தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கை தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான் என்பதை வலியுறுத்தியும், சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபச்சேவை போர்க்குற்றவாளி என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் கனகராஜ், செந்தில், மாதேசா, யுவராஜ், அகிலன், பழனிகுமார், பாண்டி, சந்திரசேகர், இளவரசன், பழனிவேல், அமிர்தலிங்கம் என 11 பேர் கடந்த 12.03.2013 முதல் சென்னை புரசைவாக்கத்தில் விடுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். படங்கள்: ஸ்டாலின்
-
- 0 replies
- 355 views
-
-
நாம் விரும்பாவிட்டாலும் தனிமனித வாழ்க்கையில் சில விசயங்கள் எப்படியோ நடந்துவிடுகின்றன. அரசியல், பொது விவகாரங்களிலும்கூட பல நேரங்களில் இது போல நேர்வது உண்டு. இந்திய தமிழ் மீனவர்களை கடல்நடுவில் வைத்து தாக்குவது, சுட்டுக்கொல்வது என இலங்கை அரச கடற்படையினர் நடத்தும் வன்செயல்கள் அண்மைக்காலமாக மீண்டும் அளவுகடந்து வருகிறது. குறிப்பாக, ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு, ஒன்றன்பின் ஒன்றாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும் கைதுகளும் அரங்கேறிவருகின்றன. கடந்த மார்ச் 3ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 16 பேர் கைதுசெய்யப்பட்டனர்.…
-
- 0 replies
- 395 views
-
-
தம்பிதுரை அறிக்கை சீர்குலைக்கும் செயல்: ஸ்டாலின் சென்னை : 'முதல்வருக்கு உள்ள பலத்தை, சட்டசபையில் உடனடியாக நிரூபிக்க, கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். அவரது அறிக்கை: முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது. கொச்சைப்படுத்தி விட்டார் திடீரென, முதல்வர் பதவியை சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி, கவர்னர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, சசிகலா முதல்வராக வேண்டும் என, ஒரு அறிக…
-
- 0 replies
- 322 views
-
-
' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!' -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு தி.மு.க நிர்வாகிகளில் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் சற்று வித்தியாசமானவர். நடப்பு அரசியலை நையாண்டி செய்து கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் வல்லவர். மெரினா போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை விமர்சித்து, அவர் எழுதிய பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மெரினா புரட்சியின் விளைவால், அவசரச் சட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் டெல்லி சென்ற காட்சிகளை, 'மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்' என்ற தலைப்பில் நையாண்டி செய்திருந்தார். இறுதியாக, 'இடைவேளைக்குப் பிறகான ரஜினி படம் …
-
- 0 replies
- 520 views
-
-
சசிகலா `புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ - சசிகலா தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும். நம்முடைய பொது…
-
- 15 replies
- 2.2k views
-
-
'ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றி ஆதாரங்கள் திரட்டுகிறோம்' - விடாது 'பீட்டா' பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டப் பிறகு நடந்த போட்டிகளில் 'மிருகவதை பற்றி ஆதாரங்களைத் திரட்டி வருவதாக' தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்த நிலையில், இந்தாண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டங்களால் சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தமிழகமெங்கும் நடந்தது. தற்போது பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, 'இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகமாக மிருகவதை நடந்தது. மிருகவதை பற்றிய …
-
- 0 replies
- 202 views
-
-
யாழ்ப்பாணம் சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 53 பேர் விடுதலை! தமிழக மீனவர்கள் 53 பேர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுவித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட 53 மீனவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கைச் சிறைகளில் மொத்தம் 85 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர், மீனவர் நலன் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வைக்கப்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா - இலங்கை இரு நாடுகளும் த…
-
- 0 replies
- 340 views
-
-
சசிகலா, டி.டி.வி. தினகரன் நீக்கம்? - மா.செ. கூட்டத்தில் கிரீன் சிக்னல் ர் சசிகலா, டி.டி.வி.தினகரனை நீக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை நீக்க யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று கட்சித் தலைமை கழக நிர்வாகி கேள்வியை எழுப்பி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் அ.தி.மு.க.வில் உருவாகின. இது, அ.தி.மு.கவில் கடும் களேபரத்தை ஏற்படுத்தியது. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இர…
-
- 0 replies
- 358 views
-
-
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்றவற்றை வகுப்பறைக்கு அணிந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது என்று டி ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து வரவேண்டும். மாணவிகள் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் ஷர்ட் அணியக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று உத்தரவில…
-
- 4 replies
- 371 views
-
-
தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னை வர உத்தரவு பிறப்பித்தார் மு.க.ஸ்டாலின்! தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை காலை சென்னை வர தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையை கூட்டக்கோரி இன்று மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டப்பேரவை விவாதங்கள் அவசியம். ஆனால், சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டம் விதிகளுக்கு மாறாக இறுதி செய்யப்பட்டுள்ளது. துறை வாரியான மானியக் கொள்கைகளை விவாதிக்க, சட்டமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார். இதனிடையே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னை வர வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்…
-
- 0 replies
- 466 views
-
-
கட்டிடத்தின் உள்ளே ஏற்பட்ட தீ விபத்தால் வெளியேறும் புகை. படம்: க.ஸ்ரீபரத் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட நெருப்பை அணைக்க முடியாததால், தீ மற்ற தளங்களுக்கும் பரவி, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 7 மணி நேரமாக எரியும் நெருப்பால், கட்டிடத்தின் உள்பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் தொடங்கிய நெருப்பு வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவிவருகிறது. தற்போது நெருப்பு 7 தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தியாகராய நகரில் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதால் முழுவீச்சில் செயல்பட இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 4 replies
- 845 views
-
-
மிஸ்டர் கழுகு: ‘கர்ஜனை’ கமல்! - தூண்டுகிறதா தி.மு.க? தமிழக சட்டசபை வளாகத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்த கழுகார், அங்கிருந்து நேரடியாக அலுவலகம் வந்தார். ‘‘வாக்குப்பதிவு காட்சிகளில் அரசியலுக்குப் பஞ்சமில்லை. கருணாநிதி வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா இடம் காலியாக உள்ளது. மற்ற 232 பேர் வாக்களித்துவிட்டார்கள்” என்று தொடங்கினார். ‘‘கருணாநிதி வருகை கடைசி வரையில் சஸ்பென்ஸாகவே இருந்ததே..?’’ ‘‘ஆமாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் இரண்டு மணி நேரத்துக்குள் வாக்களித்து விட்டனர். மாலை ஐந்து மணி வரையில் வாக்குப்பதிவு நேரம் இருந்தும் கருணாநிதி வரவில்லை. ‘எம்.பி-க்களும் முன்கூட்டி…
-
- 0 replies
- 870 views
-
-
6 ஜனவரி 2014 நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது. தீட்சிதர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலரதவீதியில் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.செந்தில் தலைமையில் மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமைய…
-
- 1 reply
- 646 views
-
-
கோவை: இலங்கைப் பயணியின் வயிற்றிலிருந்து 20 தங்கத் துண்டுகள் பறிமுதல்! கோவை விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர், 20 தங்கத் துண்டுகளை வயிற்றில் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, விமான நிலையத்திலிருந்து கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு நேரடியாக விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்புவிலிருந்து, கோவை விமானநிலையம் வந்தவர்களில், இலங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சோதனை செய்த…
-
- 0 replies
- 478 views
-
-
“எந்த மொழியையும் எதிர்க்கக் கூடாது” – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியது என்ன? 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார். இன்று மாலை சிலையைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, "பிற மொழிகளைக் கற்பதிலோ பேசுவதிலோ தவறு இல்லை. ஆனால், தாய்மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம். நம் மொழியை ஆதரிப்போம்," என்று கூறியுள்ளார். தமிழ்…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
7 தமிழர் விடுதலை வழக்கு - கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: கருணாநிதி. சென்னை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை விவரம்: கேள்வி: சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை அரசியல் சாசன பெஞ்சுக்குமாற்றி உள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? ப தில்: இவைகள் எல்லாம் வழக்கு விஷயங்கள். இவைகள் நீதிமன்ற வ…
-
- 2 replies
- 553 views
-
-
ஜக்கி வாசுதேவின் பாம்புப்பிடி செயலால் தொடரும் சர்ச்சை - என்ன சொல்கிறது ஈஷா? க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISHA FOUNDATION படக்குறிப்பு, பாம்புடன் ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது கர்நாடகாவிலுள்ள சிக்கபல்லபூரில் காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தை மீறி சாரைப் பாம்பு ஒன்றை தன்னுடைய நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக அம்மாவட்ட வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாக பூஜையின்போது அந்த இடத்திற்குள் நுழைந்த பாம்பை, அதன் பாதுகாப்பு மற்று…
-
- 0 replies
- 760 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டு பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு NFHS-5 தெரிவிக்கிறது. NFHS-5 மற்றும் NFHS-4 தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது தெரியவருகிறது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கவுன்சில் ஃபார் சோஷியல் டெவலப்மென்ட் அமைப…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
5 மீனவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட மறை ஆயர் சேசு ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மீனவர்கள் தூக்கை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குடும்பத்தாரும், அவர்களுடன் மீனவ சமுதாயத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என 3000 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். திமுகவின் சுப.தங்கவேலம், காங்கிரஸ் கட்சியின் ராமன் உன…
-
- 0 replies
- 448 views
-
-
கத்தி, வாள்களுடன் பேருந்துகளில் பயணிக்கும் தமிழ் மாணவர்கள்.! சென்னையிலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் நாயக மனோபாவத்துடன் தங்களுக்கென்று ஒரு குழு சேர்ந்துகொண்டு பிற மாணவர்களுடன் சண்டையிடுவதும், தாங்களே பெரியவர்கள் என்பதனை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வதும் வாடிக்கையான செயலாகிவருகிறது. மாணவர்களுக்குள் நடக்கும் மோதலில் சில மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பேருந்துகளில் வந்து பயணிகளையும் பயம் கொள்ள செய்கிறார்கள். சமீபத்தில் இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கல்லூரிகளும் இத்தகைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனபோதிலும் மாணவர்கள் சேட்டை அடங்கவில்லை. இன்றும் அரசு பஸ்…
-
- 0 replies
- 519 views
-
-
மானாமதுரை அருகே மூங்கில் ஊருணியில் இடிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வீடுகள். மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புதிய வீடுகள் கட்டித் தருவதாக அதிகாரிகள் கூறியதை நம்பி, குடியிருந்த வீட்டுகளை இடித்துவிட்டு 52 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊருணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 இடங்களில் உள்ள முகாம்களில் 1,609 இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் வசிக்கும் பழைய வீடுகளை இடித்துவிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தலா ரூ.5 லட்சத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மானாமதுரை அருகே மூங்கில் ஊருணி முகாமில் 186 குடும…
-
- 3 replies
- 673 views
-
-
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் கோவில்பட்டி நகராட்சியின் 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர். இவர் நேற்று காலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொண்டார். தீ காயங்களுடன் துடித்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட நாகராஜன் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.நாகராஜனுக்கு சுதா என்ற மனைவியும், முத்துசெல்வி என்ற மகளும், சேதுரெங்கராஜ் என்ற மகனும் உள்ளனர்.இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தான் அவர் தீ …
-
- 0 replies
- 543 views
-
-
Published By: VISHNU 06 NOV, 2023 | 05:09 PM இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 6 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை (6) தொடங்கி நடத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆகிய இரு தேதிகளில் மீன்பிடிக்க…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை. அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. ஆனால் அவர் மீது சக அதிகாரிகளே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பணியின் போது பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் அளிப்பதாக புகார் தெரிவித்தனர்.இந் நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது…
-
- 1 reply
- 916 views
-