தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
இன்றைக்கு தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டுள்ள மாணவர் போராட்டங்களின் ஒரு பகுதியை இது! (-) சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை 10 மாணவர்கள் அடையாறில் நடத்திக் கொண்டுள்ளனர். (-) சென்னை செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தனஞ்செழியன், சுதன், கிங்ஸ்லி பால்ராஜ், கோபி, சதீஷ்குமார், ராஜா, மகேஸ்வரகுமார், ஜான்சன் உள்பட 18 பேர் நேற்று மதியம் 1 மணி முதல் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி முன்பு அமைக்கப்பட்டுள்ள சாமியான பந்தலில் அனைவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்களது போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. பூந்தமல்லி - செங்கல்பட்டு சிறப்பு முகாம்களை இழு…
-
- 0 replies
- 554 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ நா வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை தமிழர்கள் திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும் என்று இப்போது மாணவர்கள் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர் . சிலர் திமுக வின் டெசோ அமைப்பு அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்கிறது அதனால் அதை ஆதரிப்பது தான் தமிழர்களுக்கு நல்லது என்று கூறி வருகின்றனர் . உண்மையில் அமெரிக்காவின் தீர்மானத்தை நாம் ஆதரித்தால் அது தமிழர்களுக்கு பெரும் தீங்காகத் தான் முடியும் . காரணம் அந்த தீர்மானத்தில் சர்வதேச இனப்படுகொலைக்கான விசாரணை என்று ஒன்று இல்லவே இல்லை . இலங்கையே தான் செய்த குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று சொல்லித் தான் அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றன. அதிலும் சர்வதேச அரசியல…
-
- 1 reply
- 470 views
-
-
ஈழ விடுதலைப்பயணத்தில் தடைகளும் நகர்வுகளும் டப்ளின் தொடங்கி ஜெனீவா வரை… கொளத்தூர் மணி உரை -- பெரியார்தளம் நேரம் Tuesday, March 12th 2013. பிரிவு featured, ஈழம், காணொளி, திராவிடர் விடுதலைக் கழகம், முதன்மைச்செய்திகள் [காணொளி] ஈழ விடுதலைப்போர் நடந்தபொழுது கூட நாம் உண்மையான ஈழச்சிக்கலை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை… ஈழ ஆதரவாக நின்றவர்கள் பலபேர் கூட அவர்களின் போர்த் திறனை பாராட்டிக்கொண்டிருந்தார்கள் திரைப்படத்தில் ரஜினியின் சண்டையை பாராட்டுவதைப்போலத்தான் புலிகளின் சண்டையை பாராட்டிக்கொண்டிருந்தார்களே தவிர அதன் பின்னால் இருக்கின்ற நியாயங்கள், தனி ஈழத்துக்கான தேவைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம். அத்தவறு நிகழாவண்ணம் இப்பொழுது நாம் தமிழீழத்திற்கான ப…
-
- 0 replies
- 456 views
-
-
-
தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம் அன்பின் தாய்த்தமிழக் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளையோரிற்கு, அடக்குமுறையின் இடையில் இருந்து ஈழத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் வரையும் அன்பு மடல். உங்களை கட்டித்தழுவி வாழ்த்தத் துடிக்கும் எமக்கு அவ்வாறே செய்ய இயலாது, சிங்கள பேரினவாதத்தின் இரும்புக் கரங்களுக்குள் எங்கள் நாட்கள் கழிகின்றன. நவீன அடிமை யுகம் ஒன்றை உருவாக்கும் சிங்கள பேரினவாதத்தின் சிந்தனைக்குள் இருந்து இதை கண்ணீரோடு வரைகின்றோம், ஒரு நாள் விடியும் அன்று உங்களை நேரில் வாழ்த்தி வணங்குவோம் என்னும் நம்பிக்கையுடன்! ஈழ விடுதலைக்கும் ஈழத்து மக்களாகிய எங்களின் உரிமைக்குமாய் தமிழகம் மற்றும் பாரதத்த…
-
- 0 replies
- 796 views
-
-
சென்னை இலயோலா கல்லூரி மாணவர்களது போராட்டம் தமிழக காவல்துறையால் அடக்கப்பட்ட நிலையில் திருச்சியில் காலை தூயவளனார் கல்லூரி மாணவர்களால் உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பித்தர்கள் . பதினொரு மாணவர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்களிற்கு ஆதரவாக நூறிற்கு மேற்பட்ட மாணவர்கள் அடையாள உணணாவிரதத்தில் பங்கேற்றிருந்தார்கள். மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கேள்வியுற்ற இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாநிலத் தலைவர் த.பாண்டியன் அவர்கள் நேரில் வந்து தமது ஆதரவை தெரிவித்ததுடன் மாணவர்களது கோரிக்கைகள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துச் சென்றார். இந்நிலையில் இன்று இரவு உண்ணாவிரத்தில் இருக்கும் மாணவர்களிற்கு உணர்வூட்டுவதற்காக சனல்-4 தயாரித்…
-
- 0 replies
- 718 views
-
-
திமுக அங்கம் வகிக்கும் டெசோ அழைப்பு விடுத்துள்ள பொது வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தப் பாதிப்பு ஏற்படாத வகையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்துக்கு மத்திய-மாநில அரசுகள் ஆதரவளிக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இந்தப் போராட்டம் குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா திங்கள்…
-
- 5 replies
- 962 views
-
-
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற நிலையில் இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை கவனத்தில் எடுக்காது இலங்கை அரசு செயற்படுவது கண்டனத்திற்குரியது. தமிழக, காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க இலங்கை கடல் எல்லையில் ஹெலிக்கெப்டர் ரோந்து பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். காரைக்காலில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ''கடந்த சில தினங்களாக காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு பலமுறை இலங்கை அரசுடன் பேசி உள்ளது. ஆனாலும் இலங்கை அரசு அதற்கு செவி ச…
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்? இந்த கேள்வி எம்மில் எல்லோருக்கும் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஒரு அரசியல் வெற்றியாக, குறிப்பாக டெல்லியின் இலங்கை அணுகுமுறையில் நிலையான மாற்றத்தை கொண்டுவர உதவவேண்டும் என்பது, மாற்றவேண்டும். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். நன்றிகள்!
-
- 49 replies
- 6.9k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் உண்ணா விரதப் போலாட்டத்தை கைவிடவில்லை, கைவிடுவதற்காக நிர்பந்திக்கப்பட்னர் என்று தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினர் சுகிர் லஷ்மன் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் தங்கள் போராட்டம் எப்படி நிறுத்தப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்க இன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். சுகிர் லஷ்மன் மேலும் குறிப்பிடுகையில்: ஒரு சில தீயசக்திகளும் பங்கரவாதச் சக்திகளும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி மாணவர்களின் போராட்டத்திற்கு முட்டுக்கட்டையை போட்டுள்ளனர். இதைச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர் இய…
-
- 59 replies
- 4.9k views
-
-
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை கண்டித்தும், போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக 10 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 100க் கணக்கான மோணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ] இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்தும், இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறு…
-
- 1 reply
- 775 views
-
-
சற்று முன் கடும் பாதுகாப்பையும் மீறி லயோலா மாணவர்களுக்கு ஆதரவாக தமிழீழ மாணவர்கள் தமிழர் தாயகமெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதன் முழு விபரம் : எமக்காய் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தும் தாய்த்தமிழகத்து மாணவத்தோழர்களுக்கு...இன்று ஈழம் இன அழிப்பின் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கிறது.ஜந்து நபர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் ஈழம் முற்றுமுழுதாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது... நேர்த்தியாக முறைப்படுத்தப்பட்ட இனஅழிப்பு (structural genocide)வல்லரசுகளின் வழிகாட்டலில் முழு வீச்சில் நடைபெறுகிறது. எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம்.. திருமணத்துக்கு கூட இராணுவத்துக்கு முதல்மரியாதை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. எமக்கு இங்கு சாப்பிட …
-
- 0 replies
- 621 views
-
-
பங்குனி 11, 2013 தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழ பொதுவாக்கெடுப்பு கோரியும் கைதுசெய்யப்பட்ட லயோலாக் கல்லுாரி மாணவர்களை விடுவிக்கக்கோரியும் பெரும் மாணவர் போராட்டம் வெடித்துள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்கள் , தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி – திருச்சி புனித வளனார் கல்லூரி மாணவர்கள் 11 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை படுகொலைக்கு ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும் தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று உண்ணாநிலை இருந்த கல்லூரி மாணவர்களை தமிழக காவல் துறை வலுக்கட் டாயமாக கைது செய்துள்ளதை கண்டித்தும். இலங்கைக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியிருக்கும் சுப்பிரமணியசாமியை கண்டித்தும் மன்னா ர்குடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ச…
-
- 36 replies
- 3.6k views
-
-
உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் உட்பட உணர்வாளர்கள் நள்ளிரவில் கைது.[படங்கள்] இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்ந்தது . உண்ணாவிரதத்தை ஆதரித்து, தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதனிடையே, மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் பிரதிநிதிகள் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வந்த நிலையில் இன்று 11.03.2013 அதிகாலை 1.45 மணியளவில் உண்ணாவிரத பந்தல் அருகில் …
-
- 47 replies
- 3.5k views
-
-
சீமான் -2013-03-10- நேர்முகம் -கேள்விக்கு என்ன பதில் -தந்தி தொலைக்காட்சி http://www.youtube.com/watch?v=-amuRyizsVQ&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=hXrRLEo5XOM
-
- 2 replies
- 948 views
-
-
கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு: 4 ஆயிரம் போலீசார் குவிப்பு . கூடங்குளம் அணு உலை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முதல், ஜனவரி 22-ம் தேதி வரை அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கால அவகாசம் முடிந்த பின்பு, அந்த தடை உத்தரவு நீட்டிக்கப்படவில்லை. இந்நிலையில், உதயகுமார் தலைமையிலான கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள், அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதையடுத்து, மீண்டும் இந்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 707 views
-
-
டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களிடையே மோதல். டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களிடையே நடைபெற்ற மோதலில் பலர் காயமடைந்தனர். டெல்லி லஷ்மி நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும்,பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கறுப்புக்கொடி போராட்டம் ஒன்றின் போது திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர்.அதனையடுத்து மோதல் சம்பவத்தால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த திடீர் மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13266:delhi-fight&catid=37:india&It…
-
- 0 replies
- 717 views
-
-
-
- 2 replies
- 897 views
-
-
ராஜபட்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி, கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் வேதாரண்யத்தில் நடைபெற்றது. இன்று காலை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகளில் சென்ற பேரணி, பின்னர் மீண்டும் பேருந்து நிலையத்துக்கே வந்தது. அங்கு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். http://dinamani.com/latest_news/article1495821.ece
-
- 0 replies
- 658 views
-
-
விடுதலைப்புலிகளும், தலிபான்களும் ஒன்று என்பது போல பேசிய டைரக்டர் அமீரை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் தணிக்கை துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு படத்திற்கு சான்று அளிப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்ட டைரக்டர் அமீர், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை, தலிபான்கள் தான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் இனத்திற்கு எப்படி விடுதலை புலிகள் போராடுகின்றனரோ அதேப்போலத்தான் தலிபான்களும் தங்கள் நாட்டுக்காக போராடுகின்றனர் என்று கூறியிருந்தார். மேலும் விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் பிரச்னை எழுப்புவது போல பேசியிருந்தார். இந்நிலையில், இந்து மக…
-
- 3 replies
- 716 views
-
-
தமிழக மீனவர்கள் கடற்படையினர் தாக்குதல்: மீனவருக்கு எலும்பு முறிவு By General 2013-03-10 11:19:21 காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மீனவர்கள் தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(53). அவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(23), கருப்பையா(48), கண்ணப்பன்(63), பொன்னுசாமி(49), வைரக்கண்ணு(43) ஆகிய 6 பேர் கடந்த 5-ஆம் திகதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வெள்ளிக்கிழமை காலை அவர்கள் நாகை மாவட்டம், கோடியக்கரைக்குக் கிழக்கே…
-
- 0 replies
- 514 views
-
-
டெல்லியில் நடந்த டெசோ மாநாடு தோல்வி என்றும் அதனால் பந்த் நடைபெறாது என்றும் செய்திகளை ஊடகங்கள் பரப்புகிறது , ஆனால் எக்காரணம் கொண்டும் பந்த் நடைபெறும் என்று அறிவாலய அறிக்கை செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன . அவர்களின் அறிக்கையின் சாராம்சம் இதோ : 7-3-2013 அன்று புதுதில்லியில் நடைபெற்ற 'டெசோ’ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் திட்டமிட்டு எழுதி வருகின்றன. நாம் முன்வைத்த எந்தக் கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன. இவர்கள் அனைவரும் சென்…
-
- 0 replies
- 626 views
-
-
மநாதபுரம் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் இலங்கையில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொலை குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா.சபையில் ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் 2 நாட்களாக வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 08.03.2013 வெள்ளிக்கிழமை காலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் சங்க உதவி தலைவர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வங்க முன்னாள் தலைவர்கள் குணசேகரன், தமிழரசு, வக்கீல்கள் கருணாகரன், சேக் இபுராகீம், உது மான், ஹாலித், முருகேசன், முருகபூபதி, அர்சத…
-
- 1 reply
- 404 views
-
-
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை,இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது. கடற்படையினரால் எந்த ஒரு தரப்புக்கு எதிராகவும் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்படவில்லை என்று உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் கோடிக்கரை பகுதியில் வைத்து கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரமும் இவ்வாறு அத்துமீறி நுழைந்த 16 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tam…
-
- 0 replies
- 687 views
-