தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்குத் தூண்டியதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரை எஸ்.பி உட்பட போலீஸார் அடித்து வேனில் ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி அருகே சாலை ம…
-
- 0 replies
- 898 views
-
-
தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் 13-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் முன்னிலையில் 400-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் அவர் ஓரிரு வார்த்தைகளே பேசியது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர் நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் இதுபற்றி கூறியதாவது: தேர்தலில் சீட் வாங்குவதெல்லாம் அப்புறம். கட்சித் தலைவர் விஜயகாந்தை நேரில் பார்த்து பேசலாம் என்றுதான் நேர்காணலுக்கே வந்தேன். ஆனால், நேர்காணலின்போது, அவரால் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச இயல வில்லை. இது எங்களை கண்கலங்க வைத்தது. சிலரிடம் மிகுந்த ஆர்வத்தோடு பேச முயற்சித்துள்ளார். மற்ற வர்களால் இதை எளிதில் புரிந்துகொள்ள முடிய வில…
-
- 0 replies
- 364 views
-
-
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். ''பெண்ணின் ஒழுக்கம் மட்டும் பேசாதே - ஆணுக்கும் ஒழுக்கம் உண்டு மறவாதே'' உட்பட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர். …
-
- 0 replies
- 470 views
-
-
வெளியானது அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்..! முழுவிபரம் உள்ளே..! மக்களவை தேர்தலில் அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் திமுக 8 கட்சிகளுடனும் அதிமுக 7 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு இரு கூட்டணிகளும் ஒதுக்கியுள்ளன என்கிற விபரம் வெளியாகி இருக்கிறது அதன் படி திமுக 1- தென்சென்னை 2- வடசென்னை 3- மத்திய சென்னை 4- காஞ்சிபுரம் 5- தென்காசி 6. ஶ்ரீபெரம்பத்தூர் 7. அரக்கோணம் 8- வேலூர் 9- ஆரணி 10- தருமபுரி 11- திருவண்ணாமலை 12- கடலூர் 13- கள்ளக்குறிச்சி 14- நீலகிரி 15…
-
- 0 replies
- 614 views
-
-
போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு March 15, 2019 போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் 2009ஆம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் போலி என்கவுன்டரில் தன் கணவரைக் கொன்றதாக சுந்தரமூர்த்தியின் மனைவி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையகத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அத்துடன் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையக நீதிபதி கொல்லப்பட்டவரின் உடலை பரிசோத…
-
- 0 replies
- 369 views
-
-
பண மோசடி வழக்கில், அன்பழகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை…. March 14, 2019 திமுக முன்னாள் அமைச்சரான மறைந்த கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கு பண மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பணமதிப்பழப்பு நடவடிக்கையின் பின்னர் 2017 ஆம் ஆண்டு சென்னையில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இலத்திரனியல்; பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் பெயர்களில் ஹொங்காங் போன்ற நாடுகளுக்கு 80 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த லியாகத் அலி, இலியாஸ் பீர் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லிய…
-
- 0 replies
- 408 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை AFP கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்களை அந்த இளைஞர்கள் மிரட்டி பணம் பறித்ததாகவும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் அவ்வாறு வலம் வருவதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன. உண்மை நிலை என்ன? பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று பொள்ளாச்சி…
-
- 0 replies
- 725 views
-
-
காவிரியில் மணல் சிற்பம் அமைத்து குமரி இளைஞர் விழிப்புணர்வு.! வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், கன்னியாகுமரி இளைஞர் ஒருவர் திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வரும் ஏப்ரல் 18ம் திகதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல் கமிஷன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக, வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஓசரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்…
-
- 0 replies
- 417 views
-
-
பேரறிவாளன் உட்பட்ட... 7 பேரையும், மன்னித்து விட்டோம் – ராகுல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று வரும் 7 பேரையும் மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், 7 பேர் மீதும் எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (புதன்கிழமை) தமிழகம் வந்துள்ள இவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளிடத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் இன்று இடம்பெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்த…
-
- 2 replies
- 854 views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராகுல் காந்தியை சந்திக்கிறார் அற்புதம்மாள் மக்களவை தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ராகுல் காந்தியை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாவட்டமாக, ஊர்வலமாக சென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று ராகுலை சந்தித்து தமது மகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த கோரிக்கை…
-
- 0 replies
- 678 views
-
-
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பட்டரி டோர்ச் சின்னம் March 10, 2019 நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பட்டரி டோர்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வருகின்ற நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பட்டரி டோர்ச் சின்னத்தை தேர்தல் ஆணையகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதேவேளையில் தங்களுக்கு மோதிரம் சின்னம் வழங்க …
-
- 5 replies
- 777 views
-
-
தேமுதிக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. 4 தொகுதிகள் ஒதுக்கீடு. லோக் சபா தேர்தலுக்கான அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று வாரமாக தேமுதிக தனது கூட்டணி அறிவிப்பை வெளியிட தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. அதிமுகவுடன் தேமுதிக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகமல் இழுபறி நீடித்தது. இந்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் சுமுகமாக நடந்து முடிந்து உள்ளது.இதுவரை தேமுதிக சார்பாக 6க்கும் மேற்பட்ட ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேமுதிக தனது லோக்சபா கூட்டணி முடிவை எடுக்க ஆலோசன…
-
- 0 replies
- 769 views
-
-
தமிழகத்தில் 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என உறுதிபட தெரிவித்தார். அதேவேளை நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஆதரவு தருவார் என நம்புவதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதை செய்தியாளர்களிடம் பகிர்…
-
- 0 replies
- 390 views
-
-
உலக மகளிர் தினம்: வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு: கிராமப்புற பெண்ணின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 37 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசூரிய பிரபா 'இன்ஜினியரிங் படித்தால் வேலை நிச்சயம்; டிப்ளோமா படித்தால் உடனே வேலை; ஹோட்டல் மேனேஜ்மேண்ட் படிக்கும்போதே சம்பாதிக்கலாம்; எட்டு…
-
- 1 reply
- 542 views
- 1 follower
-
-
தேமுதிக திடீர் போராட்டம்.. துரைமுருகன் வீடு முற்றுகை லோக்சபா தேர்தலையொட்டி கூட்டணிகள் இறுதி செய்யப்படுவதால், தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன. மற்றொரு பக்கம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், பிரபல நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் வாழ்வு என பிற கட்சிகள் எண்ணுகின்றன என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளது கூட்டணி கட்சிகள் நடுவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/stay-with-this-l…
-
- 0 replies
- 688 views
-
-
துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காகதான் சந்தித்தோம் என்று தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் நிர்வாகிகளான அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் இருவரும் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்று தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்தனர் என்றார் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ். ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. "தற்போது நாங்கள் தெளிவாக கூறுவது என்னவென்றால், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடிவாகிவிட்டது. தொகுதி பங்க…
-
- 0 replies
- 608 views
-
-
தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால்? நீதிமன்றம் கேள்வி… March 7, 2019 தமிழின் பெருமைகளைத் தமிழர்கள் உணரவில்லையென்றால், அடுத்த தலைமுறைக்குத் தமிழைச் சிறப்பாக எடுத்துச் செல்ல முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கொன்றில் மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மதுரை உலக தமிழ்ச் சங்கச் சிறப்பு அலுவலர் கே.எம்…
-
- 0 replies
- 762 views
-
-
ஏழு பேரின் விடுதலையை, மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்…. March 7, 2019 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் பல ம…
-
- 0 replies
- 395 views
-
-
தமிழகத்தில் 2020-க்குள் மதுபானக் கடைகளை மூடக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Published : 06 Mar 2019 17:03 IST Updated : 06 Mar 2019 17:03 IST கி.மகாராஜன் பிரதிநிதித்துவப் படம் தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2020-க்குள் அனைத்து மதுபான கடைகளையும் மூடக்கோரிய வழக்கில், மதுபான தொழிற்சாலைகள், அங்கிருந்து வாங்கப்படும் மதுபானங்களின் அளவு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த காந்திராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தவறவிடாதீர் வெளிநாடுகளி…
-
- 4 replies
- 603 views
- 1 follower
-
-
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுக… பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை வைத்திருப்பது போல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை வண்டலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில…
-
- 0 replies
- 214 views
-
-
எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்: பிரதமர் அறிவிப்பு! அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்” என்று அறிவித்திருக்கிறார். அரசு நலத்திட்டங்கள் தொடக்க விழா மற்றும் அதிமுக ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (மார்ச் 6) பிற்பகல் சென்னை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் கிளாம்பாக்கத்தில் விழா நடக்கும் இடத்திற்குச் சென்ற பிரதமர் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் சிலையை…
-
- 0 replies
- 776 views
-
-
Image caption மு.க.ஸ்டாலின் ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுக-வை மிரட்டி அதனுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்தியாவில் பலமுறை மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக அரசையும் கலைத்துள்ளது. ஆனால், திமுக காங்கிரசுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளது என்று புதன்கிழமை சென்னை அருகே நடந்த தேர்தல் கூட்டத்தில் பிரதமரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோதி குற்றம்சாட்டினார். விருதுநகரில் நடந்துவரும் திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்ட…
-
- 0 replies
- 601 views
-
-
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். புதன்கிழமை மதியம் 2.50 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் சுதீஷுடன், பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் நேற்று இரவு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பேரில் இன்று அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறினார். …
-
- 0 replies
- 561 views
-
-
சென்னை கடற்படை தளம் மீது, 10 நிமிடம் வட்டமிட்ட டிரோன்.. போலீஸில் புகார். சென்னை ஐஎன்எஸ் அடையார் கடற்படை தளம் மீது ஒரு ஆளில்லாத விமானம் (டிரோன்) நேற்று இரவு வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 நிமிடம் இந்த டிரோன் வட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலக காவல் நிலையத்தில் கடற்படை தள அதிகாரி அனில் குமார் புகார் கொடுத்துள்ளா். அதன் பேரில் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை மோதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள கடற்படை தளம் மீது ஆளில்லா விமானம் பறந்த செயல் பரபரப்பை ஏற்படு…
-
- 1 reply
- 319 views
- 1 follower
-
-
மகாசிவராத்திரி: எம்.ஜி.ஆர். பாட்டுக்கு சத்குருவுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல். மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஷா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். நடிகை காஜல் அகர்வால் தன் தங்கை நிஷாவுடன் இஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் ராணாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண…
-
- 4 replies
- 1.3k views
-