தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
38 நிமிடங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை andriano_cz / GETTY IMAGES Image caption சித்தரிக்கும் படம் கோவையில் திருமணம் செய்து கொள்ள தாமதித்ததால் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீரணத்தம் பகுதிக்கு அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்த நந்தினி (வயது 21) அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இவரும், சங்கனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21) என்பவரும் பள்ளிக்காலம் முதல் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறு…
-
- 0 replies
- 523 views
-
-
ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் ந…
-
- 0 replies
- 362 views
-
-
ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை விலகியதற்கு இராமதாஸ் கடும் கண்டனம்! by : Krushnamoorthy Dushanthini போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் இடம்பெற்ற போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அறிவித்திருக்கிறது. போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.…
-
- 0 replies
- 502 views
-
-
டெல்லியைப் போன்று சென்னையிலும் வன்முறை வெடிக்கலாம் – எச்.ராஜா! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தூண்டிவிடுவதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த எச்.ராஜா குடியுரிமை சட்டத்தினால் இந்தியாவில் வாழும் எவருக்குமே எவ்வித பாதிப்பும் இல்லை என பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இதனை மீறியும் சிறுபான்மை இன மக்களைப் போராடுவதற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தூண்டி விடுகின்றன என அவர் குற்றம் சாட்டினார். சென்னை, வண்ணாரப் பேட்டையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில், டெல்லியைப் போன்று அங்கு வன்ம…
-
- 1 reply
- 487 views
-
-
இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு சென்னை: இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீடிப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் திகதி காலமானார். அவரது மரணம் குறித்து சர்ச்சை எழுந்ததால் விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துத் தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த ஆணையம், 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்த…
-
- 0 replies
- 475 views
-
-
மகஇகவில் இருந்து மருதையன் விலகல்! மின்னம்பலம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், புதிய கலாச்சாரம் இதழின் ஆசிரியராகவும் இருந்த மருதையன் இயக்கம் சம்பந்தப்பட்ட தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (பிப்ரவரி 24) அறிவித்திருக்கிறார். கடந்த 35 ஆண்டுகளாக ம.க.இ.க வின் செயலராக தமிழகத்தின் அரசியல் சக்திகள், வாசகர்கள், ஊடகத்தினர் மற்றும் மக்களிடையே அறிமுகமாகியிருக்கின்ற மருதையனுடன், மாநில செயற்குழு உறுப்பினரான நாதனும் தனது விலகலை அறிவித்துள்ளார். 24.2.2020 தேதியன்று கூட்டப்பட்ட ம.க.இ.க. மாநில செயற்குழுவின் அவசரக்கூட்டத்தில் மருதையனும், நாதனும் தமது விலகலை முன் வைத்தார்கள். ஆனால்,மாநில செயற்குழு தோழர்கள் அதனை ஒருமனதாக நிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வருமான வரி விவகாரம்: எங்க சசிகலாவுக்கு ஒரு நீதி? உங்க ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?- சீமான் வருமான வரித்துறை விவகாரத்தில் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதி ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நேற்று ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: குடியுரிமை சான்றிதழ்களை நாம் தமிழர் கட்சியினர் எவரும் தர மாட்டோம். எங்களை முகாம்களில் அடைத்தாலும் அதை ஏற்போம். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுகின்றனர். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; நாளை நம…
-
- 0 replies
- 415 views
-
-
பூணூல் போட்டால் மட்டுமே குடியுரிமை கிடைக்கும் | விளாசிய திருமுருகன் காந்தி
-
- 0 replies
- 489 views
-
-
யாரும் அறியாத விஜய்யின் அரசியல் நகர்வுகள் - ரவீந்திரன் துரைசாமி பேட்டி
-
- 0 replies
- 519 views
-
-
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைவில்- முதலமைச்சர் அறிவிப்பு தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஆரம்பித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார். திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் சிவந்தி ஆதித்தனாருக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த முதலமைச்சர், அங்கு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் 52 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்ட…
-
- 0 replies
- 376 views
-
-
பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்! பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக மாணவிகளை படம் பிடித்துள்ளர் உதவி பேராசிரியர்.. இந்தியாவிலேயே சிறந்த பல்கலை. என பெயர் வாங்கும் சென்னை ஐஐடியில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது! கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி அவர்.. பிஎச்டி படித்து வருகிறார்... விண்வெளி பொறியியல் துறை தொடர்பான பயிற்சிக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். இதே துறையில் சுபம் பேனர்ஜீ என்பவர் திட்ட அலுவலராக வேலை பார்க்கிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் தனது டிபார்ட்மென்ட் அருகே உள்ள பாத்ரூமுக்கு சென்றார் மாணவி.பிறகு யதேச்சையாக அங்கிருந்த சுவற்றை பார்த்தார்.. அப்போதுதான் அதில் சின்ன ஓட்டை இருப்ப…
-
- 2 replies
- 997 views
-
-
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்ததையடுத்து, தலைமை ஆசிரியை குமரேஸ்வரி செவ்வாய்கிழமை முதல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தும் சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கிறார் சிறுமியின் தாய் மகேஸ்வரி. நாங்கள் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனது கணவர் ஓர் மாற்றுத்திறனாளி. நான் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது மூத்த மகள் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை A Pavendhan காமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது. யானை, புலி உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் போலவே, பட்டாம்பூச்சிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிதாக கண்டறியப்பட்ட பட்டாம்பூச்சி குறித்த விழிப்புணர்வை சேலம் மாவட்ட வனத்துறையோடு சேர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற்படுத்திவருகின்றனர். இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படும் கவனத்தில் பாதியளவு கூட கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மீது செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஒடிஷாவில் தொடங்கி, ஆந்திர பிரதேசம், தமிழக…
-
- 0 replies
- 507 views
-
-
ஒருசில குறிப்பிட்ட கடைகளில் தயாராகும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலப்படம் செய்வதாகவும் இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்பதை கூட அறியாமல் பலர் இதனை ஃபார்வேர்டு செய்வதால் சில சமயம் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது சமீபத்தில் கூட சிஏஏ போராட்டத்தின்போது இயற்கையாக மரணம் அடைந்த ஒருவரை போராட்டத்தின் காரணமாக மரணமடைந்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. அதேபோல் திமுக எம்பி செந்தில்கு…
-
- 0 replies
- 505 views
-
-
சென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண…
-
- 2 replies
- 834 views
-
-
ஜெயலலிதாவின் பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு February 19, 2020 தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24-ம் திகதிமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்கான கீழ்வரும் ஐந்து புதிய திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்த உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். * அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள்…
-
- 0 replies
- 800 views
-
-
திருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து,…
-
- 0 replies
- 462 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் வரவு செலவு திட்டத்தின் மீது நேற்று (புதன்கிழமை) விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற விவாதம் வருமாறு… துரைமுருகன் – ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயற்படுகிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. கட்சிக்காரர் மாட்டிக்கொண்ட வ…
-
- 0 replies
- 278 views
-
-
ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க முடியும்- விஜயதாரணி ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்துவரும் 7 பேரின் விடுதலை தொடர்பாக இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாமென, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினருமான விஜயதாரணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் நேற்றைய (திங்கட்கிழமை) அமர்வில் உரையாற்றிய போதே, அவர் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பான வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் உயிரிழந்த ரா…
-
- 0 replies
- 510 views
-
-
செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப்படுத்துகின்றன, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் மாநில முதல்வர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்…
-
- 0 replies
- 383 views
-
-
1996ல் ரஜினியின் வாய்ஸ் தேர்தலில் எதிரொலித்தது போன்று 2021 தேர்தலில் விஜய் வாய்ஸ் எதிரொலிக்குமா?
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை: சட்டசபையில் கருத்து முரண்பாடு – தி.மு.க. வெளிநடப்பு by : Dhackshala இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளையடுத்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டு வந்தார். ‘தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். இதன்மூலம், பேரவைய…
-
- 0 replies
- 516 views
-
-
தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அழைப்பாணை! ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்த கருத்துகள் தொடர்பாக 3 ஆவது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 3 வழக்குகளிலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆஜராக முதன்மை அமர்வு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த மூன்று அவதூறு வழக்குகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதல் இரண்டு அவதூறு வழக்குகளில் மார்ச் 4 ஆம் திகதி அன்றும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி கருத்து தெரிவித்தது தொடர்பான 3 ஆவது அவதூறு வழக்கு பெப்ரவரி 24 ஆம் திகதிய…
-
- 0 replies
- 324 views
-
-
அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா? எம். காசிநாதன் / 2020 பெப்ரவரி 17 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது. முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல…
-
- 0 replies
- 732 views
-