தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி பறிப்பு சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி தினரன் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் வெளியிடுகிறேன் என்று துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்று கூறிய தினகரன் ஏற்கனவே வைத்திலிங்கம், முக்கிய அ…
-
- 0 replies
- 419 views
-
-
கேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம்: 6 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியீடு தடைபட்டது பகிர்க தமிழகத்தில் கேளிக்கை வரி அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், கடந்த வாரம் வெளியான திரைப்படங்களே இந்த வாரமும் திரையிடப்பட்டுள்ளன. Image captionஇன்று (வெள்ளிக்கிழமை) காலையில் வெறிச்சோடிய சத்தியம் திரையரங்கு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திரைப்படங்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. இதனால், அதிகபட்ச திரையரங்கக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து 153 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் 10 சதவீதம் அளவுக்கு கேளிக்கை வரியும் விதி…
-
- 0 replies
- 494 views
-
-
லோக்சபா தேர்தல் பிரசாரத் திற்காக, இன்று மாலை, சென்னை வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர். ரஜினி வீட்டில் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார். மோடி வருகை, ரஜினி சந்திப்பு காரணமாக, தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் உள்ள கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., - புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக பா.ஜ., வலியுறுத்தல்: இந்த கட்சிகள் சார்பில், 39…
-
- 0 replies
- 661 views
-
-
‘உங்களைக் காலி செய்துவிடுவார் மோடி’ என்றார் குருமூர்த்தி! - வெளிச்சத்துக்கு வருகிறதா வில்லங்க வீடியோ? ‘திறனற்றவர்கள்' என ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய வார்த்தைகளை வைத்துக் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். 'அவர் படித்த முட்டாள்' என அமைச்சர் ஜெயக்குமார் கூற, 'திறனற்றவர்கள் என நான் கூறிய வார்த்தை வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிட்டது' என விளக்கம் கொடுத்திருக்கிறார் குருமூர்த்தி. 'ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு வலுவாகக் கால் ஊன்ற நினைத்த பா.ஜ.கவுக்கு தினகரனின் வெற்றி கூடுதல் கோபத்தை வரவழைத்திருக்கிறது. அதைத்தான் வேறு வடிவில் வெளிப்படுத்துகிறார் குருமூர்த்தி' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை…
-
- 0 replies
- 320 views
-
-
தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும் MinnambalamAug 22, 2022 07:35AM ராஜன் குறை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சினை அவரை தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்ட படுகொலைக்கு யாரும் பொறுப்பாக்குகிறார்கள் என்பதல்ல. உண்மையில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை யாருமே நம்பவில்லை என்பதுதான். அவரைத் தவிர எந்த ஒரு ஆளுமையுள்ள அரசியல் தலைவர் முதல்வராக இருந்திருந்தாலும் அவர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாக, அவப்பெயராக அந்த சம்பவம் மாறியிருக்கும். எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளை போல சிரித்தபடியே “தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன்” என்று கூறியபோது யாரும் அவர் பொய் சொல்கிறார் என்று கொந்தளிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு என்ன நடக்கிறது என்று…
-
- 0 replies
- 337 views
-
-
ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்? - பிம்பம் உடைக்குமா சசிகலா பிரமாணப் பத்திரம்? #VikatanExclusive தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்ய உள்ள பிரமாணப் பத்திரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பக்கூடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் கு…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கைக்கு தப்ப முயன்ற மூன்று இலங்கை அகதிகள் கைது தமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற போது மண்டபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மூன்று அகதிகள் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்றனர். இதன்போது அவர்களை மண்டபம் பொலிஸார் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/36552
-
- 0 replies
- 615 views
-
-
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த அத்யாயம்... வருகிறது டிசம்பர் 17 சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று அக்டோபர் 17ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 17ம் தேதியை நோக்கித்தான் முழுக் காவனமும். ஏனெனில் அன்றைய தினத்துக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. எனவே அது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சியிலும் சில அதிரடி உத்தரவுகளையும் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபைக்கு வருகிறார் என்றாலே அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வரிசைகட்டி நிற்பார்கள் வரவேற்…
-
- 0 replies
- 438 views
-
-
கரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் கடந்த ஜன.27-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பமுயன்றனர். ஆனால்…
-
- 0 replies
- 393 views
-
-
4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.! வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக நிலைகொண்டுள்ள காரணத்தால் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பலவேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிருப்தியை எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித…
-
- 0 replies
- 330 views
-
-
கோவையில் சிறுமி கொலை – உடற்கூற்று பரிசோதனையில் அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்கள் கோவையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழு வயது சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை குறித்த அறிக்கை வெளியாகி அனைவர் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உடற்கூற்று அறிக்கையில் சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் தொடச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறுமி அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், கயிறொன்றின் மூலம் கழுத்து நெரிக்கப்பட்டு, கழுத்திலுள்ள நரம்பு துண்டாகி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றிய விபரங்களை தெரிந்தவர்…
-
- 0 replies
- 464 views
-
-
கோடிக்கணக்கில் நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்! இராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5 இலட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று (26) வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து தலைமறைவான சந்தேக நபர் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர் பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. கடல் வழியாக நடக…
-
- 0 replies
- 417 views
-
-
சென்னையில் சாலையில் செல்ல வேண்டும்.. ஆசைப்பட்ட ஜி ஜின்பிங்.. ஓ இதுதான் ரியல் பின்னணியா! சென்னையில் சாலையில் பயணிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் விருப்பப்பட்டு இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று சென்னைக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் வருகை தருகிறார். பிரதமர் மோடி உடன் அவர் இன்று மாலை சந்திப்பு நடத்துகிறார். இந்த மூன்று நாள் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இதனால் சென்னையில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுஇந்த சந்திப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகள் கூடி கடந்த இரண்டு மாதம் முன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். டெல்லியில் இந்த ஆலோசனை நடந்துள…
-
- 0 replies
- 1.3k views
-
-
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு - முழு விவரம் புதுடெல்லி: பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழுவினர் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும் பல கலாச்சார பாரம்…
-
- 0 replies
- 107 views
-
-
அ.தி.மு.கவா... தி.மு.கவா..? - புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு! Share வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்குமா?, போட்டியில் இருக்கும் கட்சிகளில் எந்த கட்சிக்கு நிறைகள் அதிகம்? குறைகள் குறைவு?, அ.தி.மு.க…
-
- 0 replies
- 713 views
-
-
சென்னை: தமிழகத்தில் 84 லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர் என்று வேதனையுடன் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் சமீபத்தில் சொல்லப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி மொத்தம் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதி வாரியாக தாழ்த்தப்பட்டவர்கள் 18,24,342, அருந்ததியினர்கள் 1,96,784, மலைவாழ் இனத்தினர்கள் 63,898, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் 22,00,498, இஸ்லாமியர்கள் 3,24653, பிற்படுத்தப்பட்டோர் 34,53,868, மற்றவர்கள் 2,67,821, ஆக மொத்தம் 84 லட்சம் பேர் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலு…
-
- 0 replies
- 176 views
-
-
போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு மேலும் அறிவித்துள்ளது. மேலும் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான இழப்பீட்டு தொகையை செலுத்தியது தமிழக அரசு! ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பது தொடர்பில் நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன்படி சென்னை சிவில் நீதிமன்றத்தில் …
-
- 0 replies
- 636 views
-
-
திருச்சி: காவிசாயம் ஊற்றி பெரியார் சிலை அவமதிப்பு! மின்னம்பலம் திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் சிலை உடைக்கப்படுவதும், காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் கோவை, திருக்கோவிலூர், கடந்த 3ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தேளூரில் அமைந்திருக்கும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சினாலும் அது தொடர்கிறது. திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரிலுள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலை மீத…
-
- 0 replies
- 656 views
-
-
மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான கோர்ட்டு உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது மகன் அ…
-
- 0 replies
- 546 views
-
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடந்த ஒருவாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க வில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.யை அனுப்பி உடல்நலம் பற்றி விசாரித்தார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி. நேற்று பகலில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் ராமதாஸ் உடல்நலம் பற்றி விசாரித்தார். அவர் ராமதாசின் மகளுடன் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் மு.க. ஸ்டாலினும் ராமதாசை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரும் ராமதாசின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். ரா…
-
- 0 replies
- 554 views
-
-
சசிகலாவைப் பற்றி நிறைய தெரியும்.. இளவரசியைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சிக்குங்க! on: பெப்ரவரி 15, 2017 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் போயஸ் தோட்ட இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இளவரசி சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். அவருக்கு 4 சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர் சசிகலாவின் அண்ணன் மனைவியாவார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டள்ள முதல்வர் ஜெயலலிதா தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சொந்தங்கள். போயஸ்கார்டனுக்குள் இளவரசி வந்தது ஒரு சோகமான நிகழ்வினால்தான். சசிகலாவின் அண்ணி சொத்துக்குவிப்பு வழக்கின் 4வது குற்றவாளியாகச…
-
- 0 replies
- 492 views
-
-
சட்டமன்ற ரகளை: என்ன செய்யப் போகிறார் கவர்னர்? தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது, ஏற்பட்ட அமளி-துமளி சம்பவங்கள் குறித்து கவர்னர் என்ன முடிவெடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததும் தொடங்கிய அரசியல் சித்து விளையாட்டுகள் இப்போதும் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் மேலும் சூடுபிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. "நல்லா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி!" என்று கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி உண்டு. அதன்படி, தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு தொடர்ந்து நீடித்திருக்குமானால், …
-
- 0 replies
- 321 views
-
-
அ.தி.மு.க அஸ்தமனம் ஆரம்பம்..! OPSvsEPS சர்வே அதிர்ச்சி முடிவுகள் #VIkatanSurveyResults சமீபத்தில் அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியும் வைத்திலிங்கமும் வந்துகொண்டிருந்தபோது, ஒரு மூத்த நிர்வாகி வைத்திலிங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான வைத்திலிங்கமும் அந்த நிர்வாகியைப் பொதுவெளியில் திட்டியிருக்கிறார். இதனையடுத்து, செங்கோட்டையன் வந்து சமாதானப்படுத்திய பிறகுதான் அந்த சலசலப்பு அடங்கியிருக்கிறது. இப்படியான குழப்பங்கள் மற்றும் சலசலப்புகளுக்கு ஊடாகத்தான் அ…
-
- 0 replies
- 325 views
-
-
தள்ளுபடி? சுப்ரீம் கோர்ட்டில் சசி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்ட னையை மறு ஆய்வு செய்யும் படி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு, தள்ளுபடி ஆகும் என கூறப்படுகிறது. ஏனெனில், தீர்ப்பில் எந்த குறையும் இல்லை என்பதால், மனுவை நீதிபதிகள் விசாரிக்க வாய்ப்பு இல்லை என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில், 27ம் தேதிக்குள் முடிவு தெரியும் என, அவர்கள் நம்புகின்றனர். சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி …
-
- 0 replies
- 735 views
-
-
ஜெயலலிதாவுக்கு சோ எழுதிய கடிதம்! போயஸ் கார்டன் ஃபிளாஷ்பேக் மனிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம். ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்களாலும் சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்டு. போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம். இளமைக்காலம் துவங்கி அவரது இறப்பின் இறுதிநிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டதட்ட அரை நுாற்றாண்டு. 'அவரது அழுகையை ஆறுதல்படுத்தியிருக்கிறது.’ ‘தனிமையை தட்டிக்கொடுத்து மறக்கச்செய்திருக…
-
- 0 replies
- 833 views
-