தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10244 topics in this forum
-
ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்: . சு.சுவாமி கிண்டல்! [Tuesday 2015-05-26 07:00] சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கிறது. அதே நேரத்தில் ஜெயலலிதா விடு…
-
- 0 replies
- 394 views
-
-
மேலும் வரும்... படங்கள்: நாம் தமிழர் பாசறைப் பையன்கள் முகநூல்.
-
- 21 replies
- 1.3k views
-
-
ஆடை களையும் எக்ஸ்- ரே சென்டர்கள் : ஒரு பகீர் ரிப்போர்ட்! நோயின் பிடியிலிருந்து மீண்டு வரும்போது மக்கள், கடவுளையும் கூட இரண்டாவதாகத்தான் நினைப்பார்கள். அவர்கள் நா தழுதழுதழுக்க முதலில் நன்றி சொல்வது மருத்துவர்களுக்குத்தான். கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் அவர்களிடையேயும் கருப்பு ஆடுகள் உலவுவது சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது. அப்படி கருப்பு ஆடு ஒன்றின் தரம்கெட்ட செயலால் நம் தேசம் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது இப்போது... சென்னையில் பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் இயங்கிவருகிறது பிரபலமான அந்த மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த அவமானம்தான் தேசம் தலைகுனிய காரணம். தென் கொரியாவைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் ஹாவா( பெயர…
-
- 0 replies
- 499 views
-
-
வித்தியாவிற்கு நடந்த துயரம் பிரபாகரன் ஆட்சியில் வந்திருக்குமா...? மனம் உருகும் இயக்குநர் வ.கௌதமன் இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஒழுக்கமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றன. அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என ஆதாரங்களுடன் விளக்குகிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன். புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம். என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு இந்த நிலை வந்திருக்குமா? என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் தெரிவித்தார். tamilwin.com
-
- 0 replies
- 280 views
-
-
மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயா அ.தி.மு.கவின் சட்டசபை கட்சித்தலைவர் ஜெயலலிதா ஜெயராம், 5ஆவது தடவையாகவும் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவைத் தொடர்ந்து,28 அமைச்சர்களும் இரண்டு பகுதிகளாக இருந்து பதவியேற்றனர். முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதற்கிடையே, தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேன்முறைய…
-
- 8 replies
- 548 views
-
-
ஆந்திர என்கவுன்ட்டர்: தமிழக தொழிலாளர்களை திட்டமிட்டு கொலை செய்த ஆந்திர போலீஸ் - செல்போன் பதிவுகள் மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செம்மரம் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழி லாளர்கள், ஆந்திர போலீஸாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து அழைத்துச் சென்று கொல்லப் பட்டிருப்பது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது. இதுதொடர் பான அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழக தொழி லாளர்களில் 11 பேர் செல்போன் வைத்துள்ளனர். செல்போன் கோபுரங்களின் உதவியுடன் அவர்களின் செல்போன் உரை யாடல்கள், ஊரிலிருந்து புறப்பட்ட நேரம், ஆந்திர எல்லைக்கு சென்ற நேரம், என்கவுன்ட்டர் …
-
- 0 replies
- 344 views
-
-
கடலுக்குள் கான்கிரீட் ஸ்லாப்களை செயற்கை தளங்களாக வைத்து, அதன் மீது வளர்க்கப்பட்டுள்ள பவளப்பாறைகள். இந்தியாவில் பவளப்பாறை மறு உருவாக்க திட்டத்தின் வெற்றிக்கு முன்னோடியாக மன்னார் வளைகுடா பகுதி அமைந்துள்ளது. பவளப்பாறை காலனி முற்றிலும் அழிந்துபோன 8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இத்திட்டத்தால் மீண்டும் பவளப்பாறைகள் புதிதாக வளர்ச்சி அடைந்துள்ளன. பவளப்பாறைகள் இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகம் உள்ள 4 முக்கிய பகுதிகளில் மன்னார் வளை குடாவும் ஒன்று. இங்கு 21 தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகம் அமைந்துள்ளன. கடற்கரை பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும், சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டும் பகுதியாகவும் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. 32 சதுர க…
-
- 0 replies
- 608 views
-
-
ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குத் தயாராகும் சென்னை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக 23ஆம் தேதி மீண்டும் பதவி ஏற்பது உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, நாளை மறுதினம் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இதற்காக நாளை காலை 7 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இதில், சட்டப்பேரவை கட்சித்தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்கிறார். இதுகுறித்த கடிதங்கள் ஆளுநர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலசுப்பிரமணியன்-வேணி ஆகியோரின் திருமணம் சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முருகன் கோயில் ஒனறில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது மணமகளின் பெற்றோர் தாம்பாள தட்டில் வைத்து தாலியை தொட்டு மணமகனிடம் எடுத்துக்கொடுக்குமாறு, சுப்பிரமணியின் சுவாமியிடம் கொடுத்தனர். தாலியை பெற்றுக் கொண்டு கையில் வைத்தபடி, கண்களை மூடிக் கொண்டு இறைவனிடம் வேண்டிக்கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, பின்னர் தாலியை மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக அ…
-
- 13 replies
- 1.3k views
-
-
சென்னை: செம்மரங்களை வெட்டியதாக 20 அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் செல்போன் அழைப்பு விவரங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை கடந்த மாதம் 7-ந் தேதியன்று ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் முன்னரே கைது செய்யப்பட்டு கொடூர சித்ரவதைகளுக்குக்குப் பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக அனைத்து தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆந்திரா போலீசாரின் போலி என்கவுண்ட்டரை அம்பலப்படுத்துகிற சாட்…
-
- 0 replies
- 375 views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான நிலையில், ஏழு மாதங்களுக்குப் பின் மக்களை சந்திக்கும் ஜெயலலிதா வரும் 22-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். 23-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மீது 1996-ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ஜெயலலிதா இழந்தார். தொடர்ந்து நிதியமைச் சர…
-
- 0 replies
- 305 views
-
-
வைகோ உடன் ஸ்டாலின் சந்திப்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு உள்ளதாக நம்பிககை தெரிவித்தார். மு.க.ஸ்டாலினின் தம்பி மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதிக்கு ஜூன் 8-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. தனது தம்பி மகனின் திருமணத்துக்காக தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருந்தார். இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கினார். மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, திமுக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அண்ணா நகர் சாந்தி காலனியில் வைகோ வீட்ட…
-
- 7 replies
- 532 views
-
-
மீண்டும் முதல்வர் பதவி: 'நிதானம்' காட்டுகிறாரா ஜெயலலிதா? கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறார். ஆனாலும், மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அவசரம் காட்டவில்லை. தீர்ப்பு வெளியாகி 3 நாட்கள் ஆகியும் அமைச்சரவை ராஜினாமா, எம்எல்ஏக்கள் கூட்டம் என எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா எப்போது பதவியேற்பார் என்று தெரியாததால் ஆளுக்கொரு தேதியை பரப்பி வருகின்றனர். தீர்ப்பு வெளியான நாளில் அதிமுகவைச் சேர்ந்த 151 எம்எல்ஏக்களும் சென்னைக்கு வந்துவிட்டனர். கூட்டத்துக்கான அழைப்பு எப்போது வருமோ என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் கட்சி மேலிட…
-
- 0 replies
- 433 views
-
-
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு- 2: முக்கியப் பங்கு வகித்த 5 நீதிபதிகள் 19 ஆண்டுகளாக நீண்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போதுதான் ஜெயலலிதாவுக்கு முதல் வெற்றிக்கனி கிடைத்திருக்கிறது. இவ்வழக்கில் இதுவரை நடந்தவைகளை தொகுத்துப்பார்த்தால் ஏராளமான நபர்களின் பங்களிப்பு இதில் இருக்கிறது. இவ்வழக்கு சென்னை சிங்கார வேலர் மாளிகையில் தொடங்கி சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் என அனைத்து மன்றங்களிலும் விதவிதமான மனுக்களைச் சந்தித்தது. ஏராளமான நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்கும் மூத்த வழக்கறிஞர்கள், ஏ.ஆர்.ரஹ்மான், கங்கை அமரன், தோட்டா தரணி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் என பல வகையான விஐபி சாட்சியங்களைய…
-
- 2 replies
- 556 views
-
-
ஜெ. 17ஆம் திகதி தமிழக முதல்வராகிறார் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா எதிர்வரும் 17ஆம் திகதி தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அதற்கான தொடர்பான சுபதினமாக எதிர்வரும் 17ஆம் திகதியை தெரிவு செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 10 வருடங்கள் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை முன்னர் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் அவர் சகல குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யப்படுவதாக கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவித்தது. 67 வயதான ஜெயலலிதா ஜெயராமிற்கு பெ…
-
- 0 replies
- 349 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார். இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார். சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்துவுடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயல…
-
- 8 replies
- 1.4k views
-
-
பழத் தோட்டத்தில் தர்சன் சிங் உள்ளிட்ட பஞ்சாப் விவசாயிகள். வறட்சியான லாந்தையில் பசுமை நிறைந்த பழத்தோட்டம். வானம் பார்த்த பூமியான ராமநாத புரம் மாவட்டத்தில் பழத்தோட் டங்கள் அமைத்து வளமான பூமி யாக மாற்றி நல்ல விளைச்சல் கண்டுள்ளனர் பஞ்சாப் விவசாயி கள். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ளது லாந்தை ஊராட்சி. ராமநாதபுரத்தில் இருந்து பார்த்திபனூர் சென்று, அங்கிருந்து அபிராமம் என மாறிமாறி பேருந்து பயணம். அபிராமத்தில் இருந்து லாந்தை கிராமத்துக்கு பேருந்து கள் இல்லாததால் ஷேர் ஆட்டோ வில் சாலையின் இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சீமை கருவேலம் மரங்கள் சூழ்ந் திருப்பதை பார்த்தவாறு, லாந்தை ஊராட்சியை நெருங்கியதும் முற்றிலும் புதிய உலகில் நுழைந் ததைப்போல வரவேற்கிறது …
-
- 6 replies
- 1.1k views
-
-
புலிகளின் தலைவரை இதற்காக தான் அழித்தார்கள் நடிகர் – ராஜ்கிரண். MAY 7, 2015 COMMENTS OFF தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் என்றால் நம் நினைவிற்கு வருவது ராஜ்கிரண் தான். இவர் நடிப்பில் வெளிவந்த தவமாய் தவமிருந்து, கிரீடம், காவலன், வேங்கை ஆகிய படங்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டவை. இவர் சமீபத்தில் ஒரு வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் பிரபாகரன் குறித்து கேள்வி கேட்ட போது, ‘நாம் சுதந்திரம் வாங்கிய போது காந்தியடிகள் ஒரு பெண் நல்லிரவில் எந்த துணையும் இல்லாமல் தனியாக சென்று பாதுகாப்புடன் வீடு திரும்புகிறாளோ, அன்று தான் முழு சுதந்திரம் என கூறினார். இப்படி ஒரு நல்ல ஆட்சியை இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பிரபாகரன் நடத்தி வந்தார், இது பல பேருக்கு பிடிக்கா…
-
- 1 reply
- 740 views
-
-
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக மே மாத முதல் வாரத்தில் தொடங்கிவிடும் கத்தரி வெயில் இந்த ஆண்டு 4-ம் தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலத்தில் வெயில் 43.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் கூட பதிவாகலாம். கடந்த ஆண் டுகளை போல் இல்லாமல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரவலாக கன மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் திருச்சி, வேலூர், மதுரை, சேலம் போன்ற ஒரு சில மாவட்டங்களில் வெயில் அதிகமாகவே காணப்பட்டது. சென்னையில் அதிகம் தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சென்னையில்தான் அதிகபட்ச வெயில் பதிவாகியி ருந்தது. சென்னையில் 42.8 டிகிரி, வேலூரில் 42…
-
- 1 reply
- 578 views
-
-
பணத்தை கூட எண்ணத் தெரியாதா? மணமேடையை விட்டு மணமகனை விரட்டிய புதுமைப்பெண் உத்தரப்பிரதேசத்தில் திருமண மேடையில், மணப்பெண் ஒருவர் பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா என்று மணமகனை விரட்டியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடக்கவிருந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமண நாளில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் சரியாக எழுதப்படிக்க தெரியாதவர் என்பதை மணமகள் அறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதனை தனது பெற்றோரிடம் எடுத்துக்கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொண்ட அவர…
-
- 3 replies
- 718 views
-
-
வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும் :- தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார், பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன். சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி. மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும். "அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்.... அவர்கள் காப்பாற்றவில்லை. இந்தியா காப்…
-
- 0 replies
- 292 views
-
-
ஆந்திர அதிகார வர்க்கம் நடத்தி முடித்த இருபது தமிழர்களின் இனப்படுகொலையில் - எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல மத்திய அரசு 'சி.பி,ஐ விசாரணை தேவையில்லை' என்று நேற்று அறிவித்திருப்பது உலக முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் சொல்லமுடியாத ரணத்தை உருவாக்கியிருகிறது. மேலும் அவர் விடுத்த அறிக்கையின் முழு விபரம்:- http://www.pathivu.com/news/39707/57/20/d,article_full.aspx
-
- 2 replies
- 376 views
-
-
கண்ணகி பிரார்த்தனையில் அ.தி.மு.க.,வினர்: ஜெயலலிதாவுக்காக வேண்டுதல் 'கண்ணகி சிலையை அகற்றியதால்தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ரீதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; அதனால், கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு' என, ஜோதிடர்கள் சிலர் சொல்ல, வரும் மே 4ம் தேதி, சித்ரா பவுர்ணமி நாளில், அ.தி.மு.க.,வினர், கண்ணகி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு கள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதனால், முதல்வராக இருந்த அவர், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுபடுவதற்காக, கட்சியினர் அனைவரும் கோவில் கோவிலாக …
-
- 5 replies
- 487 views
-
-
வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளை மூடும் வரை நாங்கள் போராடுவோம்: - சீமான் [Wednesday 2015-04-29 08:00] விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாளை மார்க்கெட் திடலில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில, நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளை மூடும் வரை நாங்கள் போராடுவோம் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன். …
-
- 1 reply
- 500 views
-
-
Exclusive: ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக சம்மதித்தது ஏன்? ... மனம் திறந்தார் ஆச்சாரியா பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார் பி.வி.ஆச்சாரியா. பவானிசிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை ஹைகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க அளித்த காலக்கெடு வெறும் ஒரே நாள்தான். இந்த ஒருநாளைக்குள், வழக்கு குறித்து படித்து, தண்டனையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு சிக்கியது. அப்போதுதான், ஆபத்பாண்டவராக கர்நாடக அரசின் கண்களுக்கு தெரிந்தார், ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, 2005ம் ஆண்டு முதல் …
-
- 0 replies
- 409 views
-