Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தீர்வினைக் கோரி பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த நிலையில், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் பாம்பன் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். கடந்த 2016ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 19 நாட்டு படகுகளை மீட்க மத்திய அரசு தவறியமையை கண்டித்தும் படகுகளுக்கு தீர்வினை கோரியும் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக இரு நாட்டு அரசுகளும் பேச்…

  2. 51 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு இலங்கையில் நடந்த இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் அந்நாட்டு சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு: தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய இலங்கை இடையில் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய விவசாயம் மற்றும் மீனவளத் துறை மந்திரி ராதா மோகன் சிங் மற்றும் இலங்கை மந்திரி மஹிந்தா அமரவீரா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு அமைச்சர்களும் க…

  3. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, மைசூரில் அவரை கொல்ல சதி முயற்சி நடந்ததாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மைசூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பேசியதாவது:- 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரிலேயே அவரை கொல்ல சதி நடந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக மைசூரில் அவர் பிரசாரம் செய்ய வந்தார். லலித் மஹால் பகுதியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரு…

    • 0 replies
    • 668 views
  4. காளியம்மாள் சொன்ன உண்மைகளை கேட்டு அதிர்ந்து போன கிராம மக்கள் றேசன் கடையில் யாராவது அரசியல்வாதி அரிசி வாங்கி சாப்பிடுகிறார்களா?? பூம்புகார் தொகுதியில் 70 வருடங்கள் அ.தி.மு.கவும் ,தி.மு.க வும் மாறி மாறி ஆட்சியில் இருந்தன. ஒரு பெண் வேட்பாளரை இந்த 70 வருடத்தில் நிறுத்தவே இல்லை.

  5. சென்னை: புலித்தடம் தேடி.. ரத்த ஈழத்தில் 25 நாட்கள் என்ற இலங்கை பயண நூல் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். சென்னையில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் சனிக்கிழமை மாலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், வைகோ, ஓவியர் புகழேந்தி, இயக்குநர் வ.கௌதமன், திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை பற்றி கருத்துரையாற்றினர். வைகோ பேசுகையில், இந்த நூலில் இதயத்தை வேதனையில் வாட்டுகிற பல செய்திகள் இருக்கின்றன. கனத்த இதயத்தோடு தான் இதை படித்து முடித்தேன். இந்நூல் தொடராக வெளிவந்த போது படித்ததை விட புத்தகமாக தொடர்ந்து படிக்கிற போது ஒரு தாங்கமுடியாத சோகம் மனதை கப்பிக் கொண்டது. மகா துணிச்சல் வேண்டும். உயிரோடு திரும்ப முடியாது என்ற ஆபத்தை எ…

  6. முதலில் முதல்வர்; அடுத்து சட்டப்பேரவைச் செயலாளர்- விஜயபாஸ்கர் அடுத்தடுத்து சந்தித்ததால் பரபரப்பு! முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீனை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திடீரெனச் சந்தித்துப் பேசினார். வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்குப் பின்னர் நடந்த சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்…

  7. ‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம் “ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் பி.ஜே.பி-யின் தூதராக மாறிவிட்டார். அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் இவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள். இதே நிலை நீடித்தால், அ.தி.மு.க-வையே அழித்துவிடுவார்கள்.’’ - இப்படி சொல்வது யார் தெரியுமா? உண்மைத் தொண்டர்கள். ‘உண்மைத் தொண்டர்கள்’ எனத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் யார் தெரியுமா? அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள். தினகரன் கைதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரை, உசிலம்பட்டி, மேலூர், தேவக்கோட்டை, நெல்லை என தென்மாவட்ட நகரங்களைத் தொடர்ந்து …

  8. ஆயிரம் ஓல்ட் மின்சாரமும் அண்ணாசாலையில் நடந்த பதவியேற்பும்... எம்.ஜி.ஆர் எனும் ஓட்டு வேட்டைக்காரன்! தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்ற நாள் இன்று. தமிழக அரசியல் வரலாற்றில் ஜூன் 30-ம் தேதி மறக்கவியலாத தினம். 1977-ம் ஆண்டு இதே தினத்தில்தான் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார். சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி என்ற பாரம்பர்யத்தோடு இந்தியா முழுக்க மக்களிடையே பெரும் வரவேற்போடு தன் ஆளுகையைப் பரப்பியிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தவர் அண்ணாதுரை. காங்கிரஸ் கட்சி என்ற ஆலமரத்தை ஒரே ஒரு மாநிலத்தில் விரவியிருந்த திராவிடக்கட்சி ஒன்று வீழ்த்திக்கிடத்தியது இந்திய வரலாற்றில் பெ…

  9. ஜெயலலிதாவின் `வேதா இல்லம்' யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES `மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது' என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு கடந்த அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் உள்ள பொருள்களைக் கணக்கிடும் பணிகள் நடந்தன. தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டு வேதா இல்லத்தையும் அங்குள்ள அசையும் சொத்துகள…

  10. இலங்கை இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. உலக தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ந்தேதி இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்ட பகுதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என கூறப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அதனை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் போலீஸ் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக…

  11. ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, அரசுடமையாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது. தாசில்தார் தலைமையில், நேற்று வருவாய் துறையினர், வீட்டையும், நிலத்தையும் அள விட்டனர். சட்ட பிரச்னை ஏற்படும் முன், இழப் பீடு விஷயத்தில், அரசு முந்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னை,போயஸ்கார்டன் பகுதியில்,மறைந்த முதல்வர், ஜெ., வசித்த, 'வேதா நிலையம்' வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில், ஜெ., இருந்த போது பணியாற்றிய ஊழியர்கள் தங்கியுள்ள னர். சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வீடு உள்ளது.அவர்களிடமிருந்து வீட்டை மீட்டு, நினைவிடமாக மாற்ற வேண்டும் என, அ.தி. மு.க., தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அ.தி. மு.க., - பன்னீ…

  12. இரட்டை இலை சின்னம் வழக்கில் இழுபறி நீடிப்பு: மறு விசாரணை 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக அ.தி.மு.க.வின் இரு அணிகளிடம் தலைமை தேர்தல் கமிஷன் நடத்திவரும் விசாரணை வரும் 30-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வ…

  13. சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி, சசிகலா அக்கா மகளுக்கு, மூன்று ஆண்டுகள்; 1.68 கோடி ரூபாய் சேர்த்த, மருமகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா குடும்பத்துக்கு, அடி மேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த அவர்களின் சொந்தங்களுக்கு, கிலி ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில், அதிகாரியாக பணியாற்றியவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவரது மனைவி, சீதளாதேவி. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகள்; தினகரனின் சகோதரி. 1998ல், பாஸ்கரனின் வங்கி ல…

  14. தந்தையர் தினம்: "அப்பாதான் எனக்குத் தோழி" - ஒரு தந்தை, மகளின் பாசக் கதை நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 18 ஜூன் 2022 மனைவி படுக்கையில் பல ஆண்டுகளாக முடங்கிருக்கிறார். மற்றொரு புறம் பதின்ம வயது மகள் கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டிய சூழல். ஓட்டுநர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த 55 வயதான இளங்கோவன், தனது மனைவியின் உடல் நலத்தைப் பேணுவதிலும், மகளின் எதிர் காலத்தைக் கவனிப்பதிலும் தனி ஒரு ஆளாக வாழ்க்கையை எதிர்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மனைவி இறந்துவிட, மகளுக்கு தாயுமாகவும் இருக்க வேண்டிய நிலைமை இளங்கோவனுக்கு ஏற்பட்டது. எதிர்காலம் இருண்டு போயிருந்தது. அந்தக் கடினமான தருணத்…

  15. தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார். மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 22ஆம் திக…

    • 0 replies
    • 178 views
  16. திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம் ( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ் வெளியிட்டது. அதை மீண்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம்) இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு நடந்த முதல் தேர்தலாக 1967ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் அமைந்தது. மிக முக்கியமான ஒரு தேர்தலும்கூட. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. சுதந்திரா கட்சி, 8.7 சதவீத வாக்குகளைப்…

  17. ஆட்டிசம் குறைப்பாட்டை களைய உதவும் செயலி - மகனுக்கு உதவ உருவாக்கிய தாய் 30 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் 125 சிறாரில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சென்னையை சேர்ந்த எழுந்தாளரான லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன், தனது குழந்தை மட்டுமல்லாது பிற குழந்தைகளுக்கு உதவும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இவர்களில் பேசக்கூடிய குழந்தைகள், பேச இயலாத குழந்தைகள் என இருவகை உண்டு. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இந்த செயலியின் மூலம் தங்களின் தேவைகளை அருகில் இருப்பவர்களுக்கு புரிய வைக்க முடியும். இந்த செயலியின் உதவியுடன் அவர்களின் கற்றல் திறன், பேசுவதற்கான உந்துதல் ஏற்படும் என்று கூறுகிறார்,…

  18. நெதர்லாந்து விரைந்த வழக்கறிஞர் - சர்வதேச நீதிமன்றத்தை நாடும் நளினி! ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1991-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைகளில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக, 2014-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி …

  19. Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 02:09 PM இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இன்று வெள்ளிக்கிழமை (21) சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்…

  20. 2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக! இந்தியாவை உலகப்புகழ் ஊழல் நாடாகக் காட்டிய 2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.ஐ. தனது இறுதி வாதத்தை முடித்துவிட்டது. இனி குற்றவாளிகள் தரப்பு தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதற்கான இறுதி-பதில் வாதம் நடைபெறும். பிப்ரவரி 1-ம் தேதியை அதற்கான ஆரம்பக் கெடுவாக குறித்துள்ளார் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி. இந்த நேரத்தில் 2ஜி வழக்கின் ஒரு பிளாஷ்பேக்... 2ஜி அலைக்கற்றைக் கதைக்குள் ஒரு முன்கதை... என்ன நடந்தது? நாம் இப்போது 4ஜி அலைக்கற்றை சேவையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஏறத்தாழ எல்லோரிடமும் 3ஜி வசதி இருக்கிறது. ஆனால், மொத்தமாக வழக்கொழிந்துவிட்ட 2ஜி வசதிதான், அப்போது இந்தியாவின் பேசு பொருள். நாடாளுமன்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிக இளவயதுள்ள சிறுமிகள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவது இந்த வழக்குகளிலிருந்து தெரியவந்துள்ளது (சித்தரிப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 2 மே 2025 கோவையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், ஒன்றரை மாத கர்ப்பமாகியுள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமியின் உறவுக்கார இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறுமிகளுக்கு, உடல், உளவியல் ரீதியான சிகிச்சையை தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தான் வசிக்கும் …

  22. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை- வெளியானது அறிக்கை by : Litharsan கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 7 ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பயணிகளின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களூடாக தமிழ்நாட்டுக்கு வந்த பயணிகளிடமே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் வருகைதரும் பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறித்…

    • 0 replies
    • 763 views
  23. நிலைமை கைமீறிவிட்டது... எங்கள் கட்டுப்பாட்டில் யாரும் இல்லை... கைவிரித்த இஸ்லாமிய கூட்டமைப்பு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. இதனிடையே சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் சூழலில் இது போன்று போராட்டம் நடப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மீது சட்டமன்றத்தில் வழக்கமாகவே திமுக எகிறும், இதில் தடியடி விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அரசை உலுப்பி எடுத்து விடும் என்பதால் போராட்டத்தை நேற்றிரவோடு முடிவுக்கு கொண்டு வர சென்னை மாநகர காவல்துறை தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரிலும், அலைபேசி மூலமும் …

  24. தமிழகத்தில் 7 நாட்களில் ஒரு இலட்சத்து 25ஆயிரம் பேர் கைது! கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில், தற்போது வரை தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 7 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அவசர தேவைக்களுக்காக அல்லாமல் அநாவசியாமாக வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது தமிழக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் 7 நாட்களில், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 85 ஆயிரத்து 850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்குப் பதிவுச…

  25. அரவக்குறிச்சி வேட்பாளர் மீது, காய்ச்சிய எண்ணெயை.... ஊற்றிய மனைவி. கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாளர் ராஜேஷ்குமார் மீது அவரது மனைவி காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கப்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்குமார், பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலை சேர்ந்த ரேவதியை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.