Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா வாழ்ந்த வீடு – நினைவு இல்லமாக மாற்றும் பணி ஆரம்பம் June 29, 2019 மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன் நிலத்தை கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம்திகதி மரணம் அடைந்த ஜெயலலிதா, தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் கழித்தார். இந்தநிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழத் தொடங்கியதையடுத்து நிறைவேற்றும் வகையில், தமிழக அரசும் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது. தற்போது, அதற…

  2. காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1,689 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் 2 ஆவது நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேரூரில் தினமும் 400 மில்லியன் லீட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லீட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை …

    • 0 replies
    • 670 views
  3. 'இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்' என இலங்கைக் கடற்படை அதிகாரி எச்சரிக்கை. இதனால், மீனவர்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். கச்சத்தீவு இலங்கை வசம் கொடுக்கப்பட்டது முதல் இந்திய மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து சர்வதேச கடல் எல்லையின் தூரம் மிகக் குறைவாக இருப்பத…

    • 0 replies
    • 1.1k views
  4. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அமமுகவில் இன்னும் பலர் திமுகவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலினை சந்தித்து அவர் திமுகவில் இணைந்தார். தமிழகத்தின் உரிமையை ஸ்டாலின் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால் திமுகவில் தாம் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் துணிச்சலான முடிவு எடுக்கக்கூடியவர் என்றும் ஆளுமை மிக்கவர் என்றும் திமுகவில் இண…

  5. தினமலர்: பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 4 வயது குழந்தை கொலை நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் கைது செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தன் நான்கு வயது குழந்தையை காணவில்லை என நேற்று இரவு 7:30 மணி அளவில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் அந்தப் பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு கழிப்பறையில் இருந்த கோணி…

  6. தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் – தினகரன் அதிர்ச்சி தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பது குறித்து அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோகா…

  7. 6 மாதங்களுக்குப் பிறகு நனைந்தது சென்னை சென்னையில் கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று மழை பெய்து குளிர்வித்துள்ளது. #chennairains என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது. தமிழகம் போதிய மழை இல்லாத காரணத்தால், கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மக்கள் தண்ணீருக்காக இரவு பகலாக காலி குடங்களுடன் காத்திருக்கும் அவலம் அன்றாடம் நிகழ்கிறது. வெப்ப சலனம் காரணமாகவும் பொதுமக்கள் யாரும் மதியம் 11 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 20) சென்னை பெருங்குடி, வேளச்சேரி, கிண்டி, அடையாறு, செம்மஞ்சேரி,…

    • 9 replies
    • 1.8k views
  8. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடுமையான குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது சென்னை நகரம். சுமார் 85 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரத்திற்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது? நெருக்கமான நகரம் …

  9. நளினியை நேரில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினியை எதிர்வரும் 5 ஆம் திகதி நேரில் முன்னிலைப்படுத்துமாறு வேலூர் சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரிய நளினியின் மனு மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினி, தனது சட்டத்தரணி ஊட…

  10. அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக பருவ மழை பொய்த்துப் போனதால் சென்னையின் நீராதாரங்களான ஏரிகள் வறண்டு போனதாலும், கழிவுகள் மேலாண்மையில் தவறியதால் நிலத்தடி நீர் தரமிழந்து உள்ளதாலும், கடும் தண்ணீர் நெருக்கடியினை சந்தித்து வருகின்றது சென்னை. தண்ணீர் சிக்கலால், பெரும்பான்மையான ச…

    • 3 replies
    • 1.4k views
  11. ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் நீடிப்பு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையகம் விசாரணை நடத்தி வருகின்றது. எனினும் ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீடிக்கப்பட்ட கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்தமையால், தமிழக அரசு மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினா…

  12. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த டெல்லி விஜயத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து. கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேர/

  13. டெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானம் June 22, 2019 டெல்டா விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தி ஜூலை 26ஆம் திகதி டெல்லி பாராளுமன்றம் முன் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மாதம் தோறும் தர வேண்டிய தண்ணீரை விடுவிக்கக் கர்நாடகம் …

  14. 65 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி இலங்கையைச் சேர்ந்த 65 தமிழர்களினால் இந்தியக் குடியுரிமை பெறுவதற்காகச் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அவர்களை குடியுரிமை கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரியிடம் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதியளித்திருக்கிறது என்று சென்னை த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. அவர்களின் புதிய விண்ணப்பங்களை எந்தவித தாமதமும் இன்றி மத்திய அரசாங்கத்திற்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி அதிகாரி நீதியரசர் ஜீ.ஆர்.சுவாமிநாதன் பணித்தார். மனுதாரர்கள் இருக்கின்ற பிரத்யேகமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொருத்தமான உத்தரவுகளை மத்திய அரச…

  15. "பஸ்" டே... அட்டாசம். கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள் சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின்போது மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர் சரிந்து கீழே விழுந்தனர். தடையை மீறி பஸ் டே கொண்டாடாடிய 17 மாணவர்களை பிடித்து சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள். விடுமுறை முடிந்து நேற்று சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, இதற்கான சிறப்பு ஏற்பாடாக பஸ்ஸூக்கு அலங்காரம் செய்தனர். பின்னர், பஸ் கூரை மீது ஏறி நின்றுகொ…

  16. தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவிகரம் நீட்டுகிறது கேரள அரசு! தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை கருத்திற்கொண்டு கேரள அரசு 20 இலட்சம் லீட்டர் தண்ணீர் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேரள முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழக முதலமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று குடிநீர் வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு 20 இலட்சம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தி.மு.க அரசு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்ப…

  17. கருணை கொலையாவது செய்யுங்கள்!- இலங்கை தமிழர்கள் திருச்சி சிறையில் உண்ணாவிரத போராட்டம் எங்களை கருணை கொலையாவது செய்யுங்கள் என வலியுறுத்தி திருச்சி மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தமிழர்களான பாஸ்கரன், ரமேஷ், அருளின்பதேவன் மற்றும் செல்வம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கைதிகள் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் எந்ததொரு குற்றங்களும் புரியவில்லை. ஆகையால் உடனடியாக தங்களது வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிடின், கருணை கொலையாவது தங்களை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்ப…

  18. இலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறும்போத…

  19. June 20, 2019 சென்னையில் வீசும் காற்றில் விசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள சென்னையின் வருடாந்த காற்று மாசு குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பொதுவாக சென்னையில் மரங்கள், கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதி போன்ற காரணங்களால் ஏனைய பகுதிகளைவிட காற்றின் தரநிலை சற்று சிறப்பாகவே இருக்கும். எனினும் 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாற்றிலும் காற்றின் தரநிலை மிக மோசமட…

  20. குடிநீர் பிரச்சினை: தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்! தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது. அந்த வகையில், வரும் 22ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை. தண்ணீருக்காக வெற்றுக் குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் போது மக்களையும…

  21. படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்து போன நிலத்தடி நீர் மட்டம், வறண்டு போன ஏரிகள் என அத்தியாவசிய தண்ணீருக்காக அனுதினமும் தமிழக மக்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு. படத்தின் காப்புரிமை ARUN SANKAR படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்கு படத்தின் காப…

  22. நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்தக் கால்வாயின் வழியாக தண்ணீர் எளிதாகச் செல்ல வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக…

    • 1 reply
    • 584 views
  23. மேல கை வெச்சீங்க.. அவ்வளவுதான்.. நாம் தமிழர் கட்சியினரை சீண்டியதால் ஆவேசம்! "தண்ணி இல்லாம அவனவன் சாவறானுங்க.. இதுல ஏன் தண்ணி விட்டேன்னு சண்டையா?" என்று குடிநீர் விநியோகத்துக்கான பிரச்சனை ஒன்று ஆவடியில் வெடித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து தண்ணீர் கிடைக்க முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவி வருகிறார்கள். இப்படித்தான் நாம் தமிழர் கட்சியும் குடிநீர் விநியோகத்தை கையில் எடுத்துள்ளது. ஆவடி, திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில் குடிக்க சுத்தமாக தண்ணியே இல்லை என்று இந்த கட்சி உறுப்பினர்களுக்கு தெரியவந்தது. அதனால், அந்த பகுதிக்கு இக்கட்சி சார்பாக நேற்று டேங்கர் லாரிய…

  24. மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம் In இந்தியா June 18, 2019 9:07 am GMT 0 Comments 1140 by : Yuganthini மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றனர் 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். குறித்த பதவியேற்பு நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே, தனது பதவியை முதலில் பொறுப்பேற்றார். அத…

  25. முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சென்னைக்கு குடிநீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.