Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிணை வழங்கினால் வெளிநாடு செல்லமாட்டேன் – பா.சிதம்பரம் பிணை வழங்கினால் வெளிநாடு செல்லமாட்டேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் விளக்க மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பா.சிதம்பரத்திற்கு பிணை வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பா.சிதம்பரம் விளக்க மனுவொன்றை அளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது குறித்த விளக்கமனுவை பா.சிதம்பரம் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், நான் பொறுப்புமிக்க குடிமகன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். வெளிநாடு சென்று தப்பி விடுவேன் என சி.ப…

  2. ஆப்கானிஸ்தானில் கூட்டுப் படையினரின் தாக்குதலில் திருமண இல்லத்திலிருந்த 40 பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்தில் அரச படைகள் உள்ளிட்ட கூட்டுப்படையினர் பயங்கரவாதிகளை குறிவைத்து மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் திருமண இல்லத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 40 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் நேற்று (திங்கட்கிழமை) செய்தி வௌியிட்டிருந்தன ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மையில் மேலோங்கியுள்ள நிலையில், தற்கொலைத் தாக்குதல்களும், குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. அதேவ…

  3. திகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு. டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தனர். ஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குடும்பத்தார் அவ்வப்போது சந்தித்து பேசிவருகிறார்கள்.இன்று, கார்த்தி சிதம்பரம் திகார் சிறைக்கு சென்றபோது அவருடன் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சிதம்பரத்தை சந்தித்து பேசி நலம் விசாரித்து வருகிறார்கள். கடந்த 5ம் தே…

  4. காஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார…

  5. பாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தித்தில் உள்ள நகரொன்றுக்கு சென்ற பஸ்ஸில் 50 பயணிகள் பயணித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ், சாலையின் அருகில் உள்ள மலையில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பொதுமக்கள் உற்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு கடந்த மாதம் இவ்வாறான பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://…

  6. ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததற்கு நேருதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் பிரசார கூட்டம் ஒன்றில் அமித் ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது- காஷ்மீரில் சில இடங்களை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு நேருதான் காரணம். 1947-ல் அவர் நேரம் காலம் தெரியாமல் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வழி செய்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால், அதற்கு முன்பாக படேல் கையில் எடுத்த அனைத்த…

    • 0 replies
    • 295 views
  7. 6 மாதங்களில் 1300 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாகிஸ்தானில் கொடூரம் பாகிஸ்­தானில் கடந்த ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஜூன் மாதம் வரை 6 மாத காலத்தில் மட்டும் 1300 க்கும் மேற்­பட்ட குழந்­தைகள் மீது பாலியல் வன்­மு­றை வழக்­குகள் பதி­வா­கி­யுள்­ளதாக ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாகிஸ்தான் அரசு மீது காஷ்­மீரைக் குறி­வைத்து நடத்­தப்­படும் அர­சியல் குறித்து அதிக கவனம் செலுத்­தி­வ­ரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் வைக்­கப்­படும் அதே­வே­ளையில் இன்­னொரு பக்கம் மக்­க­ளிடம் வறுமை, வேலை­யின்மை உள்­ளிட்ட ஆட்சி நிர்­வா­கத்தில் மிகப்­பெ­ரிய சரிவைச் சந்­தித்து வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன. மேலும் பாகிஸ்­தானில் குந்­தை­க­ளு…

  8. பாலியல் பலாத்கார வழக்கில் பாஜகவின் முக்கியஸ்த்தர் சின்மயானந்தா கைது… September 20, 2019 பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது. முறைப்பாடு அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல…

  9. கீழடி ஆய்வு முடிவுகளால் இந்திய வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்துதான் இனி பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ''தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில் உள்ள கீழடியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வில் வெளிவந்திருப்பது, தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. தமிழர்களின் மிகத் தொன்மை வாய்ந்த எழுத்தறிவுக்கு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றும், தமிழர் நாகரிகம…

    • 0 replies
    • 296 views
  10. (ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும் தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில் பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள் படை வீரர்கள் சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தே…

    • 0 replies
    • 279 views
  11. பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது. Image caption பினாங்கு ராமசாமி இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார். துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்…

    • 0 replies
    • 294 views
  12. இந்தியா உருவாக்கி வரும் விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தில் பொருத்தப்பட்டிருந்த மிக முக்கியமான டிஜிட்டல் சாதனம் மாயமான சம்பவம் இந்திய பாதுகாப்பு துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விமானந்தாங்கி கப்பலில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் சாதனமே காணாமல் போயுள்ளது. 2009 முதல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நான்கு கணணிகள் மற்றும் முக்கிய பொருட்கள் காணாமல்போயுள்ளனஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கப்பல்களின் வடிவமைப்பு விமானங்கள் எந்த பகுதிகளில் இறங்கவேண்டும் எங்கு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் போன்ற விபரங்கள் அடங்கிய ஹார்ட்டிஸ…

  13. அயோத்தி வழக்கின் வாதங்களை நிறைவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் காலக்கெடு அயோத்தி வழக்கின் வாதங்களை எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதி- ராமர் ஜென்ம பூமி தொடர்புடைய 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் குறித்த வழக்கு இன்று 26ஆவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவுக்கு கொண்டுவர வேண்டுமென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். அந்தவகையில், எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக விசாரணையை முடித்து தலைமை நீதிப…

  14. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம்தேதி முதல் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பர் 27-ம்தேதி வரையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது விமானம் பாகிஸ்தான் வழியே அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. இந்த நிலையில், இந்தியா உடனான உறவில் பாகிஸ்தான் விரிசலை ஏற்படுத்தி இருப்பதால், மோடி அமெரிக்க செல்வதற்கு தங்கள் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 322 views
  15. பெங்களூரு: கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ தலைவருமான அமித்ஷா நேற்று முன்தினம் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்…

    • 3 replies
    • 650 views
  16. புதுடெல்லி: இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைத்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். பலகட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என கூறியுள்ளார். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது என தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் பாதுகாப்பற்று இருந்தன என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: உள்துறை அமைச்சர் அமித்ஷா-வின் கருத்தை மிக மிக வன்மையாக கண்…

  17. மோடியா, சோனியாவா? மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:44 பொருளாதார தேக்க நிலைமை பற்றி, அகில இந்திய அளவில், போராட்ட அழைப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து விவாதித்துள்ள சோனியா காந்தி, இது தொடர்பாகக் காங்கிரஸ் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று, கட்டளை பிறப்பித்திருக்கிறார். நாள்கள் நகர நகர, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டும், கடுமையான பிரசாரத்தில் ஈடுபடும் பரபரப்பான காட்சிகள், ‘வெள்ளித்திரை’யில் காணலாம் என்பது போல், தற்போது தேசிய அளவில், அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சோனியா காந்தி தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற…

  18. "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் இவ்வாறாகக் கூறினார். வெளியுறவுத் துறையின் 100 நாள் சாதனைகளை அவர் விளக்கினார். அப்போது பேசிய அவர், "நமது அண்டை நாடு இயல்பான நி…

  19. ஜம்மு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் (J&K Public Safety Act) அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருப்பதற்கு மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது இந்த சட்டத்தை ஏவியிருப்பது, இந்திய அரசு அப்பட்டமாக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதை காட்டுவதாக அம்னஸ்டி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடந்துவரும் மனித உரிமை மீறல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது. "ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் உள்ள ஃபரூக் அப்துல்லா பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்ததாக அவரது கைது ஆணை குறிப்பிடுகிறது. மாற்றம் வரும் என்ற வாக்குறுதிக்கு மாற்றாக, அரசிய…

  20. இந்திய ராக்கெட் ஏவுதளத்திற்கு டார்கெட்..!! சந்திராயன் திட்டத்தால் தீவிரவாதிகள் உச்சகட்ட எரிச்சல்..!! தென்னிந்தியாவில் முக்கிய இடங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இது ஒரு புறமிருக்க, பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் -இ- முகமது என்ற தீவிரவாத அமைப்புடன் இணைந்து லஸ்கர்-இ- …

  21. ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார். இந்திய துணை ராணுவப் படை சுட்டது ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார். கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சை…

    • 0 replies
    • 439 views
  22. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள வேளையில், பட்டியலில் இல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்கவைக்க, மெகா தடுப்பு மையம் கட்டப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டில், அஸ்ஸாமில் 60 ஆண்டுகளாக வசித்துவந்த 19 லட்சம் பேரின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பில், சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்த அஸ்ஸாம் மாநில மக்கள் பலருக்கும் இது, தலையில் இடி விழுந்ததைப் போல ஆகியுள்ளது. தேயிலைத் தொழிலாளர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், பூர்வகுடிகள் என எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்து தரப்பினர் பெயர்களையும் பட்டியலிலிருந்து தூக்கியிருக்கிறது, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம். இந்த விவ…

    • 0 replies
    • 927 views
  23. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கினர்…. September 15, 2019 ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள கோதவரி ஆற்றுக்கு இன்று ஏராளமானோர் சுற்றுலா சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களில் 60க்கும் மேற்பட்டோர் படகில் ஏறி காந்திபோச்சசமா கோயிலில் இருந்து அற்புதமான பாபி கொண்டலு மலைகளை சுற்றி பார்க்க புறப்பட்டு சென்றுள்ளனர். ஆற்றின் நடுவில் படகு சென்று கொண்டிருந்த போது எடை தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்தக் கோரவிபத்தில் படகில் இருந்த 61க்கு மேற்பட்ட…

  24. ஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயிரத்து 23 அதிவிரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 இலட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப…

  25. ஜம்மு - காஷ்மீரில், கர்நாடக அரசு சார்பில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளதாக, அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர், சி.டி.ரவி, நேற்று தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பிரபல வர்த்தக நிறுவனங்கள், தங்கள் கிளைகளை, ஜம்மு - காஷ்மீரில் துவக்குவோம் என அறிவித்துள்ளன. அதே போல, மஹாராஷ்டிரா உட்பட பா.ஜ., ஆளும் மாநில அரசுகளும், இம்மாநிலத்தில் தங்கள் சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இந்த வரிசையில், கர்நாடகாவும், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த தீர்மானித்துள்ளது. இது பற்றி, கர்நாடக சுற்றுலா துறை அமைச…

    • 0 replies
    • 391 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.