Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிஸ்டர் கழுகு: ‘ஃபெரா’ பொறியில் தினகரன்! - தள்ளிப்போகுமா ஆர்.கே.நகர் தேர்தல்? ‘ஆர்.கே. நகரிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். ஜூ.வி அட்டையைத் தயார் செய்யவும்’ என வாட்ஸ்அப்பில் வந்து விழுந்தது கழுகார் மெசேஜ். கூடவே, ‘ஃபெரா பொறியில் தினகரன்... தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பும் வந்தது. சில நிமிடங்களில், முகத்தில் வியர்வை முத்துகள் படர்ந்த நிலையில் வந்த கழுகாருக்காக ஏ.ஸி-யின் டெம்பரேச்சரை குறைத்தோம். ‘‘ஆர்.கே. நகர் அரசியல் டெம்பரேச்சர் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது’’ என முன்னோட்டம் கொடுத்துவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார் கழுகார். “டி.டி.வி.தினகரன் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டோம். ‘‘அவர் மற்ற வேட்பாளர்களைவிட க…

  2. கலகலக்குமா... சலசலக்குமா..! பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியினர் இன்று முதல்கட்ட பேச்சு சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி அணி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. சசிகலா தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் உருவானது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சசிகலா அணியினர் தினகரன் உத்தரவுகளின் கீழ் செயல்பட்டதாக கூறப்பட்…

  3. தமிழகத்தில்... 27 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ளன- மத்திய கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கல்வி செயற்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இந்தியா முழுவதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் மதுரை, நாகை, சேலம், அரியலூர், கோவை, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதேபோன்று மத்தியப் பிரதேசத்தில் 39 மாவட்டங்களும் உத்தரப் பிரதேசத்தில் 41 மாவட்டங்…

  4. ''முடிவுக்கு வருகிறதா மன்னார்குடி ராஜ்ஜியம்?”- குழப்பத்தில் குடும்பங்கள்! முப்பது ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம், இப்போது தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாகத் தளர்ந்துபோகும் நிலையை மன்னார்குடி உறவுகள் உணர்ந்துள்ளார்கள். ஆனாலும், கட்சியைக் கைப்பற்ற உச்சகட்ட போராட்டத்துக்குத் தயாராகிவருகின்றன மன்னார்குடி உறவுகள். பன்னீருக்குப் பதிலாக சசிகலா குடும்பத்தினால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிசாமி அந்தக் குடும்பத்துக்கு எதிராகத் திரும்புவார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் எந்தத் தினகரன் வெற்றிக்காக... வீதிவீதியாக யார் எல்லாம் களம் இறங்கினார்களோ, …

  5. 'எங்கே கருணாஸ்..?' - தேடுதல் பணியில் தினகரன் அணி 'என்னுடைய ஆதரவு தினகரனுக்குத்தான்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே நேரிடையாகத் தெரிவித்தவர் கருணாஸ் எம்.எல்.ஏ. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் கருணாஸைத் தேடி வருகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். அ.தி.மு.க-வில் அணிகள் இணைந்த பிறகு, அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கொடி பிடித்துள்ளனர். ஆளுநர் வித்யாசாகரைச் சந்தித்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்கள் தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். அதில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். இந்த ஆட்சிக்கு ந…

  6. 19 தொகுதிகளில் தேர்தல் முதல்வர் திடீர் முடிவு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து விட்டு, ஆர்.கே.நகருடன் சேர்ந்து, 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி, சட்ட நிபுணர்களுடன் ஆலோனை நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. 'முதல்வர் பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறுகிறோம்' என, கவர்னரிடம் கடிதம் கொடுத்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேருக்கு விளக்கம் கேட்டு, சட்டசபை சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதில், ஜக்கையன் மட்டும் பதில் அளித்தார்; அத்துடன், முதல்வர் அணிக்கும் மாறினார். ஆனால், ம…

  7. ஓகி புயல் காரணமாக 619 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் : ஓகி புயலின் தாக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 433 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தென் பகுதியில் ஓகி புயல் தாக்கியதால் பேரழிவு ஏற்பட்டதுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிற மாநிலங்களில் கரைசேர்ந்துள்ள நிலையில், இன்னும் ஏராளமான மீனவர்களைக் காணவில்லை என்பதுடன் மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், 433 தமிழக மீனவர்கள் உள்பட 619 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவ…

  8. சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உத்தரவிடும்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாஜ மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பஸ் சேவையை நிறுத்துவது, தனியார் பள்ளிகளை மூடுவது போன்றவற்றில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. ஆனால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதை எல்லாம் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் செயல்படாமல் உள்ளார். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்ள இத…

  9. காலா ரஜினி போராடினால் சரி; தூத்துக்குடி மக்கள் போராடினால் தவறா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் வெடித்தது, காவல்துறையினரை தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கடு…

  10. இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள், காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் பங்குபற்றியுள்ளனர். இதேவேளை, இந்தப் பேரணியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களுடன் சீக்கிய இன சகோதரர்களும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தினை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது. htt…

  11. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மது…

  12. பட மூலாதாரம்,TNDIPR 5 ஏப்ரல் 2023, 08:38 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். தீர்மானத்திற்கு பதில் அளித்தபோது, தானும் ஒரு 'டெல்டாகாரன்' என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த எந்தவிதத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய தி…

  13. 8 வழிச்சாலை: நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது - சென்னை ஹைகோர்ட் அதிரடி. சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப…

  14. ஜெயிட்லி -ஜெயலலிதா சந்திப்பு குறித்து அரசியல் சர்ச்சை சர்ச்சையில் சிக்கிய ஜெயிட்லி ஜெயா சந்திப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, தனது பதவியை இழந்த முதல் முதல்வரான ஜெயலலிதாவை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்தது பற்றி தமிழ்நாட்டில் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேவை ஏன் ஏற்பட்டது என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஜெயலலிதா மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அவரது அதிகாரப்பூர்வ சமுக வலைதளங்களிலும் வெளியாகியுள்ள இந்த விமர்சனத்தில், "மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே போவது?" என்கிற வா…

  15. சசிகலா-நடராஜனின்-கதை

  16. 'இலங்கைக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்' என இலங்கைக் கடற்படை அதிகாரி எச்சரிக்கை. இதனால், மீனவர்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். கச்சத்தீவு இலங்கை வசம் கொடுக்கப்பட்டது முதல் இந்திய மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் இலங்கைக் கடற்படையின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது, தமிழகக் கடலோரப் பகுதியிலிருந்து சர்வதேச கடல் எல்லையின் தூரம் மிகக் குறைவாக இருப்பத…

    • 0 replies
    • 1.1k views
  17. வி.கே.புரம்: பாபநாசம் அணை 100 அடியை எட்ட இன்னும் 3 அடிகளே தேவை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சற்று குறைந்த நிலையில் பாபநாசம் அணை நாளை 100 அடியை எட்டுமா? என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஆக.5ம் தேதி முதல் மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் தொடர்ந்து சாரல் பொழிந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் குண்டாறு அணையும், கொடுமுடியாறு அணையும் நிரம்பியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை நேற்று சற்று குறைந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 94.80 அடியாக இருந்தது இன்று காலை 97 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1521 கனஅடி நீர் வருகிறது. 154.75 …

    • 2 replies
    • 910 views
  18. எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மடத்தின் ரூ.1,000 கோடி சொத்துகளை அபகரிக்கவே திருமணம் நடந்துள்ளதாக சிலர் புகார் கூறியுள்ளனர். திருமணம் நடந்தாலும் தனது மனைவி கர்நாடகாவிலேயே இருப்பார், மடத்துக்குள் உரிமை கோர மாட்டார் என்கிறார், சூரியனார் கோயில் ஆதீனம். சூரியனார் கோயில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது ஏன்? இந்தச் சர்ச்சை குறித்து ஆதீனத்தின் மனைவி சொல்லும் பதில் என்ன? சூரியனார் கோயில் ஆதீனம் தமிழ்நாட்டில் உள்ள 18 சைவ மடங்களில் ஒன்று சூரியனார் கோயி…

  19. வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு சென்னையில் சூழ்ந்த மழை மேகங்கள். | படம்: வீ.கணேசன் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் மட்டுமே வங்கக்கடலில் உருவானது. இதனால், குறைவான மழையே தமிழகத்துக்கு கிடைத்தது. ஆனால், இந…

  20. மேட்டுப்பாளையம் விபத்தில் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த கல்லூரி சென்ற மகளும், பள்ளியில் பயின்ற மகனும் உயிரிழந்த சோகத்திலும் அவர்களின் கண்களைத் தானமாக வழங்கியுள்ளார் டீக்கடை தொழிலாளி ஒருவர். தொடர் கனமழை காரணமாக நேற்று அதிகாலையில் மேட்டுப்பாளையம், நடூர் ஆதி திராவிடர் காலனியில் கட்டப்பட்டிருந்த 20 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இதில் தூக்கத்தில் இருந்த ஆண், பெண், குழந்தைகள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தைப் பரபரப்பில் ஆழ்த்திய இந்த விபத்தைப் பலரும் கண்டித்து சுவர் கட்டிய உரிமையாளரைக் கைது செய்ய வலியுறுத்தினர். சம்பவ இடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுத…

  21. மதுரையில் அரசு பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 14 பேர் பலி; 45 பேர் காயம் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி மதுரை அருகே அரசுப் பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து இன்று குமுளிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து இன்று மாலை 4.15 மணி அளவில் மதுரை மாவட்டம், ட…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 17 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 18 ஏப்ரல் 2025 தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்? தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்…

  23. தமிழ்நாட்டில் தொடரும்.. சினிமா நட்சத்திரங்களின் ஆட்சி.. தொடர்பில்.. பிபிசி கேள்வியுடன்.. பதிலைத் தேடுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக எழாத இக்கேள்வி இன்று எழக் காரணம்.. நாம் தமிழர் கட்சியின் வரவாகக் கூட இருக்கலாம். Where only film stars win elections 7 hours ago As reality TV star-turned-politician Donald Trump continues his bid for the Republican nomination in the US, another race thousands of miles away is also proving the political appeal of show-business. Movie stars have been dominating politics in the southern Indian state of Tamil Nadu for more than five decades. But what makes former actors from the silver screen such successful p…

  24. பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் இது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்த புகைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர். பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும். பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்ப…

  25. 'சுவாதி வழக்கில் கைதானவரைப் பற்றி என்ன சொல்வது?' -கமிஷனர் பதில் மென்பொறியாளர் சுவாதியை, ராம்குமார் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அவரிடம் பழக முடியாததால் கொலை செய்துள்ளார் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்தது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, அவர் கூறுகையில், "கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தனர். அங்கிருந்து எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுவாதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.