Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை. இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களின் கொந்தளிப்பு தணியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர் http://www.dinaithal.com/index.php?option=com_content&view=artic…

    • 4 replies
    • 801 views
  2. ஈழதமிழர்களுக்கு ஆதரவாக, வரும் 18ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு அறிவித்துள்ளது.கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், மாநில அளவில் கல்லூரி மாணவர்களை இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவை உருவாக்கியுள்ளனர். இக்குழுவின், ஒருங்கிணைப்பாளரும், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவியுமான திவ்யா கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவை அமைந்துள்ளோம். இக்குழுவில், 19 மாவட்டங்களை சேர்ந்த, 50 கல்லூரிகள் இணைந்துள்ளனர். 31 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஒன்றி…

  3. மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தாக்கப்பட்டது மார் 15, 2013 திருச்சி உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தமிழ் உணர்வாளர்களினால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டுள்ளது. தொடரும் தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.sankathi24.com/news/28002/64//d,fullart.aspx

  4. ஜட்டி பனியனுடன் வாருங்கள் அனுமதி தருகிறேன்:-கல்லூரி முதல்வர். [வீடியோ ] விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் முதல்வரிடத்தில் அனுமதி கோரி சென்று உள்ளனர் , அதற்கு அக்கல்லூரியின் முதல்வர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் என்று ஏகத்தாளமாக பதில் கூறியிருக்கிறார் , மேலும் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பேன் , மடிக்கணினி தரமாட்டேன் , டீசீ யை கிழித்து விடுவேன் என்றும் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வருகிறார்…

    • 0 replies
    • 1.8k views
  5. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர்டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி, உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்ச நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா, உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான், அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே, ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் …

  6. கோரிக்கையோடு,பொது வாக்கெடுப்பு கேட்டு போராடி வரும் மாணவர்களின் போராட்டம் வலுப்பெறுகிறது . நேற்று மாலை திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 4 நாட்களாக திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களே வீதி மறியல், தபால் நிலைய முற்றுகை, தொடர் வண்டி முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தினார்கள். மாலை 3 மணியளவில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முற்பட்டபோது விமானநிலைய காவல் துறையினர் பிரதான சாலையை அடைத்து வைத்திருந்தனர். மாணவர்கள் அதனை மீறி செ…

    • 0 replies
    • 566 views
  7. இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கலைஞர் கருணாநிதி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி புதுக்கோட்டையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அரசு மன்னார் கல்லூரி மாணவர்களை புதன்கிழமை சந்தித்து வாழ்த்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியது ; இந்த அறவழிப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. டெசோ அறிவித்த வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதா என்பது குறித்து பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அது படுதோல்வி அடைந்ததை வழக்கம் போல உண்மையைத் திரித்துப் பேசும் கருணாநிதி…

    • 0 replies
    • 663 views
  8. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற விவகாரம் தொடர்பாக இந்திய அரசு இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இலங்கை தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில்அழைத்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மனிதாபினத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், கைதான மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=94208

  9. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்துப் பெறும் இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் தொடர்பான எட்டுக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய உண்ணாவிரதத்தை கடந்த 11ம் தேதியுடன் முடித்துக் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்கள், தற்போது அடுத்த கட்டப் போராட்டத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தைப் போல், தற்போது தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கமும் மாநிலம் முழுவதும் பரவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நான்கு மாண…

  10. இலங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்ற…

  11. பல இன்னல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காக தமிழகமெங்கும் பரவலாக முன்னெடுத்து வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வால் ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளோம் என்ற உணர்வை மீண்டுமொரு முறை ஊட்டியுள்ளது. பல்லாண்டு கால எமது விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே உங்களது இப்போராட்டத்தினை புலம்பெயர்ந்து வாழும் மாணவர் சமூகத்தினராகிய நாம் கருதுகின்றோம். வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத் தீவின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த தமிழினம், படிப்படியாக சிங்கள இனத்தால் ஒதுக்கப்…

  12. இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இ இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்புஇ அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடுஇ மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்…

  13. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நடிகர் சிலம்பரசன்.

  14. தமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார் மாரியப்பன் ஆகிய 1…

  15. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று தங்க பத்தகம் வாங்கியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பேரறிவாளன். அவர் சிறையில் இருந்து கொண்டே மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆதரவுடன் சிறை துறை நடத்தி வரும் டிடிபி டிப்ளமோ படிப்பு படித்து வந்தார். அவர் டிடிபி டிப்ளோமாவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்று சிறை துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு எழுதிய 185 கைதிகளில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அறிவி…

    • 7 replies
    • 753 views
  16. இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், 'காதற்ற ஊசியாக' காங்கிரஸ் மாறி வெகுநாள் ஆகிறது. சென்னை கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதக் களத்துக்கு அசட்டுத் துணிவோடு சென்ற காங்கிரஸார், அவமானப்பட்டது சமீபத்திய காட்சி! தி.மு.க-வின் நடவடிக்கைகளோ - 'வேலிக்கு ஓணான் சாட்சி'! இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது 'அரை நாள் உண்ணாவிரதம்' இருந்துவிட்டு, 'போர் முடிந்தது' என்று வீடு திரும்பிய அதே தலைவர், இப்போது 'டெசோ’ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் என்று புதிய பூச்சாண்டி காட்டுகிறார். எரிவதைப் பிடுங்கினாலே, கொதிப்பது தன்னால் அடங்கும் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, கொழுந்துவிடும் நெருப்புக்குக் காவலாக நின்றபடி... 'கொதிக்கிறதே... கவ…

    • 3 replies
    • 979 views
  17. காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இலங்கைக்கு சொந்தமான சரக்கு கப்பல் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ளது. அந்த கப்பலை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்குள் அனுமதித்த இந்திய அரசையும், துறைமுக நிர்வாகத்தையும் கண்டித்து துறைமுக வாயிலில் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் எம்.நைனாமுஹம்மது தலைமை யேற்க, மாவட்ட தலைவர் ஐ.அப்துல்ரஹீம், மாவட்ட த.மு.மு.க செயலாளர் எம்.முஹம்மது நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்ப…

  18. தி.மு.க.வுக்கு ரூ.50 லட்சம் தேர்தல் நிதி கொடுத்த காங்கிரஸ் எம்.பி! தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு. தேனி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூண், தி.மு.க.வுக்கு தேர்தல் நிதியாக ஐம்பது லட்சத்தை வாரி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மாநிலம் முழுவதும் முழு வீச்சில் தேர்தல் நிதி திரட்டி வருகிறது தி.மு.க. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜெ.எம்.ஆரூணை சந்தித்த தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் மூக்கையா, அவரிடம் ஐம்பது லட்சம் தேர்தல் நிதியாக கேட்டாராம். கட்டாயம் அதை தருவதாக சொல்லி அவரை வழியனுப்பிய ஆரூண், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட நகர, ஒன்றிய தி.மு.க. செயலாளர்களை அழைத்து ஆளுக்கு மூன்று லட்சம் வீதம் தேர்தல் நிதி வழங்கி ரசீதை போட்டு வாங்கி இருக்கி…

  19. உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி! இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் 4வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு பிரதிநிதி தங்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கை. இதனிடையே, பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தி்ற்காக வரும் சனிக்கிழமை காலை காரைக்…

  20. பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாநிலை [படங்கள்] திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக திருச்சி-புதுகை சாலையில் உண்ணாநிலை அறப் போராட்டத்தை துவங்கி உள்ளனர். மாணவிகளே பெரும்பான்மையாக பங்கேற்று உள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13346:barathithasan&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 349 views
  21. தனித்தமிழீழ வாக்கெடுப்பு நடத்தகோரியும்,சிறீலங்கா அரசினை கண்டித்தும் கும்பகோணத்தில் நடந்து வரும் அரசினர் கலைக் கல்லூரி 40 மாணவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதில் ஜான்பீட்டர் இராஜசேகரன் என்கிற இருவர் கண் பார்வை அற்ற மாணவர்கள். கண் பார்வையற்ற நிலையிலும் தமது இன உணர்வு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள். http://www.sankathi24.com/news/27965/64/40/d,fullart.aspx

  22. மதுரையை குலுக்கியது மாணவர்கள் பேரணி [படங்கள்] ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்கள் இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட பேரணி மதுரையை குலுக்கியது, சமிபகாலங்களில் மதுரையில் நடந்த மிக பெரிய தன் எழுச்சி பேரணி இது மட்டுமே. கோரிக்கைகள் : 1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே 2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை. 3. சர்வதேசவிசாரண…

    • 0 replies
    • 345 views
  23. விடுதலை புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம்-மாணவர்களை மிரட்டிய காவல்துறை. 'இலங்கையில் நடந்தது இன படுகொலையே....ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர். ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி 'எவனோ எங்கயோ செத்தான்னா இங்க எதுக்கு போராடுறீங்க 'என இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மாணவர்களோ 'இது எங்கள் உணர்வு நாங்கள் மானமும் ஈரமும் வீரமும் உள்ள தமிழச்சிக்கு பிறந்தோம். அதனால் இந்த போராட்டம் செய்கிறோம். மானம் உள்ளவர்கள் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்' என பதிலடி தந்து கல்லூரி உள்ளேயே பாய் படுக்கை…

    • 10 replies
    • 815 views
  24. திலீபன் ஒரு சாதனை தமிழன் : மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ...... மாணவர்களுக்கு அரசியல் வேணாம்.... பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா..... உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா.... படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா.... இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது.. திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன் இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும் தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல... அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று....... அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும் என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி இட்ட லயோலா…

    • 1 reply
    • 449 views
  25. கச்சதீவில் வைத்து இந்திய மீனவர்கள் 60 பேர் இன்று (14) காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பன் மீனவர் சங்க தலைவர் யூ. அருளாயனந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட மீனவர்கள் 20 பேர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யூ. அருளானந்தம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நேற்று (13) இரவு 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கை கடற்படையினரால் 79 மீனவர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.