தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10293 topics in this forum
-
படக்குறிப்பு, மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது, "கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்…
-
- 0 replies
- 485 views
- 1 follower
-
-
பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை காவல்துறை தலைமைக் காவலர் ஒருவர், தனது மகளுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அந்தக் குழந்தைக்கு உறுப்புக் குறைபாடு ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார். இதற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 13) அன்று தலைமைச் செயலக வாசலில் மகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான், அவரது புகாரை மருத்துவத்துறை மற்றும் காவல்துறை ஏற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கா…
-
- 0 replies
- 684 views
- 1 follower
-
-
15 ஏப்ரல் 2023, 05:49 GMT காணொளிக் குறிப்பு, செரிப்ரல் பால்சி குறைபாட்டை வென்ற சாதனை இளைஞர் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், பெருமூளை வாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய, பல ஊனமுற்ற விளையாட்டு வீரர். குறைந்த அறிவுத்திறன் மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு கடுமையான வரம்புகள் உள்ளதால், அவர் இந்த சவால்களை சமாளித்து திறமையான விளையாட்டு வீரராக மாறினார். அறிவுசார் மற்றும் உடல் ரீதியான சவால்கள் காரணமாக, குறைந்த அளவிலான பயிற்சி வாய்ப்பை சர்வதேச விளையாட்டு விருது பெறும் திறனுக்கு மாற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடித்ததன் மூலம் இந்த அசாதாரண சாதனை நிரூபிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடை! தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமுலாக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக, குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரம் விசைப்படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, இந்திய மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. …
-
- 0 replies
- 284 views
-
-
இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பட மூலாதாரம்,PERUMAL MURUGAN படக்குறிப்பு, பெருமாள் முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 14 மார்ச் 2023, 13:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. …
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,M.K.STALIN கட்டுரை தகவல் எழுதியவர்,பரணி தரன் பதவி,பிபிசி தமிழ் 14 ஏப்ரல் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மாநில ஆளுநர்கள் குறித்த கால வரம்புக்குள் ஒப்புதல் வழங்கும் வகையில் அவர்களுக்கு குடியரசு தலைவர் அறிவுரை வழங்கவும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை நிறைவேற்றிய தனித்தீர்மானம் போல, பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக கேரளா…
-
- 0 replies
- 605 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MAY17IYAKKAM கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் வெளியான பிறகு, அதில் வந்த சம்பவங்கள், கதையில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டது. அப்போது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட பெயர்களில் ஒன்று, புலவர் கலியபெருமாள். விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரம் இந்த நபரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மற்றொரு பெயர், தமிழரசன். படத்தில் வரும் ரயில் விபத்து உட்பட சில காட்சிகளில் இவர் சார்ந்த குறிப்புகள் படத்தில் ஆங்காங…
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 08 APR, 2023 | 12:20 PM இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சட்ட விரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் என்பவற்றில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சென்னையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் (NIA) கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சென்னையில் இந்த சந்தேக நபருக்கு சொந்தமான பல இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) சோதனை நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சோதனையின்போது பெருந்தொகை பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள்…
-
- 3 replies
- 810 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநர் (கோப்புப்படம்) 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பாகவே அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் அதற்காக கடன் வாங்கி, அந்தக் கடனைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும்…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
பிரதமர் மோடிஎட்டாம் திகதி சென்னை விஜயம் – ட்ரோன்கள் வான்வழி விமானங்கள் பறக்க தடை Published By: Rajeeban 06 Apr, 2023 | 11:19 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வரும் 8 ஆம் திகதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடிதமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் . இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். அவரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள் பார…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரதமர் வருகை: காங்கிரஸ் கருப்பு பலூன்கள் பறிமுதல்! monishaApr 08, 2023 08:10AM பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களை போலீஸ் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டிற்கு இன்று வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் பிரதமர், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட…
-
- 0 replies
- 680 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஏப்ரல் 2023, 14:36 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பான வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்(சிபிஐ) ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதுதொடர்பாக நகர வழக்கறிஞர் டி.நரசிம்ம மூர்த்தி தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 11ஆம் தேதியன்று விசாரிக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு. “208/2004 எண்ணிட்ட இந்த வழக்கில், சொத்துகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றமும் உத்தரவு பி…
-
- 0 replies
- 304 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TNDIPR 5 ஏப்ரல் 2023, 08:38 GMT புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். தீர்மானத்திற்கு பதில் அளித்தபோது, தானும் ஒரு 'டெல்டாகாரன்' என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த எந்தவிதத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய தி…
-
- 0 replies
- 547 views
- 1 follower
-
-
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி – மெரினாவில் காந்தி சிலை இடமாற்றம் !! மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ பணி முடிந்ததும் அதே இடத்தில் மீண்டும் காந்தி சிலை நிறுவப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் காந்தி சிலை அருகே நடைபெறுவதால் சிலை சேதம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதேநேரத்தில், கலங்கரை விளக்கம், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதை கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவுள்ளது. https://athavannews.com/2023/1…
-
- 3 replies
- 697 views
-
-
"இந்த குழந்தையை வளர்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்" - மரபணு குறைபாடுள்ள பெண்ணின் தன்னம்பிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராகேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த குழந்தை சமூகத்தில் தாக்கு பிடிப்பது என்பது கடினமான காரியம், இந்த குழந்தை நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்று என்னை பற்றி சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு 23 வயதாகிறது. நான் எம்.காம் முதலாம் ஆண்டு படிக்கிறேன். 3 வருடங்களாக தொழில்முறையாக பாட்டு கற்றுக் கொள்கிறேன். வருங்காலத்தில் ஒரு நாள் பாடகியாக இந்த சமூகத்தின் முன் வந்து நிற்பேன்," என உள்ளத்தில் இருந்து உறுதியோடு கூறுகிறார் மதுரையை சேர்ந்த பார்க…
-
- 2 replies
- 645 views
- 1 follower
-
-
கலாஷேத்ரா பாலியல் புகார்; தலைமறைவான ஹரிபத்மன் கைது! சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து முன்னாள் மாணவிகள் சிலரும் கலாஷேத்ராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கலாஷேத்ரா…
-
- 0 replies
- 761 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2020-ம் தேதி மார்ச் 14 இந்தோனேஷியாவில் பெருநிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்த 54 வயதான அவர், அதே நிறுவனம் தென் அமெரிக்காவில் தொடங்கவிருந்த புதிய ஆந்த்ராசைட் புரொஜெக்டிற்காக (Anthracite Project) பெரு நாட்டிற்கு செல்லும் வழியில் சொந்த ஊரான சென்னைக்கு வந்திருந்தார். புதிய புராஜெக்டில் சேரும் முன்பாக, தாய், தந்தையரை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது அவரது எண்ணம். அதற்காக, சென்னை வந்திறங்கிய அவர் அதன் பிறகு, தான் இதுகாறும் பணிபுரிந்து வந்த இந்தோனேஷியாவுக்கோ அல்லது புதிய புராஜெக்டிற்காக பெருவுக்கோ செல்லவே இல்…
-
- 0 replies
- 774 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும். சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள…
-
- 1 reply
- 406 views
- 1 follower
-
-
சிறார் இல்லத்தில் சிறுவன் இறப்புக்கு அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - அதிர்ச்சி தகவல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விவரங்கள் உங்களை மனரீதியாக சிரமப்படுத்தலாம்.) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பா…
-
- 2 replies
- 954 views
- 1 follower
-
-
"குழந்தைக்கான நல்லுணவு தேடல் என் வாழ்வை மாற்றியது" இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண் பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN படக்குறிப்பு, இயற்கை விவசாயி அனுராதா கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் செய்தியாளர் 1 ஏப்ரல் 2023, 10:11 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் குழந்தைக்கான நல்லுணவுத் தேடலே என்னை இயற்கை விவசாயி ஆக்கியது என்கிறார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான அனுராதா. அதற்காக கல்யாண நகைகளை விற்று நிலம் வாங்கிய போது பரிகாசம் செய்…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்! Apr 01, 2023 13:16PM IST ஷேர் செய்ய : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. இதில் நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாகத் திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்கள் உள்ளன. பெரிய மாவட்டங்களின் தலைநகருக்கு செல்ல பயண நேரம் அதிகமாவதால் புதிய மாவட்டங்களை உருவாக்க ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 01) சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின் போது ”திருவண்ணாமலை மாவட்ட…
-
- 0 replies
- 460 views
-
-
(நா.தனுஜா) கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்…
-
- 3 replies
- 740 views
-
-
தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது... மத்திய சட்ட அமைச்சர் Published By: RAJEEBAN 29 MAR, 2023 | 04:33 PM சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரி விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தங்களது மாநில உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நா…
-
- 0 replies
- 659 views
- 1 follower
-
-
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவ…
-
- 2 replies
- 833 views
-
-
கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன் கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு வழிபாட்டுத் தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினை…
-
- 0 replies
- 423 views
-