Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாளை சூரிய கிரகணம்... சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்கலாம்! சென்னை: நாளை அதிகாலை நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன், முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும். பொதுவாக ஓராண்டில் 2 முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் வரை நடப்பதுண்டு. சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும் போகலாம். இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ம் தேதி ஏற்பட்டது. நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்…

  2. தற்கொலை செய்த ஈழ அகதியின் கடைசி குரல் ‘எனது மரணம் இலங்கைத் தமிழர்களுக்கான விடுதலையாக இருக்கட்டும்’ இந்த கூற்று மதுரை அருகே நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்ட அகதியின் கடைசி குரல். இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் உயிர் பிழைக்க தப்பி வந்து தமிழகத்தில் உள்ள முகாம்களில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருக்கும் அகதிகளின் அவலம் சொல்லி மாளாது. இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு 1983-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை மூன்று இலட்சத்து 14 ஆயிரத்து 259 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இதில் இரண்டு இலட்சத்து 12 ஆயிரம் அகதிகள் அரசு உதவி மற்றும் சர்வதேச உதவிகள் பெற்று சுயமாக இலங்கை திரும்பினர். தற்போது தமிழக முகாம்களில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 259 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வசிக…

  3. தேங்காய் உற்பத்திக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். கொச்சியில் உள்ள தென்னை மேம்பாட்டு வாரியம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதும், முதலிடத்தில் இருந்த கேரளா 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதும் தெரியவந்தது. கணக்கெடுப்பு முடிவுகள் வருமாறு:-தமிழ்நாட்டில் 465.11 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் ஹெக்டேருக்கு 14,873 தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 33.84 சதவீதம் ஆகும். கர்நாடகத்தில் ஹெக்டேருக்கு 9,982 தேங்காய்கள் வீதம் 515.03 ஹெக்டேரிலும் (25.15 சதவீதம்), கேரளாவில் ஹெக்டேருக்கு 7,535 தேங்காய்கள் வீதம் 649.85 ஹெக்டேரிலும் (23.96 சதவீதம்) தென்னை சாகுபடி நடக்கிறது.இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு…

  4. '7 பேர் விடுதலை தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஜெயலலிதா எடுத்த முடிவு!' நாகர்கோவில்: நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை என்பது, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஜெயலலிதா எடுத்த முடிவு என்று தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''2016 சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பலர் முதல்வர் கனவில் உள்ளனர். வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணலின்போது அவர் என்ன சாதி? எவ்வளவு பணம் உள்ளது? என்று பார்க்கிறார்களே தவிர அவரது நேர்மை, தூய்மை, கடந்த கால அரசியல் வாழ்க்கையை பார்ப்பதில்லை. வாக்காளர் பட்டியலில் தற்போது புதியதாக 30 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளனர். அவ…

  5. ஞாயிறு அரங்கம்: ஜெயலலிதாவாதல்! திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல். இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்…

  6. மீண்டும் பரோல் கேட்கிறார் நளினி! வேலூர்: தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக நேற்று பரவிய தகவலால் வேலுார் சிறை வளாகம் பரபரப்பானது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இன்று நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்தார். தான் விடுதலையாவேன் என மாநில அரசு மீதும் மத்திய அரசு மீதும் நளினி நம்பிக்கையோடு இருப்பதாக புகழேந்தி, “நளினி அண்மையில் இறந்த அவரது தந்தையின் ஈமக்காரியங்களுக்காக 8,9,10 ஆகிய மூன்று நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்…

  7. ராஜீவ் காந்தி கொலை: தண்டனைக் கைதிகளின் விடுதலையில் புதிய சிக்கல் MAR 05, 2016 | தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிக்கும் தமிழ்நாடு மாநில அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான அனுமதி கேட்டு, இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் இந்தியமத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், அது ரா…

  8. தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த கருத்து கணிப்பு! தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும், தி.மு.க. 101 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு, தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் கருத்து கண…

  9. நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு 'குட் சர்டிபிகேட்'! சென்னை: நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கும் வேலூர் சிறை நிர்வாகம் நன்னடத்தை சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது. மேலும், நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இது தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் இருந்து, ''நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக…

  10. நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் சற்று நேரத்தில் விடுவிப்பு? சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இன்று காலை தமிழக அரசிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவரிடம் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டதாகவும், இது தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என…

  11. தமிழகம், புதுச்சேரியில் மே 16-ம் தேதி தேர்தல்; மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை! புதுடெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்தார். அஸ்ஸாம் அதன்படி, அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதியும்…

  12. தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். ஜெயலிதாவின் அறிக்கைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக அரசியல் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலலையில் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதம் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலையில் கு…

    • 0 replies
    • 946 views
  13. உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா? ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி, தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. அப்படி கொடுக்கப்பட்ட மெமோவில், '' உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? " என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மொமோ கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அந்த அலுவலக பெண் உதவியாளர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொடுத்த மெமொவுக்கு 4-ம் தேதி மன்னிப்பு கேட்டு கொடுத்த கடிதமும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. …

  14. தொலைக்காட்சி விவாதத்தில் அரங்கேறிய அநாகரிக வார்த்தைகள் ( வீடியோ) தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர். விவாதத்தின் போது “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான் கூற அப்போது அருணணுக்கும் சீமானுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சீ…

    • 19 replies
    • 4.5k views
  15. அதிகாரத்தை கைப்பற்ற அணி திரட்டினாரா ஓபிஎஸ்...? தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவின் உட்கட்சி பூசல்கள் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளாக மாறிப்போயுள்ளன. காணும் இடமெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் இதயமாக வலம் வரும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் ஓரங்கப்பட்டுள்ளார். அவரின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள். இந்த நீக்கல் நடவடிக்கைகைகள் மேலும் தொடரும்.என்பதெல்லாம் அதிமுகவின் இப்போதைய ஹாட் நியூஸாக இருக்கிறது. எதேச்சையாக சந்தித்துக் கொள்ளும் அதிமுகவினர்கூட அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று தீவிர விவாதத்தில் இறங்கிவிடுகின்றனர். இந்த அளவுக…

  16. நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி. செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. அடுத்த கவளத்துக்கு இட…

  17. ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் - மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக இந்திய மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துப் பேசினார். அவர், தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும். 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- ´´ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய மூவருக்கும்…

  18. நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளரகளையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடலூரில் சீமான் போட்டியிடுகிறார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால் ஒரே சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொண்டது.அதன்படி அக்கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை சீமான் இன்று சென்னை சேப்பாக்கத்தில் அறிமுகம் செய்தார். http://www.seithy.com/breifNews.…

  19. தமிழக அரசியலில் உருவெடுக்கும் புதிய வாரிசுகள்! அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ராகுல் காந்தி, கார்த்தி சிதம்பரம், வாசன், அன்புமணி, பிரேமலதா, சுதிஷ் ஆகிய அரசியல் வாரிசுகள் நேரடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி அடுத்த தலைமுறை வாரிசுகளும் தேர்தல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள். அதிமுக: போயஸ் கார்டனில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் 25 வயதேயான விவேக் ஜெயராமன். இளவரசியின் மகனான இவர் பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சுமார் ஓர் ஆண்டுக்கு முன்புவரை கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குக்கூட இவரை தெரியாது. ஜெயலலிதா பெங…

  20. முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார். புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியை இன்று வெளியிட்டு தமிழகத்தில் ஊழற்ற ஆட்சியை அமைக்க தனித்து போட்டியிடப்படும் என்று தெரிவித்தார். ஏ.பி.ஜே அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியின் அறிமுக விழா ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் புதிய கட்சியின் ஆலோசகர் பொன்ராஜ் தலைமை வகித்தார். பின்னர் துவங்கப்பட்ட புதிய கட்சியின் பெயரான அப்துல்காலம் வி.ஐ.பி (அப்துல்கலாம் லட்சி…

  21. 19 ஆண்டுகளாக ஜெயலலிதா வழக்கில் பணியாற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தம் நாளை ஓய்வு: கடைசி வரை வழங்கப்படாத பதவி உயர்வு? ஜி.சம்பந்தம் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பணியாற்றி வரும் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜி.சம்பந்தம் நாளை ஓய்வு பெறுகிறார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜி. சம்பந்தம் கடந்த‌ 27.9.1987 ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர…

  22. 'அன்புமணி ஆகிய நான் ' ஒரு வேளை வியப்பை ஏற்படுத்துகிறாரோ? சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார். அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது.…

  23. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான அம்மா கைபேசித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். இன்று முற்பகல் 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் அதி நவீன வசதிகளுடன் அரசு பணியாளர்களுக்கான 700 குடியிருப்புக்கள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தன. அதை இன்று முதல்வர் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு ஊர்களில் கட்டப்பட்டு இருந்த மேம்பாலங்கள், கட்டிடங்களைத் திறந்து வைத்தார் ஜெயலலிதா. அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான இலவச கைப்பேசிகளை வழங்கும் திட்டத்தையும் இன்று துவக்கி வைத்தார்.15 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டு இருக்கும் இந்தத் திட்டத…

  24. அமைச்சர்கள் முன்னிலையிலேயே கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை! (வீடியோ) முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னையில் சிறுமி ஒருவருக்கு கையில் பச்சை குத்தப்பட்டது. வேதனையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத சம்பவம் அமைச்சர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது மனித உரிமை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி, வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்…

  25. நடிகையை தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டுகிறார்கள்! நடிகர், நடிகையை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுக நிர்வாகி ஒருவர் கோயில் கட்டுகிறார். அரக்கோணம்- சோளிங்கர் நெடுஞ்சாலையில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கு கும்பாபிஷேசம், பாலாபிஷேகம் செய்து வருகின்றனர் அவர்களது ரசிகர்கள். இதற்கு ஒருபடி மேலேபோய், நடிகை குஷ்பு, நடிகர் விஜய் ஆகியோருக்கு ரசிகர்கள் கோயில் கட்டி அசத்தி விட்டனர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி, முகவூர் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், மற்றவர்களை மிஞ்சும் வகையில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.