தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள மதிமுக தொண்டர்கள், அந்தக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முதல் கட்சி மதிமுகதான். அதன்பிறகே தேமுதிக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. மோடி அலையால் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த தே.ஜ. கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றமே கிட்டியது. 2 இடங்களில் மட்டுமே ( பாஜக-1, பாமக-1)வெற்றி பெற்றது. தேமுதிக, மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததிலேயே மதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உரசல் ஆர…
-
- 0 replies
- 401 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் தூக்கு தண்டனையில் இருந்து விடுபட வேண்டி பள்ளி குழந்தைகள் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், பிரசாந், வில்சன், லாங்லெட் ஆகியோர் மீது இலங்கை அரசு போதை பொருள் கடத்தியதாக தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகவும், தண்டனையில் இருந்து 5 மீனவர்களை மீட்கவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடத்திலும் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இந்நில…
-
- 0 replies
- 326 views
-
-
போதையில் கரையும் தமிழ் சினிமா... !தள்ளாடும் தமிழகம் சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான். தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும். அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை…
-
- 0 replies
- 3.3k views
-
-
நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர். சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள, எம்.ஜே.அக்பர், கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நேற்று முன்தினம் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவுரையை நிகழ்த்தினார். அந்த உரையிலே அவர் மேலும் தெரிவித்ததாவது, “எமது பிராந்தியத்தில் சமாதானமும் நட்பும் அவசியமாகும்.அயல் நாடுகளுடனான உறவு மிக முக்கியமானதாகும். இந்திய பிரதமர் ஜப்பானுக்கும் சென்றார். சீனாவுக்கும் சென்றார். பிராந்திய நலன் முக்கியமாகும். இதேவேளை பயங்கரவாதத்தை தவிர ஏனைய அனைத்து…
-
- 8 replies
- 656 views
-
-
ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி முற்றுகைப்போராட்டம் தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதைக் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம நாம் தமிழர் கட்சி சார்பில், இராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ராஜபக்சேவின் உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. திருச்சி நாம் தமிழர் கட்சி தொடர்வண்டி மறியல் போராட்டம் அப்பாவி மீனவர்கள் மீதான மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். (Facebook)
-
- 12 replies
- 2.5k views
-
-
அதிகப்படியான நீரை கேரளா வெளியேற்ற காரணம் என்ன? கருணாநிதி கேள்வி! சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான நீரை கேரள அரசு வெளியேற்ற காரணம் என்ன? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்கக்கோரி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாக, கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நல்ல வா…
-
- 0 replies
- 540 views
-
-
விவேகானந்தரும் தர்மபாலாவும் ஒன்றா? பழ.நெடுமாறன் சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலா என்ற புத்த பிட்சுவின் அஞ்சல் தலையை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சி இருக்கிறது. தர்மபாலா புத்தத் துறவி வேடம் பூண்ட சிங்கள பேரினவாதி. அவரது துறவுக்கோலத்துக்கும் அவருடைய செயற்பாட்டுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என்பதை அவரது வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள். ''எழில்மிக்க இந்த இலங்கைத் தீவானது ஆரிய சிங்களர்களால் சொர்க்க பூமியாக ஆக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நிய காட்டுமிராண்டிகள் படையெடுத்துக் கைப்பற்றி அதை அலங்கோலமாக்கிவிட்டனர். சிங்கள மக்களுக்கு மத விரோதம் என்றால் என…
-
- 1 reply
- 508 views
-
-
இப்படியும் ஒரு தமிழரா ? ———————————— முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை. பூனா திரைப்படக் கல்லூரியின் பேராசிரியர்.சதீஷ் பகதூர் ‘திரைப்பட ரசனை’ பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார், அடையார் திரைப்படக் கல்லூரியில். வகுப்பு முடியும் தருணம் திடீரென்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அமெரிக்க நூலகத்தில் Dances of Siva என்றொரு செய்திப்படம் திரையிடப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் சென்று காணலாம் என்பதாக. அந்தப்படம் ஆனந்த குமாரசாமி பற்றியது. பார்த்து பிரமித்துப் போனோம். இப்படி ஒரு ஆய்வாளரா? என்பதற்கு மேல், நமக்கு இப்படிப்பட்ட கலாச்சார பொக்கிஷங்கள் இருக்கின்றானவா? ஆச்சரியம் கவிந்து எல்லாமும் மூடிப்போய் விட்டது. அப்போதிருந்த அரசியல் வெறியில் மீண்டும் அவர் பற்றி எதுவும் தேடவில்…
-
- 0 replies
- 932 views
-
-
ஓய்வு கிடைக்காமல் உழைப்பவர்கள் நிறைய பேர். விபத்து, இழப்பு மாதிரியான அசம்பாவிதம் நடந்தால் கட்டாய ஓய்வு கிட்டும். ஓடி ஓடி உழைக்கிறோமே தேவைதானா, நாம் போகும் பாதை சரிதானா என்று நிதானமாக திரும்பிப் பார்த்து யோசிக்க கடவுள் வழங்கும் சந்தர்ப்பம் அது. மறுப்பாளிகள் இயற்கை எனலாம். ஜெயலலிதாவுக்கு கிடைத்திருப்பது அம்மாதிரியான சந்தர்ப்பம்.அரசு நிர்வாகத்தில் அன்றாட தலையீடுக்கு இடமில்லை. திரும்பி பார்ப்பது தவிரவும் நிறைய நேரம் கிடைக்கும். எங்கெங்கோ கண்காணாத இடங்களில் வசிக்கும் கட்சிக்காரர்களின் கடிதங்களை உதவியாளர்கள் வடிகட்ட விடாமல் தானே எடுத்து படிக்கலாம். நிதர்சனத்துக்கும் தனக்கும் இடையே எழுப்பப்பட்ட சுவரை அளவெடுக்கலாம். பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பிக்கலா…
-
- 0 replies
- 378 views
-
-
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழக மீனவர்கள் 600 பேரை சுட்டுப் படுகொலை செய்த, 2000க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய, அப்பாவி தமிழக மீனவர்கள் 5 பேரின் மீது பொய் வழக்கு போட்டு தூக்கு தண்டனை விதித்து மரணக்கொட்டடையில் அடைத்து வைத்துள்ள சிங்கள பேரினவாத அரசின் கொலைகாரன் இராஜபக்சேவுடைய இலங்கை பிரதமர் ஜெயரத்னா திருப்பதி வருகையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருத்தணி நகரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கருப்புக்கொடியுடன் திருப்பதி நோக்கி புறப்பட்ட 250க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச்செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வடசென்னை…
-
- 0 replies
- 378 views
-
-
விளம்பரத்தில் கோக் குடிக்கச் சொன்னதும், திரைப்படத்தில் கோக்கைச் சாடியதும் நடிப்பு என்று விஜய்க்கு நன்றாகத் தெரியும். திரைப்படத்தில் ஒரு காதலுக்காகவோ, மனைவிக்காகவோ உருகுவதும், வாழ்வதும் நடிப்பு என்றும், நிஜத்தில் ஒன்று போனால் இன்னொன்று என்று தன் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக வாழும் தெளிவும் கமலுக்கு உண்டு. படத்தில் நூறு பேர் வந்தாலும், ஒற்றை 'பாட்சா'வின் பெயரில் நடு நடுங்க வைத்து, நிஜத்தில் தன் திரைப்படம் வரும் நேரம் தன் அரசியல் கொள்கைகளை மாறி மாறி அமைத்துக்கொள்ளும் தெளிவும் ரஜினிக்குப் புரியும். நடிகர்களோ, நடிகைகளோ அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள், ரசிகர்கள் நடிப்பை ரசித்து விமர்சித்துப் போகும்வரை எந்தக் குழப்பமும் இல்லை. நடிகர்கள் நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் கு…
-
- 0 replies
- 440 views
-
-
மூன்று மாணவர்கள் உட்பட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் ஒன்பது பேருக்கும் நிபந்தனை பிணை அளிப்பதாக எழும்பூர் செசன்சு நீதிமன்றம் அறிவித்து உள்ளது. சத்தியம் திரை அரங்கம் தாக்குதல் தொடர்பாக மாணவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் மவுன்ட் ரோடு காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீ.பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் செம்பியன், மாற்றம் மாணவர்கள் இளையோர் அமைப்பின் பிரதீப் ஆகியோரை அக்டோபர் மாதம் 23 ம் திகதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இவர்களுடன் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த த.பெ.தி.க தோழர்கள் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு பிணை கோரி த.பெ.த…
-
- 1 reply
- 545 views
-
-
மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி| கோப்புப் படம். தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல் பேசும் சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை, அடுத்துள்ள ஜல்லிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற் காக வந்த உ.வாசுகி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது: பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக்கூடப் போராட்டம் மூலமாகத்தான் பெற வேண்டி யுள்ளது. அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகி…
-
- 3 replies
- 867 views
-
-
நடிகர் கார்த்திக் | கோப்புப் படம் நாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், "நான் எனது சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்" என்றார். அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்திக் தேச பக்தி மிகுந்த இளைஞர் என பாராட்டிப் பேசினார். முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக கார்த்திக் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE…
-
- 2 replies
- 598 views
-
-
பேருந்தைக் கட்டுப்படுத்தி 80 உயிர்களைக் காத்த பெண் இன்னும் மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ….? கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள். 80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அப்பேருந்து பெரும் விபத்திலிருந்து மீண்டாலும், அதில் பயணித்தவர்கள் இன்னமும் தங்களைத்தாங்களே கிள்ளி்ப்பார்த்துக்கொள்ளாத குறையாய் அதிசயித்துக்கிடக்கிறார்கள். மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம். தமிழகத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக வ…
-
- 0 replies
- 562 views
-
-
நீதி உரிமை பேரணி.. சீக்கிய இனப்படுகொலை 30 ஆவது வருட நினைவேந்தலன்று இந்திய தலைநகரில் "தமிழர், சீக்கியர், காஷ்மீரி, நாகர்" ஆகிய "தேசிய இனங்களின் ஒன்றுகூடல்" இனப்படுகொலை துயர் பகிர.. தமிழர் தேசிய இனப்பங்காளனாக.. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.... இடம் - ஜந்தர் மந்தர், புதுடெல்லி . நாள் - 03- நவம்பர்-2014 "தேசிய இனங்களை ஒன்றுபடுத்துவோம்.. இனப்படுகொலைகளை அம்பலப்படுத்துவோம்.." நாம் தமிழர் கட்சி - புதுடெல்லி தொடர்புக்கு - 813039216,9818412784,971797572 https://m.facebook.com/NTKatchi/photos/a.1482303878673067.1073741828.1481878972048891/1535096693393785/?type=1&ref=bookmar…
-
- 30 replies
- 1.5k views
-
-
தொண்டர்களுடன் 2–வது நாளாக ஆலோசனை நடத்தும் ஜி.கே.வாசன்: புதியகட்சி 16–ந்தேதி உதயம்? சென்னை, நவ. 4– காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும் இடம், தேதி பற்றி கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவர் 2–வது நாளாக ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வருகிற 12 அல்லது 16 ஆகிய 2 தேதிகளில் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த இதில் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவதில் காலதாமதம் ஆவதால் தே…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனைக்குக் காரணமான சிங்கள அரசைக் கண்டித்தும், பால் விலை உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.facebook.com/TheVaiko/posts/777221039004511
-
- 0 replies
- 344 views
-
-
அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது. இந்த அநீதியைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 - கா…
-
- 0 replies
- 388 views
-
-
பொய் வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இன்று 02-11-2014 சென்னையில் தந்தை பெரியார் திராவிடர்கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பாக இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது ! ராஜபட்சே படம் எரிப்பு ! 100 க்கும் மேற்பட்டோர் கைது ! (Facebook)
-
- 2 replies
- 592 views
-
-
தமிழக மீனவர்கள் 5பேரின் தூக்கை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி நடத்தும் இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் மே17 இயக்கத்தின் தோழர் அருள் முருகன் கண்டன உரை (facebook)
-
- 1 reply
- 571 views
-
-
பாலச்சந்திரனின் படுகொலை காட்சிக்கு(08.03.2013) பிறகு கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழ்நாட்டில் மாணவர்களின் இன எழுச்சி உலகமே அறிந்த ஒன்று. தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று போராடும் மாணவர்களையும் இளையோர்களையும் நள்ளிரவில் கைது செய்வதும் அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள்,கல்லூரி நிர்வாகத்தை மிரட்டுவது போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகள் நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் தமிழீழம் மலர இலங்கை புறக்கணிப்பை முன்னெடுத்த(லைகா எதிர்ப்பு ) மாணவர்களில் மூவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து வதைபடுத்தி வருகின்றனர் (நாளை பிணையில் வெளிவருகின்றனர்). இவற்றை பல்வேறு சனநாயக அமைப்புகளும் கண்டித்து வரும் சூழலிலும் , மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்தி வருகிறது.கடந்…
-
- 0 replies
- 409 views
-
-
இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள், காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் பங்குபற்றியுள்ளனர். இதேவேளை, இந்தப் பேரணியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களுடன் சீக்கிய இன சகோதரர்களும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தினை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 0 replies
- 437 views
-
-
சேலம் மாவட்டத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் தீபாஜினி என்ற கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று நாம் முகநூல் நண்பர்களிடம் கோரிக்கை வைத்தோம். செய்தியை பார்த்த நண்பர்கள் சிலர் மாணவியின் கல்வித் தொகைக்கு உடனடியாக உதவி செய்து அவர் கட்ட வேண்டிய கட்டணத்தை அனுப்பி வைத்தனர். இதன் மூலம் மாணவி கல்லூரி கட்டணத்தை செலுத்தி இப்போது அதற்கான பற்றுச் சீட்டை நமக்கு அனுப்பி உள்ளார். நண்பர் சிவராம் Sivaram Vikraman ரூபாய் 10,000 அனுப்பினார், Ravi Kannan Arjun ரூபாய் 5000, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பேராசிரியர் ரூபாய் 5000 அனுப்பினார். Sivaraj Velayutham ரூபாய் 1000 அனுப்பினார். பணம் அனுப்பி மாணவியின் கல்விக்கு உதவிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ! ம…
-
- 0 replies
- 511 views
-
-
தொண்டர்களுடன் ஜி.கே.வாசன் | படம்: கே.பிச்சுமணி தமிழக காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி உருவானது. தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புது இயக்கம் தொடங்கியதாக அறிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அவருடன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். புதிய இயக்கத்தின் பெயரும், கொடியும் திருச்சி மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். திருச்சி பொதுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என வாசன் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் …
-
- 3 replies
- 647 views
-