அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
சிறப்பு சட்டம் ரத்தால் காஷ்மீரிகள் போராடுவார்கள். இந்தியா அவர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும்! காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை கொடுத்துவந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியத்துக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று மசோதா தாக்கல் செய்யும்போதே எதிர்ப்பு தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ``காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்படும் இந்தசூழலில் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கூறியபடி நடத்த, இதுவே சிறந்த தருணம். இந்த சூழல் தொடர்ந்தால், அது பிராந்திய நெருக்கடிக்கு வழி வகுக்கும்" என்று கூறியிருந்தார். இந்த ந…
-
- 0 replies
- 547 views
-
-
தாய்லாந்தில், பசாக் சோன்லாஸிட் அணையின் நீர்மட்டம் சரிந்ததால், 20 ஆண்டுகளுக்கு முன் அணையில் மூழ்கிய புத்தர் கோவில் காட்சியளிக்கிறது. லோப்புரி மாகாணத்தில் உள்ள இந்த அணையின் நீரை பயன்படுத்தி சுற்றுபுற 4 மாகாணங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, நீர் தேக்க பகுதியில் மூழ்கியிருந்த புத்தர் கோவில் மற்றும் அதனை சுற்றியிருந்த 700 வீடுகள் வெளியே தெரிந்தன. இதனைக்கண்ட புத்த துறவிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர், தலையின்றி சிதிலமடைந்திருந்த புத்தர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, வழிபட்டனர். http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15060
-
- 0 replies
- 340 views
-
-
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சீன கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஹுவா சூன்யிங், "காஷ்மீர் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்க வேண்டும்," என்று கூறி உள்ளார். மேலும், "சீன நிலப்பகுதியின் இறையாண்மையை அண்மைக்காலமாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக உள்ளூர் சட்டங்களை மாற்றி வருகிறது," என்றும் கூறி உள்ளார். கேள்வி: லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதே. அந்தப் பகுதியில்தான் சீனாவின் மேற்கு எல்லை வருகிறது. இது குறித்த உங்கள் கருத்து என்ன? பதில்: சீன - இந்திய எல்லையின் சீனாவின் மேற்கு பகுதியை, இந்தியா தனது நிர்வாக ஆளுகைக்குள் கொண்டி…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images காஷ்மீர் மாநில சட்டமன்றத்திடம் கேட்காமல் எப்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரையில் நீங்கள் மாற்றம் கொண்டு வர முடியும்? என்று மக்களவையில் இன்று நடந்த விவாதத்தின் போது கேள்வி எழுப்பினார் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு. "சட்டமன்றம் இப்போது அங்கு இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால், மக்களின் கருத்தை கேட்காமல் நீங்கள் இப்படி இந்த மாற்றத்தை கொண்டு வரலாம். அரசமைப்பின்படி இது சரியென நீங்கள் கூறலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் எண்ணம் இங்கு பிரதிபலிக்கவில்லை. சட்டமன்றம் இருந்தால் மட்டுமே மக்களின் எண்ணம் பிரதிபலிக்கும்" என்று தனது உரை…
-
- 1 reply
- 753 views
-
-
காஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம் - உச்ச நீதிமன்றத்தால் உடைக்க முடியுமா? 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTAUSEEF MUSTAFA இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 3…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. குடியரசு தலைவர் ஒப்புதல். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ நீக்கி குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றக்கூடிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.சட்டப்பிரிவு 370ன்கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இதனால் ரத்தாகிறது. குடியரசுத் தலைவரும் உடனடியாக சட்டப்பிரிவு 370ஐ நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அதிரடி மற்றும் அவசர நடவடிக்கைகளை பார்த்தால் மீண்டும் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது போன்ற சூழ்ந…
-
- 25 replies
- 3.2k views
- 1 follower
-
-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை ஸ்ரீநகரில் உள்ள செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் உறுதிபடுத்தினார். ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும்வரை இது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடம…
-
- 1 reply
- 355 views
-
-
காஷ்மீர் இளைஞர்களை போராளிகளாக்கும் இறுதிச் சடங்குகள் 14 மே 2018 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இந்தியாவின் ஆட்சிக்குட்பட்ட காஷ்மீரில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட போராளிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 1989ல் இருந்து இந்திய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியைக் கண்ட பிராந…
-
- 1 reply
- 404 views
- 1 follower
-
-
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை August 4, 2019 காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததனையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள பாதுகாப்பு பலப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவுடன் இணைந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றதாகவும் இதன்போது ஏற்பட்ட மோதலில்; 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்…
-
- 0 replies
- 240 views
-
-
ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல் In இந்தியா August 3, 2019 7:08 am GMT 0 Comments 1128 by : Yuganthini ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியு…
-
- 0 replies
- 463 views
-
-
மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதியை திருப்பி அனுப்ப இந்தியா முடிவு தூத்துக்குடியில் விசாரணையில் இருக்கும் மாலைத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதீப்பை திருப்பி அனுப்ப இந்திய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மாலைத்தீவிலிருந்து தூத்துக்குடி வந்த சிறிய வகை சரக்குக் கப்பலில் கடலோரக் காவல் படையினர் மேற்கொண்ட சோதனையில், அகமது அதீப், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவரை தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அழைத்து வந்த கடலோரக் காவல் படையினர் மத்திய- மாநில உளவுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அகமது அதீப்பிடம் டெல்லி மற்றும் சென்னையிலுள்ள குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளும் விசாரணையை மேற்கொண்டனர். இதன்போத…
-
- 1 reply
- 348 views
-
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: 7 நக்சலைட்டுகளை உயிரிழப்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகளை படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியிலுள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று (சனிக்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் தப்பியோட முயன்றபோது, அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்…
-
- 0 replies
- 304 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption படம் சித்தரிக்க மட்டுமே சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் படுகாயமடைந்த உன்னாவ் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் இன்னும் சுயநினைவின்றியே உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சேங்கர் என்பவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றம் சாட்டிய பெண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சென்ற கார், சில தினங்களுக்கு முன்னர் உத்த…
-
- 0 replies
- 438 views
-
-
அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நிலவுவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்திய ராணுவத்தின் பொதுக் கட்டளை அதிகாரி கே.ஜே.எஸ்.தில்லான் இன்று வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநில கோடைகாலத் தலைமையகமான ஸ்ரீநகரில் நடத்திய செய்தியாளர் கூட்டம் ஒன்றில் காஷ்மீரில் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் ராணுவம் முய…
-
- 1 reply
- 762 views
-
-
பொருளாதாரத்தில் சரிவை நோக்கி பயணிக்கிறது இந்தியா! In இந்தியா August 2, 2019 9:11 am GMT 0 Comments 1053 by : Krushnamoorthy Dushanthini உலக வங்கி வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பட்டியிலின்படி 2017ஆம் ஆண்டு 5ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2018ஆம் ஆண்டு 7 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதே பொருளாதார மொத்த மதிப்பு சரிய காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது 7 வீதமாக க…
-
- 2 replies
- 636 views
-
-
காங்கிரஸின் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை – பிரியங்கா திட்டவட்டம்! In இந்தியா August 2, 2019 8:27 am GMT 0 Comments 1067 by : Krushnamoorthy Dushanthini காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் கூடவுள்ள காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தற்காலிக காங்கிரஸ் தலைவர் ஒருவரை தேர்வு செய்ய கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான தலித் இனத்தைச் சேர்ந்த முகுல்வாஸ்னிக் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுசில்குமார் ஷிண்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் …
-
- 0 replies
- 335 views
-
-
காஷ்மீர் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள். அசாதாரண சூழல் நிலவுவதால் காஷ்மீருக்கு கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என உறுதி அளித்து இருந்தது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்பு படையனிர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்,காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவாக அங்கு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம்தான் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டிருந்தனர். ஜம்மு காஷ்மீ…
-
- 3 replies
- 1k views
-
-
நடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்.! தூத்துக்குடி: மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் இந்திய சரக்கு கப்பலில் தஞ்சமடைந்தது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.மாலத்தீவில் கருங்கல் இறக்கிவிட்டு இந்திய சரக்கு கப்பல் நாடு திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென படகில் வந்த நபர் ஒருவர் சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்திருக்கிறார்.படகில் இருந்தபடியே தம்மை காப்பாற்றி அழைத்து செல்லுங்கள் என கூச்சலிட்டிருக்கிறார். இதனால் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் படகில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாம் மாலத்தீவின் முன்னாள் அதிபர் என்றும் இந்த நாட்டில் இருந்தால் என்னை கொலை செய்துவிடுவார்கள்…
-
- 2 replies
- 844 views
- 1 follower
-
-
நதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரே தீர்ப்பாய சட்டமூலம் மக்களவையில் நிறைவேற்றம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரே தீர்ப்பாய சட்டமூலம் மக்களவையில் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தை மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தீர்ப்பாயங்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பதில் தோல்வியடைந்துள்ளன. அதன் அணுகுமுறையை மாற்றுவது அவசியம். கடந்த 33 வருடங்களாக இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனையை தீர்ப்பாயத்தால் முடித்து வைக்க முடியாத நிகழ்வுகள் உள்ளன. 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட…
-
- 1 reply
- 325 views
-
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான வித்யா பாரதி சார்பாக ராணுவ பயிற்சி பள்ளி இயக்கப்படும். இதில் பாதுகாப்பு தொடர்பான கல்வி பயிற்றுவிக்கப்படவுள்ளது. முன்னாள் ராணுவ தலைமை தளபதி ராஜூ பையா நினைவாக உத்தர பிரதேசத்தில் ராணுவ பயிற்சி பள்ளி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கவுள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் ராணுவ பயிற்சி பள்ளிகள் நடத்தப்படும்போது புதிதாக இதை ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். புலந்த்சாகர் மாவட்டம் ஷிகார்பூரில் தொடங்கப்படவுள்ள இந்த பள்ளிக்கு 'ராஜு பையா சைனிக் வித்யா மந்திர்' என்று பெயர் சூட்டப்படும். ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்வி பிரிவான வித்யா பாரதி இந்த பணிகளை கவனிக்கும். இந்த பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாட…
-
- 1 reply
- 770 views
-
-
மசோதாக்களை நிறைவேற்றியதில் கடந்த 15 வருடங்களில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். அதற்குக் காரணமும் இருக்கின்றது இரண்டாவது முறை ஆட்சி... 303 உறுப்பினர்கள்.... எனப் பெரும்பான்மை பலத்தில் இருக்கும் பா.ஜ.க 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. எந்தமுறையும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்தமுறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தாலும் மாநிலங்களவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டியது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. மாநிலங்களவையிலும் தற்போது பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டுள்ளதால் கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாத மசோதாக்களை எல்ல…
-
- 0 replies
- 319 views
-
-
பிற மதத்தவர்களை கட்டாய மத மாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது - இம்ரான் கான் மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதாவது பிற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்…
-
- 2 replies
- 818 views
-
-
36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு.. கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு. முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தாவின் உடல் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு நேத்ராவதி ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா (58). இவர் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளராவார். இவர் திங்கள்கிழமை தனது காரில் மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வண்டியை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பின்னர் அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ஆற்றுப் பாலத்தில் நடந்து வ…
-
- 1 reply
- 462 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆச…
-
- 0 replies
- 476 views
-
-
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு – பிரதமர் புலிகளின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாக குறிப்பிட்டார். சர்வதேச புலிகள் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் வெளியிட்டார். அதன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் 1400ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,977 ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மோடி…
-
- 0 replies
- 541 views
-