Jump to content

சரவணபவன் சைவ உணவக அதிபர் சிறை செல்கிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத்தின் அடித்தட்டில் இருந்து, கடின உழைப்பின் மூலம் சரவணபவன் என்னும் நிறுவனத்தின் ஆரம்பித்து, இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பி பெரும் அந்நிய செலாவணி வருமானத்தினை பெற்றுத் தரும் வகையில் கட்டி அமைத்தவர் ராஜகோபால் அவர்கள்.  

ஆனாலும், சில வெற்றியாளர்களுக்கு இருக்கும், பெண்ணாசை இவரையும் விடவில்லை.

கிருத்திகா என்னும் வேலைக்கு வந்த திருமணமான பிராமணப்பெண்ணை முதலில் மடக்கி, அவரது, அப்பிராணி கணவர், கணேஷ் என்பவரை துரத்தி விட்டு,  இரண்டாவது மனைவியாக வைத்துக் கொண்டிருந்தார்.

பின்னர் தனது நிறுவனத்தில், வேலை செய்துகொண்டிருந்த ஒருவரின் மகளான, மகள் வயது இளம் பெண,  ஜீவஜோதி என்னும் பெண்ணின் மேல் ஆசை கொண்டார்.

இவர் மோகம் கொண்டிருந்ததை அறியாத அந்த பெண், தனது காதலரை மணந்து கொண்டார்.

இவரோ, அந்த காதலரை துரத்தி அடிக்கும் வேலை கை கூடாததால் , கடத்தி கொலை செய்து, அந்த பெண்ணை அடைய முயன்றார் என்ற வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டிருந்தது.

இவர் சென்னை உயர் நீதிமன்றில் மேல்முறையீடு செய்து, பிணையில் வெளியில் இருந்து வியாபாரத்தினை கவனித்தார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பினை உறுதி செய்ய, இவரும் இந்திய உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்து, பிணையில் வெளியில் இருந்து வியாபாரத்தினை தொடர்ந்து வளர்த்து வந்தார்.

இவரது நிறுவனம் உலகளாவிய ரீதியில் இந்தக் காலப்பகுதியில் வளர்ந்து, வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி போன்ற விடயங்களில் முன்னணியில் இருந்ததால், மேல்முறையீடு, விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டிருந்தது போல தெரிகிறது.

இப்போது, இது விசாரித்து முடிக்கப் பட்டு, இன்று தீர்ப்பு, உறுதிப்படுத்தப் பட்டதாக வந்துள்ளது. 

எதிர்வரும் யூலை மாதம்  7ம் திகதிக்கு முன்னர் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதத்தில் சரிவு.

https://tamil.oneindia.com/news/delhi/hotel-saravana-bhavan-owners-case-in-sc-345284.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

Published :  29 Mar 2019  11:52 IST
Updated :  29 Mar 2019  11:52 IST
புதுடெல்லி
 
saravanbhavanjpg

சரவணபவன் ஓட்டல் நிறுவனர் பி.ராஜகோபால்

சரவண பவனில் வேலை பார்த்த ஊழியரைக் கொலை செய்த வழக்கில், ஓட்டல் நிறுவனர் பி.ராஜகோபாலுக்கு (அண்ணாச்சி) ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

1990களின் இறுதியில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் ஓட்டல் சரவண பவனில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவரின் மனைவி ஜீவஜோதி, கணவரைக் காண சரவண பவனுக்கு வருவார் எனவும் அப்போது அண்ணாச்சிக்கு ஜீவஜோதி மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

jeevajothijpg

ஜீவஜோதி - பிரின்ஸ் சாந்தகுமார்

 

ஜீவஜோதியை அடைவதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது. ஜீவஜோதி இதுதொடர்பாகப் புகார் அளித்தார். இந்த வழக்கில் சரவண பவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்குப் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அப்பீலில் உயர் நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த ராஜகோபால் பெயிலில் வெளியில் இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சரவண பவன் நிறுவனர் பி.ராஜகோபால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

https://tamil.thehindu.com/india/article26672379.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

சமூகத்தின் அடித்தட்டில் இருந்து, கடின உழைப்பின் மூலம் சரவணபவன் என்னும் நிறுவனத்தின் ஆரம்பித்து, இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பி பெரும் அந்நிய செலாவணி வருமானத்தினை பெற்றுத் தரும் வகையில் கட்டி அமைத்தவர் ராஜகோபால் அவர்கள்.  

அண்ணாச்சிக்கு இப்போ எத்தனை வயது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்ணாச்சிக்கு இப்போ எத்தனை வயது?

படத்தை பார்த்து வயதை கணியுங்கோ பாப்பம்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

படத்தை பார்த்து வயதை கணியுங்கோ பாப்பம்?!

படம் இப்போ எடுத்ததா பழைய படமா தெரியலயே?
இப்ப எடுத்த படமானால் 57-58 இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பெரிய தொழில் அதிபர்கள், பெரும் வரி செலுத்துவோர், பெரும் எண்ணிக்கையில் வேலை ஆட்களை கொண்டோருக்கு, சட்டப்படி ஒரு சலுகை உண்டு.

அவரது நிறுவனம் ஒரு தனிப்பட்ட நிறுவனமாக இருந்தால் இந்த சலுகை அரசு தரும்.

சிறைக்கு போனாலும் முதல் வகுப்பு. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தனது அலுவலகத்துக்கு போகமுடியும். இரவு சிறைக்கு.

இதன் நோக்கம், வேலை இழப்பு தவிர்ப்பு, வரி இழப்பு தவிர்ப்பு போன்றவை கவனத்தில் எடுக்கப் பட்டு அவர்களது நிறுவனம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வது.

இந்தியாவில் இவ்வளவு காலம் இது கிடப்பில் போடப்பட்டமைக்கு இதுவே மறைமுக காரணம். மேலும் சசிகலா போல இங்கே அரசியல் காரணங்கள் இருக்கவில்லை.

அண்ணாச்சிக்கு 75 வயதுக்கு மேலே ஆகிறது. வியாபாரத்தினை கை மாத்திவிட தயாராக, சிறையும் அழைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் உள்ள சரவணபவன் நிறுவனத்துக்கும் இந்தியாவில் உள்ளத்திற்கும் தொடர்பு இல்லை என்று கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் உள்ள சரவணபவன் நிறுவனத்துக்கும் இந்தியாவில் உள்ளத்திற்கும் தொடர்பு இல்லை என்று கேள்விப்பட்டேன்.

Franchise (தனியுரிமை கிளை)

Link to comment
Share on other sites

பல வருடங்களுக்கு முன் நடந்த கொலைக்கு இப்போ தான் தீர்வு கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

அண்ணாச்சிக்கு 75 வயதுக்கு மேலே ஆகிறது. வியாபாரத்தினை கை மாத்திவிட தயாராக, சிறையும் அழைக்கின்றது.

என்னது! 75 வயசா?மனிசன் இப்பவும் ஒரு திருமணம் செய்யலாம் போல இருக்கே..
உள்ளுக்கு போனாலும் ராஜா மாதிரி இருப்பார்.பணம் விளையாடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாட்டில் பச்சரிசி/புழுங்கல் அரிசி வேறுபாடு , இட்டலியில் சாம்பார் இட்டலி எண்டு தனி காசு , தயிர் கப்புக்கு தனி விலை எண்டு கொட்டல் துறையில் இவர் வயிற்றில் அடித்தவை ஏராளம்கள் ..  🤔 ஆனால் கடைசியில் இவருக்கு கிடைத்தது என்னவோ உடம்புக்கு ஊட்டம் தரும் " களி " ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது! 75 வயசா?மனிசன் இப்பவும் ஒரு திருமணம் செய்யலாம் போல இருக்கே..

சின்ன வீடு வைக்கிற பிளான் உதயமாகுது போலை கிடக்கு....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"சரவணபவன்"
உலகமெல்லாம் ஹோட்டல் இருந்தும்...
சாப்பிடறது ஜெயில் சாப்பாடு...
இதான் விதிங்கிறது....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
    • இன்னும் ரெண்டு ஓவர் குடுத்திருந்தால் 50 அடித்திருப்பார்கள் ..... அவ்வளவு வெறியோடு களத்தில் நின்றவர்கள்.......!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.