தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி முருகன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 18 மே 2023 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குற…
-
- 1 reply
- 416 views
- 1 follower
-
-
சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,…
-
- 18 replies
- 1.8k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,INC படக்குறிப்பு, ராகுல் காந்தி 13 மே 2023, 01:54 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெற…
-
- 4 replies
- 495 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 MAY, 2023 | 01:08 PM புதுடெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தெரிவிக்க…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,மோகன் பதவி,பிபிசி தமிழுக்காக 15 மே 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பழனி முருகன் கோவிலில் புலிப்பாணி சித்தர்கள் போகர் ஜெயந்தி நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. கோவில் நடைமுறையில் இல்லாத விழாவை நடத்த முற்படுகின்றனர் என கோவில் நிர்வாகம் கூறும் நிலையில் தங்களின் நடைமுறையில் கோவில் நிர்வாகம் தலையிடுவதாக புலிப்பாணி சித்தர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். புலிப்பாணி சித்தர்கள் யார்? திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் முருகனின் அறுப…
-
- 0 replies
- 647 views
- 1 follower
-
-
”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி Published By: Rajeeban 04 May, 2023 | 10:44 AM திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும…
-
- 5 replies
- 883 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேர…
-
- 2 replies
- 581 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TN LABOUR DEPARTMENT படக்குறிப்பு, சிறுவர்கள் தங்கியிருந்த இடத்தின் சமையல் கூடம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் 13 மே 2023 ஏழு வயது கூட நிரம்பாத விக்னேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். குக்கிராமமான ரூபாலி கிராமத்தில் இருந்து விக்னேஷ் இதுவரை ரயில் நிலையத்திற்கு வந்ததும் இல்லை. ரயிலைப் பார்த்ததும் இல்லை. அவனது முதல் ரயில் பயணம் அவனைச் சென்னையில் ஒரு பட்டறையில் கொத்தடிமை வேலைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் பயணமாக இருக்கும் என்று அவனுக்கு தெரியாது. …
-
- 0 replies
- 326 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,TNDIPR 10 மே 2023, 02:32 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போதைய விவாதப் பொருளாக இருப்பது அமைச்சரவை மாற்றம்தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் யார் மாற்றப்படுவார், யாருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும் என பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு விடையளிக்கும் விதமாக தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கி, புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதுவரை 3 முறை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. …
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மாநிலகல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன், முதலமைச்சரின் செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விமர்சனத்தை அவர் வைத்துள்ளார். எனினும் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டை மாநில கல்விக் கொள்கை குழு மறுத்துள்ளது. இதேபோல் பிபிசியிடம் பேசிய உதயசந்திரன் ஐஏஎஸ் இந்த க…
-
- 0 replies
- 721 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் 2004க்குப் பிறகு இந்தத் தொகுதியில் தமிழர்கள் யாரும் வெல்ல முடியவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள கோலார் தங்க வயல் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் தமிழர் சட்டமன்ற உறுப்பினராக முடியுமா என்ற கேள்விக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் விடையளிக்கவிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே, மிகவும் வித்தியாசமான தொகுதி, கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) த…
-
- 1 reply
- 824 views
- 1 follower
-
-
முக்கிய சாராம்சம் 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15,384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 21,792 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55,442 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத…
-
- 16 replies
- 1.8k views
- 1 follower
-
-
மூன்றாம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின்: திமுக ஆட்சியில் செய்தது என்ன? christopherMay 07, 2023 06:00AM தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த திமுக, பத்தாண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல்வராக 2021 மே 7ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், முதல்நாளே 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். முதல் நாளில் 5 கையெழுத்து அதன்படி, ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்கும் திட்டம், ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைக்கப்படும் என்று உத்தரவு. தமிழ்நாட்டில் சாதாரண கட்டண …
-
- 2 replies
- 468 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திமுகவின் அரசியலில் ஒரு மாத இடைவெளியில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டப் போவதாக சூளுரைத்த அந்தக்கட்சி, இப்போது சொந்த மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் பிசியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகம் எழும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. அப்படி இந்த ஒரு மாத இடைவெளியில் என்ன நடந்தது? தேசிய அளவில் செயல்படப் புறப்பட்ட திமுக மீண்டும் சொந்த மாநிலமான தமிழ்நாட்டு அரசியலிலேயே ஒட்டுமொத்த கவ…
-
- 0 replies
- 645 views
- 1 follower
-
-
5 மே 2023 சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தமிழக அரசைப் பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் கோவில் …
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சல்மான் ரவி பதவி,பிபிசி செய்தியாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் மே 10ஆம் தேதி வரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கடும் வெப்பம் இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மே மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும். வெப்ப அலை காரணமாக பல மாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும். இந்த செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ஏப்ரல் முதல் மே மற்றும் ஜூன் வரை, சூரியன் முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை வெப்ப அலை ஏப்ரல் 11 முதல் 20 வரை மட்டுமே இருந்துள்ள…
-
- 0 replies
- 598 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 49 நிமிடங்களுக்கு முன்னர் ”இந்திய அரசமைப்பு சட்டம் சொல்லக்கூடிய சமத்துவ கோட்பாட்டின் அடிப்படையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு பள்ளியில் இருக்கக்கூடிய வசதிகள் அனைத்தும், நாட்டின் ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையிலேயே அத்தகைய சமமான வாய்ப்பு இருக்கிறதா?” தனியார் பள்ளிகளுக்கு இணையாக வரும் புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு …
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,KANNAGI TEMPLE TRUST படக்குறிப்பு, கோயிலின் முகப்பு தோற்றம் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு - கேரளா எல்யைில் உள்ள கண்ணகி கோவில், தமிழக பகுதியில் இருந்தாலும் அதன் பராமரிப்பை இன்றளவும் கேரளாவே மேற்கொண்டு வருகிறது. சேர, சோழ, பாண்டிய வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த கோவின் பின்னணி, அதை ஏன் தமிழர்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தவர்களும் வழிபடுகிறார்கள்? விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். தமிழ்நாடு - கேரளா எல்லையில் குமுளி பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது.…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MUDURAI MEENATCHIYAMMMAN TEMPL படக்குறிப்பு, மதுரை கோயில் தேரோட்டம் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பொதுவாகக் கோயிலுக்கும் சமூகத்திற்குமான உறவைக் காத்து வளர்த்து வருவன. சில திருவிழாக்களுக்கே தொலைவில் உள்ள மக்களையும் ஈர்த்து சமூகத்திற்கும் கோயிலுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் ஆற்றல் அமைந்திருக்கிறது என்கிறார் தொ.பரமசிவன். அப்படி அவர் குறிப்பிடும் கோயில்தான் மதுரை கள்ளழகர் கோயில். மதுரை என்றதும் மீனாட்சியும் கள்ளழகரும் நினைவிற்…
-
- 1 reply
- 815 views
- 1 follower
-
-
‘மிஸ் கூவாகம்’ ஆக சென்னை நிரஞ்சனா தேர்வு; திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மிஸ் கூவாகம் ஆக தேர்வு செய்யப்பட்ட நிரஞ்சனா (நடுவில்). | படங்கள்: சாம்ராஜ் விழுப்புரம்: மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து திருநங்கைகள் வருகைபுரிவார்கள். இதனையொட்டி திருநங்கைகளுக்கான நடன நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள், மிஸ்கூவாகம் நடத்த…
-
- 0 replies
- 644 views
-
-
படக்குறிப்பு, பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர் 22 ஏப்ரல் 2023 அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ 'போலி' என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றவாறு ஒருவர் பேசுகிறார். அந்த ஆடியோவில் பேசிய…
-
- 9 replies
- 1k views
- 2 followers
-
-
ஜி ஸ்கொயர் ஐடி ரெய்டு: சபரீசனுக்கு ஸ்கெட்ச் - மோடி Vs ஸ்டாலின் சண்டையின் நீட்சியா? ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது. ஜி ஸ்கொயர் உரிமையாளர் பாலா, அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன் மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பர்கள். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது சபரீசன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது கார்த்திக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சபரீசனை நெருக்…
-
- 3 replies
- 714 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி பதவி,பிபிசி தமிழ் 16 ஏப்ரல் 2023, 09:47 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சில நாட்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன. மீனவர்களை கடல்பகுதியில் இருந்து நீக்கும் முயற்சி என்று இந்த நடவடிக்கைக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது. இத…
-
- 2 replies
- 773 views
- 1 follower
-
-
தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மூலம் மது விற்பனையை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் மால்கள் உள்பட 500 இற்கும் மேற்பட்ட இடங்களில் அந்த இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூ…
-
- 1 reply
- 615 views
-
-
ஆளுங்கட்சியின் ஊழல் - அதை எந்த கட்சி செய்தாலும் - ஒரு தனி பிரச்சினை. ஊழலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் - அது முதலீட்டிய சந்தையில் முறையற்று பெருகும் பணம் எனும் கொள்ளையை ஆட்சியாளர்கள் அனுமதிப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு நன்றித்தொகை. நாம் தீவிர முதலீட்டிய விசுவாசிகள் என்பதால், இந்த பொருளாதார அமைப்பினால் பலனடைகிறவர்கள் என்று நம்புகிறவர்கள் எனபதால், இதில் முறையற்று கையூட்டை வழங்குவோர் அதே பணத்தை முறையற்று தானே சம்பாதிக்கிறார்கள் என்பதை ‘கவனிக்க’ தவறுகிறோம். ஒரு துறைமுக கட்டுமானம் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றால் அது ஏன்? நெடுஞ்சாலை பணிகள் ஒருவருக்கே கிடைக்கிறது என்றால் அது ஏன்? அதில் அபரிதமான பணம் முறையற்று வருகிறது என்பதாலே. உடனே நாம் ஊழல் இ…
-
- 0 replies
- 501 views
- 1 follower
-