Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போராட்டத்தை ஒருங்கிணைக்க, "பேஸ்புக்" மாணவர்கள் இயக்கம் தொடக்கம். நெல்லை: தமிழகத்தில் நடந்துவரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வண்ணம் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பினை தொடக்கியுள்ளனர். சிங்களப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்துடன் இந்த பேஸ்புக்கின் முகப்பு அமைக்கபட்டுள்ளது. இந்த பேஸ்புக் பக்கத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் 8ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். மேலும் சுமார் 7ஆயிரம் பேர் இத்தளத்தை பார்வையிட்டுள்ளனர். நாலுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்திட மாணவர்களுக்கு இந்த பேஸ்புக் களமாக அமைந்துள்ளது. நன்றி தற்ஸ்தமிழ்.

  2. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது. போர் குற்றங்கள்: இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெ…

    • 0 replies
    • 635 views
  3. http://www.facebook.com/spudayakumar1 எங்கேப் போகிறோம், மாணவர்களே? கனவா, கற்பனையா, காட்சிப்பிழையா என்று நம்மை கிள்ளிப்பார்க்கச் செய்கிறது தமிழத்தில் தற்போது நடந்துவரும் மாணவர் புரட்சி. நீண்ட காலமாக எல்லோராலும் வஞ்சிக்கப்பட்டிருக்கும் தமிழினம், ‘பொறுத்தது போதும்’ எனப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. இந்த எழுச்சி 2009-ம் ஆண்டே முழு வீச்சில் வரவேண்டியது. ஆனால் சில சுயநலவாத இனத்துரோகிகளால் அது மழுங்கடிக்கப்பட்டு, முடக்கப்பட்டது. தொடங்கிவிட்ட மாணவர்கள் எப்படித் தொடரலாம் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை இங்கேப் பதிவிடுகிறேன். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம், தெரிவு, உரிமை. [1] களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் க…

  4. ஈழத்தமிழர்கள் துயர்துடைக்கும் அக்கறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து அர்பணிப்போடு நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்தை நீர்த்து போக வைக்க, ஒடுக்க, அதை தன் கட்சியின் கணக்காக காட்ட பல சதிகளை அரசுகளும் அரசியல் கட்சிகளும் செய்ய முயற்சிக்கின்றன. இந்தச் சூழலில், தனி தனியாக போராடும் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமும் அவசரமும்கூட. இதை மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்து, அதை மாநிலம் முழுக்க வழிநடத்தும் ஒரு தலைமை குழுவை உருவாக்கலாம். அந்த தலைமையை மாணர்வகளிடமிருந்தே உருவாக்க வேண்டும். மாணவர்களை ஒருங்கிணைக்க அவர்களை பின்னணியிலிருந்து வழிநடத்த, தேர்ந்த ஒரு குழு அவசியம். அதற்கான தகுதி, எப்போதும் ஈழத்தமிழர்களுக்கான துணிந்து அர்ப…

    • 0 replies
    • 419 views
  5. இலங்கைத் தமிழரும் மாணவர்களும் கேள்வி பதில், சமூகம் March 17, 2013 அன்புள்ள ஜெ இன்று ஈழப்பிரச்சினைக்காகப் போராடும் மாணவர் கிளர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் எதையும் சற்று கவனித்த பிறகே கருத்துச் சொல்வீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் நான் இதைப்பற்றி அறிய விரும்புகிறேன் இப்போது போராடும் இந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினையின் உள்விவகாரங்கள் தெரியுமா? அங்கே உள்ள சகோதரச்சண்டைகளும் சாதியரசியலும் புரியுமா? இங்குள்ள அரசியல்வாதிகள் உருவாக்கும் ஒற்றைவரிகளை நம்பி இவர்கள் போராடுகிறார்கள் என்று தோன்றுகிறது ஸ்ரீனிவாசன் -------------------------------------------------------------------------- அன்புள்ள சீனிவாசன், எந்த மக்கள் போராட்டத்த…

    • 2 replies
    • 581 views
  6. மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே, அகிம்சையை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என ராஜபக்சேவை புத்தகயாவில் கடும் எதிர்ப்பை தெரிவித்த பீகாரைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏசோம் பிரகாஷ் தமிழக மாணவர்களுக்கு ஆதரவளிக்க நாளை சென்னை வருகிறார். இவர் 20 ம் திகதி நடக்கவிருக்கும் "ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டதில் கலந்து கொள்வர் என தெரியவருகிறது.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13408:som-pirahas&catid=36:tamilnadu&Itemid=102

    • 1 reply
    • 663 views
  7. கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம் திமுக மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால்தானே, அதை மிரட்டி தமிழக நலன்களுக்காக சிலவற்றை சாதித்துக் கொள்ள முடிகிறது; 6 வது முறையாக திமுக மிரட்டல் என்று தினமணி கேலிக்காகக் கூறினாலும், அதனால் விளைந்த நன்மைகளை யாரும் மறைக்க முடியாதே என்று திமுக தலைவர் கருணாநிதி புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தி.மு. கழகம் மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, மத்திய அரசை எதற்காகவாவது குறை சொல்ல வேண்டுமென…

    • 7 replies
    • 1.2k views
  8. வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட ,நகர,கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் "ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்" முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் அவரகள் எமது இணையத்திற்கு தெரியபடுத்தி உள்ளார் . மேலும் அவர் பேசுகையில் ! இம்முன்னேடுப்பு போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும் , தாங்களே அப்பகுதியிலுள்ள ஒரு ஒன்றுகூடலுக்கான பகுதியினை தேர்வு செய்து இந்த மாபெரும் போராட்டத்தினை பொதுமக்கள்,வணிகர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் வெற்றிபெற செய்வது நமது முன்னுள்ள மாபெரும் வரலாற்று கடமையாகு…

  9. கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள் அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேர…

    • 1 reply
    • 1.1k views
  10. மு.யூ.மீரான் முகைதீன் முகவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இலங்கை அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு 18.03.2013 திங்கள் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி, அமைப்பு பேதமின்றி உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அறநெறி போராட்டத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இசுலாமிய அமைப்புகளில், பாப்புலர் ஃப்ரன்ட், கேம்பஸ் ஃபரன்ட், எஸ்.டி.பி.ஐ , த.மு.மு.க , மனித நேய மக்கள் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் என பல்வேறு பட்ட ஒத்த கருத்துடைய அமைப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதை பார்க்கும் தோழர்கள் இதையே அழைப்பக ஏற்று இந்த உணர்வு போராட்டத்தில் க…

  11. தமிழகமே இலங்கை இன படுகொலைக்கு எதிராக போரட்டம் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் இவர்கள் இங்கு வர அனுமதி தந்த குறுமுட்டை அதிகரிகள் யார் ? இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பும் மத்தியில் ஆளும் காங்கரஸ்தான் ஏற்க வேண்டும். இன போராட்ட வீரர்களை தமிழக அரசு வழக்கு போடமல் அவர்களை விடுவிக்க வேண்டும்.

    • 10 replies
    • 1.3k views
  12. தமிழீழ இனப்படுகொலைகளுக்கு நீதிகேட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரித்து வழிநடத்திய சிங்கள புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு 'சுற்றுலா' என்ற பெயரில் தொடர்ந்து உலா வருகின்றனர். தமிழ்நாட்டு சட்டமன்றம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இலங்கையுடனான சுற்றுலா உறவை முறித்துக் கொள்வதற்கும் முன்னிற்கின்ற போதுகூட, சிங்களர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது குறைந்தபாடில்லை. இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடு…

    • 0 replies
    • 734 views
  13. மாணவர்களின் போராட்டத்தை முடக்க முயற்சி செய்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும்- தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்…

  14. தஞ்சாவூரில் விரட்டி விரட்டி தாக்கப்பட்டனர் சிங்கள புத்த பிக்குமார்! [saturday, 2013-03-16 12:13:10] இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிக்குகள் கோஷ்டி ஒன்று தஞ்சாவூருக்கு 'இன்ப சுற…

  15. இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழக சிறைகளுக்கும் பரவியது! [saturday, 2013-03-16 09:06:54] இலங்கைக்கு எதிராக, ஐ.நா., வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி, கோவை மத்திய சிறையில், நேற்று கைதிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த போரில், இனப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ஷேவை, சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது, இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை, பேரணி, மனிதசங்கிலி உட்பட, பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில…

  16. தமிழீழத்தை வென்றெடுக்க தமிழகத்தில் புதிய இயக்கம்! [saturday, 2013-03-16 08:51:39] இலங்கையில் நீதி மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்குத் தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என சபதம் ஏற்று தமிழீழத்தை அமைக்க புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கி பாயும் புலியாகப் பொங்கியெழுந்துள்ளனர் தமிழக மாணவர்கள். "தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு' என்ற பெயரில் உதயமாகியுள்ள இந்த இயக்கமானது வெகுவிரைவில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டதில் குதிக்குமாறு மேற்படி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=78194&category=TamilNews&language=tamil

  17. இலங்கை அதிபர் ராஜபக்சவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி இலங்கையில் நடைபெற்ற இன படுகொலையை விசாரித்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 11ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று அரியாங்குப்பத்தில் இருந்து உப்பளம் கடற்கரை சாலை வழியாக சட்டசபை க்கு காரில் முதல்வர் ரங்கசாமி சென் றார். அவரது கார் அம்பேத்கர் மணிமண்டபம் அருகே வந்தபோது மாண வர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென வழி மறித்து தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். மாணவர்களின் நியாயமான உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொண்டு செயல்படும் என தெரிவித்த முதல்வர், உங்களிடம் பேச்சு நடத்த அமைச்சரை அனுப்பி வை…

  18. "இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர். தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூ…

    • 0 replies
    • 524 views
  19. மாணவ சக்தியின் முதல் பணி பரந்துபட்ட மக்களை ஒரு சக்தியாய் உருத்திரட்டுவதே தத்தர் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் நம்மனைவருக்கும் ஒரு ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது. மக்களின் மனங்களில் மாணவர்கள் அன்புக்கும், மதிப்புக்கும், எதிர்பார்க்கைக்கும் உரியவர்கள். மாணவர்கள் கையசைத்தால் பெற்றோரும், மற்றோரும் அவர்களுக்கு தலைசாய்ப்பது இயல்பு. மாணவர்கள் எப்போதும் மக்களின் மனங்களில் களங்கம் கற்பிக்க முடியாதவர்கள். அவர்களின் குரல்கள் மக்களின் செவிகளை துளைக்கும் என்று சொல்வதை விடவும், அவர்களின் இதயங்களுக்குள் நுழையும் என்…

  20. அன்பான தம்பிகளே தங்கைகளே! உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஏக்கங்களையும் புரிந்து கொண்டவர்களாய் தமிழ் மக்களின் இன்றைய நிர்க்கதியான நிலையைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களிற்கு ஒரு விடிவு வேண்டுமே என்ற ஆதங்கத்துடனும் ஆக்ரோசத்துடனும் களம் புகுந்துள்ள சகோதர்களே! முதற்கண் உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்பட நட்சத்திரங்களைத் தம் ஹீரோக்களாக எண்ணி அவர் பின்னால் அணிவகுப்பவர்கள் மாணவர்கள் என்ற கருத்தை துடைத்தெறிந்து உண்மையிலே திரையிலே போலியாக ஹீரோயிசம் காட்டும் அரிதார நாயகர்களுக்கெல்லாம் உண்மையான ஹீரோக்கள் நீங்களே என்பதைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள். மக்களுக்காகப் பேசுபவர்களும் செயற்படுபவர்களுமே உண்மையான அரசியல் தலைவர்க…

  21. பிரதமர் மன்மோகன் சி்ங், இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவிகளை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட 4 இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையி்ல் மக்கள் கலை இலக்கியம் கழகம், புரட்சிக்கர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடினர். அப்போது, இலங்கைக்கு எதிரான கோஷமிட்ட அவர்கள், திடீரென…

  22. அண்மைச்செய்தி: இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை.... - திமுக தலைவர் கருணாநிதி Puthiyathalaimurai

  23. சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவையொட்டி வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா திடலில் 61 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே. சேகர்பாபு வரவேற்று பேசினார். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 61 ஜோடிகளுக்கும் மு.க.ஸ்டாலின் தங்கத் தாலியை எடுத்துக் கொடுத்தார். மணமகன் ஒவ்வொருவராக வந்து தாலியை பெற்றுக் கொண்டனர். பின்னர் கெட்டிமேளம் முழங்க மணமகன்கள் மணமகள்கள் கழுத்தில் தாலி கட்டினார்கள். மணமக்களை மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின் வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின…

    • 0 replies
    • 495 views
  24. ஈழதமிழர்களுக்கு ஆதரவாக, வரும் 18ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு அறிவித்துள்ளது.கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், மாநில அளவில் கல்லூரி மாணவர்களை இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவை உருவாக்கியுள்ளனர். இக்குழுவின், ஒருங்கிணைப்பாளரும், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவியுமான திவ்யா கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவை அமைந்துள்ளோம். இக்குழுவில், 19 மாவட்டங்களை சேர்ந்த, 50 கல்லூரிகள் இணைந்துள்ளனர். 31 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஒன்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.