Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எங்கள் நம்பிக்கை நட்சத்திரங்களே! போராடும் மாணவர்களுக்கு இடிந்தகரையிலிருந்து அண்ணன் சுப.உதயகுமார்! http://youtu.be/br8fdhc58pM

  2. ராமேஸ்வரம்: மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாள் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின், நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டுதோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடக்கும். இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குறைய தொடங்கியது. இதன் விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் குறைந்து போனது. ‘இதேநிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா…

  3. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு * தீபா அறிவிப்பு ''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்ட…

  4. சென்னை: விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மா.ஃபா.பாண்டியராஜன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது அக்கட்சியினர் இடையே பெரும் அதி்ர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை ஏற்கனவே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அருண் பாண்டியன் (பேராவூரணி), மிக்கேல் ராயப்பன் (ராதாபுரம்), சுந்தர்ராஜன் (மத்திய மதுரை), தமிழ் அழகன் (திட்டக்குடி), சுரேஷ்குமார் (செங்கம்), சாந்தி ராஜமாணிக்கம் (சேந்தமங்கலம்) ஆகியோர் சந்தித்து தங்களின் தொகுதி பிரச்னை குறித்து மனு கொடுத்தனர். இதனிடையே, தே.மு.தி.க. தலைமை மீது அதிருப்தியில் இருந்த பாண்டியராஜன், கட்சி நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து வந்தார். இந்த நிலையில், இன்று விருதுநகர் சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. எம்.…

  5. சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா உள்பட மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் பணியைத் தொடங்கினார். இதனிடையே, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரு சென்றார். சிறையில் உள்ள சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் செயல்பாடு குறித்து பேசியத…

  6. ‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் இப்போது பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டிலும் இதேபோல சதித் திட்டம் தீட்டப்பட்டதால் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. மூன்று மாதங்களில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்'' என்றெல்லாம் அந்த அறிக்க…

  7. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழுமா? எம்எல்ஏ-க்களின் கூட்டல், கழித்தல் கணக்கு! அ.தி.மு.க. அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களது விசுவாசிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குக் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு துருவங்களாக இருந்து செயல்பட்டுவருகின்றனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைக்குப் பிறகு, ஓ…

  8. கோயில்களில் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு சீமான் கண்டனம் இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பர் ஐந்தாம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சில கோயில்களில் மின்னணு திரை மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதில் பா.ஜ.கவின்மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் …

  9. விருதுநகர்: மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு கட்சியினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சியினரும் மாறி மாறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். விருதுநகரில் பா.ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அதுபோல் அதிமுக சார்பில் சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து வைகோவுக்கு காலை11 மணிக்கும், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு …

  10. கோவை வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் தொடருமா? மாநகராட்சியின் திடீர் நிலைப்பாடு 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதாக தகவல் வெளிவந்த நிலையில், அந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? கோவை மாவட்ட ஆட்சியர் ஜீ.சமீரன் கோவை மாவட்டம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏதுவான வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் பேசு பொருளானது. தமிழக எதிர்கட்சி தலைவர் எட…

  11. "எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!" நீதிபதியின் உறுதி ``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்'' என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், ``இந்த வழக்குத் தொடர்பாக ஏதாவது, தனி கோரிக்கை இருந்தால் அதை வழக்காகத் தாக்கல் செய்யுங்கள்'' என்று வக்கீல் குமாஸ்தா தேவராஜனுக்கு உத்தரவிட்டுள்ளார். சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஒன்றுசேர்ந்தனர். அன்று மாலையே வித்யாசாகர் ராவ் (அன்றைய தமிழகப் பொறுப்பு கவர்னர்) ம…

  12. பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 31 ஜனவரி 2023, 02:40 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் "உலகையே வியப்பில் ஆழ்த்திய உத்திரமேரூர் கல்வெட்டு" என்று தனது 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டிருக்கிறார். உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன? அந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன? ஞாயிற்…

  13. சேலம்-சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) சென்னையில் கைது செய்யப்பட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி இரவு சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மூலம் ரூபாய் 342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த வி.பி.எச்-08831 பெட்டி இணைக்கப்பட்ட இரயிலானது 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. தோனி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சம்பத் குமார் கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில், …

  15. இப்பவே இந்தக் கொடுமையா...? செந்தில் பாலாஜி - ஜோதிமணி முன் தனியாய் சிக்கியவர் மீது வெறியாட்டம்.. ! திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிக்க சென்றபோது கேள்வி கேட்ட ஒருவரை அவரது ஆதரவாளர்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் தம்பிதுரைக்கு ஆதரவாக தேர்தல் களத்திம் வாக்கு சேகரித்த செந்தில் பாலாஜி டி.டி.வி.அணிக்கு தாவி கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். தற்போது ஜோதிமணியை வெற்றி பெறவைத்து கரூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என ஸ்டாலினிடம் சபதம் செய்…

  16. வைகோவுக்கு கருணாநிதி நோட்டீஸ் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவை தங்கள் அணிக்கு இழுக்க தி.மு.க. 500 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது குறித்து கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவும் முன்பு இடம்பெற்றிருந்தது என்பதை தனது நோட்டீஸில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொருளாளர் வைகோ, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தே.மு.தி.கவிற்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தர முன்வந்ததாக கூறினார். கருணாநிதி ஒரு துண்டுச் சீட்டில் இதனை எழுதிக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். …

  17. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில்- இன்று முதல் சென்னையில் வீடுவீடாக சோதனை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பணியாளர்களை பயன்படுத்தி சென்னையில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாநில அரசாஙகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோன வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட 16,00 சுகாதார தொழிலாளர்களை பயன்படுத்தி வீடுவீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உடைகளுடன் நடவடிக்கையில் இறங்கவுள்ள சுகாதார பணியாளர்கள் சென்னையை 24மணிநேர கண்காணிப்பின் கீழ் வைத்திருப்ப…

  18. கச்சத்தீவு குறித்து தமிழக சட்டமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த தமிழக முதலமைச்சர், கச்சத்தீவை மீட்பது குறித்து கேள்வி கேட்பதற்கு தி.மு.க உறுப்பினர்களுக்கு அருகதை கிடையாது என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்திருந்த அவர், தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1974 மற்றம் 1976ஆம் ஆண்டுகளில் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தினாரா?…

    • 0 replies
    • 473 views
  19. பணமிருக்கும் மனிதரிடம் மனமிருக்கவில்லை!- கரோனா நிவாரணப் பணியில் இருக்கும் எழுத்தாளர் வேதனை எங்கள் வேலை எழுதுவதோடு முடிவதல்ல, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்று எண்ணும் எழுத்தாளர்களில் ஒருவர் அ.முத்துகிருஷ்ணன். மதுரை யானைமலையை உடைப்பதற்கென்றே அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தபோது, அதற்கு எதிராக 'பசுமை நடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பணியைத் தடுத்து நிறுத்தியவர். வாரந்தோறும் 'பசுமை நடை' எனும் பெயரில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர், தொல்லியல் குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியையும் செவ்வனே செய்து வருபவர். இந்த பொதுமுடக்கக் காலத்தில் அடித்தட்டு மக்கள் படும் …

  20. இந்தியத் தலைநகர் டெல்கியில் போர்க்குற்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல உண்மைகள் அம்பலமாகி வருகின்றன. இந்தியாவின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் போருக்கு முன்பும், பின்புமாக சுமார் எட்டு ஆண்டு காலம் இந்திய காங்கிரஸ் அரசு மகிந்த குடும்பத்துடன் சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆறு இந்திய அதிகாரிகள் உலகத்தின் முக்கிய இராஜதந்திர முடிவெடுக்கும் இடங்களில் இருந்து இன அழிப்பு போர் நிறுத்தப்படாமலிருக்க பணியாற்றினார்கள் என்றும் கூறினார். இந்திய அரசு முன் வைத்த போரையே தாம் வெற்றிகரமாக நடாத்தி முடித்ததாக அன்று மகிந்த ராஜபக்ஷ கூறினார், அதை இன்றுவரை காங்கிரஸ் அரசு மறுக்காமல் இருப்பதே இந்த சதிக்கு நல்ல உதாரணமாகும்.…

    • 0 replies
    • 677 views
  21. தமிழகத்தில்... "மீத்தேன் வாயு" எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு. தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதற்கு நடுவேயும், குத்தகை அடிப்படையில் நிலங்களை அரசு கையகப்படுத்தி வந்தது. ஆனால் போராட்டங்களால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நில கையகப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில், டெல்லியில…

  22. செங்கோட்டையன் நள்ளிரவில் சந்தித்த எம்.எல்.ஏ..! சசிகலாவால் அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன், நேற்றிரவு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரியை சந்தித்துப் பேசினார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. அ.தி.மு.க.வில் அரங்கேறும் உள்கட்சி பூசல் வீதிக்கு வந்துவிட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சசிகலா ஆகிய இரண்டு அதிகார மையங்களுக்குப் பின்னால் கட்சியினர் அணிவகுத்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக கூறி சசிகலாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதனால் சசிகலா தரப்பு அணி தாவுதலைத் தடுக்க…

  23. 'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!' -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive " மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனை சரி செய்வதற்காக அவர் வெளிநாடு சென்றார். அவருக்கு கதிர்வீச்சு மற்றும் புற்றுமருந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் அவரது நோய் குணமாகவில்லை. நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் பல மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை அகற்றுவதற்காக மீண்டும் கதிர்வீச்சு சிகிச்சையையே அவர் மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவரது சிகிச்சையை மேற்பார்வையிட மாநிலம் தழுவிய மருத்துவர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் பங்கேற்ற எங்கள் ஆசிரியர் மருத்துவர் ஆர்.சுப…

  24. மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் பணத்தை திருப்பிக் கொடுத்த அமைச்சர்! உள்ளே நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிவரும் அட்டையைப் பார்த்துச் சிரித்தார். “ஐயோ பாவம், எடப்பாடி! அவர் என்ன செய்வார்? எத்தனை நாள்களுக்கு ஆட்சியோ... அதுவரை அமைதியாக ஓட்டுவோம் என்று சைலன்ட் ஆக்டிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லையாம்!” என்றபடி செய்திகளைக் கொட்டத் தயாரானார் கழுகார். “தமிழகத்தைத் திரைமறைவில் ஆள்வது மத்திய அரசுதான் என்பது பழைய செய்திதான். ஆனால், மிரட்டல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்களே?” என்று இடைமறித்தோம். “இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே? பி.ஜே.பி அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களில், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.