தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் இந்த அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். இப்பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன் முடிவில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-இ.கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார். மேலும் அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் ஆகியவையே அதிமுக க…
-
- 0 replies
- 527 views
-
-
விசயகாந்த் எனும் திரைப்புலி.. ஜமாலன் திமுக கருணாநிதி பேரியக்கம் குடும்ப சூழலில் சிக்கிவிட்டது என்கிற ஆதங்கத்தில் பல கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. சமஸ் என்பவர் தி ஹிந்து-வில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவற்றிற்குள் ஒருவித திமுக அழிவை எதிர்பார்க்கும் ஆதங்க மனநிலைதான் உள்ளது. அதாவது திமுக சரிந்துவிட்டதான தோற்றத்தை உருவாக்க விரும்பும் மனநிலைதான். அழகிரி கட்சியில் இருந்தபோது கடுமையாக விமர்சித்தவர்கள், அவர் நீக்கப்பட்ட பின்னும் விமர்சிப்பதும் முழுவதுமாக புலம்பவதும், திமுக உறுதி பெறுவதையே காட்டுகிறது. திமுக-வில் அழகிரியின் வருகை என்பது அதன் தொடர் தோல்விக்கே வழிவகுத்து உள்ளது. இந்நடவடிக்கை அடிப்படை திமுக தொண்டனை பாதிப்பதாக தெரியவில்லை. திமுக ஆதரவாளர்களையும் இது பாதிப்பதாகத்…
-
- 0 replies
- 757 views
-
-
பா.ஜனதா தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசிய வைகோ, பாராளுமன்ற தேர்தலில் 250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறினார். பா.ஜனதாவுடன் கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ, கூட்டணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று டெல்லி சென்ற வைகோ, மீண்டும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாள…
-
- 0 replies
- 483 views
-
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், இது கட்சியின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முடிவு. திமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் பேராசிரியர். அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஒருமாதத்திற்கு முன்னமே மதுரையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர் ஆதரவாளர்கள். இதுவே, அழகிரியை கட்சியை விட்டு நீக்கும் அளவிற்கு பிரச்சனையாக அமைந்துவிட்டது. வாழ்த்து போஸ்டரில் இருந்தவை திமுக தலைமையை அதிருப்திய…
-
- 20 replies
- 1.5k views
-
-
சென்னை: தி.மு.க. பொருளாளார் மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின்தான் தி.மு.க.வுக்கான பிரசாரத்தை முன்னெடுத்து செல்பவர் என்றும், அவரது பாதுகாப்பு குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாகவும், எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமருக்கு கருணாநிதி எழுதிய இந்த கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு, இது தொடர்பாக கடந்த ஒரு ம…
-
- 3 replies
- 529 views
-
-
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்த நிலையில், விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, கடந்த 2011ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் நிராகரித்தார். கருணை மனு நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் மரண தண்டனையை ரத்…
-
- 0 replies
- 250 views
-
-
சென்னை: மு.க. அழகிரி தம்மையும் மு.க. ஸ்டாலினையும் பற்றி விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார் என்றும் மு.க. ஸ்டாலின் இன்னும் 3 மாதத்தில் இறந்துவிடுவார் என கூறியதை எப்படி பொறுப்பது என்று அவரது தந்தையும் திமுக தலைவருமான மு. கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். - See more at: http://m.oneindia.in/tamil/news/tamilnadu/azhagiri-used-harsh-words-against-stalin-dmk-chief-karunanidhi-192278.html#sthash.jv6hODMk.dpuf
-
- 6 replies
- 675 views
-
-
சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பிரத்யங்கிராதேவி கோவிலில் சத்ய சத்குரு யாகம் நடத்தியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் பிரத்யங்கிராதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வணங்கினால் இழந்த செல்வம், புகழ், பணம் போன்றவை கிடைக்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக உள்ளது. மேலும், யாகம் வளர்த்தால் எதிரி அழிந்து போவார்கள் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கோவிலுக்கு சாதாரண பக்தர்களை காட்டிலும், பிரபல அரசியல் தலைவர்கள் மிகவும் ரகசியமாக வந்து சாமி தரிசனம் செய்வதும், யாகம் வளர்ப்பதும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் அமாவாசை அன்று நடைபெறும் மிளகாய் வத்தல் யாகம் வழக்கத்திற்கு மாறாக ந…
-
- 0 replies
- 727 views
-
-
பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இணைய தொடக்கம் முதல் மிகவும் தயக்கம் காட்டி வந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட்டது. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தந்தை ராமதாஸுடன் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை என்று பாமகவின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்துவிட்ட நிலையில், பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்த பாமகவை எப்படியும் பாஜக அணியில் இணைத்துவிடுவது என்பதில் மும்முரம் காட்டினார் அன்புமணி ராமதாஸ். திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு அணியில் இணைவதா? என்று பா…
-
- 0 replies
- 988 views
-
-
கருணாநிதியை அடித்தாரா அழகிரி முன்னதாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், துரைமுருகனை சந்தித்தது ஏன்? என்று கேட்கப்பட்டது. இதற்கு தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலர் என்ற முறையில், அவரை சந்தித்தேன். காரணமில்லாமல் என் ஆதரவாளர்களை நீக்கியது குறித்து விளக்கினேன் என்றார். மேலும் உங்க அப்பாவை (கருணாநிதியை) அடித்ததாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு "யாராவது அப்பாவை அடிப்பாங்களா? உங்க அப்பாவை நீங்க அடிப்பீங்களா? என்று கேட்டிருந்தார். இந்நிலையில்தான் இன்று அழகிரி உரத்த குரலில் தம்மை வெறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாக கருணாநிதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://m.oneindia.in/tamil/news/tamilnadu/azhagiri-deny-karunanidhi-s-upset-stateme…
-
- 4 replies
- 1.3k views
-
-
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து கேலி செய்த பத்திரிகைகள் மீது லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் கடுமையாக சாடினார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்மையில் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார். கருணாநிதியை சந்தித்து விட்டு வந்ததை, "வாசமில்லா மலர் இது.. வசந்ததைத் தேடுது..." என்று டி.ராஜேந்தர் அவரது 'ஒருதலை ராகம்' படப்பாடலையே பாடுவது போல் பத்திரிகை ஒன்று கேலி செய்திருந்தது. இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நான் வாசமில்லாத மலரா...வசந்ததைத் தேடி அலைகிறேனா?" என்று காட்டமாக கேட்டவர், "கருணாநிதியின் சந்தி்ப்பு அரங்கேறியது ஒரு காட்சி. அதற்கு பிறகு நடக்கப்போவதை பற்றியெல்லாம் உங்களுக்கு சொல்வே…
-
- 0 replies
- 551 views
-
-
மதுரை: தி.மு.க. தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் கூறவில்லை என்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டுள்ள மு.க.அழகிரி கூறியுள்ளார். தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, மதுரையில் உள்ள தமது வீட்டில் செய்தியாளர்களை சந்தி்த்தார். அப்போது அவரிடம்,"வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்று கூறியிருந்தீர்களே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "சரியாக படிக்காத மாணவனை நீ உருப்பட மாட்டாய் என்று ஆசிரியர் சொல்வதைப்போல்ததான், அறிவுரையாக தி.மு.க தோற்றுவிடும் என்று சொன்னேன். எப்படி மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர் கூறுகிறாரோ, அதுபோலத்தான் தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூறினேன். ஆனால் நீங்கள்தா…
-
- 1 reply
- 273 views
-
-
திருச்சி: திருச்சி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரவு வரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். திருச்சி சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் சாலையில் உள்ளது சத்யம் ஓட்டல். இந்த ஓட்டல் புதுக்கோட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்திக்கு சொந்தமானது. இதன் தரைதளத்தில் பனாமா ரெஸ்டாரென்டும், இரண்டாவது, மூன்றாவது தளங்களில் 40 அறைகள் உள்ளன. 4வது தளத்தில், 2 கூட்ட அரங்கு அறைகள் உள்ளது. 4வது தளத்தில் ஜூனியர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். மற்றொரு ஹாலில், 50 பேர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இது தவிர ஓட்டலில் உள்ள…
-
- 1 reply
- 349 views
-
-
அரியலூர்: வன்னியர் சமூகத்தை சேர்ந்த பெண்ணும், தலித் வாலிபரின் காதல் விவகாரத்தால் வீடு தீவைக்கப்பட்டுள்ளது இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்காக மாற தொடங்கியுள்ளது. தர்மபுரி சம்பவம் போலவே மீண்டும் அரியலூர் மாவட்டத்திலும் தலை எடுக்க தொடங்கியுள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் பாலமுருகன். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகள் தமிழரசி. இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். பாலமுருகனும், தமிழரசியும் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர…
-
- 0 replies
- 930 views
-
-
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தியுள்ளார். அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வக…
-
- 0 replies
- 457 views
-
-
சென்னை: மு.க.அழகிரியை நீக்கியதால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படாது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கட்சியிலுள்ள செயல்வீரர்கள் சிலரை கட்சி பணியாற்ற வேண்டாம் எனக்கூறி கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறி தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ''மு.க.அழகிரி நீக்கப்பட்டதால் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாது. தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி மு.க.அழகிரிக்காகவே ஏற்படுத்தப்பட்டது. அந்த பதவி வேறு யாருக்கும் வழங்கப்படமாட்டாது. மு.க.அழகிரி நீக்கம் நாடாளுமன்றத் தேர்தலில…
-
- 6 replies
- 641 views
-
-
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவர்களின் மகள்களை வீட்டோடு எரித்துக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. வேலைக்கு சென்று பெற்றோரை காப்பாற்றும் மகளை கேலி செய்தே கொடுமைபடுத்துகின்றனர் அத்தெருவில் வசிக்கும் மக்கள். சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் காமாட்சியம்மமன் நகரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கும். அவர்களது மூத்த மகளுக்கும் எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது. 15 வயதாகும் இரண்டாவது மகளுக்கு அதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பு இல்லை. பெற்றோரும் மூத்த மகளும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க, இளைய மகள் மட்டும் அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தையே காப்பாற்றி வருகிறார். ஆனால், சிறுமி வேலைக்கு செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அந்தப் …
-
- 0 replies
- 249 views
-
-
தர்ணாவில் ஈடுபட்டு 36 மணி நேரம் ரோட்டிலேயே கழித்த கெஜ்ரிவால் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ராக்கி பிர்லா ஆகியோர் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது, டென்மார்க் பெண் கற்பழிப்பில் சரியான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும், டெல்லி போலீசுக்கும் மோதல் உருவாகி உள்ளது. இதில் 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கெஜ்ரிவால் அரசின் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே உடனடியாக ஏற்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டு 36 மணி நேரம் ரோட்டில…
-
- 0 replies
- 381 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, தம்மை பரோலி்ல் விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கில், வேலூர் சிறைத்துறை பதில் அளி்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூக்குத் தண்டனை கைதியான அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் உள்ளார். இந்நிலையில், 90 வயதான தனது தந்தை சங்கர நாராயணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிக்க, ஒரு மாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த ம…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அடையாறில் உள்ள நீலகிரி சிறப்பங்காடியை 60 க்கும் அதிகமான மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தயாராகும் பிஸ்கட், கேக் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி அங்காடி, பல ஆண்டுகளாக விற்று வருகிறது. ஏற்கனவே, நீலகிரி அங்காடி நிர்வாகத்திடம், இலங்கை பொருட்களை விற்கவேண்டாம். அவை இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து வருகிறது. அதனால், அப்பொருட்களை விற்று வர்த்தகம் செய்ய வேண்டாம்' என்று இலங்கை புறக்கணிப்பு குழு பலமுறை கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. எனினும், அங்கு தொடர்ந்து இலங்கைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அதனை கண்டிக்கும் வகையிலும் அந்நிர்வாகத்திற்கு இறுதி எச்சரிக்கை க…
-
- 1 reply
- 457 views
-
-
லீனாமணிமேகலைக்கு என்ன பிரச்சினை? திரைப்பட இயக்குநர் லீனாமணிமேகலை கவிஞராக அறிமுகமாகி, ஆவணப்படங்கள் எடுத்து, பின்னர் திரைத்துறையில் நுழைந்த பெண் இயக்குநர் லீனாமணிமேகலை பற்றிய சர்ச்சை வலைதளங்களில் இப்போது வலம் வருகிறது. அவரது “வெள்ளைவேன் கதைகள்” 90நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தை இலங்கைராணுவத்தின் கடுமையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பயணம்செய்து, முஸ்லிம்,சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து, “கொரில்லா படப்பிடிப்பு” முறையில் உயிராபத்து-அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெள்ளைவேன் கதைகளை எழுதி-இயக்கி-தயாரித்திருக்கிறார் லீனாமணிமேகலை - என்கிறது ஜனசக்த…
-
- 0 replies
- 667 views
-
-
வீழ்ந்தால் அனுபவம்....எழுந்தால் வெற்றி! அறப்போர் உருவெடுத்து ஏறத்தாள ஒரு வருடங்கள் ஆகப்போகின்றன. ஆவணப்படம் என்ற சொல்லாடலே புலம்பெயர் தமிழர்களிடத்தில் பாவணையில் இல்லாத காலம். ஏதோ சினிமாப்படம் எடுக்கின்றேன் என்று நினைத்தவர்களே அதிகம். "உங்களிற்கெல்லாம் வேறு வேலையே இல்லையா" என்று கேட்டவர்கள் முதல் "நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா" என்று ஏளனம் செய்தவர்கள் வரை இன்றும் எம்முடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பணத்திற்காக ஓடிய போதும் சரி, மொழிபெயர்ப்பிற்காக ஓடிய போதும் சரி எந்த பின்னடைவும் இல்லை, எந்த சோர்வையும் நெருங்கவிடவில்லை. ஈழ விடுதலைக்கு எதுவுமே செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வோம் என்பதே அறப்போருக்கு உயிரூட்டியது. உடல் நலக்குறைவு வந்தபோதும் சரி, பைக்கில…
-
- 1 reply
- 678 views
-
-
மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் நாளை வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த மாதம் 20 ஆம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் அவர் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இந்த பயணத்துக்கு வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மற்றும் தேசிய மீனவர்கள் ஒத்துழ…
-
- 2 replies
- 632 views
-
-
http://news.vikatan.com/article.php?module=news&aid=23416&category=244&phid=10190#album_list
-
- 0 replies
- 626 views
-