தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
தலைமைச் செயலகத்தில் ரெய்டு... அப்போது ஜெயா பிளஸ்ஸில் நடந்தது என்ன? தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித்துறையின் சோதனை நடக்கிறது. அனேகமாய் இப்படி நடப்பது முதல் தடவையாய் இருக்கும் என்கிற அளவிற்கு நாடு முழுவதும் அதிர்வலைகள் கிளம்பியிருக்கின்றன. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரப் பூர்வ நியூஸ் சேனலான ஜெயா பிளஸ் மட்டும் செவ்வாய் கிரகத்திலிருந்து இயங்கும் போல. 'மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண, எங்க எது நடந்தா எனக்கென்ன' ரேஞ்சுக்கு செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு சில: * அமராவதி அணைப்பகுதியில் 8 மி.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளதால் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. (ஆஹான்!) * மாண்புமிகு…
-
- 1 reply
- 813 views
-
-
ஜெ., குடியிருந்த வீட்டில் கும்மாளமிடும் சசி சொந்தங்கள் * அமைச்சர் பாண்டியராஜன் ஆவேசம் ''சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், அவரை முன்னி றுத்தி, ஓட்டு கேட்பது தற்கொலைக்கு சமமானது,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி: * முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம், திடீரென தோன்றியது ஏன்? ** கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், என்னை தொடர்பு கொண்டனர். முதல்வர் பன்னீர்ச…
-
- 0 replies
- 1k views
-
-
சிங்கள இராணுவத்தினருக்கு குன்னூர் வெலிங்டனில் பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் துரோகம்! ஜூன் 25 செவ்வாய்கிழமை: குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக்…
-
- 0 replies
- 296 views
-
-
கூவத்தூரில் 9 நாட்கள்! - ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்குமூலம் #Tnpolitics #VikatanExclusive சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்குமிடையே ஏற்பட்ட பதவி மோதலில், எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள ’கோல்டன் பே’ நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில், மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் மட்டும் தாங்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மாறுவேடத்தில் வந்ததாகவும் கூறி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் கூட்டணியில் சேர்ந்துகொண்டார். இதற்கு அடுத்து, கூவத்தூரைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும், சசிகலா தரப்பு தங்களை ஆட்சி அமைக்க உரிமை கோரியும் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விட…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் – இன்றுடன் பிரசாரம் நிறைவு! தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், மேலும் 2 மணி நேர பிரசாரத்துக்கு அனுமதியளித்துள்ள தேர்தல் ஆணையம், இரவு 7 மணி வரையில் பிரசாரத்தில் ஈடுபடலாமென அறிவித்துள்ளது. இந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் திகதி தேர்தல் நடைப…
-
- 8 replies
- 865 views
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக தமிழக சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் இந்தமுறை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியின் வியூகம் என்ன? சீமானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது. வாக்குகளாகக் கணக்கிட்டால் 30,41,974 பேர் நாம் தமிழர் கட்சியை ஆதரித்துள்ளனர். இந்த வாக்கு சதவிகிதம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?" பதில…
-
- 6 replies
- 1.3k views
-
-
தலைவர் பிரபாகரன், மனைவி சேலத்தில் பதுங்கி இருப்பதாக சி.பி.ஐ.க்கு எஸ்.எம்.எஸ்.: துறையூர் என்ஜினீயர் கைது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் (வயது 32). என்ஜினீயர். இவருக்கும், சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில் துரைராஜ், தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து தனியே வசித்து வந்தார். இங்கு வந்து வேலை தேடி வந்த துரைராஜ், கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு …
-
- 4 replies
- 763 views
-
-
டைம்ஸ் நவ் தொலைகாட்சிக்கு மணிரத்னம் அளித்துள்ள முழு பேட்டியின், மூன்று நிமிட வீடியோ “முக.ஸ்டாலின் குறித்து மணிரத்னம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் முதல் அரசியல் பேட்டி என்று பெயரிட்டு பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், மைல் கல்களில் இந்தி எழுதப்பட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த கேள்விக்கு “அப்படி நடைபெறும்தான். சிறு குழுக்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்துவது நடைபெறக்கூடும்தான். ஆனால், நாம் அனைவரும் வலிமையுடன் அதனை எதிர்க்க வேண்டும். இந்த சிறுகுழுக்களுக்கு பயந்துகொண்டு, நம்முடைய ஓட்டுக்குள் நாம் சுருங்கிவிடக்கூடாது. நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களது கருத்துக்கள் நியாயமானவையாக இருக்கிறது என்றால், உங்களது உரிமை…
-
- 0 replies
- 288 views
-
-
இரட்டை இலையின் மூச்சு மூவர் கையில்! ‘சின்ன அம்மன்’ எனப் பாராட்டிப் போற்றப்பட்ட சசிகலா, பரப்பன அக்ரஹாராவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். `ஆர்.கே.நகரில் வென்று, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும்' என்ற கனவில் இருந்த ‘திடீர் தலைவர்’ தினகரன், அனைத்தும் சிதைந்து மனச்சிறையில் மாட்டிக்கொண்டுவிட்டார். யாரோ ஒரு ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கு 28 ஆண்டுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய நடராசனால், சொந்த மனைவிக்கு 28 நாள்கள்கூட உதவ முடியாத நிலையில் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது. `வளர்ப்பு மகன்' என ஆராதிக்கப்பட்டு, ‘சின்ன எம்.ஜி.ஆர்’ எனத் தன்னைத்தானே உருவகப்படுத்திக் கொண்டு, கோயில் கோயிலாகச் சென்று, யாகம் யாகமாக நடத்திவந்த வி.என்.சுதாகரன் சிறையில் சிக்கிக் கொண்டார். …
-
- 0 replies
- 992 views
-
-
தமிழகத்தில்... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலுக்கு வந்தது! தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜுலை மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229315
-
- 0 replies
- 486 views
-
-
உலகப்புகழ் ’மஹாராஜா’ சொகுசு ரயில் தமிழகம் வருகிறது: அதிரவைக்கும் டிக்கெட் விலை இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் உலகப்புகழ் பெற்ற ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயில் வரும் ஜூலை மாதம் தமிழகம் வரவுள்ளது. வடஇந்தியாவில் உள்நாட்டுப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வரும் அதிநவீன சொகுசு ரயில் ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’. மும்பையிலிருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா என வடமாநிலங்களில் இயக்கப்பட்டு வந்த இந்த சொகுசு ரயில், முதன்முறையாக தென் இந்தியா வரவுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி மும்பையிலிருந்து புறப்படும் மஹாராஜா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து காரைக்குடி, சென்னை, மைசூர், கோவா வழியாக மீண்டும் மும்பை திரும்பிவிடும். தங்கத்…
-
- 0 replies
- 362 views
-
-
சென்னை: காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி நடிகர் கருணாஸ் வீட்டு முன் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். நகைச்சுவை நடிகர் கருணாஸ் கோவையை அடுத்த பள்ளப்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியதாக பெருந்தலைவர் மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள கருணாஸ் வீட்டின் முன் திரண்டனர். கருணாசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார…
-
- 1 reply
- 592 views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை, வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பேரறிவாளன் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தமிழக அர…
-
- 0 replies
- 356 views
-
-
நிரபராதி தமிழர்களை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இராஜிவ் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரியான தியாகராஜன். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை நான் சரியாக பதியவில்லை என்று தான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்கிறார். இவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான K.T.தாமஸ் இந்த தீர்ப்பை தவறு என உணர்கிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கை தடா சட்டத்தின் படி விசாரித்த போலிஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜெபமணி மோகன்ராஜ் தவறு செய்தவர்கள் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆனால் அநியாயமாக இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இவ் மூவருக்கும் தூக…
-
- 0 replies
- 392 views
-
-
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை, வியாழக்கிழமை திடீரென சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கருணாநிதியிடம் ஆசாத் விவாதித்ததாகத் தெரிகிறது. சென்னை, சிஐடி காலனி இல்லத்தில் இரவு 8.25 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் சார்பில் தங்கபாலுவும், திமுக சார்பில் துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: வேலூர் சி.எம்.சி கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்தேன். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான க…
-
- 0 replies
- 334 views
-
-
பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இணைய தொடக்கம் முதல் மிகவும் தயக்கம் காட்டி வந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட்டது. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தந்தை ராமதாஸுடன் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை என்று பாமகவின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்துவிட்ட நிலையில், பா.ம.க., தே.மு.தி.க.வை சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்த பாமகவை எப்படியும் பாஜக அணியில் இணைத்துவிடுவது என்பதில் மும்முரம் காட்டினார் அன்புமணி ராமதாஸ். திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு அணியில் இணைவதா? என்று பா…
-
- 0 replies
- 992 views
-
-
கருப்பு, சிவப்பு, காவி: அரசியல் குழப்பத்தின் மகா உருவமா கமல்ஹாசன்? 'நடிகர் கமல்ஹாசன் குழப்பத்தில் இருக்கிறார்!' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். அதன் ஆற்றலோ, தற்போதைய அரசியலுக்கான அவசியமோ என்னவோ, 'அரசியல் குழப்பத்தின் மகா உருவமே கமல்தான்!' என்கிற ரீதியிலான கருத்துகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதை வழிமொழிவது போல் மக்களிடமும் 'ஆரம்பத்தில் நல்லாதான் பேசினாரு. உரிமைக்கும் குரல் கொடுத்தாரு. அட இவரல்லவா நம் தேவதூதர். தமிழ்நாட்டை காக்க வந்த ரட்சகர் என்று கூடநம்பினோம். ஆனா …
-
- 0 replies
- 390 views
-
-
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு' ராஜீவ் படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு தரும் என தமிழ் திரையுலகத்தின் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் தமிழ் திரையுலக அமைப்புகளின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிராஜா பேசியது: தமிழ்ச் சமூகத்துக்கு மானபங்கம் ஏற்படும் போதெல்லாம் அதிலிருந்து விடு…
-
- 1 reply
- 661 views
-
-
அகதிகள் முகாமில் அனுமதிக்கக்கோரி உடம்பை கீறிக் கொண்ட இலங்கை வாலிபரால் பரபரப்பு! மண்டபம் அகதிகள் முகாமில் அனுமதிக்க கோரி உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொண்டு தர்ணா செய்த இலங்கை வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கொழும்புவில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ்கோடி பகுதிக்கு கள்ளத்தனமாக வந்தவர் அஜாய் (24). போலீஸாரால் பாஸ்போர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிவுக்கு பின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மண்டபத்தில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அஜாய் திடீரென முகாமில் இருந்து மாயமானார்…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கைக்கு... சீன கப்பல் : பாதுகாப்பை தீவிரப்படுத்தியது தமிழகம். சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கரையோரத்தில் உள்ள முக்கிய இடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொலிஸார் முடிவு செய்துள்ளனர். அதன்படி பல பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு முக்கிய நிறுவனங்களிலும் போதுமான ஆட்களை அனுப்பவும், கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளில் சோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் போன்றவற்றை கண்காணிக்கும் நவீன கருவிகளை இந்தக் கப்பல் கொண்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மோசமான பொர…
-
- 1 reply
- 308 views
-
-
விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு #Alanganallur இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டி விளையாட்டு தொடங்கியது. 10.15 AM: வெற்றிபெற்றது அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற…
-
- 3 replies
- 963 views
-
-
மன்னிப்பு கோரிய நித்தியானந்தா மதுரை ஆதீனமாக அறிவித்ததை திரும்ப பெறுவதாக கூறி உயர்நீதிமன்றின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நித்தியானந்தா, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். மதுரை ஆதீனத்தின், 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னைத்தானே அறிவித்துக்கொண்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற ம், மதுரை ஆதீனத்துக்குள் செல்ல நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கிற்கு நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா தான் மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி எனவும் ஒருமுறை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் …
-
- 0 replies
- 656 views
-
-
"தமிழ்நாட்டில் போதை பொருள் பரவ மத்திய அரசே காரணம்" - அமைச்சர் பொன்முடி 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, க. பொன்முடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பரவலுக்கு மத்திய அரசே காரணம். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மூலமாகவே போதைப் பொருட்கள் உள்ளே வருகின்றன. துறைமுகங்களைத் தனியார் மயமாக்கியதே இதற்குக் காரணம் என தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.கவின் தலைமையகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, போதைப் பொருள் பரவலைத் தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
கமல் vs ரஜினி, முதல்வர் போட்டியில் கமலுக்கு என்ன ரேங்க்..?! சர்வே ரிசல்ட் நடிகர் கமல்ஹாசன் "மக்கள் நீதி மய்யம்" என்ற கட்சியை மதுரை ஒத்தக்கடையில் தொடங்கினார். அங்கு பேசிய அவர், "மாணவர்களுக்கு நல்ல, தரமான கல்வி கிடைக்க வேண்டும். சாதி, மதம் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதெல்லாம் தனி ஒருவனாக என்னால் செய்ய முடியாது. நீங்களும் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவீர்களா" என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டதுடன், கட்சியின் சில கொள்கைகளையும் விளக்கினார். அவர் கட்சித் தொடங்கிருப்பது தொடர்பாக 'விகடன்' இணையதளத்தில் சர்வே எடுக்கப்பட்டது. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே... …
-
- 0 replies
- 743 views
-
-
பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு செல்கிறார் சசிகலா - தஞ்சையில் இருந்து இன்று புறப்பட்டார் கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்த சசிகலா, பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே இன்று தஞ்சாவூரில் இருந்து சிறைக்கு புறப்பட்டுச் சென்றார். #Sasikala #Parole #BangaloreJail தஞ்சாவூர்: சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நக…
-
- 0 replies
- 427 views
-