தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10247 topics in this forum
-
22 மே 2023 தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்ற மீன் வியாபாரி ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்த கடைக்கு மது அருந்தச் சென்றார். அப்போது 11 மணிதான் என்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கவில்லை. டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில், அந்த நேரத்திலும் மது விற்கப்படுவதை அறிந்த அவர், அங்கு சென்று மது அருந்தினார். பிறகு மீண்டும் வியாபாரத்தைக் கவனிக்க ம…
-
- 0 replies
- 739 views
- 1 follower
-
-
ஸ்டர்லைட் வழக்கின் தீர்ப்பு நாளை – உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடியில் ஸ்ட…
-
- 0 replies
- 380 views
-
-
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க தோல்வி குறித்து ஆராய்வு தேர்தலில் பின்னடைவை சந்தித்த பலவீனமான மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியினை எவ்வாறு வெற்றிபெற செய்வது என்பது குறித்து பா.ஜ.க மாநில தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சில இடங்களில் தோல்வியை தழுவியது. அதற்கு அந்தந்த காலப்பகுதியில் காணப்பட்ட சூழ்நிலைகளே காரணம். அத்துடன் குறித்த கூட்டத்தில் தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் தேர…
-
- 0 replies
- 756 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK/KNNEHRU படக்குறிப்பு,கோவை மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகி கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி, கோவை ஆகிய மாநகராட்சிகளின் மேயர் பதவிக்கு திமுக சார்பில் களம் இறங்கியவர்கள் வெற்றி பெற்றபோதிலும், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மேற்கு மண்டலம் உள்பட மாநிலம் முழுவதும் பெருவாரியாக தி.மு.க., வெற்றி பெற்றதால், 'மக்கள் பணிகளில் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கவுன்சிலர்கள் நடந்து…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டில் கலப்படமா ? உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் 2019-ம் ஆண்டில் இருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பிரசாதமாக தயார் செய்து விற்கப்பட்டும் வருகிறது. திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் குறித்தும் கேள்வி எழுந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். …
-
- 0 replies
- 608 views
-
-
ஜெயலலிதா கலந்து கொள்ள இயலாததால் 4 அமைச்சர்கள் இல்ல திருமணம் ரத்து! சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சர்களான வைத்திலிங்கம், காமராஜ், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சண்முகநாதன் ஆகிய நால்வரும், தங்களின் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைக்க ஜெயலலிதாவிடம் தேதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்வர் அமைச்சர்களின் இல்ல திருமணங்களில் பங்கேற்பதாகக் கூறி டிசம்பர் 6 ம் தேதியை முகூர்த்த நாளாகவும் நிர்ணயித்து,திருமண ஏற்பாடுகளை நடத்த அனுமதியளித்துள்ளார்.இதனையடுத்து திருமண வேலைகள் தடபுடலாக நடந்து வந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்க…
-
- 0 replies
- 401 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர். பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடந்தது என்ன? டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து, ஊட்டி சைபர் க்ரைம் போலீசார், பிபிசி தமிழிடம் விளக்கினர். அவர்கள் கூறிய தகவல்களின்படி, குன்னுாரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தனது சேமிப்பை இழந்ததுடன், 8 நாட்கள் வீட்ட…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதனைத் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ்காந்தி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சீமான் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய சத்ய பிரதா சாகு, ‘நாங்குநேரி தொகுதியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்களின் பயிற்சிக்கு பயன்படுத்துபவை. மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்…
-
- 0 replies
- 391 views
-
-
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு! தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய் செலவில் 114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாயின் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் ந…
-
- 0 replies
- 171 views
-
-
சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அல…
-
- 0 replies
- 325 views
-
-
ஜேர்மனியில் நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? #Germany#People ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் பல்வேறு காரணங்களுக்காக புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை அந்நாட்டு அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் சுமார் 60 சதவிகித புலம்பெயர்ந்தவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களில் 22,369 நபர்களை கட்டாயப்படுத்தி அவர்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், 2014ம்…
-
- 0 replies
- 442 views
-
-
தமிழகத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதேநேரம், வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துளள்ளார். இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்ட…
-
- 0 replies
- 425 views
-
-
காங். மீது முதல்வர் குற்றச்சாட்டு Friday, 15 February, 2013 01:49 PM சென்னை,பிப்.15:காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு இல்லாததால் காவிரி நதிநீர் பிரச்சனையில் இந்த இரண்டு கட்சிகளும் கர்நாடகத்துக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன என்று முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். இந்த இரண்டு கட்சிகளும் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப் பேட்டையில் அம்மா பேரவை சார்பில் 65 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா இத…
-
- 0 replies
- 644 views
-
-
எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை: சர்ச்சைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் திருநாவுக்கரசர் | கோப்புப் படம் கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆயுட்கால கூட்டணி என்று எதுவும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பினார். தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அது தேவையில்லை எ…
-
- 0 replies
- 345 views
-
-
ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வினை முதலமைச்சர் தலைமையேற்று திறந்து வைக்க இருப்பதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்.கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-நினைவிடம்-27/
-
- 0 replies
- 352 views
-
-
இன்றைய தமிழ்நாடு போராட்ட நிலவரங்கள் - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - ஒகேனக்கல். விவசாயிகள் போராட்டம் - ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த புதுக்கோட்டை அரசு கல்லூரி மாணவர்கள் - தாமிரபரணியை காக்க வாருங்கள் இளைஞர்களே... அழைக்கிறார் நல்லக்கண்ணு - வாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள் அடுத்து வர இருப்பவை.. - நீட் தேர்வு பிரச்சனை. - ரேசன் பொருட்கள் வழங்கபடாமை .. - காவிரி நீர் சிக்கல் - விவசாயிகள் தற்கொலை சிக்கல் - பவானி அணை பிரச்சனை .. - நியூட்ரினோ சிக்கல் . - பாலாறு பிரச்சனை .. - மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கு மேல் ATM கார்டு பயன்படுத்தினால் - அபராத…
-
- 0 replies
- 744 views
-
-
ஜெயலலிதா மகன் என்று கூறியவருக்கு நேர்ந்த சிக்கல்! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகன் என்றுக் கூறியவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர், தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன். நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக…
-
- 0 replies
- 423 views
-
-
ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்... பின்னணி என்ன? வருவாரா, மாட்டாரா? என்று தமிழகமே ஒரு காலத்தில் ஆவலோடு எதிர்பார்த்தது ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியை. இருபது ஆண்டுகள் கழித்தும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது என்பதே ரஜினியின் வீச்சு தமிழகத்தில் இன்னும் தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அனைத்து கட்சிகளுமே மிரண்டன. அரசியல் கட்சியை ரஜினி துவக்கினால் தங்களது நிலை என்னவாகும் என்று முக்கிய கட்சிகளின் தலைவர்களே பயந்தனர். தமிழகத்தின் முக்கிய கட்சியின் தலைவர் ஒருவர் ரஜினியின் நண்பரிடம் “நான் உயிரோடு இருக்கும் வரை ரஜினியை கட்சி ஏதும் தொடங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என…
-
- 0 replies
- 614 views
-
-
Yasser Arafat ராஜீவ் உயிருக்கு ஆபத்து என அவர் உயிரோடு இருக்கும் போதே சொன்னார்! - பழ நெடுமாறன்
-
- 0 replies
- 806 views
-
-
எடப்பாடி பழனிசாமியும் 7 அமைச்சர்களும்! -தினகரனை குறி வைக்கும் தோட்டா #VikatanExclusive ' தேர்தல் ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்' என்ற தலைப்பில் இன்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேநேரம், வருமானவரித்துறையின் சோதனை வளையம் அமைச்சர்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ' ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு ஆதாரத்தைக் கொடுக்க இருக்கிறார் விஜயபாஸ்கர். அதன்பிறகே மற்ற அமைச்சர்கள் வளைக்கப்படுவார்கள்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 'ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து' என்ற அறிவிப்பைவிடவும், அமைச்சர்களை நோக்கிப் பாயும் வருமான வரித்துறை சோதனைகளால் கலக்கம் அடைந்துள்ளனர் கார்டன் தரப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் …
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை போரில் உயிழந்தவர்களுக்காக ராமேசுவரம் கடற்கரையில் மலர்தூவி அஞ்சலி ராமேசுவரம் கடற்கரையில் மலர் தூவி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது உயிரிழந்தவர்களுக்காக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற தமிழினப் படுகொலை இடம் பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் திரளான பொது மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு பங்கேற்ற போரின…
-
- 0 replies
- 447 views
-
-
முரசொலி பவளவிழா... அரசியல் கூட்டணியின் அச்சாரமா? மக்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்த வெறும் துண்டறிக்கையாக தி.மு.க தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்டதுதான் முரசொலி. துண்டறிக்கை, வாரஇதழ், பின் நாளேடு என பல்வேறு வடிவங்களை எட்டி தற்போது தனது 75 ஆண்டுகாலப் பயணத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறது தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி! இதற்காக வருகிற ஆகஸ்ட் 10, மற்றும் 11-ம் தேதிகளில் முரசொலி பத்திரிகைக்கு பவள விழா கொண்டாடுவதற்கு தி.மு.க. தலைமை பிரமாண்ட ஏற்பாடு செய்துள்ளது. வியாழக்கிழமை கலைவாணர் அரங்கத்திலும், வெள்ளிக்கிழமை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலும் இதற்கான விழா நடைபெற உள்ளது. 10.08.1942-ல் தனது 18-வது வயதில் கருணாநிதியால…
-
- 0 replies
- 535 views
-
-
இந்தியாவின் செங்கற்சூளை தொழிற்துறையில் நிலவும் மனித அவலத்தை ஒழிக்க நிறையச் செய்ய வேண்டியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் எழுச்சி கண்டுவருகின்ற நிர்மாணத்துறைக்கு கற்களை விநியோகிக்கின்ற இந்த தொழிற்துறையை பிரிட்டன் மற்றும் ஏனைய பல்தேசியக் கம்பனிகளும் பயன்படுத்துகின்றன. வேகமாக வளருகின்ற இந்தியப் பொருளாதாரத்தின் மிகவும் முக்கிய பகுதியாகவும் இந்தத் தொழிற்துறை திகழ்கிறது. இந்தியாவில் கற்சூளைகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பல சூளைகள் கொத்தடிமைத் தொழிலாளர்களை, கிட்டத்தட்ட அடிமைகள் போல பயன்படுத்துகின்றன. தினமும் 12 மணித்தியாலங்கள் பணியாற்றும் இவர்களது ஒரு நாள் கூலி தோராயமாக 150 இந்திய ரூபாய்கள் மாத்திரமே. கடுமையான வேலைநிலைமை …
-
- 0 replies
- 561 views
-
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் பகுதி பட்ஜெட்டைத் தொடர்ந்து பிந்தைய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதையடுத்து இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனது முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை அதன் சபாநாயகர் அப்பாவு தலைமையில் பேரவை கூடியதும் பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கோரினார். அதிமுக அமளி, வெளிநடப்பு …
-
- 0 replies
- 331 views
-
-
மிஸ்டர் கழுகு: மிரள வைத்த மெர்சல் திங்கள்கிழமை காலை... தூறலில் நனைந்தபடி கழுகார் அலுவலகத்தில் பிரவேசித்தார். ‘‘இரட்டை இலை ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்போடு டெல்லி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் காத்திருக்கிறார்கள். ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற படபடப்போடு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்’’ என்றார். ‘‘விஜய் படத்துக்கு என்ன பிரச்னை?’’ ‘‘கேளிக்கை வரியை எதிர்த்து, ‘புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது’ எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததும் ‘மெர்சல்’ படத்துக்குப் பிரச்னை தொடங்கிவிட்டது. கேளிக்கை வரியைக் குறைத்தும், டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதும் இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்தது. ஆனால், விலங்குகள் நல வார…
-
- 0 replies
- 3.6k views
-