Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பொய் வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இன்று 02-11-2014 சென்னையில் தந்தை பெரியார் திராவிடர்கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பாக இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது ! ராஜபட்சே படம் எரிப்பு ! 100 க்கும் மேற்பட்டோர் கைது ! (Facebook)

  2. வைகோவை விமர்சித்து கிண்டலுக்கு உள்ளான எஸ்.வி.சேகர்: பேட்டி எடுத்த செய்தியாளரே மறுப்பு Published : 03 Jan 2019 17:21 IST Updated : 03 Jan 2019 17:21 IST எஸ்.வி.சேகர், வைகோ- கோப்புப் படம் Published : 03 Jan 2019 17:21 IST Updated : 03 Jan 2019 17:21 IST தனது மகன் சிகரெட் கம்பெனி ஏஜென்சி நடத்துவது குறித்து வைகோ 3 ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்த எஸ்.வி.சேகரை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைக…

  3. இலங்கையுடனான... உறவினை, துண்டிக்க வேண்டும் – சீமான் இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது. இது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்கு பெருங்கேட்டை விளைவிக்கக் கூடிய பேராபத்து. சீனாவின் ஆதிக்கத்தை கண்டிக்கவும், தடுக்கவும் முற்பட வேண்டும். நட்ப…

  4. சென்னை: இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களை காக்க 1974ஆம் ஆண்டு இந்திய-இலங்கை அரசால் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "கடலில் மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் தாக்கப்பட்டு துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இதனால் அவர்களது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாக் ஜலசந்தியை கடக்ககூடாது என மிரட்டப்படுகின்றனர். எனவே அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இந்திய குடியுரிமையை ஒப்படைத்து விட்…

  5. ' கருணாநிதியை ஏன் வாழ்த்தினார் திரௌபதி மர்மு?' - பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சீக்ரெட் #VikatanExclusive இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ' பா.ஜ.க வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் யாரை முன்னிறுத்தப் போகின்றன?' என்ற கேள்விகளும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன. ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய சூழலுக்கு மாநிலக் கட்சிகள் தள்ளப்படலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தே…

  6. நாற்காலிகள் காட்டிய நாகரிகம்! - சரித்திரம் படைத்தது சட்டப் பேரவை ஜூன் 23-ம் தேதி - தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மட்டுமல்ல; தமிழக அரசியல் வரலாற்றிலும் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க முக்கியமான நாள். அரசியல் ஜனநாயக மாண்பை ஆளும் அ.தி.மு.க-வும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் ஒருசேரக் காப்பாற்றி, தமது உன்னதக் கடமையை ஒருசேர ஆற்றியிருந்தன. செய்த தவறுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டதும், பரந்த மனதோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதை ஏற்றுக்கொண்டதும் அரசியல் ஆச்சர்யங்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் பேரவைக்குள் இருந்திருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்குமா என்பது ஐயமே. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இன்று முதலமைச்சர் நாற்கால…

  7. பரப்பர அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் ரத்து - வேறு அறைக்கு மாற்றம் பரப்பர அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார். பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 மாதங்களாக அவர்கள் சிறையில் உள்ளனர். ஆரம்பத்தில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு சொகுசு அறைகள் ஒதுக…

  8. கட்சிப் பதவி பறிப்பு, காட்டமாக விமர்சித்த கனிமொழி – பொன்முடி என்ன பேசினார்? சர்ச்சையின் முழு பின்னணி பட மூலாதாரம்,PONMUDI கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் க.பொன்முடி விடுவிக்கப்படுவதாக, வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் தொழிலாளர் குறித்த பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்கு ஆளான நிலையில், 'இப்படிப்பட்ட பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தி.மு.க எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது ஏன்? சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசியது என்ன? திராவிடர் கழகத்தின் …

  9. சசிகலா குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் 'பளிச்'சென அம்பலமாகி வருகின்றன. தினகரன் - திவாகரன் இடையே வெடித்த குடும்பத்தில் கடும் கசமுசா ஏற்பட்டுள்ளது.இதை, திவாகரன் மகன், ஜெயானந்த், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோரின் 'பேஸ்புக்'பதிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா குடும்பத்திற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு சென்றதும், மோதல் அதிகரித்தது. சசிகலா அறிவுரைப்படி, அவரது அக்கா மகன் தினகரன், புதிய கட்சியை துவக்கி உள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியில் தன் மகனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி தினகரன் தனித்து செயல்பட்டு வருகிறார். இது, த…

  10. ' ராஜீவ் கொலை சதியோடு இந்தியா வரவில்லை என்பதை சொல்வீர்களா?' -சி.பி.ஐ அதிகாரிக்கு சாந்தனின் கண்ணீர் கோரிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாந்தன். ' வெளிநாட்டு வேலைக்காத்தான் இந்தியா வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஒருமுறையேனும் பகிரங்கமாக வெளியில் சொல்வீர்களா' என தன்னைக் கைது செய்த காவல்துறை உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் வைக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளன…

  11. மது பாட்டிலில் பூச்சி... நல்ல "சரக்கு" கொடுக்க துப்பு இல்லாத அரசு.. குடிகாரர்கள் குமுறல்!!!!! திருச்சி: பணம் கொடுத்துதானே மது வாங்குகிறோம். எங்களிடம் கொள்ளை கொள்ளையாக பணத்தை வாங்கிக் கொண்டு பூச்சி மிதக்கும் மதுவை விற்கிறார்கள் என்று திருச்சியில் மது வாங்க வந்தோர் புலம்பி குமுறியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள 10229 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையில் சிலர் மது வாங்கியபோது அதில் பூச்சிகள் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த மது பாட்டிலுக்கு பில் தருமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் கடைக்காரர்கள் தர மறுத்து விட்டனர். இதையடுத்து பல்வேறு பத்திரிகை அலுவலகங்களுக்குப் போன் செய்து செய்தியாளர்களையும், புகைப்படக்…

  12. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்: ஜெ. அதிரடி- பின்னணி என்ன? முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை கட்சி பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் நிதியமைச்சர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். நிதியமைச்சராக உள்ள ஓபிஎஸ் மீது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக ஜெயலலிதாவின் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் துணை சபாநாயக…

  13. புதுச்சேரியில் 300 கணினி வல்லுநர்கள் பங்கேற்கும் 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்தும் நோக்கத்தில் 13-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, புதுச்சேரியில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட கணினி வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மூத்த மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடி காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளர்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் கோலோச்சி நிற்பதற்கு காரணம், தமிழ் மென்பொருள் வளர்ச்சி. தம…

  14. கள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி? வரலாறு காணாத அவமானத்துடன் தமிழகத்திலிருந்து டெல்லி திரும்பியிருக்கிறார் நரேந்திர மோடி. ஆயுதக் கண்காட்சியைத் திறந்துவைக்க வந்த மோடிக்கு எதிராகக் கறுப்பு என்ற நிறத்தையே ஆயுதமாக ஏந்தியது தமிழகம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய அரசின் அலட்சியம், ‘ஸ்கீமா, காவிரி மேலாண்மை வாரியமா?’ என்ற வார்த்தை விளையாட்டு விளையாடிய வஞ்சகம், ஆறுவாரக் கெடு முடிந்தபிறகு உச்சநீதிமன்றத்தை அணுகிய மமதை, கர்நாடகத் தேர்தல் ஆதாயத்துக்காகத் தமிழர்களின் முதுகில் குத்திய துரோகம்... என எல்லாவற்றுக்கும் எதிராக எழுந்த எதிர்ப்புதான் கறுப்பாய் மாறியது. ஒரு பிரதமர் பயங்கரவாதிகளுக்கு பயந்து பாதுகாப்பை நாடலாம். ஆனால், நரேந்திர மோ…

  15. ஜெ., சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கை விசாரிக்க ஜாமின் உத்தரவும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு ! புதுடில்லி : தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் பெற்றுள்ள ஜாமின் வரும் 4 மாதங்களுக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே சொன்னது போல் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் வழக்கை நாள் தவறாமல் நடத்தி குறிப்பிட்ட 3 மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை நீதிபதி தத்து தலைமையிலான நீதிபதிகள் பெஞ்ச் இன்று ஆணை பிறப்பித்தது. கடந்த, 1991-96ல் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்துகள் சேர்த்ததாக பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஜெ., …

  16. கலக்கும் தலைநகர்.. சென்னைக்கு வருகிறது ஐபோன் உற்பத்தி.. பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! டுத்த வருடத்தில் இருந்து சென்னையில் ஃபாக்ஸ்கான் போன் உற்பத்தி ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. ஆசியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னையில் ஆட்டோமொபைல் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் எலக்ட்ரானிக் சாதனங்களும் அதிக அளவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. சென்னையை நோக்கி பிரபல தொலைபேசி நிறுவனங்கள் படை எடுத்து வருகிறது.இந்த நிலையில் உலகின் முன்னணி தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சென்னையில் தொடங்க உள்ளது. 2019ல் இருந்து சென்னையில் ஐபோன் உற்பத்தியை செய்ய உள்ளது…

  17. தண்ணீரின்றி கருகிய பயிர்கள்.. காவிரி டெல்டாவில் இதுவரை 5 விவசாயிகள் மரணம்.. தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகி வருகிறது. அடுத்தடுத்து அதிர்ச்சியில் விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர் கருகிய நெற்பயிரைக் கண்டு மரணமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜீவாதாரமே விவசாயம்தான். ஜூன் மாதம் வரவேண்டிய காவிரி நீர் வராத காரணத்தால் கடந்த சில மாதங்களாக குறுவை பொய்த்துப் போக, காலம் தாழ்ந்து வந்த காவிரி நதிநீரை நம்பி சம்பா பயிரிட்டனர். வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் என்று நம்பிய நிலையில் மழையும் இன்னும் சரிவர பெய்யவில்லை. கடன்வாங்கி பயிரிட்ட நெற்பயிர்கள் கருகியதுதான் மிச…

  18. காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள் திருப்பரங்குன்றம் நிலவரப்படி காலை 9.30 மணி நிலவரப்படி 18% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தஞ்சை தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சையில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது இதனால் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. அரவக்குறிச்சி வாக்குச்சாவடியில் 96 வயதான ஒரு பாட்டி ஓட்டளிக்க வந்திருந்தார். புதுச்சேரி, நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் 9.11 மணி நிலவரப்படி 18.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. http://www.vikatan.com/news/politics/72853-people-coming-to-vote.art

  19. திமுகவின் பொற்கால ஆட்சியில் வெற்றிகள் தொடரட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும்: ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து செய்திப்பிரிவு வைகோ - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 153 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் …

  20. ராஜீவ் படுகொலை: பதற வைக்கும் 10 மர்மங்கள் -அதிர வைக்குமா ஆவணப்படம்? ' ராஜீவ் காந்தி படுகொலையின் நேரடி சாட்சியான 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்' என விகடன்.காம் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அவர் 'உயிரோடு இருக்க வாய்ப்பில்லை' என மறுப்பு தெரிவித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதையே, ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மற்றும் தடயவியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று காலையில், ஈரோட்டில் வைத்து ராஜீவ் படுகொலை தொடர்பான மர்மங்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஆவணப்படக் குழு. ராஜீவ் காந்தி படுகொலையின் மர்மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்ற…

  21. 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கான சட்ட மசோதா, கடந்த மாதம் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் கவர்னரின் ஒப்புதல் கிடைக்காததால் மூத்த அமைச்சர்கள் சிலர் சென்று கவர்னரை வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார். பல கோணங்களில் அந்த ம…

  22. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாத்து மேய்ப்பதற்காக 5 சிறுமிகளை பண்ணையில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்து, அவர்களை 10க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய குந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது 16 வயது சிறார் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தை தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், சிறுமிகள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இட…

  23. மாமூல் வாங்கு, வழிப்பறி செய், அடித்துக் கொல் - தமிழக காவல்துறையின் தாரக மந்திரங்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஜெயராஜும், அவரது மகனும் காவல் துறையால் கொடூரமாக அடித்து, சித்தரவதை செய்யப்பட்டதோடு பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டதால் அவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணம் அடைந்திருக்கின்றனர். தமிழக காவல் துறையின் இந்த அரக்கத்தனத்திற்கு எதிராக தூத்துக்குடி மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துப் போய் இருக்கின்றது. வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அரசு தன்னுட…

  24. நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் July 22, 2019 ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான நளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நளினி ஆறு மாதம் பரோல் கேட்டிருந்த போதும் அவருக்கு ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. மத்திய சிறையில் இருந்து வெளியே வரும் அவர் ; உறவினர்களுடன் தங்குவதற்காக வேலூரில் வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த நாட்களில் இவர் அங்கு மட்டுமே தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆண்டு சிறை வாழ்க்கையில் அதிக நாட்கள் நளினி பரோலில் வெளியே வருவது இது முதல் முறையாகும். இறுதியாக நளினி தன்னுடைய தகப்பனாரது இறுதிச் சட…

  25. என்றாவது ஒருநாள் அறம் வெல்லும்; அநீதி அழியும்’ என்பதே, தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் நம்பிக்கை. அக்கூற்றினை மெய்ப்பிக்கின்ற வகையில், தமிழ் இனக் கொலைகாரன்-சிங்கள இனவாத ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றான். ஜெனீவா நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து, உலகம் தடை செய்த குண்டுகளை வீசி, பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாதோர் என இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த குற்றவாளி ராஜபக்சே. ‘இலங்கைத் தீவில் தமிழர் என்ற இனம்’ என்பதே கிடையாது என்று கூறி, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரித்து, சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் அங்கு நிறுத்தி, தமிழர் தாயகத்தை இட்லரின் வதை முகாமைப் போல ஆக்கினா…

    • 0 replies
    • 586 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.