தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்க மெடிக்கல் சர்டிபிகேட் தயாரிக்கும் பாமகவினர்: ‘டாக்டர் அப்போதுதான் நம்புவாராம்’ சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்காகவே பாமக நிர்வாகிகள் பெரும்பாலானோர் கட்சித் தலைமையை சந்திப்பதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளருக்கு உரிய அனைத்துத் தகுதிகளும் தனக்கு மட்டும்தான் உள்ளது என அன்புமணியும், பாமக நிறுவனர் ராமதாஸும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்த பாமக தலைமை தயாராகி வருகிறது. இதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலும் நடத்தி முடித்துவிட்டது. இதனிடையே வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், தேர்தலில் களமி…
-
- 0 replies
- 425 views
-
-
அ.தி.மு.க., தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதுவரை, 13 பேரை, முதல்வர் ஜெயலலிதா மாற்றியுள்ளதால், வேட்பாளர் அந்தஸ்து நீடிக்குமா என்ற படபடப்பு, அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை பற்றிய புகார்கள், போயஸ் தோட்டத்தில் குவிந்து வருவதால், மனு தாக்கல் முடியும் வரை, இந்த மாற்றம் தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, இம்மாதம், 4ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்தப் பட்டியலில், புதுமுகங்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் புகார்களுக்கு ஆளானவர்கள் என்பதால், அதிர்ச்சி அடைந்த கட்…
-
- 0 replies
- 501 views
-
-
ஜெயலலிதா | கோப்புப் படம் பி.டி.ஐ. அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்கிழமை) அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ஜி.முத்துராஜா நீக்கப்பபட்டு, அத்தொகுதியின் புதிய வேட்பாளராக வ…
-
- 2 replies
- 972 views
-
-
வைகோ | கோப்புப் படம்: பிடிஐ 'சந்திரகுமார் செய்தது பச்சை துரோகம். இதைவிட விஜயகாந்துக்கு பாலில் விஷம் கொடுத்திருக்கலாம்' என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ''அதிமுகவும் இன்னொரு கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து அழைக்கிறது. அடுத்த முறை அதிமுகவில் எம்எல்ஏ சீட் கொடுத்து, அமைச்சராக்குவேன் என்று உறுதி தருகிறது. ஆசை வார்த்தை காட்டுவது, பணத்தைக் கொடுப்பது, கட்சியை விட்டு வா என்கிறது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் நல்லவர் என்று திமுக சொல்லும். வராததால் தேமுதிகவை…
-
- 0 replies
- 431 views
-
-
தேமுதிக 124 - மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டி! சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக 124 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்கள் நலக்கூட்டணிக்கு 110 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு கருணாநிதி பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்புக்கு முன்பாகவே, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த்தை நேரிடையாகவே சந்தித்து கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்குதான் வருவார் என்று பாஜக கூறிவந்தது. இதனால் திமுகவில் சேருவாரா அல்லது மக்கள் நலக் கூட்டணியில் சேருவாரா, பாஜகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினர் இடையேயும், அரசியல்…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
ராஜதந்திரங்கள் எப்போதும் உதவாது திரு. கருணாநிதி அவர்களே..! Share அப்போதெல்லாம் அ.தி.மு.க-காரர்களும் பேசக் கேட்டு இருக்கிறேன்... ’கருணாநிதி மிக புத்திசாலியான ராஜதந்திரி... எவ்வளவு தந்திரமா கூட்டணி அமைச்சிருக்காரு. அவர்களுக்கு எவ்வளவு அழகா தொகுதியை பிரிச்சுக் கொடுத்திருக்காரு. என்னதான் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு இந்த அளவுக்கு புத்திசாலித்தனம் இல்லையே’ என்று உங்கள் எதிரிகளும் உங்களை மெச்சிய காலம் ஒன்று இருந்தது. எல்லாரும் நம்பினோம், நீங்கள் மிகப் பெரிய ராஜதந்திரி என்று. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கூட்டணி நாற்பதுக்கு நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற போது, உங்களுக்கு துணை பி…
-
- 0 replies
- 756 views
-
-
போர்வாள் அட்டகத்தி ஆன கதை! ‘தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கத் துடிக்க ஆரம்பித்திருக்கிறார். சயனைட் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 1967-ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவை ஆட்சியில் அமர்த்த, விருதுநகர் வீதிகளில் கல்லூரிப் பருவத்தில் கால்கடுக்க அலைந்த வைகோ, 50-வது பொதுவாழ்வு பொன்விழாவைக் கண்ட பிறகு வேகாத வெயிலில் விஜயகாந்தை முதலமைச்சராக்க அலையத் தயாராகிவிட்டார். அழகாக ஆரம்பித்த பயணம் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. தவறுகளைச் சத்தமாகவும் நல்லவற்றை மறைமுகமாகவும் செய்யும் இயல்புகொண்ட வைகோ, தே.மு.தி.க-வுக்கு விருப்பம் உள்ள பி.ஆர்.ஓ-வாக மாறி…
-
- 0 replies
- 731 views
-
-
10 மந்திரிகள் காலி; காரணம் என்ன? அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், 10 அமைச்சர்களுக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை. இது குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பூனாட்சி: சிவபதியிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக, மண்ணச்சநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பூனாட்சிக்கு யோகம் அடித்தது; முத்தரையர் கோட்டாவில், கதர் மற்றும் கிராமத் தொழில் அமைச்சரானார்.அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சகோதரரின் சொத்தை அபகரிக்க முயன்றார்; ஆட்சிக்கு எதிராக நடந்த முத்தரையர் போராட்டத்துக்கு பின்னணியாக இருந்தார் என்ற உளவுத்துறை அறிக்கை, அவரது சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. சுப்பிரமணியன்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் இருந்…
-
- 0 replies
- 591 views
-
-
தேமுதிகவில் இருந்து சந்திரகுமார், பார்த்திபன், சேகர் அதிரடி நீக்கம்| தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்டவர்களை அதிரடியாக நீக்கியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த். தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி தொடர்பாக தேமுதிக எம்எல்ஏக்கள் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியவர்களை கட்சியில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேமுதிக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், துணை செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்கு…
-
- 0 replies
- 375 views
-
-
தேமுதிகவை திமுக உடைத்தது இப்படிதான்! மக்கள் நலக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நாளை மதியம் வரை கெடு விதித்திருக்கிறது எம்.எல்.ஏ. சந்திரகுமார் தலைமையிலான அணி. மக்கள் நலக் கூட்டணிக்கு எதிரான தி.மு.கவின் இந்த அஸ்திரத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு சேலம், தாதகாப்பட்டி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, " எங்கள் கட்சியைச் சேர்ந்த எத்தனை மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள் என்பதும் தெரியும். எங்கள் நிர்வாகிகளோடு நீங்கள் பேசியதை நான் நிரூபித்துக் காட்டட்டுமா?" என பகிரங்கமாக சவால்விட்டார். இதைப்போலவே, மூன்று நாட்களுக்கு…
-
- 0 replies
- 631 views
-
-
அதிமுகவின் 227 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டி முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா. அத்துடன், தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பிரதான கட்சிகள் ஏதும் இன்னும் வேட்பாளர் பட்டியலை இதுவரை அறிவிக்காத நிலையில் அதிமுக சார்பில் இன்று முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர…
-
- 6 replies
- 1.5k views
-
-
ராஜீவ் கொலை தொடர்பில் சிறையில் வாடும் பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி! வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜீவ்காந்தி கொலை வழக்கில்,கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் பேரறிவாளன், உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் சிறுநீரகம் மற்றும் எலும்பு தேய்மான பிரச்சனை காரணமாக அடுக்கபாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்து…
-
- 0 replies
- 433 views
-
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள்- இழுபறி முடிவுக்கு வந்தது! சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்கு பின்னர் இன்று சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுக்கள் இன்று மாலை முதல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/61753-in-dmk-coalition-41-seats-allocated-for-con…
-
- 0 replies
- 451 views
-
-
தி.மு.க.வுக்கு இழுக்கும் வகையில், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார் என்று, பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் தாதகாப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தே.மு.தி.க. மகளிர் அணி செயலர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது:தே.மு.தி.க.வினர் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை, அவர்களாகவே வருகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் கூறியபடி, தானாகக் கரைவதற்கு தேமுதிக சோப்புக் கட்டியல்ல. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இரும்புக் கோட்டை. திமுக வீசும் மாய வலையில் தே.மு.தி.க.வினர் சிக்க மாட்டார்கள். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. எம்…
-
- 0 replies
- 387 views
-
-
இருபத்தியோறு வயதுக்கு குறைவான பெண்களின் காதலை ஏற்க முடியாது என்றும், அதனால் பாமக திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்று பாமக முதலமைச்சர் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். உங்கள் ஊர், உங்கள் அன்புமணி என்ற பெயரில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மத்தியிலும், அவர்களின் கேள்விக்கும் பதில் அளித்து பேசியது:தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தை எங்களால்தான் கொடுக்க முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம். அரசு மூலம் அளிக்கும் சான்றிதழ்கள் ஒரு குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகள் மேம்படுத்த …
-
- 0 replies
- 687 views
-
-
130 இடங்களில் அதிமுக வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் அதிமுக கட்சி 130 இடங்களைக் கைப்பற்றும் என்று டைம்ஸ்நவ்-சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுக 39% வாக்குகளை பெற்று 130 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திமுக 32% வாக்குகளுடன் 70 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பிற கட்சிகள் 34 இடங்களைக் கைப்பற்றும் என்றும் டைம்ஸ் நவ்-சி ஓட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வெறும் 4% வாக்குகளைப் பெறும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாத…
-
- 2 replies
- 723 views
-
-
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பெண் வேட்பாளர் தமிழ்செல்வியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென நீக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்திருந்த சீமான், 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கடந்த மாதம் கடலூரில் அறிவித்து அவர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு பட்டதாரி பெண் மு.தமிழ்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆலங்குடியை அடுத்துள்ள கீரமங்கலத்தில் வேட்பாளர் தமிழ்செல்வி உள்பட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில் ஆலங்குடி தொகு…
-
- 0 replies
- 781 views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமான திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை, விசைத்தறி, பாத்திர உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழில்கள் வளர்வதற்குத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்களின் கடும் உழைப்பும், தொழில் துறையினரின் முயற்சியுமே இங்கு தொழில்கள் வளர்ச்சி பெற முக்கிய காரணமாகும். தமிழகத்தில் நிலவும் அவலங்களுக்கு அதிமுகவே காரணம். வரும் சட்டப் பேரவைத் த…
-
- 0 replies
- 427 views
-
-
விஜயகாந்தின் விருந்தைப் புறக்கணித்த ம.ந.கூ தலைவர்கள்! - தொகுதிப் பங்கீட்டில் பஞ்சாயத்து தொடங்கியது சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க 124 தொகுதிகளிலும், ம.ந.கூ 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ம.ந.கூ ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று பகல் 2 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சு நடந்துள்ளது. தே.மு.தி.க. வட்டாரத்தில் பேசியபோது, ம.ந.கூ போட்டியிட விரும்பும் 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம் அதன் தலைவர்கள் கொடுத்தனர். அதை பார்த்த…
-
- 0 replies
- 423 views
-
-
ஒரு புதிய கட்சியாய் தெள்ளத்தெளிவான சிந்தனையுடன் தனித்து போட்டியிடும் தைரியம் பாராட்டத்தக்கது.. அதேநேரம் மக்கள் ஆதரவின்றி இங்கு எதுவுமே நடக்காது... இரண்டு மாபெரும் கட்சிகள் கடந்த 45 ஆண்டுகாலமாக சேகரித்து வைத்திருக்கும் மிகப்பெரிய வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி எப்படி திசை திருப்பும் என்பது கேள்வியாக இருந்தபோதும் இதுவரை மாற்று சக்தியாக உருவான மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் யாருடன் கருத்துவேறுபாடு காரணமாக கட்சி ஆரம்பித்தார்களோ அவர்களுடனே கூட்டணி என்ற காமெடியை காலகாலமாக மக்களுக்கு காட்டியிருக்கிறார்கள்.. இவர் ஒருவர் மட்டுமே முதல் தேர்தலிலேயே தனித்து தைரியமாக நிற்கிறார்... அதேபோல அந்த புத்தகத்தை வாசித்தபோது மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தேவைய…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை, தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.16.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. புகார்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று (வியாழக்கிழமை) வரை பொது சொத்தில் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர் கட்டி சேதம் ஏற்படுத்தியதாக பெறப்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 290 புகார்களில், 1 லட்சத்து 88 ஆயிரத்து 599 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தனியார் சுவர்களில் விளம்பரம் செய்ததாக பெறப்பட்ட 77,763 புகார்களில் 69,216 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. இதுவரை தேர்தல் விதிகளை மீறியதாக 937 வழக்குகளும், வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக 809 வழக்குகளும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்க…
-
- 0 replies
- 383 views
-
-
உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ... தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது. தேமுதிக யாருடன் கூட்டு சேரும் என்று எதிர்பார்த்து இலவு காத்து வந்த தி.மு.க, பா.ஜ.க இன்னும் பிற கட்சிகள், மக்கள் நலக் கூட்டணியுடன் அது இணைந்ததையடுத்து, அந்த கூட்டணியை தற்போது விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. இது ஒருபுறமிருக்க கேப்டன் விஜயகாந்த் அணியில் இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளுக்கு ஒரு கருத்தைக் கூறி, கூட்டணிக்குள் குழப்பமான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ கூட்டணி அமைத்ததே மாபெரும் சாதனையாக நினைத்து, மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார். மிகவும் உற்சாகத…
-
- 0 replies
- 703 views
-
-
இதுவரை நீங்கள் தென்மாவட்டங்களில் தேர்தல் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எட்டிப்பார்த்ததுண்டா?' என்று கேள்வி எழுப்பி, அன்புமணியை கதிகலங்க வைத்தார் இளைஞர் ஒருவர்.மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்ற 'உங்கள் ஊர் உங்கள் அன்புமணி' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, "இந்த அரசாங்கம் மக்களுக்காக செயல்படவில்லை. இது மக்களுக்கான அரசு இல்லை. இது ஜெயலலிதாவிற்கான அரசாங்கமாகதான் செயல்படுகிறது. மதுபானக்கடைகளின் மூலம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டுமே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையே. இவர்களை மக்கள் ஒதுக்க வேண்டும். பாமகவை வெற்றி பெற வைப்பதன் மூலமே தமிழகத்திற்கு நல்லதொரு மோட்சம் கிடைக்…
-
- 0 replies
- 359 views
-
-
ஆறுமுனைப் போட்டியில் பலசாலி யார்? – மாலன் ஆறுமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., விஜயகாந்த் அணி, பா.ஜ.க., நாம் தமிழர் ஆகிய ஆறு அணிகள் அணி வகுத்து நிற்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் (1991-2016) தமிழகத்தில் நடந்த ஐந்து சட்டப் பேரவைத் தேர்தல்கள் பெரும்பாலும் மும்முனைப் போட்டிகளையே சந்தித்து வந்திருக்கின்றன. 1996-இல் மட்டும் நான்கு முனைப் போட்டி இருந்தது. பல முனைப் போட்டி இருந்தால், நடுநிலை வாக்குகள் ஓர் அணி அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ பதிவாகாமல் அவை பலவாறாகச் சிதறும். அவ்விதம் பலவாறாகப் பிரியும் போது சிறிய அளவு வாக்கு வித்தியாசங்கள் கூட வெற்றி, தோல்விகளைத் தீர்மானித்துவிடும் என்பது யதார்த்தம். அதாவது, எல்லாக் கட்சிகளுக்…
-
- 0 replies
- 675 views
-
-
தி.மு.க. கூட்டணியில் சிறிய கட்சிகளுக்குத் தலா ஒரு இடம் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்குவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தி.மு.கவின் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து சிறிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொன் குமார் என்பவர் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு இடமும் என்.ஆர். தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு இடமும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி தலைமையிலான சமூக சமத்துவப் படைக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சிக…
-
- 5 replies
- 810 views
-