Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்பீக்கர் உதவியுடன் பேசும் ஜெயலலிதா : அப்பலோ மருத்துவமனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 'ட்ராக்யோஸ்டமி' செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். சென்னைக்கு அருகில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதாப் ரெட்டி, "ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால், ஜெயலலிதாவுக்கு சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பேசுவது எளிதல்ல. மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசவேண்டும். சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படிப் பேசுகிறார்" என்று கூறியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ ம…

  2. 200 ஆண்டுகளுக்கு முந்தைய மைல் கல்லில் 'தமிழ்': மொழிக்கு பெருமை சேர்த்த ஆங்கிலேயர்கள் பல்லடம் அருகே கண்டெடுக்கப் பட்ட மைல் கல்லில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஜெ.கிருஷ்ணா புரம் அருகே அண்மையில் மிகப்பழமையான மைல் கல் ஒன்று சாலையோரத்தில் இருப்பது தெரியவந்தது. அதில் ரோமன், அரபிக் மற்றும் தமிழ் எண்களில் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் ரவிக்குமார் கூறியதாவது: தற்போது கண்டெடுக்கப்பட்ட மைல் கல் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்…

  3. ‘மக்கள் நலக் கூட்டணியின் ஆயுள் முடிந்துவிட்டது!’ - அரசியல் விமர்சகர்கள் மக்கள் நலக்கூட்டணி முடிந்துவிட்டது என்று அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் பேசி வரும் நிலையில் அதில் உள்ள தலைவர்களான வைகோ மற்றும் திருமாவளவன். ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோர் அவ்வப்போது தோன்றி கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தா.பாண்டியனிடம்…

  4. 'இசை மேதை' பாலமுரளி கிருஷ்ணா காலமானார் பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்குக்கு வயது 86. சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. தேசிய விருதுகள், பத்ம விபூஷண், செவாலியே, சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர். திருவிளையாடல் படத்தில் வரும் 'ஒரு நாள் போதுமா' என்ற பாடல் இவரை பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது. கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு இடம் கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்தியவர் இவர். நடிகர் கமல்ஹாசன் இவரை பற்றி குறிப்பிடும்போது 'என் இசை குரு' என்பார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர். http://www.vikatan.com/news/tamilnadu/73159-great-carnatic-sing…

  5. ‘அமைச்சர் பதவியில்தான் இருக்கிறாரா ஓ.பி.எஸ்?!’ -கடுகடு கார்டன்; கதிகலக்கும் கோட்டை அப்போலோ மருத்துவமனையில் 62 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘முதல்வருக்கான அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தாலும், அமைச்சரவையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட ஒருவராகத்தான் ஓ.பி.எஸ் நடத்தப்படுகிறார்’ என அதிர வைக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக, நல்லமுறையில் குணமடைந்து வருகிறார். அவர் எப்போது கார்டன் திரும்ப வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்வார் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துவிட்டது. அதற்கேற்ப, மருத்துவமனையில் தங்கியிருந்து பிஸியோதெரபி சிகிச்சை பெற்று வர…

  6. எப்படி இருந்த தே.மு.தி.க....? விஜயகாந்த் சறுக்கியது இப்படித்தான் ! தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது. அடுத்தடுத்த தோல்விகளுக்கு இடையேயும் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன்…

  7. தமிழ்நாட்டில்.... விடை தெரியாத 5 மர்மமான இடங்கள்.

  8. திருப்பரங்குன்றம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் | படம்: ஆர்.அசோக். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்: அதிமுக; திமுக வேட்…

  9. 3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சி தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாடம் நடந்து வருகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். இரண்டாவது இடத்துக்கு திமுகவும், 3வது இடத்துக்கு பாஜ…

  10. அ.தி.மு.க vs அப்போலோ! சீறும் சசிகலா... பின்வாங்கும் பிரதாப் ரெட்டி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இப்போதும், “அப்போலோ நிலவரம் என்ன? எப்படி இருக்கிறார் ஜெயலலிதா? அவர் வீடு திரும்பப்போவது எப்போது?” என்ற கேள்விகள் ஐ.சி.யூ-விலேயே இருக்கின்றன. அப்போலோ - பொதுமக்கள் - அ.தி.மு.க ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் 15 நாட்கள் அவருடைய, உடல்நிலையை மையமாக வைத்து அப்போலோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அடுத்த 15 நாட்களில் அப்போலோ அரசியல்களமாக மாறித் தகித்தது. தமிழக அரசியலும் இந்திய அரசியலிலும் அப்போலோவை ம…

  11. நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி நாராயணசாமி வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் | படம்: எஸ்.செந்தளிர். நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதுச்சேரி முதல்வர் பதவியை நாராயணசாமி தக்கவைத்துக் கொண்டார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது. இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியத…

  12. 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை... பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.சென்னை: கடந்த 19ம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அல…

  13. மதன் | கோப்புப் படம். வேந்தர் மூவீஸ் நிர்வாகியும், திரைப்பட விநியோகஸ்தருமான மதன் திருப்பூரில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். வேந்தர் மூவீஸ் நிர்வாகியும், திரைப்பட விநியோகஸ்தருமான மதன், கடந்த மே 27-ம் தேதி திடீரென மாயமானார். மகனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் தாயார் தங்கம், முதல் மனைவி சிந்து, 2-வது மனைவி சுமலதா ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர். அதேநேரத்தில், ரூ.200 கோடி பணத்துடன் மதன் மாயமாகி விட்டதாக எஸ்ஆர்எம் கல்விக் குழுமமும், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி மதன் ஏமாற்றி விட்டதாக 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவர்களும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்தனர். இது ஒருபுறம் இருக்க, மதனின் தா…

  14. ஏழை மக்கள் கதறல்...20 ரூபாய் டாக்டர் மரணம்! இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது இருக்கிறது. இதற்கு பயந்து கொண்டே உடலுக்கு ஏதாவது அசவுகர்யம் ஏற்பட்டால் கூட, மருத்துவமனையை நாடாமல் நடமாடிக் கொண்டிக்கும் உயிர்கள் பல உண்டு. அப்புறம் பார்த்துக்கலாம்னு... தானா குணமாகுதுனா காத்திருக்கும் மக்களும் நிறையே பேர். 'மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ' என்பார்கள். நோயாளி உயிர் பிழைத்தால் டாக்டர்களின் க…

  15. ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் பேசுகிறார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். வாசகர் திருவிழா 2016 | காஞ்சிபுரம் சமூக மாற்றம் ஏற்பட தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வலியுறுத்தினார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முக் கிய நகரங்களில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வாசகர் திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஓசூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வாசகர்களுக்கான …

  16. ‘உங்களைச் சுற்றி என்ன நடந்தது தெரியுமா?’ - முதல்வருக்கு கடிதம் எழுதிய சசிகலா புஷ்பா 'அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி வார்டுக்கு முதல்வர் மாற்றப்பட்டார்' என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. 'நீங்கள் சிகிச்சையில் இருந்தபோது உங்களைச் சுற்றி என்ன நடந்தது என்பதைப் பற்றி உங்கள் ஆலோசகர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்' என விரிவாகவே கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 59 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். "நோய்த் தொற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டதால், கடந்த சில வாரங்களாக பிஸியோதெரபி சிகிச்சைகள் வேகமெடுத்து வருகின்றன. தற்போது எழுத்துப் பயிற்சி, கை விரல்கள் இயக்கத்திற்கான பயிற்சி…

  17. ஜெயலலிதா அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை தமிழக முதல்வர் ஜெயலலிதா,இன்று மாலை மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, அப்போலோவில் அட்மிட்டாகி நாளையுடன் இரண்டு மாதங்கள் முடிவடையப் போகிறது.ஆனால், தமிழக அரசியல் நாள்தோறும் அவரை சுற்றித்தான் நடந்துகொண்டு இருக்கிறது. நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா,டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்திகள் வெளியானது.ஆனால், அவர் தனி வார்டுக்கு மட்டுமே மாற்றப்பட்டார்.இந்நிலையில், அவர் இன்று மூன்று அமைச்சர்களை தனது அறைக்குள் அழைத்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல், ரூபாய் நோட்டுப் பிரச்னை, தமிழக அரசியல் சூழல் போன்…

  18. மக்கள் நலன்கருதி உண்மை வெளியிடப்பட வேண்டும் இ ன்று தமி­ழக மக்­க­ளிடம் மட்­டு­மன்றி உலகத் தமி­ழர்கள் அனை­வ­ரி­டமும் எழுந்­தி­ருக்கும் ஒரே கேள்வி, தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா எப்­படி இருக்­கிறார், என்­ப­துதான். ஆனால், பல்­வேறு தரப்­பி­னரும் பல கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். உண்­மை­யான நிலைமை என்­ன­வென்­பதை ஆதா­ர­பூர்­வ­மாக பொறுப்பு வாய்ந்­த­வர்கள் இது­வரை வெளிப்­ப­டுத்­தா­ததால் அனை­வரும் குழப்­பத்­திலும், சந்­தே­கத்­தி­லுமே இருக்­கின்­றனர். பல்­வேறு வதந்­தி­களும் பரவி வரு­கின்­றன. அப்­பலோ வைத்­தி­ய­சாலை தலைவர் டொக்டர் பிரதாப் சி. ரெட்டி ஒன்று சொல்­கிறார். அ.தி.மு.க. முக்­கி­யஸ்­தர்­க­ளான பொன்­னையன் மற்றும் சி.கே.சரஸ்­வதி போன்…

  19. கார்டன் திரும்புகிறாரா முதல்வர் ஜெயலலிதா?! - அப்போலோ அலர்ட் 'அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் ஆகலாம்' என்ற தகவலால் கார்டன் வட்டாரத்தில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. ' முதல்வர் வீடு திரும்புவது குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 57 நாட்களைக் கடந்து, நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். ' காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு' என தொடக்கத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு, நுரையீரல் தொற்று, சிறுநீரகத் தொற்று என அடுத்தடுத்த சிரமங்களுக்கு ஆளானார். இதையடுத்து, முதல்வருக்கு சிகிச்…

  20. காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள் திருப்பரங்குன்றம் நிலவரப்படி காலை 9.30 மணி நிலவரப்படி 18% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தஞ்சை தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சையில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது இதனால் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. அரவக்குறிச்சி வாக்குச்சாவடியில் 96 வயதான ஒரு பாட்டி ஓட்டளிக்க வந்திருந்தார். புதுச்சேரி, நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் 9.11 மணி நிலவரப்படி 18.34% வாக்குகள் பதிவாகியுள்ளன. http://www.vikatan.com/news/politics/72853-people-coming-to-vote.art

  21. சாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள். அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி. நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் க…

  22. மை வச்சா மட்டும் போதாது... நாமம் போடுங்க... பச்சை குத்துங்க- சில யோசனைகள் சென்னை : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மூட்டை மூட்டையாக கறுப்பு பணத்தை சேமித்து வைத்திருந்தவர்கள் பலருக்கும் தூக்கம் தொலைந்து போனது. வீட்டுக்காரருக்கு தெரியாமல் சேர்த்து வைத்திருந்த சில ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எப்படி மாற்றுவது என்ற யோசனையிலேயே சமையலில் உப்பு போட மறந்து விடுகின்றனர். மாமியாருக்குக் கூட தெரியாமல் பணத்தை மாற்ற வேண்டுமே என்று பரபரப்பில் இருப்பவர்களுக்கு மத்தியில் தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது மத்திய அரசு. கூட்டம் கூட்டமாக வங்கி வாசலுக்கு படையெடுத்து வருபவர்களை தடுக்க என்ன செ…

  23. பிரதமருடன் அ.தி.மு.க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கடையினர் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் தினேஷ், அரவிந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா- இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …

  24. கோப்புப் படம்: நாகர கோபால். ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் சந்தேங்களுக்கு / கேள்விகளுக்கு விளக்கும் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவி…

  25. ஜெயலலிதா வீடு திரும்புவதில் தாமதம் ஏன்?- அப்போலோ அப்டேட்ஸ்! முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்து விட்டன. அக்டோபர் 29-ம் தேதி தீபாவளி தினத்தன்றே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார். தீபாவளியை போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாடுவார் என்றெல்லாம் ஊடகங்களிலும் பரவலாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா வீடு திரும்ப ஏதுவாக, அவரது வீட்டில் சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய அறை உருவாக்கப்பட்டுள்ளது. லிப்ட் வசதி அதற்கேற்ப செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. தொடக்கத்தில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து டாக்டர் அப்போலோவுக்கு வருகை த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.