தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிக…
-
- 4 replies
- 976 views
-
-
'ஈஷா யோகா மையத்தில் இருக்கும் மகள்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்; இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என பட்டிமன்றம் வைக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மகள்களை மீட்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ்- சத்திய ஜோதி தம்பதியின் மகள்கள் கீதா (34), லதா (31). இவர்களது தந்தை காமராஜ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மகள்கள் இரண்டு பேரும் ஈஷா யோகா மையத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக தனது மகள்கள் இரண்டு பேரையும் சிறை வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி, சென…
-
- 0 replies
- 479 views
-
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு Mathivanan MaranUpdated: Tuesday, January 28, 2025, 15:20 [IST] சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலை…
-
-
- 30 replies
- 2.7k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு,திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 ஏப்ரல் 2025, 03:17 GMT இன்றைய (08/04/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஏப்ரல் 8ம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக வலைத்தளங்களில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாக விம…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
'சுவாதி கொலைக்கு நான் மட்டும் காரணமல்ல!’ -புழல் சிறையில் குமுறிய ராம்குமார் சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. 'நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கின்றன' என புழல் சிறையில் குமுறிக் கொண்டிருக்கிறாராம் ராம்குமார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலை வெட்டிக் கொல்லப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராம்குமாரிடம், நெல்லை மாவட்ட மாஜிஸ்திரேட் ராமதாஸ், ரகசிய வாக்குமூலம் வாங்கினார். 'என்ன…
-
- 0 replies
- 847 views
-
-
'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...!'- ராம்குமார் பரபரப்பு தகவல்! சென்னை: சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது…
-
- 1 reply
- 672 views
-
-
'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில் மென்பொறியாளர் சுவாதியை, ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, அவர் கூறுகையில், "கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். அங்கிருந்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவாதி…
-
- 1 reply
- 898 views
-
-
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமியை தமிழக அரசு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எத்தகைய துரோகத்தை தமிழினத்துக்கு இழைத்ததோ அதற்கு சற்றும் குறைவில்லை என்கிற வகையில்தான் தற்போதைய பா.ஜ.க அரசும் செயல்பட்டு வருகிறது. அண்மையில் பா.ஜ.கவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழு இலங்கைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழு…
-
- 2 replies
- 527 views
-
-
சென்னை: கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இன்னும் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்கிய நாள் முதல் காலையிலேய அதிக வெப்பத்தை உணர முடிகிறது. இந்த ஆண்டு வெப்பம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது போல் பல நகரங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று நண்பகல் 12 மணி நேர நிலவரப்படி சென்னையில் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகப்பட்சமாக இன்று திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது. மேற்கில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் , வடக்கு மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் வெப்பம் 2 முதல் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்ப…
-
- 0 replies
- 421 views
-
-
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் போராடிவருகின்றனர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சுப்பைய்யா ஆகிய இரண்டு மாணவர்களும் காவல் துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் மாணவர்கள் கோரிவந்தனர். இந்த நிலையில், காவல்துறை வசம் இருந்த மாணவர்கள் காலையில் விடுவிக்கப்பட்டனர். இருந்தபோதும் மாணவர்கள் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்துவந்…
-
- 0 replies
- 502 views
-
-
தமிழக- இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் வரும் 20-ம் திகதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அந்தக் கூட்டம் சாத்தியப்படாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 179 பேரை விடுதலை செய்யவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதேநேரம் இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 275 பேரையும் இலங்கை அரசு ஓரிரு நாட்களில் விடுவிக்கும் என்றும் ஜெயலலிதா நேற்றிரவு அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், தமிழகத்தில் மட்டுமன்றி ஆந்திராவிலும் இலங்கை மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அமைச்ச…
-
- 0 replies
- 335 views
-
-
'சோதனை என்ற பெயரில்...' - சிறையில் உறவுகளிடம் கலங்கிய சசிகலா #VikatanExclusive டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதி அஞ்சலியில் சசிகலா பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுத்ததால், அவர் சோகத்தில் உள்ளார். மேலும், சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் சிறைத்துறை அதிகாரிகளின் கெடுபிடிகளால், சசிகலா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்ட சதி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி, சந்தானலட்சுமி. இவரின் மகளைத்தான் டி.டி.வி.தினகரன் திருமணம் செய்துள்ளார். சந்தானலட்சுமி, நேற்று சென்னையில் மரணமடைந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி, தஞ்சாவூரில் இன்று நடைபெறுகிறது. பரோலில் சசிகலா செல்ல சிறைத்துறையிடம் அனுமத…
-
- 0 replies
- 1k views
-
-
'ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றி ஆதாரங்கள் திரட்டுகிறோம்' - விடாது 'பீட்டா' பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டப் பிறகு நடந்த போட்டிகளில் 'மிருகவதை பற்றி ஆதாரங்களைத் திரட்டி வருவதாக' தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்த நிலையில், இந்தாண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டங்களால் சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தமிழகமெங்கும் நடந்தது. தற்போது பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, 'இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகமாக மிருகவதை நடந்தது. மிருகவதை பற்றிய …
-
- 0 replies
- 210 views
-
-
'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறி, அரசியல் கட்சி துவக்கியுள்ளவர்கள், மாணவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, உண்மையான போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். தங்களுக்கு கட்சி துவக்கும் திட்டம் எதுவும் இல்லை என, வெளிப்படுத்திய அவர்கள், புதிய கட்சி துவக்கியோரின் பின்னணி குறித்தும், சந்தேகம் கிளப்பி உள்ளனர். தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஜன., 17ல், சென்னை, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் துவக்கினர். முதலில், ௫௦ பேருடன் துவங்கிய போராட்டம், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவால், பெரிய அளவிலான போராட்டமாக மாறியது. அரசியல் கட்சித் தலைவர்களை …
-
- 0 replies
- 300 views
-
-
'ஜூன் மாதம் முதல் ஆபரேஷன் தமிழ்நாடு!’ - அ.தி.மு.க-வை அலறவிடும் மோடி வியூகம்! உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில், இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டை நோக்கி பா.ஜ.க-வின் கவனம் திரும்பும். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலைச் சற்று தள்ளி வைத்திருந்தார் பிரதமர். இனி, வரப்போகும் நாட்கள் அ.தி.மு.க-வுக்கு மிகக் கடினமானதாக இருக்கும்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதான கட்சியின் எம்பி அவர். மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரை நேற்று சந்தித்தார். 'தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.க அணியில் சேர்ந்து செயல்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏத…
-
- 0 replies
- 765 views
-
-
'ஜெயலலிதா ஆக நினைத்து வளர்மதி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!' சசிகலாவுக்கு தமிழக பெண்களின் சார்பாக ஒரு கடிதம்! ''தலைவரு இறந்தபோது... அம்மாவ என்ன பாடு படுத்துனாங்க? ஒரு விஷயம் முக்கியமா கவனிக்கணும். ஒரு பெண்ணு... பெண்ணு எப்படி கட்சியில வந்து வர்றது... அப்படீங்கிறத வந்து காமிச்சாங்க. இப்பயும் அதே தோரணதான். அன்னைக்கு எந்தக் கூட்டம் அம்மாவ எதிர்த்துச்சோ... அதே கூட்டம்தான் இன்னைக்கும் செய்யுது'' ஞாயிறு இரவு கூவத்தூரில் நீங்கள் பேசிய பேச்சு இது சசிகலா. பொட்டு, பிளவுஸில் தொடங்கி உங்கள் பேச்சு வரை அனைத்திலும் உங்களை நீங்கள் ஜெயலலிதாவுக்கான மாற்றாக நிறுவத் துடிக்கிறீர்கள். 30 ஆண்டுகளாக தமிழக அரசியலி…
-
- 0 replies
- 289 views
-
-
'ஜெயலலிதா உயில் என்னிடம்தான் உள்ளது' : தீபக் பரபர தகவல்..! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை துவங்கி தனி வழியில் சென்றார். தீபாவின் சகோதரர் தீபக் சசிகலா அணிக்குதான் ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவர் தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்தார். பின், பன்னீர்செல்வம், சசிகலா அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தீபக்கின் புதிய கருத்து ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீபக் கூறுகையில், "என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என…
-
- 0 replies
- 406 views
-
-
படத்தின் காப்புரிமை tndipr இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் நலத் திட்டங்களுக்காக 82,673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார். இன்று தாக்கல்செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: * தமிழகத்தின் தனி நபர் வருவாய் ஆண்டுக்கு 1,42, 267 ர…
-
- 0 replies
- 345 views
-
-
'ஜெயலலிதா பெயரில் மரம் நடுவிழா!' அரசு விளம்பரத்தின் சர்ச்சை கடந்த ஆண்டு இதே நாள் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளையொட்டி, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்காக அரசு சார்பில் நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், வனத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும் இந்த விளம்பரத்தை கொடுத்திருந்தார்கள். "முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மரம் நடுவது வரவேற்க வேண்டியது தான். ஆனால் அதற்காக அரசு செலவில் நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்பதை ஏற்க முடியாது. தலைமை செயலாளரின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது" என அப்போதே சர்ச்சை எழுந்தது. ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க.வும்…
-
- 0 replies
- 299 views
-
-
'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' -அப்போலோ தலைவர் வேதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே.... ''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக…
-
- 0 replies
- 388 views
-
-
'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, தமிழகத்துக்கு எப்போது எல்லாம் வருகைப்புரிந்தார் என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. நெல்லை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ. போராளியுமான பிரம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் தொடர்பாக பல ஆர்.டி.ஐ. கேள்விகளை கேட்டுள்ளார். கடந்த 19…
-
- 0 replies
- 639 views
-
-
UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவ…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
'டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து இந்தியாவிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் ம…
-
- 3 replies
- 714 views
-
-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5.40% வாக்குகளை 'தனி ஒருவனாக' பெற்று நாம் தமிழர் கட்சி அசத்தியுள்ளது. ஊடக செல்வாக்கு, முன்னணித் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் என அசுர பலத்துடன் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தன. மேலும், தேர்தல் பிரச்சாரக் களத்தில் அமமுகவும், மக்கள் நீதி மய்யமும் செல்வாக்கைப் பெற்றிருந்தன. அவர்களுக்கான பிரச்சார வியூகங்களை முன்னணி ஆலோசகர்கள் வழங்கினர். அதே நேரத்தில், எந்த விதமான செல்வாக்கும், பிரச்சார வியூகமும் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டது நாம் தமிழர் கட்சி. பிரம்மாண்ட விளம்பரம் ஏதும் இல்லாமல், 'விவசாயி' சின்னம், பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசெல்லப்பட்டது. சீமான் என்கிற ஒற…
-
- 19 replies
- 1.3k views
-
-
மிழக பா.ஜ.க-வின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல் கடந்த சில வாரங்களாக தீயாக பரவியது. இந்தசூழலில்தான் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னணி என்ன? கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது, பா.ஜ.க. முடிவில் அந்த கட்சிக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. பிறகு அ.தி.மு.க தலைவர்கள் குறித்து அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்ததால் தே.ஜ கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது. இதனால் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டிய …
-
-
- 8 replies
- 803 views
- 1 follower
-