தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தினமலர்: விடிய விடிய சப்பாத்தி சுட்ட கிராம மக்கள் படத்தின் காப்புரிமை DINAMALAR கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, இரு கிராமத்தினர், விடிய விடிய சப்பாத்திகளை சுட்டுக் கொடுத்ததாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி மற்றும் இருசனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தங்கள் பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்மூலம், அரிசி, பருப்பு, நுாடுல்ஸ் பாக்கெட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, துண்டுகள் என, 30 ஆயிரம் ரூபாய…
-
- 0 replies
- 425 views
-
-
தோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்! கல்கி பகவானின் மகன் கிருஷ்ணன் அதிகாரிகளின் விசாரணை பிடியில் வசமாக சிக்கி உள்ளார். கல்கி ஆசிரமத்தில் ரூ. 33 கோடி பறிமுதல் நேற்று செய்யப்பட்ட நிலையில், 2 வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை ஆசிரம நிறுவனங்களில் தொடர்ந்து நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் எல்ஐஏசி ஏஜெண்டாக இருந்தவர். இதற்கு பிறகுதான் சாமியாராக மாறி, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.இந்த ஆசிரமத்தி…
-
- 0 replies
- 629 views
-
-
தொகுதிப்பங்கீடு: கறார் காட்டும் கருணாநிதி... கையைப் பிசையும் காங்கிரஸ்! சட்டமன்றத் தேர்தலை கோஷ்டிப்பூசல் இல்லாமல் வழிநடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒருபக்கம் திணறிக்கொண்டிருக்க, சீட் ஒதுக்கீட்டில் தி.மு.க தலைமை காட்டும் 'திடீர்' கறார் அணுகுமுறையால் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது அக்கட்சி. தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை கோபாலபுரத்திற்கு வருகை தந்தனர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும். கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். ஆரம்பக்கட்ட விசாரிப்புகளுக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்தது. கறார் …
-
- 0 replies
- 397 views
-
-
'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி! போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர். வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். அந்த இரு தேர்தல்களிலும் இது தனது கடைசி தேர்தலாக இருக்கலாம் என்று 'அரசியல்' செய்தாலும், உடல்நிலையை பொறுத்தவரை அதுதான் உண்மையான நிலவரமாக இருந்தது. ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி. வயது, உடல் நிலையை மீறி இந்த முறை அவரை உற்சாகமாக…
-
- 0 replies
- 673 views
-
-
தி.மலை: வந்தவாசி அருகே மழையில் நனைந்து 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. ஆயல்வாடி, மலையூர் கிராமங்களில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. 144 தடையால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளன. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577955
-
- 0 replies
- 565 views
-
-
காசி, ராமேஸ்வரம் புனித யாத்திரை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு வாழ்நாள் கனவு. கங்கை நதியிலும், ராமேஸ்வரம் தீர்த்தத்திலும் புனித நீராடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.கங்கை நீராடல் பலருக்கு கனவாகவே முடிந்து போவதால் எல்லோருக்கும் கங்கை நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ள கங்கைநீர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டருகிலேயே கங்கை நீர் கிடைப்பது ‘வரப்பிரசாதம்‘ என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்…
-
- 0 replies
- 335 views
-
-
ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை... மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. …
-
- 0 replies
- 530 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பாஸ்போர்ட் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவானதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட், சில மாதங்களுக்கு முன், முடக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். `சரியான காரணங்கள் இன்றி பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கக்கூடாது' என ஐகோர்ட் உத்தரவிட்டதால், பாஸ்போர்ட்டை அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக, கைது வாரண்ட் உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு, நெல்லை எஸ்.பி., தெரிவித்துள்ளார். இதையடுத்து `உங்கள் பா…
-
- 0 replies
- 331 views
-
-
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தங்கம் இறக்குமதி சீரற்ற முறையில் உள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து வங்…
-
- 0 replies
- 584 views
-
-
மீண்டும் கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா? மீண்டும் ஒரு கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா ? டிசம்பர் 5, 2016க்கு பிறகு தொடங்கிய அரசியல் நிலையற்ற சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிமுகவுக்குள் அதிகாரப் போட்டியும், குழப்பும் வரும் போதெல்லாம் உடனே எழுப்பபடும் கேள்வி இந்த ஆட்சி நீடிக்குமா? ஆளுநர் ஆட்சியை கலைப்பாரா என்பது தான்? மிக சொற்பமான இடங்களிலேயே பெரும்பான்மையை பெற்றுள்ள அஇஅதிமுகவின் ஆட்சி நீடிப்பதற்கு 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பன்னீர் செல்வம் பிரிந்து சென்ற பிறகு சட்டமன்றத்தில் நடைபெற்ற ந…
-
- 0 replies
- 480 views
-
-
கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி: வெட்டி விட்டு தப்பிய 5 பேர் கும்பலுக்கு வலை ஜெயலலிதா | கோப்புப் படம். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம், கோடநாடு காவலாளி கொலையை தொடர்ந்து, ஜெய லலிதாவின் சமையல்காரரையும் கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலை, கொள்ளை யில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜெய லலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயலலிதாவின் சமையல் காரராக இருந்தவரை கொலை செய்யும் நோக்கில் தலையில் அரிவாளால் வெட்டியு…
-
- 0 replies
- 266 views
-
-
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்பது யூகம் மட்டுமே என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'மத்திய காங்., கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து பேசுகிறோம். அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறந்த மக்கள் நலத்திட்டங்களை பாராட்டியும் பேசுகிறேன். அதற்காக தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப்போவதாக கூறப்படுவது வெறும் யூகம் தான். கூட்டணி மற்றும் லோக்சபா தேர்தலில் நான் உட்பட கட்சி வேட்பாளர்கள், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தக்க நேரத்தில் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/…
-
- 0 replies
- 390 views
-
-
பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: தமிழக முதல்வர் அறிவிப்பு September 11, 2021 மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு என புரட்சிகரமான பாடல்களை எழுதினார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று பாரதியாரின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்வர…
-
- 0 replies
- 688 views
-
-
மதுரை:பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை சந்தித்த நான்கு அமைச்சர்களை, தகுதி இழப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு, 'நோட் டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்ததை தடுக்காத, முதல்வர் பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த வர் தாமரைக்கனி. அ.தி.மு.க.,வில் போட்டியிட, 'சீட்' ஒதுக்காததால், தி.மு.க.,வில் இணைந்தார்; கடைசி வரை, தி.மு.க.,வில் இருந்தார். இவரது மகன் ஆணழகன், பன்னீர்செல்வம் அணியில் உள்ளார். ஆட்சேபமில்லை உயர் நீதிமன்ற மதுரை கி…
-
- 0 replies
- 271 views
-
-
ரஜினி Vs கமல் -ஜெயிக்கப்போவது யார் ? | Socio Talk | சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரப்போகிறார், ரஜினி கமலுக்கு வரப்போகிறார் என பேச்சுக்கள் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இருவரும் அரசியலில் குதித்தால் வெற்றி யாருக்கு? பி.ஜே.பியுடன் சேர மறுக்கும் கமல், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி. இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? மக்கள் யாரை விரும்புகிறார்கள்? மேலும் பல கேள்விகளும். விடைகளும்.
-
- 0 replies
- 789 views
-
-
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன். கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஒருவருக்கு தூக்க…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை அரசு சார்ந்த பொறுப்புக்களுக்கு நியமிக்கக் கூடாது என்றும் அந்த நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்களது அசையும் சொத்து, அசையா சொத்து, தொழில் விபரம், பங்குகளின் விவரம், பணம் கையிருப்பு விவரம், நகைகள் கையிருப்பு விவரம் இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். http://4tamilmedia.com/n…
-
- 0 replies
- 460 views
-
-
கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி: ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி - படம்: சிறப்பு ஏற்பாடு பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் வைத்து தொண்டர்களை சந்தித்தார். கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க கோபாலபுரம் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி இருந்தார். இடையில் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ட்ரக்யோஸ்டமி கருவி பொருத்தப்பட்டு மூச்சு பாதை சீராக்கப்பட்ட…
-
- 0 replies
- 363 views
-
-
செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது பகிர்க ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, செம்மர கடத்தல் தடுப்பு காவல்துறையினர், திருப்பதி - கடப்பா சாலையில் வந்த ஒரு லாரியை சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு துரத்திச் சென்றனர். …
-
- 0 replies
- 405 views
-
-
(என்.வீ.ஏ) தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அத்துடன் அக்டோபர் 2021 இலிருந்து டிசம்பர் 2022 வரை 25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 2021வரை பிறப்பு பதிவு மற்றும் குடியுரிமை விண்ணப்…
-
- 0 replies
- 600 views
-
-
தமிழகம் முழுவதும் நீடிக்கும் கன மழைக்கு இது வரை 13 பேர் உயிரிழப்பு 19:44:39 Monday 2014-10-20 சென்னை: தமிழகம் முழுவதும் நீடிக்கும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 4-வது நாளாக வெளுத்து கட்டும் மழையால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. இதனால் மாநகர் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், வடகிழக்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாகவும் சென்னையில் 4-வது நாளாக கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்காக காணப்பட்டது. குறிப்பாக பாரி முனை, கோயம்பேடு, பட்டிணபாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் தண்ணீரில்…
-
- 0 replies
- 388 views
-
-
தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் - காரணம் என்ன? #GroundReport இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'இருக்கு... ஆனால், இல்லை!' ஒரு படத்தில் காமெடிக்காக சொல்லப்பட்ட டயலாக், தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையாகியிருக்கிறது. 60 வீடுகளோடு செல்வ செழிப்பாக இருந்த கிராமம் ஐந்து வருடத்துக்கு முன்னாடி காணாமல் போய்விட்டது. இப்போது ஊர் இருக்கிறது. குடியிருக்க மக்கள் இல்லை. …
-
- 0 replies
- 344 views
-
-
சென்னை: சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் கேமராவுடன் இறங்கிய ட்ரோன் வகை குட்டி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் மேற்பரப்பில் இன்று மதியம், ட்ரோன் என்று அழைக்கப்படும் குட்டி விமானம் வந்து தட்டுத்தடுமாறியபடி தரையிறங்கியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அச்சமடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த ட்ரோன் விமானத்தில் கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அது ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட கூடிய வசதி கொண்டதாகும். ADVERTISEMENT கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் விமானங்க…
-
- 0 replies
- 532 views
-
-
டெல்டா விவசாயிகளை சாகடிக்கும் ‘கூஜா’ அரசு . ஒரு பெரும் பேரழிவை டெல்டா மாவட்டங்கள் சந்தித்திருக்கின்றன. கஜா புயல் ஈவு இரக்கமற்று தன் கோரத் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது. டெல்டா விவசாயிகள் வரலாற்றின் இருண்ட காலத்திற்குள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார்கள். குடிக்க தண்ணீர், உண்ண உணவு, உடுக்க ஆடை என எதுவுமே இல்லாமல் உள்நாட்டிலேயே அகதிகள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். பார்த்துப் பார்த்து வளர்த்த தென்னையும், வாழையும், பலாவும் கஜாவால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, உயிரற்ற உடல்களாக வீழ்ந்து கிடக்கின்றன. இனி உயிர் பிழைத்து இந்த உலகில் வாழ்வதற்கு என்ன வழி இருக்கின்றது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள் ஊருக்கே உணவளித்து காத்த விவசாய மக்கள். ஆனாலும் என…
-
- 0 replies
- 603 views
-
-
கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மு. க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது- ஐ.பெரியசாமி தி.மு.க.வில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான மு. க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்று கட்சியின் துணை பொதுசெயலாளரான ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “ மக்களவை தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைந்ததும் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவோம். தமிழகத்தில் அ.தி.மு.க. பா.ஜ.கவைத் தவிர மக்கள் நலனுக்காக அனைத்து கட்சிகளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் திரண்டுள்ளன. தற்போது கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மாநில அளவில் தற்போது கூட்டணி குறித்து…
-
- 0 replies
- 330 views
-