தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியமைக்கு முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ சவால் விடுத்துள்ளார். கோயம்புத்தூரில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா என்னை நாவடக்கமாக பேச வேண்டும். இல்லையெனில் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பேச்சுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடவும், எச்.ராஜாவின் உருவப்பொம்மையை எரிக்கவும் ம.தி.மு.க. தொண்டர்கள் தயாரானார்கள். அவர்களிடம் தகுதியில்லாத ஒரு நபருக்காக போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டேன். ராஜாவின் மிரட்டலுக்கு தமிழகத்தில் உள்ள பல்…
-
- 0 replies
- 520 views
-
-
8 வழிச்சாலை அமைந்ததும் பிடிக்காட்டி பூட்டு போட்டு பூட்டிரலாம்- "உதயமாகும்" இன்னொரு செல்லூரார்! 8 வழிச்சாலை அமைந்ததும் மக்களுக்கு பிடிக்காவிட்டால் பூட்டு போட்டு விடலாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் போடப்படவுள்ளது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள் என மக்களின் விருப்பதிற்கு மாறாக அரசாங்கம் நிலங்களை கையகப்படுத்தி வருகின்றன.8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் கைது செய்யப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி…
-
- 1 reply
- 504 views
-
-
8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்! Apr 01, 2023 13:16PM IST ஷேர் செய்ய : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. இதில் நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாகத் திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்கள் உள்ளன. பெரிய மாவட்டங்களின் தலைநகருக்கு செல்ல பயண நேரம் அதிகமாவதால் புதிய மாவட்டங்களை உருவாக்க ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 01) சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின் போது ”திருவண்ணாமலை மாவட்ட…
-
- 0 replies
- 462 views
-
-
கடலுக்குச் சென்று, காணாமல் போன 19 மீனவர்கள் மீட்பு – 210 மீனவர்கள் கரை சேரவில்லை… October 10, 2018 தூத்துக்குடியில் இருந்து 2 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த 19 மீனவர் களையும் கடலோர காவல் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். அதேவேளை கன்னியா குமரியில் 18 விசைப்படகுகளில் சென்ற 210 மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் கடந்த முதலாம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து 2 படகுகள் தவிர ஏனைய படகுகள் கரை திரும்பியிருந்தன. இவ்விரு படகுகளையும் மீட்க கடந்த 4 நாட்களாக கடலோர காவல் படையினர், டோனியர் விமானம் மூலம் தேடுதல் பணியில…
-
- 0 replies
- 313 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாட்ஸப்பில் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதில், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை 'லைக்' செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. அதை நம்பி நீங்கள் அந்தப் பக்கத்தை லைக் செய்தால், பல்லாயிரக் கணக்கில் பணத்தை இழக்கிறீர்கள். 'என்ன கொடுமை சார் இது?' என்கிறீர்களா? இது தற்போது பரவிவரும் ஒரு புதுவகையான மோசடி என்கிறது தமிழகக் காவல்துறை. இது எப்படி நடக்கிறது? இதிலிருந்து எப்படிப்…
-
- 0 replies
- 617 views
- 1 follower
-
-
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் By செய்திப்பிரிவுModified: 28 Aug, 23 02:31 pm சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "2011-ல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக ந…
-
- 203 replies
- 13.6k views
- 3 followers
-
-
மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியானது. முன்னதாக திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலிலும் முஸ்லிம்கள் யாரும் இல்லை. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், முஸ்லிம்கள் யாருக்கும் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை. மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்கள் 1. திரு…
-
- 0 replies
- 234 views
-
-
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சாரதா வி பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு உடலில் சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பனவற்றைக் கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று சென்னை மாநகராட்சி நம்புகிறது. சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தொடங்கியுள்ளது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் வகையி…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
‘மேன் வர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் காயம்?- சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனல் வழங்கும் மேன் வர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்ததாக வந்த தகவலை தொடர்ந்து அவர் சென்னை திரும்பியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகப் புகழ்ப்பெற்ற டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்த அந்நிகழ்ச்ச்சியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பியர் கிரில்ஸுடன் ஏற்கெனவே பங்குபற்றியுள்ளனர். இந்நிலையில்…
-
- 4 replies
- 1.2k views
-
-
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயில் திருவள்ளூர் அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இதனால் இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து, திருவனந்தபுரதிற்கு திருவனந்தபுரம் மெயில் (12623) சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பட்டாபிராம் ரயில் நிலையம் சென்று கொண்டு இருந்தது. அப்போது, மின்சார ரயில் வந்துள்ளது. இரு ரயில்களும் ஒரு ரயில் தண்டவாளத்தில் வந்ததால்,இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகளை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ச…
-
- 0 replies
- 652 views
-
-
ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. வழக்கறிஞர் ரத்னம் - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாற…
-
- 0 replies
- 411 views
-
-
கரோனா விழிப்புணர்வுப் பணி: விரைவில் ஈடுபட உள்ள 10,000 சென்னை பள்ளி ஆசிரியர்கள் பிரதிநிதித்துவப் படம் சென்னை கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி 10 ஆயிரம் சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாலும் பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கப்படாததாலும் சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கரோனா காலத்தில் மனநல ஆலோசகராக செயல்பட வைக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தமிழக அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பணியைப் பள்ளி கல்வித் துறை வழங்கவிருக்கிறது. மண்டலத்துக்கு 30 ஆசிரியர்கள் வீதம் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் …
-
- 0 replies
- 410 views
-
-
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ஆம் திகதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில், இது குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த 4 மாவட்டங்களிலும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்க…
-
- 0 replies
- 324 views
-
-
சட்டமன்றத்தில் இருந்து தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ' எதிர்க்கட்சிகளே இல்லாமல் காலி இருக்கையைப் பார்த்து அ.தி.மு.க.வினர் பேசிக் கொள்கிறார்கள்' எனக் கலாய்க்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏ. தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தை, அ.தி.மு.க உறுப்பினர் குணசேகரன் விமர்சனம் செய்ததையடுத்து, சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து, ' ஒருவார காலம் தி.மு.க உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதாக' அறிவித்தார் சபாநாயகர் தனபால். இன்று சட்டசபைக்குள் நுழைந்த ஸ்டாலின், 'எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குள் செல்லவிடாமல் தடுப்பதாக'க் கூறி தர்ண…
-
- 0 replies
- 270 views
-
-
சென்னை : "இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால். கடன் வாங்கினால் தான், நிறைவேற்ற முடியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை, நான் வாங்கி வைத்து விட்டதைப் போல, முதல்வர் ஜெயலலிதா, திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். 2006ம் ஆண்டு மே மாதம் தான், தி.மு.க., ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சி புரிந்த, ஐந்தாண்டு காலத்திற்கு பின், தமிழக அரசின் மொத்தக் கடன் பொறுப்பு, 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக இருந்தது. அதுபோலவே, மின் வாரியத்திலும், 2005 - 2006ம் ஆண்டில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு, கடன் சுமையை வைத்து விட்டுத் தான் ஜெயலலிதா ஆட்சியை விட்டு இ…
-
- 0 replies
- 708 views
-
-
3 தொகுதி இடைத் தேர்தல்களில் சி.பி.ஐ.எம் போட்டி... உடைகிறதா மக்கள் நலக்கூட்டணி? தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டிட முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, மக்கள் நலக்கூட்டணியை சிதறடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர். பின்னணியில் நிகழ்ந்தவை என்ன? மக்கள் நலக்கூட்டணி 2016-சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மக்கள் நலக்கூட்டியக்கம் உருவானது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, அந்த கூட்டியக்கம், மக்கள் நலக்கூட்ட…
-
- 0 replies
- 511 views
-
-
கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் தொடக்கம் - ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டம் சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியக கட்டிடப் பணிகள் இன்று துவங்கியுள்ளன. கீழடியில் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள் குறித்து மத்திய தொல்லியல் துறை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை தொடங்கியது. இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், பாசிகள், பவளம், அரசு முத்திரை, வரிவடிவ பானை ஓடுகள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கல்வி அறிவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இவற்றைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க…
-
- 0 replies
- 395 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில்நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வரும் மார்ச் 23-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. அத்தீர்மானத்துக்கு இந்தியா முழுமையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அத்தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தந்தி அனுப்ப வேண்டும். அதன்…
-
- 0 replies
- 418 views
-
-
3 தொகுதிகளில் முன்னிலை..! அப்போலோவில் அதிமுகவினர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சி தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாடம் நடந்து வருகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர். இரண்டாவது இடத்துக்கு திமுகவும், 3வது இடத்துக்கு பாஜ…
-
- 7 replies
- 1.5k views
-
-
கருணாநிதியை ஜனாதிபதியாக பதவியேற்க சொல்லி கேட்டாங்க...: கனிமொழி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொல்லி கேட்டதாகவும் ஆனால் தமிழ்நாட்டை விட்டு செல்ல விருப்பம் இல்லாத காரணத்தால் அதை ஏற்கவில்லை என்றும் அவரது மகளும் திமுக ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் வார இதழுக்கு கனிமொழி அளித்துள்ள பேட்டி விவரம்: கேள்வி: காங்கிரஸ் கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாது என்பதே, இந்தத் திடீர் விலகலுக்குக் காரணமா?' பதில்: தி.மு.க. என்ற பேரியக்கம் தேர்தலுக்காக மட்டுமே எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சி உட்பட அதிக இழப்புகளை வேண்டி விரும்பி ஏ…
-
- 2 replies
- 613 views
-
-
வெற்றியை ருசியுங்கள்! ஒட்டுமொத்த தேசத்தையும் பேசவைத்துவிட்டார்கள் தமிழக இளைஞர்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டம், ஒருகட்டத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கெடுக்கும் போராட்டமாக உருவெடுத்தது. சென்னை மெரினா கடற்கரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியது இப்போராட்டத்தின் வலிமைக்குச் சான்று. இரவு, பகல் பாராமல் நாள் கணக்கில் அறவழியில் நீண்ட போராட்டம் தமிழக அரசைப் போராட்டக்காரர்களின் பக்கம் திருப்பியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு உடன்படுவதைத் தவிர, மத்திய அரசுக்கு வேறு வழியே இல்லாமல் போனது. இ…
-
- 0 replies
- 417 views
-
-
அ.தி.மு.க. விலிருந்து... இன்று நீக்கப்படுகிறார், பன்னீர் செல்வம்! சென்னை: அதிமுகவிலிருந்து இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு முறைப்படி அதிமுக உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இன்று கார்டனையே அசைத்துப் பார்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவர் இப்படி மாறுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் மிரண்டு போயுள்ளனர்.இந்த நிலையில் நேற்று இரவே ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியை பறித்து விட்டார் சசிகலா. ஆனால் அது எனக்கு ஜெயலலிதா கொடுத்த பதவி. அதைப் பறிக்க யாருக்கும…
-
- 2 replies
- 385 views
-
-
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த்...
-
- 1 reply
- 370 views
-
-
-
- 0 replies
- 566 views
-
-
எதிர்ப்பால் வீடுகளில் முடங்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சேலம்:சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள், சொந்த ஊர் திரும்பிய போதும், மக்களிடம் இருந்து வரும் மிரட்டல்களால், வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கடந்த மூன்று வாரங்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், நேற்று தங்களது தொகுதிகளுக்கு திரும்பினர்.சேலம் மாவட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் இருந்து, நேற்று காலை, ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவே, எம்.எல்.ஏ.,க் கள் வீடு, அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், அம்மாபேட்டை அரசு பள்…
-
- 0 replies
- 518 views
-