தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
‘வெளியில் வருவான்... விரைவில் வருவான்! - அற்புதம்மாள் நம்பிக்கை! ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றவர்களை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கிறார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்! இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரணையில் இருக்கிறது. ‘சி.பி.ஐ விசாரிக்காத வழக்குகளில் வேண்டுமானால் மாநில அரசு முடிவெடுக்கலாம்’ என்பது மாதிரி கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இறுதித் தீர்ப்பு எப்படி அமையுமோ என்ற நிலையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளை சந்தித்தோம். தூக்குத்தண்டனை பெற்ற மூவர் வழக்கு மிகமிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. 25 ஆண்டுகளா…
-
- 0 replies
- 837 views
-
-
ராஜீவ் வழக்கு தள்ளுபடி. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் பேரறிவாளவன், முருகன் மற்றும் சாந்தனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசு தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனுவை இந்திய உச்சநீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்துள்ளது. மேலும், 3 மேற்படி மூவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது சரியானதே என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது http://www.jvpnews.com/srilanka/118510.html
-
- 10 replies
- 1.2k views
-
-
ஆயுள்தண்டனைக் குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுJUL 23, 2015 | 14:13by அ.எழிலரசன்in செய்திகள் கொலை, வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அதேவேளை, ராஜீவ்காந்தி படுகொலை வழக்குக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குற்ற நடைமுறைச் சட்டம் 432 மற்றும் 433ஆம் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் மாநில அரசு அதிகாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதை அடுத்து, அ…
-
- 0 replies
- 418 views
-
-
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.18,864 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவுக்கு இன்று விலை குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.2,385-க்கும் பவுன் ரூ.19,080-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலையில் கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.2,363 ஆகவும் பவுன் ரூ.18,904 ஆகவும் குறைந்தது. மாலையில் இது மேலும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.2,358 ஆகவும் பவுன் ரூ.18,864 ஆகவும் இருந்தது. அதேபோல சுத்தத் தங்கம் விலை (10 கிராம்) நேற்று ரூ.25,510-க்கு விற்பனையானது. இது இன்று காலையில் ரூ.240 குறைந்து ரூ.25,270 ஆகவும், மாலையில் மேலும் ரூ.50 குறைந்து ரூ.…
-
- 3 replies
- 472 views
-
-
ராஜபக்சேவை பற்றி வைகோவிடம் பிரதமர் மோடி. July 22, 20152:37 pm இன்று ஜூலை 22 ஆம் நாள், பகல் 12.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமரைச் சந்திப்பதற்கு வைகோவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 11.45 க்கெல்லாம் வைகோ அங்கே சென்று விட்டார். பிரதமர் நரேந்திர மோடி 12 மணிக்கே வைகோவை அழைத்தார். உள்ளே நுழைந்தவுடன், ‘நரேந்திர மோடி வைகோவைக் கட்டித் தழுவிக்கொண்டு, நீங்கள் என்னைச் சந்திக்க வந்தததில் மிக்க மகிழ்ச்சி’ என்றார். ‘நான் தினமும் உங்களை விமர்சித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் என் நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடனே உடனே வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி’ என்றார் வைகோ ‘நீங்கள் உணர்ச்சிடமையமானவர். அதனால்தான் ஈழப்பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள்’ எ…
-
- 0 replies
- 351 views
-
-
விஜயகாந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்! சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ராவுத்தர் இருந்தார். கடைசியாக இவர், "புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்" என்ற படத்தை தயாரித்தார். அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "நண்பா நீ எழுந்து வருவாய்" என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.…
-
- 0 replies
- 815 views
-
-
காற்றில் பறக்கும் விதிகள்; அதிவேகத்தால் அதிகரிக்கும் விபத்துகள் : 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 23,700 பேர் பலி இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் 60 சதவீதம் அதிக வேகம் காரணமாக நிகழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் 80 கி.மீட்டர் வேகத்திலும், சக்கர வாகனங்கள் 60 கி.மீ. வேகத்திலும், 8-க்கும் அதிக இருக்கைகள் கொண்ட வாகனங்கள் 80 கி.மீட்டர் வேகத்திலும், 8-க்கும் குறைந்த இருக்கைகள் கொண்ட வாகனங் கள் 100 கி.மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ் சாலைத்துறை 2014 ஆகஸ்ட் 5-ல் அறிவித்தது. இந்த விதிகளை வாகன ஓட்டி கள் கடைபிடிப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் 90 சதவீத வாகனங்கள் 100 கி.மீட்டருக்கும்…
-
- 0 replies
- 254 views
-
-
• சோ அய்யர்! வாழ்வின் இந்த இறுதிக் கணங்களிலாவது தனது துரோகத்தை உணர்வாரா? கர்நாடாவில் இருந்து கொண்டு கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியாது. கேரளாவில் இருந்துகொண்டு மலையாளிகளுக்கு எதிராக எழுத முடியாது. ஆனால் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழருக்கு எதிராக எழுதி வருபவர் சோ அய்யர். மகிந்த ராஜபக்சவுடன் கூட்டு வைத்துக்கொண்டு ஈழத் தமிழின விடுதலைக்கு எதிராக செயற்படுபவர் சோ அய்யர். முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டபோது அதற்காக முழு உலகமே இரங்கிய போது கொஞ்சம்கூட இரக்கமின்றி மக்களை கொன்றது சரியே என்று கூறியவர் இந்த சோ அய்யர். சோ அய்யரும் கலைஞர் கருணாநிதியும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் கூட. ஈழத் தமிழர்களை அழிக்க துணை போனவர்…
-
- 2 replies
- 661 views
-
-
கடலூரில் சாப்பிட்ட இறால் குழம்பால் அஜீரணம்... நெஞ்சு எரிச்சலால் அவதிப்பட்ட ஸ்டாலின்புதுச்சேரி: கடலுார் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டது. கடலுார் மாவட்டம் புதுச்சத்திரத்தில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்து இரவில் கார் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அவருடன் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வமும் வந்தார். புதுச்சேரி ராஜிவ் சிலை சிக்னல் அருகில் உள்ள அக்கார்டு ஓட்டலில் ஸ்டாலின் இரவு உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரியை நெருங்கிய நிலையில் ஸ…
-
- 3 replies
- 600 views
-
-
சென்னை: "சன் டி.வி.க்குத்தானே பாதிப்பு; நமக்கென்ன?’ என்ற எண்ணம் அரசியல் நோக்கத்தில் ஏற்படுமானால், எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி ஒவ்வொன்றாக நசுக்கி மோடி அரசு கபளீகரம் செய்து விடும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரண்களுள் ஒன்றுதான் செய்தி ஊடகத்துறை ஆகும். பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான நரேந்திர மோடி அரசு, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கின்ற விதத்தில், கருத்து உரிமையை நசுக்கிடப் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக முனைந்து செயல்படுகிறது. எனவேதான், ‘நெருக்கடி நிலையின் நிழல் படரக் கூடும்’ என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. …
-
- 0 replies
- 206 views
-
-
சென்னை: இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரமாக சென்னை உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகளவிலும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வடசென்னையில் தொழிற்சாலைகளால் மாசு ஏற்படும் அதே நேரம், தற்போது கட்டுமான பணி மற்றும் போக்குவரத்து நெரிசலால் தென் சென்னை உற்பட மொத்த நகரமும் மாசடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் சென்னையில் 700 புதிய வாகனங்கள் சாலையில் ஓடுவதாக ஆய்வில் தெரிவிகப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியை விட மிகவும் மாசடைந்த நகரமாக சென்னை உருவாகி இருப்பதாக தெரிகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வெளியிடப்படும் புகையில் கலந்து உள்ள கார்பன் மோனக்சைட் மற்றும் சல்…
-
- 0 replies
- 179 views
-
-
இறந்தால்தான் விருதா? எம்.எஸ்.வி.யை மறந்துபோன மத்திய, மாநில அரசுகள்! ‘மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு! இந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு!’ - என்ற பாடல் வரிகளைப் பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்று உயிரோடு இல்லை. ஆனால், அவருடைய இசை இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. 87 வயதான எம்.எஸ்.வி, இந்தியத் திரையுலகமே போற்றும், மூத்த இசையமைப்பாளர். ‘தனியாக 500 திரைப்படங்களுக்கு மேலாகவும், டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 700 திரைப்படங்களுக்கு மேலாகவும் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு தன் பாடல்களின் மூலமாக, ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்த பெருமைக்குரியவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கி, தமிழ் திரையுலகிலும், மற்ற மொழி திரையுலகிலும…
-
- 2 replies
- 465 views
-
-
மிஸ்டர் கழுகு : மெடிக்கல் ! நினைப்பதற்கு முன்பே வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘போயஸ் தோட்டத்துப் பக்கம் இருந்து வருகிறேன். ஆனால், வரவில்லை!’’ என்று ஆரம்பித்தார். ‘‘என்னாச்சு?” நாம் கேட்டோம். ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றம் விடுதலை செய்த பிறகு, 23.5.2015 அன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். மறுநாள் கோட்டைக்கு வந்து சிந்தாமணி அங்காடியில் மலிவு விலையில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். பிறகு மே 29, ஜூன் 2, 8, 12, 16, 18, 25 ஆகிய நாட்களில் கோட்டைக்கு வந்தார். அங்கு இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சில திட்டங்களைத் தொடங்கினார். ஜூன் 29-ம் தேதி மெட்ரோ ரயிலுக்கும் கோட்டையில் இருந்தபடியே கொடியசைத்தார். ஜூ…
-
- 0 replies
- 730 views
-
-
புதுடில்லி : ராஜிவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என தலைமை நீதிபதி தத்து தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர்கள் கருணை மனு அளித்ததன் பேரில் கடந்த ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஏப்ரல் 24ம் தேதி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்…
-
- 0 replies
- 221 views
-
-
பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு - இன்று விசாரணை. டெல்லி: ராஜீவ்காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ராஜீவ் க…
-
- 1 reply
- 256 views
-
-
மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம். எஸ் விஸ்வநாதன்( வயது 87) இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம். எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி தம்பதியினருக்கு 1928இல் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய விஸ்வநாதன் மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது. 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய அவர், 1950களில் எஸ். எம் சுப்பையா நாயுடு மற்றும் சி.ஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். 1952இல…
-
- 22 replies
- 3.4k views
-
-
அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த சோனியா காந்தி: அதிர்ச்சியில் திமுக[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2015, 07:03.44 AM GMT +05:30 ] இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா அ.தி.மு.க.வுக்கும் அழைப்பிதழை அனுப்பியதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் திகதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் என தெரிகிறது. இந்த கூட்டத் தொடருக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஓன்றிணைக்க காங்கிரஸ் மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் நாளை மறுநாள் நடக்கும் இப்தார் விருந்தில் பங்கேற்க பா.ஜ.கவைத்…
-
- 0 replies
- 313 views
-
-
மதுரையில்..... அமித்ஷா முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதன்பின் பகல் 12 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். மதுரை ராஜா முத்தையா மன்றத்த…
-
- 3 replies
- 413 views
-
-
நலந்தானா ஜெயலலிதா ? அரசியல்வாதிகளுக்கு முதுமையும் முதலீடுதான்! உடலின் வலிமையைத் தாங்கும் சக்தி, தன் கால்களுக்கு இல்லை என உணர்ந்ததுமே வீல் சேரில் கூச்சப்படாமல் உட்கார்ந்தார் கருணாநிதி. 'வீல் சேரில் வலம்வரும் வில் பவரே...’ என்ற பட்டம் கிடைத்தது. இதை இயல்பான மாற்றமாக மாற்றிக்கொண்டார் கருணாநிதி. ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன் உடல்நிலையைக்கூட சாதாரணமானதாக நினைத்து, அதை உள்வாங்கி விழ…
-
- 0 replies
- 398 views
-
-
குருப்பெயர்ச்சி - ஜெயலலிதாவுக்கு பின்னடைவைத் தரும். கலைஞருக்கு சாதகம் : - பிரபல சோதிடர் கணிப்பு![Sunday 2015-07-05 19:00] தற்போதைய குருப்பெயர்ச்சி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பலத்த பின்னடைவைத் தரும். கலைஞருக்கும் இந்த குருப்பெயர்சி சாதகம் இல்லையென்றாலும், கலைஞர் 2016-ல் மீண்டும் முதல்வர் ஆவார் என்று அடித்துக் கூறுகிறார் பிரபல ஜோதிடரான திருச்சிற்றம்பலம். ஜூலை 5-ந் தேதி குருப்பெயர்ச்சி இரவு நிகழ்வதையொட்டி, கலைஞர், ஜெ’ஆகிய இருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்த பிரபல நாடிஜோதிடர் சென்னை திருச்சிற்றம்பலம், தனது கணிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘ சிம்மராசிக்காரரான ஜெயலலிதா, ரிஷப லக்னம், மக நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் பிறந்தவர். 67 வயது 4 மாதங்களைக் கடந்திருக்கும் அவருக்கு இன்னும் ஒரு…
-
- 2 replies
- 712 views
-
-
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தால் ஜெயலலிதா உட்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வி.ஜி.பிரகாசம், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் மனுவை நேரில் அளித்தார். லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 7 பினாமி நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், திமுக மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66.55 கோடி சொத்து சேர்த்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நால்வருக்கும…
-
- 0 replies
- 170 views
-
-
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்து தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்ட நிலையில் சென்னை மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. சென்னையில் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. அதிகபட்சமாக 104 டிகிரி வரை பதிவாகி உள்ளது. அனல் காற்றும் வீசுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1289437
-
- 3 replies
- 274 views
-
-
விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த மனுவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மனுவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கேரளா வசம் இருக்கிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்க…
-
- 3 replies
- 412 views
-
-
16 மணி நேர சி.பி.ஐ. விசாரணை நடப்பது என்ன ? தயாநிதிக்கு பிடி இறுகுகிறது ! மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது முதல் சன் டி.வி-க்கு நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதற்கு முன்பு வரை, தயாநிதி மாறன் பிரச்னையாக மட்டுமே இருந்த பி.எஸ்.என்.எல் விவகாரம், ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரம் எல்லாம் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, சன் தொலைக்காட்சியின் உரிமம், சன் டி.வி-க்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம் என்று புது திசையில் பயணிக்கத் தொடங்கி உள்ளன. இதை எதிர்கொள்ள சன் தொலைக்காட்சி நிர்வாகம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழக்கை நீதிமன்றங்களில் தாக்கல் செய்துகொண்டிருக்கிறது! பாதுகாப்பு அஸ்திரம்! சன் தொலைக்காட்சிக்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மத்திய அரசு அனுமதி தரவில்லை. கல் …
-
- 2 replies
- 390 views
-
-
ராமதாஸ் | கோப்புப் படம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினராலும், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், வேதனை தருவதாகவும் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லைப் பெரி…
-
- 0 replies
- 195 views
-