Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டமா? நிரந்தர சட்டமா? |

  2. வாட்ஸப் பார்த்து ஏழ்மைக் குடும்பத்துக்கு நிவாரண உதவி: வேதாரண்யம் டிஎஸ்பிக்குக் குவியும் பாராட்டு வாட்ஸ்அப் மற்றும் முகநூல் வழியாக தெரிய வந்த தகவலை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக விரைந்து சென்று வறுமை மற்றும் நோயால் வாடிய குடும்பத்துக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்திருக்கிறார் வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சபிபுல்லா. வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கின்றனர். அவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் வருமானம் கிடைக்காமல் உணவுக்கும் வழியில்லாமல் வாடினார்கள். போலியாவால் பாத…

  3. 02 JUN, 2023 | 01:20 PM இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை ஸ்கூபா வீரர்களின் உதவியோடு இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக சர்வதேச கடலோர எல்லையில் இந்திய-இலங்கை கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கையை மீறி கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அத…

  4. சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? written by admin November 23, 2025 கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட…

  5. அருணாச்சலம் பெயர் சர்ச்சை: திருவண்ணாமலை கோவில் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று உண்மை கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது அண்மையில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆந்திராவுக்கு இயக்கப்பட்ட அரசுப்பேருந்துகளில் அருணாச்சலம் என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது சமூக ஊடகங்களில் விவாதங்களை எழுப்பியது. இதற்கான எதிர்வினையைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி, பேருந்துகளில் மீண்டும் திருவண்ணாமலை என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் திருவண்ணாமலையை அருணாச்சலம் என்ற பெயரில் குறிப்பிட்டது ஏன்? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? சர்ச்சையின் பின்னணி என்ன…

  6. தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மதுரை தமிழகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டுகள், படிமங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துக்களை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதில் அராபிக் மற்றும் பெர்சியன் கலாச்சார சின்னங்கள் …

  7. சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் நாடு முன்னேறும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது: ''காமராஜர் பிறந்த நாளான இன்று அவரை நினைவுபடுத்திக்கொண்டு, அவரைப் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஆசை. என்னுடைய ஆசையும் கூட. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார். காந்தி, காமராஜர் கொள்கைகளுக்காகவே வ…

    • 0 replies
    • 346 views
  8. தமிழகத்தில் மீண்டும் சடுதியான அதிகரிப்பு: மேலும் 105 பேருக்கு கொரோனா! தமிழ்நாட்டில் மேலும் 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது. சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மொத்த எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், விழுப்புரத்தில் 7 பேரும் கடலூரில் 6 பேரும் தென்காசியில் 4 பேருக்கும் இன்று வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது. இதனைவிட திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் தலா 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்…

  9. ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக திருச்சியில் ஆகஸ்ட் 2-ந் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட, தமிழ்க் குலத்தை ஈவு இரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள இனவாத இராஜபக்சே அரசுக்கு, முப்படைத் தளவாடங்களைத் தந்தும், தமிழர் இன அழிப…

    • 1 reply
    • 346 views
  10. ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் பேசுகிறார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். வாசகர் திருவிழா 2016 | காஞ்சிபுரம் சமூக மாற்றம் ஏற்பட தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வலியுறுத்தினார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முக் கிய நகரங்களில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வாசகர் திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஓசூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வாசகர்களுக்கான …

  11. ஆர்.கே.நகரில் புதிய தேர்தல் தேதியை அறிவிக்க தினகரன் லஞ்சம்: டெல்லி போலீஸ் பரபரப்பு புகார் ஆர்.கே.நகரில் ரத்து செய்யப்பட்ட இடைத்தேர்தலை மே 5-ந்தேதி நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் புகார் கூறியுள்ளனர். புதுடெல்லி: ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.…

  12. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு! பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வருவதை முன்னிட்டு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 14-ம் திகதி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு காலை 10.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கிற்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக 20 நிம…

  13. தமிழ்நாட்டு பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு NFHS-5 தெரிவிக்கிறது. NFHS-5 மற்றும் NFHS-4 தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் டெல்லியில் உள்ள பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது தெரியவருகிறது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கவுன்சில் ஃபார் சோஷியல் டெவலப்மென்ட் அமைப…

  14. ஆளுநரை சந்திக்க தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் முடிவு! இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி, 'கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமனம் சட்டவிதிகள்படி செல்லாது. அவர் நியமித்த கட்சியின் புது நிர்வாகிகளின் பதவிகளும் செல்லாது' என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தஞ்சாவூரில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டவிதிகளின்படிதான் தன்னை பொதுச்செயலாளர் சசிகலா நியமித்ததாக சொன்னார். இந்த நிலையில், அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் எழுப்பிய ஒரு கேள்விக்கு தேர்தல் கமிஷன் அளித்த பதில் வைரலாக இன்று மாலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறத…

  15. மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பு சார்பாக தமிழின தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடைய 60 வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவும் இனிப்பும் கொடுத்து கொண்டாடியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள 80 சிறார்களுடன் கொண்டாடி மகிழ்ந்ததோடு இரவு உணவு ஏற்பாடு செய்து கொடுத்து தேசியத் தலைவரின் 60வது அகவை நிகழ்வை சிறப்பித்தனர். http://www.pathivu.com/news/35662/57/60/d,article_full.aspx

  16. ஆங்கில – பாரம்பரிய மருத்துவம் இணைந்து செயலாற்ற வேண்டும் : ஆயுஷ் விருது வழங்கும் விழாவில் தமிழிசை கொரோனா பேரிடர் காலத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக உலகில் முதல் முறையாக AYUSH EXCELLENCE விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எக்மோரில் உள்ளஅம்பாசிடர் பல்லவா ஓட்டலில் டிசம்பர் 05 ம் தேதி மாலை நடைபெற்றது. உலகத் தமிழ் வர்த்த சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் வந்திருந்தவர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்வர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜனும், சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். தமிழக சுகா…

  17. சசிகலா அவசரம்: எம்.எல்.ஏ.,க்கள் கோபம் முதல்வர் பதவியை பிடிக்க, சசிகலா மேற்கொண்ட அவசர நடவடிக்கை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., மறைந்ததும், அ.தி.மு.க., பொதுச் செயலர் மற்றும் முதல்வர் பதவிக்கு, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டது. ஜெ., இருந்த போதே, இரு முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார். பொதுச் செயலர் பதவியில், சசிகலாவை அமர வைக்க, அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதற்காக, கட்சி நிர்வாகிகளை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். எதிர்த்தவர்களுக்கு, முக்கிய பதவி வழங்கப்படும் என, வாக்குறுதி வழங்கப்பட்டது. பலர் கவனிக்கப்ப…

  18. இந்திய எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. அது பற்றி மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அணு உலை அச்சத்தினால் போராடும் மக்கள் மீது வழக்கு போட்டு வருகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். ராதாபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளராக இருப்பவர் கணேசன். கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்ற இவர் கைது செய்யப்பட்டு பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பேசினார். மேலும் சிறையில் உள்ள கட்சி பிரமுகர்கள் சத்தியபிரபாகரன், மோகன்ராம், முத்துராமலிங்கம் ஆகியோரையும் சந்தித்து வழக்கு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வெளிவே வந்த சீமா…

  19. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ "எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி…

  20. சசிகலாவுக்கு எதிராக தீபா வீட்டில் குவியுது கூட்டம்: அரசு இடையூறு செய்வதாக கட்சியினர் மறியல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டின் முன், நாளுக்கு நாள் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தன் பேச்சு அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்துள்ளார் தீபா. கூட்டம் குவிவதால், இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாக, தொண்டர்கள் நேற்று, மறியல் செய்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அர…

  21. 'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?' ARUN SANKAR / Getty கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை செயலர் சண்முகம் பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார். தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள். #whoareyouedappadi என்ற ஹேஷ்டேகும் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே …

  22. மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்து எதிர்வரும் இன்று நடக்கும் மாபெரும் பொதுகூட்டம் மாலை 6.30 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நடை பெற உள்ளது. மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வில் தமிழகம் வாழ் அனைவரும் அரசியல் வேறுபாடுகளின்றி கலந்து கொண்டு மூன்று தமிழர்களின் உயிர்கள் தூக்குக் கயிற்குக்குச் செல்வதை தடுத்து நிறுத்த மாபெரும் பொதுகூட்டம் நடை பெறுகிறது. அதன் நேரலையை 6.30 மணியளவில் கீழ் வரும் இணைப்பில் பார்க்கலாம் . நேரலை http://www.dinaithal.com/live

    • 0 replies
    • 345 views
  23. தேக்கடி: மது பாட்டில்களுடன் வந்ததாகக் கூறி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஐந்து பேரை கேரள போலீஸார் அடாவடியாக கைது செய்து சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்துள்ளனர். கேரளாக்காரர்களின் அட்டகாசத்திற்கும், அநியாயத்திற்கும் அளவே இல்லை. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பொறுப்பில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர்கள் ரொம்பவே அவமானப்படுத்தும் வகையில் நடத்துவது வழக்கம். இதை உறுதியுடன் எதிர்க்க இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள், கேரளத்தினரிடம் தொடர்ந்து அவமரியாதைகளைச் சந்தித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் தேக்கடியில் அதேபோல், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம், பொறியா…

  24. மதுரை: மதுரையில், ஒரு பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் அதில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். மகன் அதிர்ச்சியிலும், மன வேதனையிலும், கடன்காரர்கள் நெருக்கியதாலும், மனம் உடைந்து காணப்பட்டதைப் பார்த்து அவரது தந்தை தனது மனைவி, மகனோடு தற்கொலை செய்து கொண்டார். மதுரை சிலைமான் செளராஷ்டிர காலனியைச் சேர்ந்தவர் குபேந்திரன். 28 வயதான இவர் எம்.பி.ஏ. படித்தவர். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். ஷேர் பிசினஸில் ஈடுபட்டிருந்தார் குபேந்திரன். ஆனால் அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதை சமாளிக்க கடன் வாங்க ஆரம்பித்தார். கடன் வாங்கினால்தான் அடைப்பது பெரும் கஷ்டமாச்சே... தொடர்ந்து கடன் வாங்க ஆரம்பித்து அது மலை போல உயர்ந்து விட்டது. இதையடுத்து கடன் க…

  25. ஜெயலலிதா மரணம்: இப்போதும் சூழ்ந்திருக்கும் ஆறு சர்ச்சை கேள்விகள் 27 ஆகஸ்ட் 2022, 03:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் அவர் கொல்லப்பட்டார் என்றும் அப்போது ஆளும் அதிமுகவில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது இறுதி அறிக்கையை தமிழ்நாடு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.