது! மின்னம்பலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 19 வயது பெண்ணுக்கு நீதி கேட்டு, சென்னையில் திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநிலத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுமட்டுமின்றி பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் கூட காட்டாமல் போலீசாரே தகனம் செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு அப்பெண் வன்கொடுமையே செய்யப்படவில்லை என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரிய வந்ததாக போலீசார் கூறு…
-
- 1 reply
- 919 views
-
-
தமிழக மாணவர்களுக்கு இந்தியில் புதிர் போட்டி! மின்னம்பலம் தமிழக மாணவர்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் புதிர்போட்டி நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் புதிர் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தமிழக அரசு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியது. அதில், “இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி இரவு 12 மணி வரை போட்டி நடக்கிறது. 3 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் போட்டி நடைபெறும். காந்…
-
- 0 replies
- 563 views
-
-
மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ், கடந்த 25ஆம் திகதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஸ்டாலின் மற்றும் அண்ணா அறிவாலய தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஸ்டாலினுக்கும் அண்ணா அறிவாலய நிர்வாகிகள் 7 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. http://athavannews.com/மு-க-ஸ்டாலினு…
-
- 3 replies
- 684 views
- 1 follower
-
-
திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழை வளர்த்த இலட்சணம் இது தான்.!
-
- 2 replies
- 1.2k views
-
-
திருச்சி: காவிசாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு! மின்னம்பலம் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவதும், காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் கோவை, திருக்கோவிலூர், கடந்த 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தேளூரில் அமைந்திருக்கும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சினாலும் அது தொடர்கிறது. திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலை மீத…
-
- 0 replies
- 665 views
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: முதன்முறையாக வெளிவந்த வரலாற்று உண்மைகள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக் கொண்டு மதுரை பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு குறித்த ஆய்வினை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுகொண்டதற்கு அமைவாக கடந்த ஓராண்டாக இப்பணி நடந்துவந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 721 views
-
-
திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுமதிக்கக் கோரிய இந்திய திரைப்பட இயக்குநர் கௌதமன் கைது தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தற்போது தடை விதித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வை நடத்தக் கோரி இந்தியாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு மனு அளிக்க சென்ற போது இயக்குநரும், நடிகருமான கௌதமன் அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 32 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வை இந்த ஆண்டு நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான கௌதமன் இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மனு கையளிக்கச் சென்றார். பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியுடன் சென்ற அவர், உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் க…
-
- 0 replies
- 576 views
-
-
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்! மின்னம்பலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்தைக் கருத்தில் கொண்டும் 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணையிலிருந்து வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது பேரறிவாளனின் பரோல் மனுவை நிராகரித்து விட்டதாகத் தமிழக அரசும், சிறைத் துறை…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழர் பண்பாட்டை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் தமிழ் மொழி, பண்பாடு ஆகியவற்றை இணைக்காமல் இந்திய வரலாறு முழுமையடையாது என்றும் தமிழக அறிஞர்களைக் இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவில் சேர்க்காதது வியப்பளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, குறித்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில், இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி, உலகின் ஏனைய பண்பாடுகளுடன் அதற்குள்ள தொடர்பு…
-
- 0 replies
- 494 views
-
-
தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்! கழுகாரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு... ``ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்துக்குச் செல்கிறேன்... வாட்ஸ்அப்பைப் பார்க்கவும்’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். `முதல்வர்’ சென்டிமென்ட்! தொகுதி மாறும் மு.க.ஸ்டாலின்... `வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார்’ என்பதே தி.மு.க-வில் ஹாட் டாபிக். ``கட்சிக்காரருக்காக விட்டுக்கொடுக்கிறாரா?’’ என்று உடன்பிறப்புகளிடம் கேட்டால், `ம்ஹூம்... அவர் புள்ளை உதயநிதி ஈஸியா ஜெயிக்கணும்கிறதுக்காக கொளத்தூர் தொகுதியை அவ…
-
- 0 replies
- 672 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் சமூக ஊடகமான ஃபேஸ்புக் வழியாக காதலிப்பதாக கூறி, ஆண்களை ஏமாற்றி, அவர்களின் அந்தரங்கப் படங்களை வெளியிடாமல் இருக்க பணம் பறிக்கும் கும்பலைத் தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர். விவாகரத்தான ஆண்கள் மற்றும் பெண்கள், கைம்பெண்கள் போன்றவர்களை குறிவைத்து ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரங்கள் இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவேண்டும் என சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். போலி ஃபேஸ்புக் கணக்கு வழியாகத் தொடர்பு கொள்ளும் நபர் படித்த, நல்ல சம்பளத்துடன் இருக்கும் தனி நபர்களை குறிவைப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். பிபிசி த…
-
- 0 replies
- 811 views
-
-
சி.ஐ.ஏ., முத்தலாக், வேளாண் சட்டங்கள்'... தொடரும் இரட்டை நிலைப்பாடு-அ.தி.மு.க-வின் அரசியல் தந்திரமா? மத்திய பா.ஜ.க அரசின் சட்டத் திருத்தங்களை மக்களவையில் ஆதரிக்கும் அ.தி.மு.க., மாநிலங்களவையில் அதே சட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தொடர்கதையாகிவருகிறது. இதன் பின்னணியிலுள்ள அரசியல் வியூகத்தை வெளிப்படுத்துகிறது இந்தக் கட்டுரை. `மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய விவசாயச் சட்டங்களுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கிறதா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறதா?' என்ற சிக்கலான கேள்விக்கு விடையைக் கண்டறிவதுதான் தமிழக அரசியலின் ஆகப்பெரும் விவாதமாக மாறிவருகிறது. அண்மையில் மத்திய பா.ஜ.க அரசு, புதிய வேளாண் சட்டங்களை மக்களவையில் நிறைவேற்றியது. `இந்த வேளாண் சட்டங்கள் ஏழை விவசாயிகளி…
-
- 0 replies
- 489 views
-
-
நீட் உண்மைகள் Vs சாணக்கியப் பொய்கள்
-
- 0 replies
- 509 views
-
-
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது என்றும் நடப்பாண்டில் கடன் சுமையின் உயர்வை தவிர்க்க முடியாது என்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட்டிருந்த குழுவின் தலைவரான ரங்கராஜன் தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரான ரங்கராஜன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்ட…
-
- 0 replies
- 788 views
-
-
இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென் இந்தியர் இடம்பெறாதது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 18 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், HINDUSTAN TIMES கடந்த 12 ஆயிரம் வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் தென்னிந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்டவர்களோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில், இந்தியக் கலாசாரத்தின் துவக்கம் மற்றும் பரிணாமம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. …
-
- 0 replies
- 535 views
-
-
ம் இந்தியா இலங்கை விளையாட்டு அறிவியல் சினிமா வீடியோ மத்திய பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 90% ஒதுக்கீடு கோரிய திமுக எம்.பி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திருச்சி சிவா,எம்.பி மத்திய அரசின் பல்வேறு துறை நியமனங்களில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதால், அந்தந்த மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே 90 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்ட…
-
- 0 replies
- 533 views
-
-
மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம்?! - உறவினர்கள் போராட்டம் நேற்று முந்தினம் இரவு ரமேஷை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் காலை வரை அவர் வீடு வராததால், குடும்பத்தினர் காவல் நிலையம் சென்று கேட்டபோது ரமேஷை அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர். காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்மமமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தால் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் பொதுமக்கள் காவல்துறையினரைக் கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அனைக்கரைப்பட்…
-
- 0 replies
- 727 views
-