Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே... வானதி சீனிவாசனுக்கு இப்பவே குவியும் வாழ்த்துகள்! தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே வாழ்த்துகள் என அக்கட்சி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கு ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனால் அடுத்த தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு வானதி சீனிவாசனுக்கா? என்கிற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் போட்டியிட்டு அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தவர் தமிழிசை.ஆனால் தமிழகத்தில் பாஜக என்கிற கட்சி இருப்பதை ஊடக பேட்டிகள் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்தி வந்தவர் தமிழிசை. உட்கட்சியில் மிகக் கடும் எதிர்ப்புகள் இருந்த …

  2. தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்.. அதில் 2 பேருக்கு அதிக வாயப்பு! தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் புதிய பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. புதிய தலைவராக நியமிக்கப்பட பொன் ராதா கிருஷ்ணன் அல்லது எச். ராஜா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டாரத்தில்.சொல்கிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் பதவி ஏற்றார். இதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டார்.கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் பணியாற்றினார். தமிழிசை பாஜக தலைவராக மாறிய பின்னர் தமிழகத்தில் பாஜக எந…

  3. பார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது! சென்னை: கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. யார்னு தெரியுதா.. நம்ம முதல்வரேதான்.. லண்டனில் புது கெட்டப்பில் கலக்கி வருகிறார்! பதவி ஏற்றது முதலே தான் ஒரு விவசாயி என்பதை ஆணித்தரமாக சொல்லி வருபவர்தான் எடப்பாடி பழனிசாமி. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் சரி, யாருடைய கல்யாணத்துக்கு போனாலும் சரி.. நானும் விவசாயிதான். இன்று வரை விவசாயம் செய்து வருகிறேன் என்பதை மறக்காமல் பதிவு செய்துவிட்டு வருவார் எடப்பாடி பழனிசாமி. அதனால் ஒரு விவசாயி என்ற பிம்பமே எடப்பாடியார் மீது நமக்கு விழுந்து விட்டது. அது மட்டுமில்லை.. இவர் மிக மிக எளிமையான முதல்வரும்கூட! ஜோரா இருக்கு உண்மையிலேயே, எடப்…

  4. ஈழப்போரில் சரணடைந்த போர் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் – சீமான் ஈழப்போரில் சரணடைந்த போர் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இதற்கு சர்வதேச விசாரணைகள் தேவை எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். உலக காணாமல்போனோர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி இலங்கையில் ஈழப்போரின் போது காணாமல்போனவர்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2009ஆம் ஆண்டு ஈழப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இலங்கையில் தற்போது போராடி வருகிறார்கள். போரில் சரணடைந்தவர்கள் யார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை இலங்கை அரசு இன்னும் வெளியிடவில்…

    • 1 reply
    • 724 views
  5. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாவில் உள்ள 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10,500 சதுர கி.மீ. பரப்பளவிலான மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் உயிர்கோளாக விளங்குகிறது. இதில் கீழக்கரையில் இருந்து பூவரசன்பட்டி தீவு, தூத்துக்குடியில் இருந்த விலங்குசலி தீவு, ஆகியவை ஏற்கனவே இயற்கை பேரிடர்களால் கடலில் மூழ்கிவிட்டன.இந்நிலையில் தூத்துக்குடியில் 4 தீவுகள், வேப்பாரில் 3 தீவுகள், கீழக்கரை மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள 14 என மொத்தம் 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மன்னார்வளைகுடாவில் கடந்த 50 …

    • 0 replies
    • 503 views
  6. தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்! தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதேபோல் தி.மு.கவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் தி.மு.க நெசவாளர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் வி.வி.கலைராஜன் ஆகியோர் அண்மையில் அ.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தி-மு-கவின்-கொள்கை-பரப்பு/

  7. இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது. அதே போல, இந்த…

  8. 'பகுத்தறிவாளர்’ கருணாநிதிக்கே கோவிலா??... அதிருப்தியில் திமுக சீனியர்கள். ! சென்னை: வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராகவே வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சிகள் குறித்து திமுக தலைமை மவுனமாக இருந்து வருவது அக்கட்சியில் மூத்த தலைவர்களை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளதாம்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கை பிடித்து பகுத்தறிவாளராக வாழ்ந்தவர் கருணாநிதி. தேர்தல் அரசியல் களத்தில் இருந்தபோதும் தாம் பெரியாரின் கொள்கை வழிவந்தவர் என்பதை தமது பேச்சுகள் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தவர்.பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் எனப்படும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்தை நிறைவேற்றியவர். இடஒதுக்கீட்டை பல்வேறு களமுனைகளில் ஆழமாக செயல்படுத்திய…

  9. உங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்! வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலை தமிழில் பேசும்படி நீதிபதி அறிவுறுத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் விஷாலுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்…

  10. சேலம்: சேலத்தில் பாஜகவினரால் தாக்கப்பட்டது குறித்து பியூஷ் மானுஷ் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவினர் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக பியூஷ் மானுஷ் குற்றசாட்டு கூறியுள்ளார். காஷ்மீர் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் கேள்வி எழுப்ப பாஜக அலுவலகம் சென்றபோது தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521837 சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் சென்னை : சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக வன்முறை அரசியலை செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வட மாநிலங்களை போல் தமிழகத்…

    • 0 replies
    • 545 views
  11. இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 5வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும், உளர் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறு…

    • 0 replies
    • 392 views
  12. நாசாவுக்கு செல்லும் 10ம் வகுப்பு தமிழக மாணவி August 28, 2019 தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல தேர்வாகியுள்ளார். ‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே. தான்யா தஸ்னம், சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதல் இடம் பிடித்த ஜே. தான்யா தஸ்னம் என்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி எதிர்வரும் ஒக்ட…

  13. எங்களுக்கு எதிராக ஓர் ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா என அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சவால் விடுத்திருக்கிறார்கள். P Chidambaram ( Twitter ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணையை ப.சிதம்பரம் எதிர்கொண்டு வருகிறார். சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக முன்ஜாமீன் பெற்றுவந்த சிதம்பரத்துக்குக் கடந்த 20-ம் தேதி முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ஜோர்பார்க் இல்லத்தின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கான 5 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், மேலு…

  14. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகள் தொடர்பான 10 தகவல்கள் இதோ... 1. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது. 2. FAME INDIA - 2 திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. …

  15. சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை August 27, 2019 சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமார் என்பவருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ஜெக்ஷீர் தான் என்பவுக்குமிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன்போது ஆத்திரம் அடைந்த ஜெக்ஷீர் தான்; இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவில்தாரின் அறைக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை#சென்னை #ராணுவ அதிகாரி #சுட்டுக்கொலை http://globalt…

  16. இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் கைதான தமிழக பெண்ணுக்கு விளக்கமறியல்! இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட தமிழக பெண் உள்ளிட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் நேற்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ராமநாதபுரம் – உச்சிப்புளி அருகே உள்ள கிராமத்தில் வள்ளி (42) என்ற பெண் நேற்…

  17. அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் – கமல்ஹாசன் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான் என கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒடுக்கப…

  18. வேலூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை பட்டா நிலத்தின் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்திருப்பது அரசே ஜாதியை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலை அங்குள்ள மண்ணாற்றங்கரையில் தகனம் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு நிலத்தின் உரிமையாளர் தரப்பு …

  19. சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் ஆரம்பித்து வைப்பு! சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் ஜேர்மனியின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில், சென்னையில் இன்று(திங்கட்…

  20. ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா? எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, மு.ப. 10:41 Comments - 0 இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். இந்த “ஐ.என்.எக்ஸ்” மீடியா நிறுவனம், 2007 மார்ச் மாதத்தில், அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைக் கேட்க, அந்த அனுமதி, 2007 மே மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இந்த அந்நிய முதலீடு வழங்குவது தொடர்பான ஊழல் வழக்கை, 15.5.2017 அன்று பதிவு செய்த சி.பீ.ஐ, அதற்கான அடுத்த…

  21. கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.. மாணவர்களின் திறமைக்கு சூப்பர் கௌரவம் தர முடிவுதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8வது தளத்தில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தொலைக்காட்சி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோடடையன், உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற…

  22. கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (24) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர்…

    • 0 replies
    • 314 views
  23. போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யுத்தக்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளபதியாக நியமித்துள்ளது.இது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஷவேந்திர சில்வா.இவ்வாறான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இவரது தலைமையிலான 58-ஆவது படையணியே போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என…

  24. 2019-08-23@ 08:49:39 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது.இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள…

    • 5 replies
    • 977 views
  25. அப்துல்கலாம் விருதினை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றுக் கொண்டார். விண்வெளித்துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுகிறது. இந்த விருந்து சுதந்திர தினத்தன்று வழங்கப்படவிருந்தது. சிவன் அன்றைய நாளில் விருதினைப் பெறவில்லை. இந்நிலையில் தலைமை செயலகத்தில் சிவனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதினை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார். இந்த விருதானது ரூ. 5 லட்சம் காசோலை 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன. நிலவினை ஆராய சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி சிவன் தலைமையிலான இஸ்ரோ குழு மிகப்பெரிய ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.