தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக இணைந்துள்ளதால், எங்களது கூட்டணி வலுவான அணியாக உள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் அணியை பூஜ்ஜியங்களின் கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பூஜ்ஜியம் என்று தெரிந்தபிறகும் தேமுதிக அலுவலகத்திலும், விஜயகாந்தின் இல்லத்திலும் பாஜகவினர் காத்துக் கிடந்தது ஏன்? தமிழ் மாநில காங்கிரஸும் எங்களது அணியில் இணைய வேண்டும். அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%…
-
- 0 replies
- 418 views
-
-
முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் துறவி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக ஆன போதே, அக்கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர்தான் அறிவிக் கப்பட வேண்டும் என மதிமுக வினர் எதிர்பார்த்தனர். இதை மாவட்டங்கள்தோறும் நடந்த தேர் தல் ஆலோசனை கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘கடந்த தேர்தல்களைப் போல பதவி ஆசையில்லை என்று கூறி, யாருக் கும் விட்டுக் கொடுக்கக்கூடாது, எல்லா திறமையும் பெற்றிருக்கும் நீங்கள் (வைகோ) மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக வேண்டும்’ என்றனர். அதற்கு வைகோ, ‘உங்கள் கட்டளையை மீற முடியாது. ஏற…
-
- 0 replies
- 548 views
-
-
கருணாநிதியுடன் மு.க அழகிரி திடீர் சந்திப்பு: மீண்டும் கண்கள் பனிக்குமா... இதயம் இனிக்குமா? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசினார். இது, தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தி.மு.க.வில் சலசப்பை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பேட்டிகளை தொடர்ந்து தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை, அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். கட்சிக்கு எதிராக துரோக செயல்களில…
-
- 2 replies
- 1.4k views
-
-
தனக்கான வீழ்ச்சியை வைகோ தானாகவே உருவாக்கிக் கொண்டார்: தமிழருவி மணியன் சென்னை: விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைபாட்டில் நின்று விட்ட வைகோ, தனக்கான வீழ்ச்சியைத் தானாகவே உருவாக்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்து மக்களுக்கு நல்வழி காட்டிட வானத்துத் தேவன் மண்ணில் வந்து இறங்கியது போல் விஜயகாந்தின் வருகையை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதன் மூலம் மக்கள் நலக் …
-
- 12 replies
- 1.3k views
-
-
என்னது! கேப்டன் விஜயகாந்த் அணியா? மநகூவில் ஒரு எதிர்ப்பு குரல்! மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க. உடன் இணைந்ததை தொடர்ந்து, அந்த கூட்டணி இனி 'கேப்டன் விஜயகாந்த் கூட்டணி' என அழைக்கப்படும் என வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கூறியுள்ள நிலையில், அப்படி அழைப்பதை ஏற்க மறுத்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உடுமலையில் சங்கர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கெளசல்யாவை சந்திப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு, இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். பாதிக்கப்பட்ட கெளசல்ய…
-
- 0 replies
- 783 views
-
-
விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது: வைகோ மதிமுக பொதுச் செயலர் வைகோ விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. அதற்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் மாவட்ட பிரச்சாரப் பணிகளை மார்ச் 28-ம் தேதி தொடங்க உள்ளோம். மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. விஜயகாந்துடன் கூட்டணி பேச்ச…
-
- 7 replies
- 657 views
-
-
நதிகளை இணைத்து தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்: ஸ்டாலின் சென்னை: தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் இந்த உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்போம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூலில் பதிவு செய்துள்ளது: "உலக தண்ணீர் தினம்" இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1992- ஆம் வருடம் நடைபெற்ற "சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி" குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவதன் அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டு, 1993- ஆம் வருடத்திலிருந்து "உலக தண்ணீர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலக நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் ஏறக்குறை…
-
- 3 replies
- 594 views
-
-
ஜெயலலிதாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு- மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி! அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசியதோடு, அதிமுக கூட்டணியில் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி முடியும் தருவாயில் திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலக்குவதாக சரத்குமார் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சமத்துவ மக்கள் கழகம் உருவானது. இந்த கட்சியும் அதிமுகவுக்கு …
-
- 0 replies
- 393 views
-
-
நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு நாங்கள் கிங் மேக்கராக இருப்போம், விஜயகாந்த் கிங்காக இருப்பார் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் போர். மக்கள் நலக்கூட்டணி-…
-
- 0 replies
- 601 views
-
-
நான் யாரிடமும் விலைபோகவில்லை- விஜயகாந்த் பரபரப்பு பேச்சு பணத்தாசையில் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று சொன்றார்கள். நான் யாரு பக்கமும் விலைபோகவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது, விஜயகாந்த் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த மிட்டிங்கில் நிறைய பேசுவேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு …
-
- 0 replies
- 445 views
-
-
தனிமைச் சிறையிலிருந்து விடுபட்டார் உதயகலா மண்டபம் அகதி முகாமில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஈழ அகதியான உதயகலா தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து இவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவரது கணவரும் திருச்சியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளவருமான தயாபரராஜ் தெரிவித்தார். நேற்றிரவு தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்த உதயகலாவை விடுவித்த பொலிஸார் அவருக்கு மண்டபம் முகாமில் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் தனி வீடும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தனது மனைவி தன்னை வந்து சந்திப்பதற்கு உதவி ஆட்சியாளர் அனுமதி வழங்…
-
- 0 replies
- 611 views
-
-
'விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்...!' கடைசி நிமிட காட்சிகள் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. 'மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்' என வைகோ பகிரங்கமாக மேடையில் பேசினாலும், தே.மு.தி.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் தி.மு.க, பா.ஜ.க தரப்பில் கொஞ்சம் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ' நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்' என கருணாநிதி அழுத்தமாக தனது வார்த்தைகளை முன்வைத்தார். பா.ஜ.கவின் கடைசிநிமிட முயற்சிகள் பலனிக்காமல் …
-
- 0 replies
- 575 views
-
-
முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்- மக்கள் நலக்கூட்டணி அறிவிப்பு! மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கன…
-
- 0 replies
- 200 views
-
-
ஆணவக்கொலை: எமனாக வந்த போன் கால்... கவுசல்யாவின் கதறல் வாக்குமூலம்! கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் கதை, சாதி வெறியாட்டத்தால் இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. உடுமலையில் தலித் இளைஞரை காதலித்து கரம்பிடித்தார் என்பதற்காகவே, இளம்பெண்ணையும், அவரை திருமணம் செய்த இளைஞரையும் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் மிகக் கொடூரமாக, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது ஒரு கும்பல். இதில் இளைஞர் சங்கர் இறந்து விட... படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் கவுசல்யா. கல்லூரியில் துவங்கிய காதல் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொமரலிங்கம், சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன்தான் சங்கர். டிப்ளமோ படித்து மு…
-
- 28 replies
- 5.5k views
-
-
அதிமுகவில் என்ன நடக்கிறது? அதிமுகவில் ஜெயலலிதா அதன் நிரந்தரப் பொதுச்செயலாளர் மட்டுமே அல்ல; அங்குள்ள ஒரே நிரந்தர உறுப்பினரும் அவரே; அவருடைய அமைச்சரவையின் ஒரே நிரந்தர அமைச்சரும் அவரே என்று சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே அக்கட்சியினுள் நடக்கும் மாற்றங்கள் பொதுவெளியில் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர். ஒரு முதல்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் அமைச்சரவையை மாற்றியமைத்துக்கொள்வது அ…
-
- 0 replies
- 599 views
-
-
'உளவு'ப்பிடியில் மடங்கிய லீடர்! - (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்- 1) அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதை விட போலீஸ் நினைத்தால்தான் அதுவும் நடக்கும் என்பதே நடைமுறை சொல்லும் நிஜம். அவர்தான் டம்மியாக ஊர்க்காவல் படையில் இருக்கிறாரே அது ஊறுகாய் போன்ற இடம்தானே... ஏதோ லா அண்ட் ஆர்டரில் நல்ல போஸ்ட்டில் இருந்தால் கூட பரவாயில்லை என்று எந்த ஐபிஎஸ் -ஐயும் ஒதுக்கி வைத்துப் பார்க்க முடியாது. எல்லாமே ஏதோ ஒரு காரண-காரியம் குறித்தவைதான் என்பதே, ஸ்மெல் பணிகள் குறித்த இந்த தேடல் பயணத்தில் நான் அறிந்து கொண்டது. விலைவாசி உயர்வு, வேலை இல்லை, சட்டம்- ஒழுங்கு சரியில்லை, பணப் புழக்கம் இல்லை... இப்படி பல இல்லைகள் குறித்த கவலைகள் மக்களில் ஒரு சாராரிடமும், அதான் எல்லாம் இர…
-
- 4 replies
- 1.8k views
-
-
கருணாநிதி vs ஜெயலலிதா = ஊழல்! (வீடியோ) 'விஞ்ஞானப்பூர்வ ஊழல்' என்ற புது வார்த்தையை தமிழிற்கு அறிமுகம் செய்தவர் என தி.மு.க தலைவர் கருணாநிதியை வசை பாடுகிறது அ.தி.மு.க. 'சொத்துக்குவிப்பு ராணி' என்ற அடைமொழியோடு ஜெயலலிதாவை வறுத்தெடுக்கிறது தி.மு.க. திராவிட கட்சிகளின் (?!) கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு பழகிப்போன வார்த்தை ஊழல் என்பதுதான். 'பெரிய ஊழல்', 'சிறிய ஊழல்' என்று நாம் அதிர்ச்சியடைவதற்காகவோ அல்லது சர்வசாதாரணமாக கடந்து செல்வதற்காகவோ வசதியாக ஊழலை இரண்டு பிரிவாக பிரித்ததுதான் இவ்விரு கட்சிகளின் அளப்பரிய சாதனை... நம் விரலாலேயே நம் கண்ணை குத்தவைப்பது போல நம்முடைய விரல்களால் அடையாளம் காணப்பட்ட இந்த இரு கட்சிகளின் தலைவ…
-
- 0 replies
- 317 views
-
-
நெல்லையில் 25–ந்தேதி பிரேமலதா பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல மக்கள் நல கூட்டணியிலும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காஞ்சீபுரத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்றும், தே.மு.தி.க. தலைமையை ஏற்று கூட்டணியில் இணைபவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும் விஜயகாந்த் அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் சில அரசியல் விமர்சகர்கள் தே.மு.தி.க கட்சி, தி.மு.க. அல்லது பா.ஜனதாவுடன் சேரும் என்றே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற 25–ந்தேதி (வெ…
-
- 1 reply
- 744 views
-
-
சீமான் : முரண்பாடுகளின் மொத்த வடிவம் MAR 15, 2016 | சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார். சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு ஓலைப் பாயை வைத்துக் கொண்டு விரிப்பதற்கு பல வகைகளில் முயல்கிறார். கடைசியில் கீழே விழுந்து மூக்கு உடைந்ததுதான் மிச்சம். அப்போதும் கூட இது கரிக…
-
- 8 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஒரு பிரகடனத்தோடு இந்தக் கட்டுரையைத் தொடங்க விரும்புகிறேன். நான் ஒரு தேசியவாதி அல்ல. குறிப்பாக, இந்த அரசு உருவாக்கியுள்ள தேச அடையாளத்தை பொறுத்தவரை நான் தேசப்பற்றாளன் கூட அல்ல! இந்த அரசியல் அமைப்பைக் கேள்விக்குள்ளாக்காத அதன் விசுவாசமான சேவகனாக என்னால் இருக்க இயலாது! டி.எம்.கிருஷ்ணா இந்த அரசு தன் அடையாளங்களாக காட்டிக்கொள்ளும் எவற்றின் மீதும் அளப்பரிய வியப்பேதும் எனக்கில்லை. அனைத்து வகையான கொலைக் கருவிகளும் பகட்டாக ஊர்வலம் விடப்படும் குடியரசு தின விழா நேரடி ஒளிபரப்பைக் காண்பதில் துளியும் மகிழ்ச்சியோ, விருப்பமோ எனக்கு என்றுமே இருந்ததில்லை. பயங்கரவாதிகளாக இருப்பினும் மரண தண்டனை விதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும், நான் இந்த மண்ணுக்குரியவனே! இந்த …
-
- 0 replies
- 474 views
-
-
கபா லீசுவரர் ஆண்டு பங் குனித்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று தேர்த்திருவிழா இவ்விழா சிவபெருமான் தேரில் சென்று தூங் கெயில் களை ஓரம்பினாலேயே அழித்தவன் அஃதாவது முப்புரங்களை அ ழிததவன் எனும் கதைகளின் கூத்து நிலை தேர்த்தட்டில் பெரு ருமான் கையில் வில்லேந்திய நிலையில் காணப்படுவார் இந்த வில்லின் அம்பாக இருப்பவர் திருமால் என்பதும் ஓர் கதையின் வழி காட்டப்படும் கருத்தும் உண்டு ஞாயிறும் திங்களும் இரு தேர் உருளைகள் பிரமன் தேர்ப்பாகன் எல்லாம் தேரினில் மீது உருவங்களாகக் காணலாமே இந்தத் தேரின் உயரம் 63 அடி உருளைகள் = உள்ளிருப்பன 2 (6 அடி விட்டம்) + வெளியில் 4 (8 அடிவிட்டம் ) இழுக்கும் வடம் மணிலா க்கயிறு 5 அங் குல தடிமன் இரு புறம் ஒன்று 500 அடி நீளம் …
-
- 0 replies
- 400 views
-
-
சியோனிசமும் தமிழிசமும் உலகிலுள்ள புராதன இனங்களுள் தமிழனத்தைப் போன்றே யூத இனமுமொன்று. மத்திய கிழக்கில் உள்ள மிகச்சிறியவோர் பிரதேசம்தான் அந்த இனத்தின்பூர்வீகத் தாயகம். ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்திNலுயே சொலமன், டேவிட் போன்ற அரசர்களின் ஆட்சிக்குப் பிறகு அந்த இனம் தன் தாயகத்தைப் பறிகொடுத்து அந்நியரின் ஆளுகைக்குள் வாழப் பழகிக்கொண்டுவிட்டது. இயேசுநாதர் வந்து யூதர்களின் ராஜா நான், என்னைப் பின்தொடருங்கள் என்று கூறியபோதும் அடிமை மனப்பான்மைக்குள் மூழ்கிப் போய்விட்ட யு+த இனம் அவரைக்காட்டிக் கொடுத்து, ஆக்கினைக்கு உட்படுத்தி, அவருக்கு முட்கிரீடம் சூட்டிச் சிலுவையிலறைந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிவரை (1896) தாங்கள் இழந்து போன இஸ்ரவேல் தேசத்தை மீண்டும் பெறவேண்டுமென்ற வ…
-
- 0 replies
- 755 views
-
-
அம்பி டு அந்நியன்...! (பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை! மினி தொடர்- 1 ) மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி... என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்... என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம…
-
- 1 reply
- 2.8k views
-
-
தமிழக தேர்தலில் இளைஞர்களின் வாக்கு யாருக்கு? - வீடியோ தமிழ் நாட்டின் அடுத்த தலைவரை, ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க மே 16 என நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் இன்றைய இளைய தலைமுறையின் வாக்கு யாருக்கு? அவர்கள் மனதில் இன்றைய அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொரு கட்சிக்கும் பலம் என்ன... பலவீனம் என்ன? கருணாநிதி, ஜெயலலிதாவின் பலவீனம், ஸ்டாலின் மீது உள்ள கோபம், அன்புமணியை ஏன் பிடிக்காது? இப்படி பல காரணங்களை முன் வைக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஜூனியர் விகடனின் நம் விரல், நம் குரல் கலைந்துரையாடலில் பங்கு கொண்டு, ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலனுடன் இளைஞர்…
-
- 0 replies
- 663 views
-
-
பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் இன்றைக்குக் காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்! சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸுன் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமியை ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு …
-
- 0 replies
- 604 views
-