தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
இன்றும் திருச்சியில் மாணவர்களால் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது.இன்று காலை திருச்சி கயாமலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புறப்பட்டு திருச்சி தபால் நிலைய சந்தியில் மறியல் போராட்டம் நடத்தினர். பின் அங்கிருந்து பேரணியாக சென்று திருச்சி தொடருந்து நிலையத்திற்குள் புகுந்து திருச்சியில் இருந்து பாலைக்காடி நோக்கி செல்லவிருந்த தொடரூந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து ஈழதேசம் நிருபர் சற்றுமுன் எமக்கு தெரிவித்துள்ளார். இதே போன்றே திருச்சியில் வேறு பல முக்கிய பகுதிகளிலும் மாணவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றது.இது தொடர்பான செய்திகள் ஈழதேசம் இணையத்தில் எதிர்பாருங்கள். http://www.eeladhesam.com/index.php?…
-
- 0 replies
- 377 views
-
-
உண்ணாவிரதம் இருந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி! இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் 4வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு பிரதிநிதி தங்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கை. இதனிடையே, பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டத்தி்ற்காக வரும் சனிக்கிழமை காலை காரைக்…
-
- 3 replies
- 400 views
-
-
அழியும் விவசாயிகளை காப்பீர் - வைகோ உண்ணாவிரதம். சென்ற பனிரெண்டாம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்து இருந்த மதிமுகவினர் அன்றைய தினம் டெசோ குழுவினரின் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதால் தேதியை மாற்றி பின்னர் அறிவிக்க இருந்தார்கள். இன்றைக்கு எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் நிகழ்வாக , வைகோ மற்றும் ஐநூறு பேர் உண்ணாவிரத்ததை துவக்கி உள்ளார்கள். விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் இன்று அமைக்கப்பட்ட திடலில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் கட்சியினரும் இப்போது அந்த மைதானத்திற்கு வர ஆரம்பித்து உள்ளார்கள் இன்று மாலை உண்ணாவிரதம் முடிக்கையில் குறைந்தது பத்தாயிரம் பேர் இருப்பார்கள் என்று முன் கணக்கு யூகமிடபட்டுள்ளது. கோரிக்கை…
-
- 0 replies
- 456 views
-
-
அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி! – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை. ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையா…
-
- 0 replies
- 599 views
-
-
இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கை தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான் என்பதை வலியுறுத்தியும், சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபச்சேவை போர்க்குற்றவாளி என அனைத்து நாடுகளும் அறிவிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் கனகராஜ், செந்தில், மாதேசா, யுவராஜ், அகிலன், பழனிகுமார், பாண்டி, சந்திரசேகர், இளவரசன், பழனிவேல், அமிர்தலிங்கம் என 11 பேர் கடந்த 12.03.2013 முதல் சென்னை புரசைவாக்கத்தில் விடுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். படங்கள்: ஸ்டாலின்
-
- 0 replies
- 355 views
-
-
திலீபன் ஒரு சாதனை தமிழன் : மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ...... மாணவர்களுக்கு அரசியல் வேணாம்.... பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா..... உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா.... படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா.... இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது.. திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன் இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும் தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல... அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று....... அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும் என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி இட்ட லயோலா…
-
- 1 reply
- 451 views
-
-
கடலூரில் உண்ணாவிரதம் இருந்த 5 மாணவர்கள் கைது .கலையில் சுமார் 6 மணிக்கு நெய்வேலி மாறன் தலைமையில் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் , அங்குள்ள தபால் அலுவலகத்திற்கு எதிரில் ஒரு தனியார் இடத்தை தேர்வு செய்து உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களிற்கு அனைத்து கல்லூரி மாணவர்கள் ஐம்பது பேர் ஆதரவு அளித்தார்கள். இந்நிலையில் இந்த உண்ணாவிரத நிகழ்வை காங்கிரஸ் கட்சியினர் பலமாக எதிர்த்தனர் . அவர்கள் காவல்துறை க்கு அதிக அழுத்தம் கொடுத்து உள்ளனர். அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் மாணவர்கள் அங்கு உண்ணா விரதம் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து எதிர்ப்பை காட்டி உள்ளனர் . உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. கைது செய்ய வந்த காவல்துறைய…
-
- 0 replies
- 346 views
-
-
சென்ற பனிரெண்டாம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்து இருந்த மதிமுகவினர் அன்றைய தினம் டெசோ குழுவினரின் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டதால் தேதியை மாற்றி பின்னர் அறிவிக்க இருந்தார்கள். இன்றைக்கு எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் நிகழ்வாக , வைகோ மற்றும் ஐநூறு பேர் உண்ணாவிரத்ததை துவக்கி உள்ளார்கள். விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் இன்று அமைக்கப்பட்ட திடலில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் கட்சியினரும் இப்போது அந்த மைதானத்திற்கு வர ஆரம்பித்து உள்ளார்கள் இன்று மாலை உண்ணாவிரதம் முடிக்கையில் குறைந்தது பத்தாயிரம் பேர் இருப்பார்கள் என்று முன் கணக்கு யூகமிடபட்டுள்ளது. கோரிக்கைகள் : வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிக…
-
- 0 replies
- 475 views
-
-
தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் எவ்வளவு முறை எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாலும் இன்னமும் அடங்காத அமைப்பாகவே இலங்கை அரசு உள்ளது. (ஒரு வேலை இந்திய மத்திய அரசு இந்த விடயத்தை கண்டு கொள்ளவில்லையோ?) ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் 18 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்று பிடித்துச் சென்ற நிலையில், இன்றும் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 652 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் , தனுஷ்கோடி - கச்சத்தீவு இடையே மீன்பிடித்து விட்டு, இன்று அதிகாலையில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். ஆதாம்பாலம் அருகே வந்த போது, 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், அதில் இருந்த மீனவர்களையும் இலங…
-
- 0 replies
- 655 views
-
-
கேட்டது ரெண்டு கொடுத்தது நாலு ! 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு Crime and Criminal Tracking Network and Systems என்ற ஒரு அமைப்பை அனைத்து காவல்துறையிலும் உருவாக்க வேண்டுமென்று திட்டம் இட்டது . அந்த திட்டத்தை 2012 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் இருந்து முழுமையாக் செயல்படுத்த கால உறுதி அளித்தது ஆனால் இப்போது 2013 ஆகியும் அது மாநிலங்களை கேட்டது என்ன தெரியுமா ? குறைந்த பட்சம் இரண்டு மாவட்டங்களையாவது இந்த மின் ஆளுமை திட்டத்திற்கு உட்படுத்துங்கள் என்பதுதான் , அது என்ன கணக்கு என்று தெரியவில்லை , ஒரு திட்டம் எப்படி முழுமையடையும் என்றும் தெரியவில்லை. இருந்தாலும் மத்திய அரசு கேட்டது இரண்டு நேற்றைக்கு மாநில அரசு நான்கு மாவட்டங்களை இந்த திட்டத்திற்கு உட்…
-
- 0 replies
- 570 views
-
-
மற்றும் போன்ற மத்திய அரசு பணிகளிற்கான தேர்வாணையம் சமீபத்தில் நான்கு பெரிய மாற்றங்களை தேர்வு முறையில் மாற்றம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது இது ஹிந்தி பேசாத மக்களை வெகுவாக பதித்து உள்ளது. இது குறித்து முதல்வர் , ஜெயலலிதா நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளதாவது:- 2013-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எஸ்.,ஐ.ஏ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றமானது பாரபட்சமாகவும் அநீதியாகவும் உள்ளது. தேர்வு முறையில் பெரிய அளவில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றமானது தமிழகத்தில் இருந்து ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும். அதுவம்…
-
- 0 replies
- 512 views
-
-
when you deal with the Romans, deal as the Romans would deal அருண் ஜெட்லி யின் காட்டம். தேர்தலுக்கு வாக்கு அளித்து விட்டு இந்தியா திரும்பி விடுவார்கள் என்று , இத்தாலி சார்பாக உறுதி அளித்த இந்தியாவிற்கான இத்தாலி தூதர் , Daniele Mancini., இந்தியாவிற்கு திருப்பி வராத குற்றம் செய்த கப்பல் மாலுமிகள் இருவருக்கு பொறுப்பானவர் என்று பா ஜ க மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறி உள்ளார் இத்தாலி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அவர் இது மூன்றாவது முறை இத்தாலி அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றுவது என்பதையும் சொல்லி உள்ளார் . ஜேம்ஸ் பாண்ட் இன் திரைபடமான Goldfinger இல் சொன்னதை போல முதல் முறை என்றால் அதை சூழ்நிலை எனலாம் , இரண்டாம் முறை என்றால் அதை திட்டமிட்ட சம்பவம் எனலாம் , மூன்றா…
-
- 0 replies
- 483 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 4 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, தலைமன்னார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 18 பேரும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். http://dinamani.com/latest_news/article1500037.ece
-
- 1 reply
- 668 views
-
-
http://youtu.be/1QjldU1Shlw இந்தக் காணொளியை யாராவது இணைத்துவிட முடியுமா...
-
- 5 replies
- 400 views
-
-
இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டு பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளார்கள். ஈழத்தில் நீதி மறுக்கப்பட்டுவரும் தமிழீழ மக்களிற்கு ஆதரவான போராட்டங்கள் தமிழக மாணவசகோதரர்களால் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தம்மை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுவருகின்ற கொதிநிலையில் கல்லூரி நிர்வாகங்கள் சுயமாகவும் காவல்துறை உளவுத்துறை அரசியல் கட்சிகளின் கடுமையான அழுத்தங்களிற்கு …
-
-
- 1.3k replies
- 120.3k views
-
-
புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்: நெடுமாறன், ரகுபதி நேரில் வாழ்த்து ஈழப் பிரச்சணையை முன்னிருத்தி புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் நேற்று செவ்வாய் கிழமை காலை கல்லூரி முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இங்கு மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் தகவல் தமிழகம் எங்கும் பரவியதால் அனைத்து தமிழ் உணர்வாளர்களும் இந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதன் கிழமை காலை பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதே போல தி.மு.க முன்னால் மத்திய இணை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் சென்று மாணவர்களுடன் இருந்து அவர்களுக்க வாழ்த்து கூறினார். மேலும் பல தலைவர்களும் வந்து கொண்டிரு க்கின்றனர். இந்த மாணவர்களுக்கு துணையாக மேலும் பல மாணவர்கள் அர…
-
- 0 replies
- 464 views
-
-
ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், ஈழத்தமிழர் படுகொலையில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதற்கிடையே திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே இன்று மதியம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கே.கே.நகர் சபரி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக…
-
- 5 replies
- 681 views
-
-
தனி தமிழீழ கோரிக்கையோடு அறவழியில் போராடிய திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். நான்கு முனை சந்திப்பையும் அடைத்து நின்று மறியல் செய்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அறவழியில் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒருவரை காவல்துறை ஆய்வாளர் அடித்ததால் மாணவர்கள் கடும் கொந்தளிப்பு. சட்டக் கல்லூரி மாணவர்கள் திருச்சி,டோல்கேட் பகுதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது . காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் . மாணவர்களின் உணர்வுமிக்க போராட்டத்தை மத்திய அரசு காவல் துறையை ஏவி திசைதிருப்ப முயல்கிறது. மாணவ சமுதாயமே விழித்துக்கொள். நமது இலக்கு ஒன்றுதான்....... இனத்…
-
- 3 replies
- 346 views
-
-
எங்கள் நம்பிக்கை நட்சத்திரங்களே! போராடும் மாணவர்களுக்கு இடிந்தகரையிலிருந்து அண்ணன் சுப.உதயகுமார்! http://youtu.be/br8fdhc58pM
-
- 0 replies
- 449 views
-
-
புதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் - காவல்துறையுடன் தள்ளு முள்ளு. [படங்கள்] http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13322:puthchery&catid=36:tamilnadu&Itemid=102 இந்திய பூரான்கள் இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் கூட்டமைப்பு, கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், செந்தமிழர் இயக்கம், உயிர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு இயக்கம், ஆகியவைகள் இணைந்து இன்று காலை 11 மணியளவில் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், தபால் நிலையம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. புதுச்சேரி அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடை விதிக்க வரும் சட்டமன்ற கூட்டத்தொடரி…
-
- 0 replies
- 313 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர். இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது. ஒரு மணி நேரம…
-
- 1 reply
- 645 views
-
-
சென்னை: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் விரிவடைந்து வருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளை எட்டியுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது. மதுரை மதுரா கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக…
-
- 0 replies
- 281 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 4-ம் ஆண்டு, 5-ம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செங்கல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். Uploaded with [url=http://imageshack.us]
-
- 4 replies
- 525 views
-
-
-
- 7 replies
- 570 views
-
-
சென்னையில் உள்ள மத்திய வருமானவரி அலுவலகம் முற்றுகை - மாணவர்கள் கைது.[படங்கள்] இன்று கலை சென்னையில் உள்ள மத்திய அரசு வருமான வரி அலுவலகம் தமிழ்நாடு மாணவர் இயக்கதினால் முற்றுகையிடப்பட்டது . இதனை அடுத்து அப் பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 200 பேரை கைது செய்துள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13317:chennai-nungapakkam&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 669 views
-