தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10291 topics in this forum
-
கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம் திமுக மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால்தானே, அதை மிரட்டி தமிழக நலன்களுக்காக சிலவற்றை சாதித்துக் கொள்ள முடிகிறது; 6 வது முறையாக திமுக மிரட்டல் என்று தினமணி கேலிக்காகக் கூறினாலும், அதனால் விளைந்த நன்மைகளை யாரும் மறைக்க முடியாதே என்று திமுக தலைவர் கருணாநிதி புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தி.மு. கழகம் மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, மத்திய அரசை எதற்காகவாவது குறை சொல்ல வேண்டுமென…
-
- 7 replies
- 1.3k views
-
-
வரும் 20/03/2013 புதன்கிழமை தமிழகம் தழுவிய மாவட்ட ,நகர,கிராம அளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் "ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம்" முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் அவரகள் எமது இணையத்திற்கு தெரியபடுத்தி உள்ளார் . மேலும் அவர் பேசுகையில் ! இம்முன்னேடுப்பு போராட்டத்தினை தமிழகம் தழுவி தமிழீழ விடுதலை வேண்டி போராடும் அனைத்து மாணவர் ஒருங்கிணைப்பு குழுக்களும் , தாங்களே அப்பகுதியிலுள்ள ஒரு ஒன்றுகூடலுக்கான பகுதியினை தேர்வு செய்து இந்த மாபெரும் போராட்டத்தினை பொதுமக்கள்,வணிகர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என அனைத்து தரப்பினரின் பேராதரவுடன் வெற்றிபெற செய்வது நமது முன்னுள்ள மாபெரும் வரலாற்று கடமையாகு…
-
- 4 replies
- 945 views
-
-
கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ஷே படத்தை எரித்த மாணவிகள் அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேர…
-
- 1 reply
- 1.1k views
-
-
மு.யூ.மீரான் முகைதீன் முகவையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இலங்கை அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிற்கு 18.03.2013 திங்கள் கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி, அமைப்பு பேதமின்றி உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அறநெறி போராட்டத்தில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இசுலாமிய அமைப்புகளில், பாப்புலர் ஃப்ரன்ட், கேம்பஸ் ஃபரன்ட், எஸ்.டி.பி.ஐ , த.மு.மு.க , மனித நேய மக்கள் கட்சி, இன அழிப்பிற்கெதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் என பல்வேறு பட்ட ஒத்த கருத்துடைய அமைப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதை பார்க்கும் தோழர்கள் இதையே அழைப்பக ஏற்று இந்த உணர்வு போராட்டத்தில் க…
-
- 0 replies
- 560 views
-
-
தமிழகமே இலங்கை இன படுகொலைக்கு எதிராக போரட்டம் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் இவர்கள் இங்கு வர அனுமதி தந்த குறுமுட்டை அதிகரிகள் யார் ? இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பும் மத்தியில் ஆளும் காங்கரஸ்தான் ஏற்க வேண்டும். இன போராட்ட வீரர்களை தமிழக அரசு வழக்கு போடமல் அவர்களை விடுவிக்க வேண்டும்.
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழீழ இனப்படுகொலைகளுக்கு நீதிகேட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரித்து வழிநடத்திய சிங்கள புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு 'சுற்றுலா' என்ற பெயரில் தொடர்ந்து உலா வருகின்றனர். தமிழ்நாட்டு சட்டமன்றம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இலங்கையுடனான சுற்றுலா உறவை முறித்துக் கொள்வதற்கும் முன்னிற்கின்ற போதுகூட, சிங்களர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது குறைந்தபாடில்லை. இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடு…
-
- 0 replies
- 740 views
-
-
மாணவர்களின் போராட்டத்தை முடக்க முயற்சி செய்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும்- தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்…
-
- 3 replies
- 943 views
-
-
தஞ்சாவூரில் விரட்டி விரட்டி தாக்கப்பட்டனர் சிங்கள புத்த பிக்குமார்! [saturday, 2013-03-16 12:13:10] இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு அலைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் குக்கிராமங்களிலும் கூட இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சிங்கள புத்த பிக்குகள் கோஷ்டி ஒன்று தஞ்சாவூருக்கு 'இன்ப சுற…
-
- 1 reply
- 400 views
-
-
இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழக சிறைகளுக்கும் பரவியது! [saturday, 2013-03-16 09:06:54] இலங்கைக்கு எதிராக, ஐ.நா., வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி, கோவை மத்திய சிறையில், நேற்று கைதிகள், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த போரில், இனப் படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்ஷேவை, சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கை மீது, இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம், மறியல், முற்றுகை, பேரணி, மனிதசங்கிலி உட்பட, பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில…
-
- 0 replies
- 534 views
-
-
தமிழீழத்தை வென்றெடுக்க தமிழகத்தில் புதிய இயக்கம்! [saturday, 2013-03-16 08:51:39] இலங்கையில் நீதி மறுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்குத் தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என சபதம் ஏற்று தமிழீழத்தை அமைக்க புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கி பாயும் புலியாகப் பொங்கியெழுந்துள்ளனர் தமிழக மாணவர்கள். "தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு' என்ற பெயரில் உதயமாகியுள்ள இந்த இயக்கமானது வெகுவிரைவில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்கவுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டதில் குதிக்குமாறு மேற்படி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=78194&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி இலங்கையில் நடைபெற்ற இன படுகொலையை விசாரித்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 11ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று அரியாங்குப்பத்தில் இருந்து உப்பளம் கடற்கரை சாலை வழியாக சட்டசபை க்கு காரில் முதல்வர் ரங்கசாமி சென் றார். அவரது கார் அம்பேத்கர் மணிமண்டபம் அருகே வந்தபோது மாண வர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென வழி மறித்து தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். மாணவர்களின் நியாயமான உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொண்டு செயல்படும் என தெரிவித்த முதல்வர், உங்களிடம் பேச்சு நடத்த அமைச்சரை அனுப்பி வை…
-
- 3 replies
- 504 views
-
-
"இலங்கை பிரச்னை தொடர்பாக, தமிழக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், கடும் விளைவுகளை ஏற்படுத்தும் முன், உருப்படியான பதிலை மத்திய அரசு தர வேண்டும்' என, ராஜ்யசபாவில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா., மனித உரிமை கமிஷனில், அந்நாட்டுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாணவர்கள் போராட்ட பிரச்னையை, ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுப்பினர். தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஆங்காங்கே கல்லூ…
-
- 0 replies
- 529 views
-
-
மாணவ சக்தியின் முதல் பணி பரந்துபட்ட மக்களை ஒரு சக்தியாய் உருத்திரட்டுவதே தத்தர் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்திவரும் தொடர் எழுச்சிப் போராட்டங்கள் நம்மனைவருக்கும் ஒரு ஒளிக்கீற்றாய் அமைந்துள்ளது. மக்களின் மனங்களில் மாணவர்கள் அன்புக்கும், மதிப்புக்கும், எதிர்பார்க்கைக்கும் உரியவர்கள். மாணவர்கள் கையசைத்தால் பெற்றோரும், மற்றோரும் அவர்களுக்கு தலைசாய்ப்பது இயல்பு. மாணவர்கள் எப்போதும் மக்களின் மனங்களில் களங்கம் கற்பிக்க முடியாதவர்கள். அவர்களின் குரல்கள் மக்களின் செவிகளை துளைக்கும் என்று சொல்வதை விடவும், அவர்களின் இதயங்களுக்குள் நுழையும் என்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்பான தம்பிகளே தங்கைகளே! உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஏக்கங்களையும் புரிந்து கொண்டவர்களாய் தமிழ் மக்களின் இன்றைய நிர்க்கதியான நிலையைப் புரிந்து கொண்டு தமிழ் மக்களிற்கு ஒரு விடிவு வேண்டுமே என்ற ஆதங்கத்துடனும் ஆக்ரோசத்துடனும் களம் புகுந்துள்ள சகோதர்களே! முதற்கண் உங்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்பட நட்சத்திரங்களைத் தம் ஹீரோக்களாக எண்ணி அவர் பின்னால் அணிவகுப்பவர்கள் மாணவர்கள் என்ற கருத்தை துடைத்தெறிந்து உண்மையிலே திரையிலே போலியாக ஹீரோயிசம் காட்டும் அரிதார நாயகர்களுக்கெல்லாம் உண்மையான ஹீரோக்கள் நீங்களே என்பதைப் புலப்படுத்தியிருக்கிறீர்கள். மக்களுக்காகப் பேசுபவர்களும் செயற்படுபவர்களுமே உண்மையான அரசியல் தலைவர்க…
-
- 0 replies
- 451 views
-
-
பிரதமர் மன்மோகன் சி்ங், இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவிகளை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட 4 இயக்கத்தினர் சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையி்ல் மக்கள் கலை இலக்கியம் கழகம், புரட்சிக்கர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடினர். அப்போது, இலங்கைக்கு எதிரான கோஷமிட்ட அவர்கள், திடீரென…
-
- 0 replies
- 314 views
-
-
அண்மைச்செய்தி: இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை.... - திமுக தலைவர் கருணாநிதி Puthiyathalaimurai
-
- 12 replies
- 1.2k views
-
-
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவையொட்டி வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா திடலில் 61 ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே. சேகர்பாபு வரவேற்று பேசினார். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். 61 ஜோடிகளுக்கும் மு.க.ஸ்டாலின் தங்கத் தாலியை எடுத்துக் கொடுத்தார். மணமகன் ஒவ்வொருவராக வந்து தாலியை பெற்றுக் கொண்டனர். பின்னர் கெட்டிமேளம் முழங்க மணமகன்கள் மணமகள்கள் கழுத்தில் தாலி கட்டினார்கள். மணமக்களை மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின் வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின…
-
- 0 replies
- 499 views
-
-
ஈழதமிழர்களுக்கு ஆதரவாக, வரும் 18ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு அறிவித்துள்ளது.கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், மாநில அளவில் கல்லூரி மாணவர்களை இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவை உருவாக்கியுள்ளனர். இக்குழுவின், ஒருங்கிணைப்பாளரும், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவியுமான திவ்யா கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவை அமைந்துள்ளோம். இக்குழுவில், 19 மாவட்டங்களை சேர்ந்த, 50 கல்லூரிகள் இணைந்துள்ளனர். 31 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஒன்றி…
-
- 0 replies
- 440 views
-
-
மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தாக்கப்பட்டது மார் 15, 2013 திருச்சி உயர்நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள மத்திய அரசின் வருவாய்த்துறை பணியகம் தமிழ் உணர்வாளர்களினால் சற்றுமுன்னர் தாக்கப்பட்டுள்ளது. தொடரும் தமிழகத்தின் மாணவர் போராட்டங்கள் இன்று நான்காவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.sankathi24.com/news/28002/64//d,fullart.aspx
-
- 0 replies
- 540 views
-
-
ஜட்டி பனியனுடன் வாருங்கள் அனுமதி தருகிறேன்:-கல்லூரி முதல்வர். [வீடியோ ] விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் முதல்வரிடத்தில் அனுமதி கோரி சென்று உள்ளனர் , அதற்கு அக்கல்லூரியின் முதல்வர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் என்று ஏகத்தாளமாக பதில் கூறியிருக்கிறார் , மேலும் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பேன் , மடிக்கணினி தரமாட்டேன் , டீசீ யை கிழித்து விடுவேன் என்றும் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வருகிறார்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர்டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி, உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்ச நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா, உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான், அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே, ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் …
-
- 0 replies
- 557 views
-
-
தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை. இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களின் கொந்தளிப்பு தணியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர் http://www.dinaithal.com/index.php?option=com_content&view=artic…
-
- 4 replies
- 812 views
-
-
கருணாநிதியின் கபட நாடகம்! -பழ. நெடுமாறன்- தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். இதே காலகட்டத்த…
-
- 5 replies
- 2.5k views
-
-
கோரிக்கையோடு,பொது வாக்கெடுப்பு கேட்டு போராடி வரும் மாணவர்களின் போராட்டம் வலுப்பெறுகிறது . நேற்று மாலை திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 4 நாட்களாக திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களே வீதி மறியல், தபால் நிலைய முற்றுகை, தொடர் வண்டி முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தினார்கள். மாலை 3 மணியளவில் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முற்பட்டபோது விமானநிலைய காவல் துறையினர் பிரதான சாலையை அடைத்து வைத்திருந்தனர். மாணவர்கள் அதனை மீறி செ…
-
- 0 replies
- 572 views
-
-
மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களை துரத்தி வந்து இலங்கை கடற்படை கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கியது. மீனவர்கள் 53 பேரை சிறை பிடித்துச் சென்றதோடு 9 படகுகளையும் பிடித்துச் சென்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் நிலவுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே மீன் பிடித்தபோது, நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகள் மற்றும் 19 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர். இவர்கள் தலைமன்னார் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீன் பிடித்து முடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவை தாண்டி கரையை நோக்கி வந்து கொண்டிருந…
-
- 1 reply
- 790 views
-