Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர். ஆனால் கண்ணீரைப் பெறவோ, யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை. காரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி. இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழ…

    • 0 replies
    • 536 views
  2. Kalaignar Karunanidhi கலைஞரிடம் 50 கேள்விகள் !! கலைஞரிடம் ஐம்பது கேள்விகள் என்ற தலைப்பில் எனது சட்டமன்ற பொன்விழாவின் போது ராணி வார இதழில் வெளியான கேள்வி – பதில்கள். 1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது? கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது. 2.கேள்வி : பேசிய முதல் பேச்சு? கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு. 3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்? கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநில…

  3. சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் நடத்தப்பட்டு வரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டனியே இல்லை என்று அறிவித்தது பா.ம.க. அத்துடன் ஜாதிய கட்சிகளுடன் இணைந்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருந்தது பா.ம.க. பின்னர் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகளை பாமக மேற்கொண்டது. இதில் பெரும் இழுபறியே நீடித்து வந்தது. பாமக அறிவித்த 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்ட…

  4. எழுவார் உயிரை காப்பாற்றியவருக்கு எழுவார் உயிரை காப்பாற்றியவருக்கு இதயம் நிறைந்த நன்றி சொல்வோம் மணித்துளிக்கும் ஆயிர கணக்கில் கட்டணம் பெரும் இந்தியாவின் மிக மூத்த வழக்கறிங்கரும் சட்ட வல்லுநருமான ராம் ஜெத்மலானி ஒவ்வொரு வகுப்பிலும் double promotion பெற்று தனது 13 வயதில் பள்ளி படிப்பை நிறைவு செய்து 17 வயதில் சட்டம் பயின்று முடித்தார் ,18 வயதில் நீதிமன்றத்தில் வழக்காடிய முதல் மனிதர் ,தனது முழு திறைமையையும் வைகோ என்ற ஒற்றை மனிதனின் நட்புக்காக 25 அமர்களில் ஒரு பைசா கூட வாங்காமல் நீதிமன்றத்தில் வாதாடி மூன்று தமிழர்களின் தூக்கை ரத்து செய்ய மிக முக்கிய பங்காற்றினார் ,அதே போல மக்கள் தலைவர் வைகோ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட நான்க…

    • 0 replies
    • 540 views
  5. சென்னை: பாஜக அணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம்பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்பது கடைசி வரை இழுபறியாகவே இருந்தது. காங்கிரஸ், திமுக, பாஜக என பல கட்சிகளும் விஜயகாந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தன. அழைத்த அத்தனை கட்சிகளுடனும் பேசி வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் திடீரென அவர் சிங்கப்பூர் பறந்துவிட்டார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடைசிவரை காத்திருந்தன. இவற்றில் திமுக விஜயகாந்துக்கான கதவை மூடிவிட்டது. காங்கிரஸ் காத்திருந்தது. இதற்கிடையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டார். இந்த அணியில் ஏற்கெனவே…

  6. தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம். யார் இந்த ஏழு மண்டேலாக்கள்? வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும…

    • 2 replies
    • 819 views
  7. திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி: கருணாநிதி அறிவிப்பு திமுக தலைமையிலான கூட்டணியின் பெயர் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது:- திமுக கூட்டணியை இனி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அழைப்போம். எல்லா இடங்களுக்கும் நான் நேரில் சென்று பிரசாரம் செய்வதற்கு இயலாவிட்டாலும், எந்த வழியாக பிரசாரம் செய்ய வேண்டுமோ, அந்த வழியாக இடைவிடாது பிரசாரம் செய்வேன். திமுகவின் கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்யும்போது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது யார், அவர்கள் மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா, இல…

    • 2 replies
    • 557 views
  8. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொண்டு வரவிருக்கும் தீர்மானம்,பெருமளவுக்கு தீர்வு காண்பதாக இருக்கும் என்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆணையக் கூட்டத்தில் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்…

  9. லோக்சபா தேர்தல் கூட்டணிக்காக, அ.தி.மு.க., அணியின் கதவுகள் மூடப்பட்டு உள்ளதால், அனைவரின் பார்வையும், தி.மு.க., அணியின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தினமலருக்கு' , நேற்று அளித்த, சிறப்பு பேட்டியில், பா.ஜ., கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, தன்னுடைய நண்பர் என, கூறி, கூட்டணியின் போக்கு தொடர்பாக, புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார். முழு பேட்டி வருமாறு: * கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இலவசங்களை அறிவிக்க, தேர்தல் கமிஷன் தடை போட்டிருக்கிறதே... அது பற்றி, தங்கள் கருத்து என்ன?இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும்போது, அதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், தெளிவுபடுத்த வேண்டுமென்று, தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கி…

  10. ‘அம்மா அப்பா கையால சாப்பிடணும்!’ - அரித்ராவின் ஆசை [ வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2014, 09:35 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி : ஆனந்த விகடன் 05 Mar, 2014 டி.அருள் எழிலன், ஓவியம்: ஸ்யாம் உயரமான மதில் சுவர்கள் சூழ்ந்த சிறைச்சாலைக்குள் நிழல் சூழ்ந்த ஒரு மரம். அதன் கீழே ஒரு கரும்பலகை. கைதிகளுக்குப் பாடம் நடத்துகிறார் பேரறிவாளன். சிறையில் பிறந்த ஏதோ ஒரு குழந்தைக்கு அழகாக உடை தைத்துக்கொடுக்கிறார் முருகன். தான் சிறையில் கட்டிக்கொண்டிருக்கும் சாய்பாபா கோயிலை மேலும் எப்படி அழகாக்கலாம் எனக் கழிகிறது சாந்தனின் வாழ்வு. 23 ஆண்டுகால சிறை வாழ்க்கை... காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கம்பிகளுக்கு வெளியே சுவர்களுக்குள் சுழலும் வாழ்வு, இருள் கவியும் நேரத்தில் தனிமைச் சிறைக்குள் சென்ற…

  11. சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற போது நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 200 பேர் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கண்டித்தும், தமிழர்கள் ஏழு பேரின் விடுதலைக்கு தடை போடும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி செயல்படுகி…

  12. புகழ் பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கியவாதியுமான ஜெயகாந்தன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக உடல் நலம் குறைவால் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/101098-2014-02-24-01-45-56.html

  13. 23ஆண்டுகளாக சிறையில் வாடும்,நம் தமிழ் உறவுகள் - 7தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவும்,தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தியும்,தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து இழிவுபடுத்தும் மத்திய அரசின் அலுவலகங்களை 24.02.14 முதல் முற்றுகையிட்டு மாணவர்கள்,இளைஞர்கள் போராட்டம் நடத்த உள்ளோம்.7 தமிழரின் விடுதலைக்காக தமிழகம் முழுக்க வீரியமிக்க போராட்டம் வெடிக்கும். எங்களோடு கைகோருங்கள்: 8678962611,9884890103. # விடுதலை வேண்டும்,அது முதல் வேலை-வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை Joe Britto (facebook)

  14. ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு' ராஜீவ் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தரும் என தமிழ் திரையுலகத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தமிழ் திரையுலக அமைப்புகளின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிராஜா பேசியது: தமிழ்ச் சமூகத்துக்கு மானபங்கம் ஏற்படும் போதெல்லாம் அதிலிருந்து விடு…

  15. முருகன், சாந்தன், பேரறிவாளனை தூக்கில் இருந்து காப்பாற்றிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மருத்துவமனையில்! [saturday, 2014-02-22 19:23:51] ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டில்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தவறி விழுந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்ப…

  16. இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப்…

  17. ஜூனியர் விகடன் 26 Feb, 2014 சளைக்காத சட்டப்போராட்டம்! ========================= ''நெருப்பில் எரியும் உடல் விரைவில் வெந்து தணிந்துவிடுகிறது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் கைதியின் உடலும் மனமும் தூக்கிலிடப்படும் நாள் வரை ஒவ்வொரு நொடியும் எரிகிறது; தவிக்கிறது; துடிக்கிறது. இந்தக் குரூரத்துக்கு நாகரிக சமூகத்தில் நிச்சயம் இடம் இருக்க முடியாது' என்று சுட்டிக்காட்டி மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனை ஏற்று முருகன், சாந்தன், பேரறிவாளனை மட்டுமல்ல; ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதனை சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்…

  18. ராஜீவ் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததற்கு நடிகை குத்து ரம்யா டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார். ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது…

  19. ராமேஸ்வரம் ராஃபி ராமேஸ்வரம் தீவு கடற்பகுதியில் அதிவேக கத்தி மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மீனை தமிழக மீனவர்கள் கத்தி மீன் அல்லது வாள் மீன் என்று அழைக்கின்றார்கள். இதனுடைய விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடிஸ் ஆகும். கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்ற அர்த்தமாகும். இந்த கத்தி அல்லது வாள் மீன் மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் இனம் ஆகும். மணிக்கு சராசரியாக 80ல் இருந்து 90 கிலோ மீட்டர் வரையிலும் இந்த மீன்கள் நீந்தும். கத்தி மீன் வேகத்திற்கு பெயர் போனதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களின் போர்க்கப்பல்களுக்கு ஸ்வார்ட் ஃபிஷ் …

  20. ஐ.நா சபையே உலக நாடுகளே ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணயத்தில் இரண்டு இலட்சம்.... http://www.sankathi24.com/news/38695/64//d,fullart.aspx

  21. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார். வருகிற மார்ச் மாதம் ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றக் கோரி உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பின் பேசிய அவர், இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பரவி வாழும் ஈழத்தமிழர்களிடம் தமிழ் ஈழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்கள் அளிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப ஐ.நா, பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த மாதம் ஜெனிவாவில் கூட இருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் கூ…

  22. சென்னை: ஏழு பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புதிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, வைகோ தங்களின் கூட்டணி தலைவர்களின் எதிர்ப்பை வேடிக்கை பார்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு அவர்களது தண்டனையை விரும்பினால் மத்திய - மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டியது. இதன் அடிப்படையில் தமிழக அரசு 7 பேரின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட்டது. தமிழக அரசின் இந்த முடிவை தமிழகத்…

  23. புதுடெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. தாமரை செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையில் இன்று திமுக எம்.பி.யான ஆர்.தாமரை செல்வன், இது தொடர்பாக விடுத்த கோரிக்கையில்,"கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை. கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர். திராவிட இயக்கத்தின் சாம்பியனான இவர், கீழ்மட்டத்தில் இருந்து அனைத்து தரப்பிலான மக்களுக்காக சேவை செய்தவர். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இடையில் ஒருமுறை கூட தோல்வி கண்டதில்லை. தீவிர அரசியலுடன் தமிழ் இலக்கியத்திற்காகவும் முக்கியத்துவம் அளித்தவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.